ஓய்வூதியதாரர்களுக்கான வாழ்நாள் சான்றிதழ் 2025: இந்தியா முழுவதும் உள்ள ஓய்வூதியதாரர்களுக்கு ஒவ்வொரு நவம்பர் மாதமும் தங்கள் ஓய்வூதியத்தை தொடர்ந்து பெற வாழ்நாள் சான்றிதழை சமர்ப்பிக்க வேண்டும். டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் அல்லது ‘ஜீவன் பிரமாண்’ அறிமுகப்படுத்தப்பட்ட பிறகு, இந்த செயல்முறை எவ்வாறு டிஜிட்டல் மயமாக்கப்பட்டது?
தற்போதைய செய்தி :
நவம்பர் மாதம் ஓய்வூதியதாரர்களுக்கு மிக முக்கியமான மாதமாகும். ஒவ்வொரு ஆண்டும், நவம்பர் மாதத்தில் வாழ்நாள் சான்றிதழைப் (life certificate) பெறுவதற்காக ஏராளமான ஓய்வூதியதாரர்கள் வங்கிகள் அல்லது தபால் அலுவலகங்களில் வரிசையில் நிற்கின்றனர். வாழ்நாள் சான்றிதழ் என்பது ஓய்வூதியதாரர்களுக்கு அவர்களின் நிதி பாதுகாப்பிற்கு பங்களிக்கும் மற்றும் சிக்கல்களை தடுக்கும் மிக முக்கியமான படியாகும். இங்குதான் டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ் அல்லது வாழ்நாள் சான்றிதழ் முக்கியத்துவம் பெறுகிறது.
முக்கிய அம்சங்கள்:
1. வாழ்நாள் சான்றிதழ் (Jeevan Pramaan) என்பது ஓய்வூதியதாரர்களுக்கான உயிரிய அளவியல் (biometric) அடிப்படையிலான டிஜிட்டல் சேவையாகும். மத்திய அரசு, மாநில அரசு அல்லது வேறு எந்த அரசு நிறுவனத்தின் ஓய்வூதியதாரர்களும் இந்த வசதியைப் பயன்படுத்திக் கொள்ளலாம்.
2. ஓய்வூதியதாரர்கள் பணியிலிருந்து ஓய்வுபெற்ற பிறகு அவர்களுக்குத் தேவைப்படும் முக்கிய தேவைகளில் ஒன்று, வங்கிகள், தபால் அலுவலகங்கள் போன்ற அங்கீகரிக்கப்பட்ட ஓய்வூதிய வழங்கும் நிறுவனங்களுக்கு வாழ்நாள் சான்றிதழ்களை சமர்ப்பிப்பதாகும்.
3. இந்த வாழ்நாள் சான்றிதழைப் பெறுவதற்கு, ஓய்வூதியம் பெறும் நபர் ஓய்வூதிய வழங்கும் நிறுவனத்தின் முன் தனிப்பட்ட முறையில் நேரடியாக பேச்சுவார்த்தை நடத்த வேண்டும் அல்லது அவர்கள் முன்னர் பணியாற்றிய இடத்தில் வாழ்நாள் சான்றிதழை வழங்கி, அதை வழங்கும் நிறுவனத்திடம் ஒப்படைக்க வேண்டும்.
4. இது குறிப்பாக வயதானவர்கள் மற்றும் நோய்வாய்ப்பட்ட ஓய்வூதியதாரர்களுக்கு அதிக சிரமத்தையும் தேவையற்ற பிரச்சனையையும் ஏற்படுத்துகிறது.
5. கூடுதலாக, ஓய்வு பெற்ற பிறகு அதிகளவிலான அரசு ஊழியர்கள் தங்கள் குடும்பத்துடன் இருப்பதற்கோ அல்லது பிற காரணங்களுக்காகவோ வேறு இடத்திற்கு இடம்பெயர்கின்றனர். இது நிர்வாக அமைப்பில் பெரிய சிக்கலை (logistical issue) உருவாக்குகிறது.
6. இந்த சவால்களை சமாளிக்க, இந்திய அரசு நவம்பர் 10, 2014 அன்று பணியாளர், பொது குறைகள் மற்றும் ஓய்வூதிய அமைச்சகத்தின்கீழ் வாழ்நாள் சான்றிதழ் (Jeevan Pramaan) அல்லது டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. முக அங்கீகாரம் (Face Authentication) 2021-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.
7. இந்தத் திட்டம் முழு வாழ்நாள் சான்றிதழ் செயல்முறையையும் டிஜிட்டல் மயமாக்குவதன் மூலம் சிக்கல்களைத் தீர்க்கிறது. இது இந்த சான்றிதழ் பெறுவதற்கான செயல்முறையை எளிமைப்படுத்துவதையும் ஓய்வூதியதாரர்களுக்கு சிரமமற்றதாகவும் மிகவும் எளிதானதாகவும் மாற்றுவதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
8. வாழ்நாள் சான்றிதழ் (டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழ் பெறுவதற்கு) ஓய்வூதியர் தனிப்பட்ட முறையில் ஓய்வூதியம் வழங்கும் அதிகாரியின் (Pension Disbursing Officer) முன் பேச்சுவார்த்தை நடத்த வேண்டியதில்லை. டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழை (DLC) வங்கி அல்லது தபால் நிலையத்திற்கு நேரில் சமர்ப்பிக்க வேண்டிய அவசியமில்லை. இது டிஜிட்டல் முறையில் அனுப்பப்பட்டு தானாகவே செயலாக்கப்படும். ஒவ்வொரு டிஜிட்டல் வாழ்நாள் சான்றிதழுக்கும் ஒரு தனித்துவமான வாழ்நாள் சான்றிதழ் அடையாள அட்டை (Pramaan-Id) உள்ளது.
9. வாழ்நாள் சான்றிதழ்/வாழ்நாள் சான்றிதழ் அடையாளம், வாழ்நாள் முழுவதும் செல்லுபடியாகாது. சான்றிதழின் செல்லுபடியாகும் காலம் ஓய்வூதிய ஒப்புதல் ஆணையத்தால் (Pension Sanctioning Authority) குறிப்பிடப்பட்ட விதிகளின்படி உள்ளது. செல்லுபடியாகும் காலம் முடிந்தவுடன் புதிய வாழ்நாள் சான்றிதழ், வாழ்நாள் சான்றிதழ் அடையாள அட்டையை பெற வேண்டும்.
10. ஓய்வூதியம் பெற அனுமதிக்கும் அதிகாரி (Pension Sanctioning Authority (PSA)) வாழ்நாள் சான்றிதழுடன் இணைக்கப்பட்டிருந்தால் அந்த ஓய்வூதியர் வாழ்நாள் சான்றிதழ் பெறுவதற்கு தகுதியுடையவர் ஆவார்.
11. மறுவேலைவாய்ப்பு பெற்ற அல்லது மறுமணம் செய்துகொண்ட ஓய்வூதியதாரர் வாழ்நாள் சான்றிதழ் அதாவது டிஜிட்டல் வாழ்க்கைச் சான்றிதழைப் பெறத் தகுதியற்றவர் ஆவார். அவர் வழக்கமான முறையில் ஓய்வூதியம் பெற அனுமதிக்கும் அதிகாரியிடம் வாழ்நாள் சான்றிதழைச் சமர்ப்பிக்க வேண்டும்.
12. வாழ்நாள் சான்று அதாவது டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழை உருவாக்குவதற்கு/ பெறுவதற்கு ஆதார் எண் அல்லது ஒரு மெய்நிகர் அடையாள எண் (Virtual ID) கட்டாயமாகும்.
13. வாழ்நாள் சான்றிதழ் அதாவது டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ் கட்டாயமானது அல்ல. ஆனால், ஏற்கனவே இருக்கும் வாழ்க்கை சான்றிதழ் சமர்ப்பிப்பு முறைகளுக்கு கூடுதல் வசதியாகும்.
14. டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழ் செல்லுபடியாகும் சான்றிதழாகும். இது வருமான வரி சட்டத்தின் (IT Act) கீழ் உள்ளது.
15. மோசடி மற்றும் தவறான பயன்பாட்டைத் தடுக்க, ஓய்வூதிய வழங்கும் நிறுவனங்கள் (Pension Disbursing Agencies (PDAs)) ஓய்வூதியத் தொகையை வரவு வைப்பதற்கு முன் வாழ்க்கை சான்றிதழை சரிபார்க்க வேண்டும் என்று அரசு கட்டாயமாக்கியுள்ளது. நவம்பர் 1 முதல் நவம்பர் 30 வரை ஓய்வூதியதாரர்கள் வாழ்க்கை சான்றிதழ் செயல்முறையை இறுதி செய்ய அனுமதிக்கப்படுகிறார்கள். 80 வயதுக்கு மேற்பட்டவர்கள் தங்கள் வாழ்க்கைச் சான்றிதழைச் சமர்ப்பிக்க அக்டோபர் 1 முதல் நவம்பர் 30 வரை கூடுதல் ஒரு மாத கால அவகாசம் வழங்கப்படுகிறது. சான்றிதழைப் பெறுவது கட்டாயமாகும். ஆனால், அவர்கள் நேரில் வரவேண்டிய அவசியமில்லை.
மத்திய ஓய்வூதிய குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு மற்றும் UMANG செயலி
1. மத்திய ஓய்வூதிய குறை தீர்ப்பு மற்றும் கண்காணிப்பு அமைப்பு (Centralized Pension Grievances Redress And Monitoring System (CPENGRAMS)) என்பது ஒரு இணைய வழியில் கணினிமயமாக்கப்பட்ட அமைப்பாகும். இது ஓய்வூதியதாரர்களுக்கு விரைவான தீர்வுகளை வழங்குவதோடு, குறைகளை விரைவாக நிவர்த்தி செய்வதற்கும் திறம்பட கண்காணிப்பதற்கும் உருவாக்கப்பட்டது. ஓய்வூதியதாரர்கள் தங்கள் குறை தீர்க்கப்படுவதில் திருப்தி அடையவில்லை என்றால், அவர்கள் மேல்முறையீடு செய்யலாம்.
2. தபால், கட்டணமில்லா எண் மற்றும் UMANG செயலி மூலம் குறைகளை பதிவு செய்யலாம்.
3. புதிய தலைமுறை ஆட்சிக்கான ஒருங்கிணைந்த மொபைல் பயன்பாடு (Unified Mobile Application for New-age Governance (UMANG)), எலக்ட்ரானிக்ஸ் மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் டிஜிட்டல் இந்தியா முயற்சியாகும். இது UMANG செயலி, இணையதளம் மற்றும் அங்கீகரிக்கப்பட்ட உதவி கூட்டாளர் மையங்கள் மூலம் பல அரசாங்க சேவைகளை அணுகக்கூடியதாக மாற்றுவதைக் குறிக்கிறது.
4. வாழ்நாள் சான்றிதழ் அல்லது டிஜிட்டல் வாழ்க்கை சான்றிதழையும் UMANG செயலி மூலம் உருவாக்கலாம்.