மழை அதிர்ச்சி : 2024ஆம் ஆண்டின் பருவமழை பற்றி . . .

 இந்தியாவின் விவசாயிகள் தங்கள் பயிர்களை நடவு செய்யும் போது பருவமழையைக் கருத்தில் கொள்ள வேண்டும்.


இந்திய வானிலை ஆய்வுமையம் (India Meteorological Department (IMD)), 2024 ஆம் ஆண்டில் பருவமழை அதிகமாக இருக்கும் என்று கணித்துள்ளது.  ஜூன் முதல் செப்டம்பர் வரையிலான மழை சராசரியான 87 செ.மீ.யை விட 6% அதிகமாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறது, இது இந்தியாவில் இந்த மாதங்களில் வழக்கமாக பெய்யும் மழையாகும். வழக்கமாக, இந்திய வானிலை ஆய்வுமையத்தின் ஏப்ரல் மாத முன்னறிவிப்பு உபரி அல்லது பற்றாக்குறை மழையைக் கணிப்பதைத் தவிர்க்கிறது, இது ஒரு குறிப்பிடத்தக்க கணிப்பு. இந்தியாவில் பல தென் மாநிலங்கள் தற்போது அதிக வெப்பநிலை மற்றும் வெப்ப அலைகளை அனுபவித்து வருகின்றன என்றாலும், அதிகமான மழை பெய்யும் வாய்ப்பு நல்ல செய்தியாகத் தோன்றலாம். இருப்பினும், இந்த முன்னறிவிப்புடன் தொடர்புடைய கவலைகள் உள்ளன.


இந்திய வானிலை ஆய்வுமையம் "அதிகப்படியான" மழைக்கு 30% வாய்ப்பு உள்ளதாக கணித்துள்ளது, அதாவது வழக்கமான மழையில் 10% க்கும் அதிகமாக இருக்கும். "இயல்புக்கு மேல்" மழை பெய்ய 31% வாய்ப்பையும் எதிர்பார்க்களாம். இது வழக்கமான அளவின் 5% முதல் 10% வரை பெய்யும். சாதாரண மழையை விட அதிகமாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாக இது தெரிவிக்கிறது. இவற்றில் பெரும்பாலான மழை ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர் மாதங்களில், பருவமழையின் இரண்டாம் பாதியில் எதிர்பார்க்கப்படுகிறது. இந்திய வானிலை ஆய்வுமையத்தின் கணிப்புகள் லா நினாவின் (La Niña) வளர்ச்சியை அடிப்படையாகக் கொண்டவை, இது எல் நினோவுக்கு எதிரானது மற்றும் பெரும்பாலும் பருவமழையின் போது குறைவான மழைப்பொழிவுக்கு வழிவகுக்கிறது.


 லா நினாவிற்கு இந்தியப் பெருங்கடலின் இருமுனையும் துணைபுரியும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதாவது, கிழக்கு இந்தியப் பெருங்கடல் மேற்குடன் ஒப்பிடும்போது இயல்பை விட குளிர்ச்சியாக இருக்கும். இது, தென்னிந்திய மாநிலங்களுக்கு மழையைக் கொண்டுவரும். ஜூன் மற்றும் ஜூலை மாதங்களில் எவ்வளவு மழை எதிர்பார்க்கலாம் என்பதை இந்திய வானிலை ஆய்வுமையம் குறிப்பிடவில்லை. ஆனால், அந்த நேரத்தில் "நடுநிலை நிலைமைகளை"  (neutral conditions) கணித்துள்ளது, அதாவது எல் நினோ (El Niño) அல்லது லா நினா (La Niña) ஆதிக்கம் செலுத்தாது. இரண்டு மாதங்கள் வறட்சிக்கு பின் தொடரும் கனமழை விவசாயத்திற்கு பயனளிக்கும். அதே வேளையில், இது கடுமையான வெள்ளம் மற்றும் கடந்த காலத்தில் காணப்பட்டது போன்று உயிர்கள், வாழ்வாதாரங்கள் மற்றும் உள்கட்டமைப்புகளுக்கு குறிப்பிடத்தக்க சேதத்தை ஏற்படுத்தும்.   


கேரளாவில் 2018 ஆம் ஆண்டில் ஏற்பட்ட வெள்ளம், இயற்கை பேரழிவுகளை இந்தியா எவ்வாறு எதிர்கொள்ளும் என்பதைக் காட்டுகிறது. மே மாத இறுதிக்குள் இந்திய வானிலை ஆய்வுமையம் புது அறிவிப்பை வழங்கும். மாநிலங்கள் விரைவாகச் செயல்பட வேண்டும் மற்றும் அவற்றின் பேரிடர் தொகுதிகளிலிருந்து அவசரத் திட்டங்களை உருவாக்க வேண்டும். அவர்கள் உள்கட்டமைப்பை வலுப்படுத்த வேண்டும். பாதுகாப்பு நடவடிக்கைகளை திட்டமிட வேண்டும். உறுதித் தன்மைக்காக அணைகளைச் சரிபார்க்க வேண்டும் மற்றும் அவசரகால எச்சரிக்கை அமைப்புகளை மேம்படுத்த வேண்டும். மழையை நம்பி விவசாயம் செய்யும் விவசாயிகள், தங்களின் நடவு செய்வதற்கு பருவமழையின் இரண்டாம் பாதி வலுவான சாத்தியம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டும்.




Original article:


Share: