நிலநடுக்கம் என்பது என்ன? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


கரடுமுரடான மலைகளால் சூழப்பட்ட ஆப்கானிஸ்தான் பல்வேறு இயற்கை பேரிடர்களுக்கு உள்ளாகிறது. அங்கு, நிலநடுக்கங்கள் அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்துகின்றன. சராசரியாக, ஒவ்வொரு ஆண்டும் சுமார் 560 பேர் இந்த நிலநடுக்கங்களில் இறக்கின்றனர் மற்றும் இதனால் ஏற்படும் சேதங்கள் ஆண்டுதோறும் சுமார் $80 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது. 1990 முதல் 5.0 ரிக்டர் அளவுக்கு மேல் குறைந்தது 355 நிலநடுக்கங்கள் ஆப்கானிஸ்தானைத் தாக்கியுள்ளதாக ஆய்வுகள் குறிப்பிடுகின்றன.


ஆப்கானிஸ்தான் யூரேசிய கண்டத் தட்டின் (Eurasian tectonic plate) விளிம்பில் அமைந்துள்ளது. இது, இந்திய தட்டுடன் ஒரு எல்லை மீறல் மண்டலத்தைப் (transgression zone) பகிர்ந்து கொள்கிறது. அங்கு, இரண்டும் ஒன்றையொன்று சந்திக்கலாம் அல்லது கடந்து செல்லலாம். மேலும், அதன் தெற்கே உள்ள அரேபியத் தட்டும் இந்தப் பகுதியை பாதிக்கிறது. இவை அனைத்தும் சேர்ந்து, ஆப்கானிஸ்தானை உலகின் மிகவும் கண்டத்தட்டு நகர்வு தீவிரமாக உள்ள பகுதிகளில் (tectonically active areas) ஒன்றை உருவாக்குகிறது.


இந்திய தட்டானது, வடக்கு நோக்கிய நகர்வும் யூரேசிய தட்டுக்கு எதிரான அதன் உந்துதலும் பொதுவாக ஆப்கானிஸ்தானின் ஏராளமான நிலநடுக்கங்களுக்கு காரணமாகின்றன.


கிழக்கு மற்றும் வடகிழக்கு ஆப்கானிஸ்தான், குறிப்பாக உஸ்பெகிஸ்தான், தஜிகிஸ்தான் மற்றும் பாகிஸ்தானுடனான அதன் எல்லைகளில் உள்ள பகுதிகள், குறிப்பாக நிலநடுக்கங்களுக்கு உள்ளாகின்றன.


ஆப்கானிஸ்தானின் மலைகளில் நிலநடுக்கங்கள் ஆபத்தானவையாக இருக்கிறது. அங்கு அவை பெரும்பாலும் நிலச்சரிவுகளை ஏற்படுத்துகின்றன. இது சேதத்தையும் உயிர் இழப்பையும் அதிகரிக்கிறது.


பொதுவாக நாடு எவ்வாறு மீள்தன்மையை உருவாக்க முடியும்? நிலநடுக்கத்தைத் தாங்கும் வகையில் புதிய கட்டமைப்புகளைக் கட்டமைக்கவும், இடிந்து விழும் வாய்ப்புகளைக் குறைக்க பழைய கட்டிடங்களை மறுசீரமைக்கவும் ஆய்வுகள் பரிந்துரைக்கின்றன.


சரியான நேரத்தில் எச்சரிக்கைகளுக்கு சிறந்த கண்காணிப்பு மற்றும் ஆரம்பகால எச்சரிக்கை அமைப்புகளும் உருவாக்கப்பட வேண்டும். அதேநேரத்தில், பாதிக்கப்படக்கூடிய பகுதிகளில் உள்ள மக்களை இடமாற்றம் செய்ய புவிசார் மற்றும் தொலைநிலை உணர்திறன் தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தி பிளவுக்கோடுகளை (fault lines) வரைபடமாக்க வேண்டும் என்று அவர்கள் பரிந்துரைக்கின்றனர்.


உங்களுக்குத் தெரியுமா? 


பூமியின் மேற்பரப்பின் கீழ், இயக்கம் காரணாமாக ஏற்படும் நிலத்தின் கடுமையான குலுக்கலே நிலநடுக்கம் ஆகும். பூமியின் இரண்டு தொகுதிகள் திடீரென ஒன்றையொன்று கடந்து செல்லும் போது நிலநடுக்கம் நிகழ்கிறது. இது நில அதிர்வு அலைகளின் வடிவத்தில் சேமிக்கப்பட்ட 'மீள் திரிபு' (elastic strain) ஆற்றலை வெளியிடுகிறது. இது பூமி முழுவதும் பரவி நில அதிர்வை ஏற்படுத்துகிறது.


பூமியின் வெளிப்புற அடுக்கு மேலோடு (crust) என்று அழைக்கப்படுகிறது. இது கண்டத்தட்டுகள் (tectonic plates) எனப்படும் பல பெரிய துண்டுகளாக உடைக்கப்பட்டுள்ளது. இந்த தட்டுகளின் விளிம்புகள் தட்டு எல்லைகள் (plate boundaries) என்று அழைக்கப்படுகின்றன. இந்த எல்லைகள் இரண்டு பாறைத் தொகுதிகளுக்கு இடையிலான விரிசல்களான பிளவுகளால் ஆனவை. கண்டத்தட்டுகள் எப்போதும் மெதுவாக நகரும். அவை ஒன்றையொன்று கடந்து சறுக்கி, சில சமயங்களில் மோதுகின்றன. தட்டுகளின் விளிம்புகள் கரடுமுரடாக இருப்பதால், அவை பெரும்பாலும் சிக்கிக் கொள்கின்றன. விளிம்புகள் சிக்கிக் கொண்டிருக்கும் அதே வேளையில், தட்டின் மீதமுள்ள பகுதி தொடர்ந்து நகர்கிறது.


ஒரு நிலநடுக்கமானது, ஒரு கண்டத்தட்டின் விளிம்புகள் திடீரென ஒரு பிளவு கோட்டில் நழுவும் அளவுக்கு நகரும்போது ஏற்படுகிறது. பூமியின் உள்ளே நிலநடுக்கம் தொடங்கும் புள்ளி குவியப்புள்ளி (hypocenter) என்று அழைக்கப்படுகிறது என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (United States Geological Survey (USGS)) விளக்குகிறது. மேற்பரப்பில் அதற்கு நேர் மேலே உள்ள புள்ளி மையப்புள்ளி (epicenter) என்று அழைக்கப்படுகிறது.


உலகில் ஏழாவது அதிக பூகம்ப அபாயம் கொண்ட நாடாக தரவரிசைப்படுத்தப்பட்ட இந்தியா, நிலநடுக்கத்திற்கு எளிதில் பாதிக்கப்படக்கூடியது. இந்தியாவின் பூகம்ப பாதிப்பானது, பல கண்டத் தட்டுகளின் சங்கமத்தில் அதன் புவியியல் நிலை, அதன் சிக்கலான புவியியல் அமைப்பு, மற்றும் வேகமாக வளரும் மக்கள்தொகைக்கு ஏற்ப பரவலான ஒழுங்கற்ற கட்டுமான நடைமுறைகளுடன் தொடர்புடையதால் ஏற்படுகிறது.


இந்தியாவின் நிலப்பரப்பில் சுமார் 59 சதவீதம் மிதமானது முதல் கடுமையான நிலநடுக்கங்களுக்கு ஆளாகிறது என்று தேசிய பேரிடர் மேலாண்மை ஆணையம் (National Disaster Management Authority (NDMA)) கூறுகிறது. இந்த நிலநடுக்கங்கள் MSK அளவில் VII அல்லது அதற்கு மேல் தீவிரத்தை பதிவு செய்யும் திறன் கொண்டது.



Original article:

Share: