மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் எல்லை நிர்ணயம்

 மிகவும் தாமதமான மக்கள் தொகை கணக்கெடுப்பை அடுத்த ஆண்டு நடத்த அரசு திட்டமிட்டுள்ளது. மக்கள்தொகை கணக்கெடுப்பு மற்றும் அதன் எல்லை நிர்ணயம் பற்றி தெரிந்து கொள்ள வேண்டிய அனைத்தும் இங்கே குறிப்பிடப்பட்டுள்ளன.


கணக்கெடுப்பு மற்றும் எல்லை நிர்ணயம் தொடர்பாக என்ன பிரச்சினை?


இந்திய அரசாங்கம், நீண்டகாலமாக மக்கள்தொகை கணக்கெடுப்பு தாமதமாகி வரும் நிலையில் 2026-ம் ஆண்டிற்குள் முடிக்க வேண்டும் என்ற நோக்கத்துடன் அடுத்த ஆண்டு நடத்த திட்டமிட்டுள்ளது. இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு இரண்டு குறிப்பிடத்தக்க விளைவுகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. ஒன்று, கடந்த ஐம்பது ஆண்டுகளாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ள நாடாளுமன்றத் தொகுதிகளின் எல்லை நிர்ணயம். இரண்டாவது, நாடாளுமன்றத்தில் பெண்களுக்கான இடஒதுக்கீட்டை அமல்படுத்துவதுடன் இணைக்கப்படுவது. இதைக் கருத்தில் கொண்டு, இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் எல்லை நிர்ணயத்தின் பங்கைப் புரிந்துகொள்வது முக்கியம்.


மக்கள் தொகை கணக்கெடுப்பு மற்றும் அதன் முக்கியத்துவம் என்ன?


மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது ஒரு நாட்டில் உள்ள மக்களைப் பற்றிய தகவல்களைச் சேகரித்தல், ஒழுங்கமைத்தல், பகுப்பாய்வு செய்தல் மற்றும் பகிர்ந்துகொள்வதற்கான ஒரு செயல்முறையாகும். இது ஒவ்வொரு நபரைப் பற்றிய மக்கள்தொகை, சமூக மற்றும் பொருளாதாரத் தரவை ஒரு குறிப்பிட்ட நேரத்தில் சேகரிக்கிறது. இந்தியாவில், அரசியலமைப்புச் சட்டத்தின்படி மக்கள் தொகைக் கணக்கெடுப்பு நடத்தப்பட வேண்டும். இது ஒன்றியப் பட்டியலில் இதைப் பற்றி 69-ல் பட்டியலிடப்பட்டுள்ளது. அதாவது, ஒன்றிய அரசுக்கு மட்டுமே இதை செயல்படுத்த அதிகாரம் உள்ளது. நாடாளுமன்ற மற்றும் மாநில சட்டமன்ற தொகுதிகளை மறுசீரமைத்தல் போன்ற நோக்கங்களுக்காகவும் மக்கள் தொகை கணக்கெடுப்பு தேவைப்படுகிறது.


இருப்பினும், மக்கள் தொகை கணக்கெடுப்பு எப்போது நடத்தப்பட வேண்டும் என்று அரசியலமைப்புச் சட்டம் கூறவில்லை. இது எவ்வளவு விரைவாக நடத்தப்பட வேண்டும் என்பதையும் குறிப்பிடவில்லை. இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்புச் சட்டம்-1948 (Census of India Act) மக்கள் தொகைக் கணக்கெடுப்புக்கான சட்டக் கட்டமைப்பை அமைக்கிறது. இருப்பினும், மக்கள் தொகை கணக்கெடுப்பின் நேரம் அல்லது குறிப்பிட்ட கால அளவு பற்றிய விவரங்களும் இதில் இல்லை. இதன் காரணமாக, 10 ஆண்டுகளுக்கு ஒருமுறை மக்கள்தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கு அரசியலமைப்பு அல்லது சட்டரீதியான தேவை இல்லை.


மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவம்


மக்கள்தொகைக் கணக்கெடுப்பு சட்டப்பூர்வ தேவையாக இருக்காது. இருப்பினும், அதன் பயன்பாடானது நாட்டின் மக்கள்தொகை, பொருளாதாரம், சமூகம் மற்றும் கலாச்சாரத்தின் தனிப்பட்ட பண்புகளின் விரிவான கண்ணோட்டத்தை வழங்குவதால், வழக்கமான மற்றும் அத்தியாவசியமான பயிற்சியாக அதை நிறுவியுள்ளது. மக்கள் தொகை கணக்கெடுப்பின் முக்கியத்துவதும் கீழே குறிப்பிடப்பட்டுள்ளது.


1. நகரங்களுக்கான கிராமம் மற்றும் வார்டு மட்டங்களில் அடிப்படை மற்றும் நம்பகமான தரவுகளை இது வழங்குகிறது. இந்த தரவு அனைத்து புள்ளிவிவர நடவடிக்கைகளுக்கும் அடித்தளமாக செயல்படுகிறது. இது திட்டமிடல், நிர்வாகம் மற்றும் பொருளாதார முடிவெடுப்பதில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.


2. பல்வேறு தேசிய மற்றும் சர்வதேச முகமைகள், அறிஞர்கள் மற்றும் வணிக வல்லுநர்கள் இந்தத் தரவை கொள்கைகளைத் திட்டமிடவும் வடிவமைக்கவும் பயன்படுத்துகின்றனர்.


3. மக்கள் தொகை கணக்கெடுப்பின் தரவு அனைத்து சமூக மற்றும் பொருளாதார குறிப்பீடுகளுக்கும் அடித்தளமாக உள்ளது. ஏனெனில், 15 ஆண்டுகள் பழமையான புள்ளிவிவரங்கள் போன்ற காலாவதியான தரவுகளை நம்பியிருப்பது, தொடர்ந்து மாறிவரும் சூழலில் நம்பகத்தன்மையற்றது. இந்த நம்பகத்தன்மையின்மை இந்தியா தொடர்பான பல்வேறு குறிப்பீடுகளை சீர்குலைத்து, அனைத்து வகையான வளர்ச்சித் திட்டங்களின் செயல்திறனையும் எதிர்மறையாக பாதிக்கும்.


4. மக்கள் தொகை கணக்கெடுப்பு நாடு முழுவதும் பல்வேறு ஆய்வுகளை நடத்துவதற்கான அடித்தளத்தை வழங்குகிறது. உண்மை ஆதாரங்களின் அடிப்படையில் தகவலறிந்த முடிவுகளை எடுப்பது அவசியம். தேர்தலுக்கு தொகுதிகளை வரையறுப்பது போன்ற ஜனநாயக செயல்முறைகள், இட ஒதுக்கீடு போன்ற உறுதியான செயல் முயற்சிகளும் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் தரவைச் சார்ந்துள்ளது.





இந்தியாவில் மக்கள் தொகைக் கணக்கெடுப்பு எவ்வாறு வரலாற்று ரீதியாக வளர்ச்சியடைந்துள்ளது? 


இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு நீண்ட மற்றும் குறிப்பிடத்தக்க வரலாற்றைக் கொண்டுள்ளது. முக்கிய நிகழ்வுகளின் காலவரிசை மூலம் இந்தியாவின் மக்கள் தொகை கணக்கெடுப்பின் வரலாற்றைப் புரிந்துகொள்வோம்:


1872-ம் ஆண்டின் மக்கள் தொகை கணக்கெடுப்பு : 1866-67 ஆண்டுகளில் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்தப்பட்டது. இது பொதுவாக 1872-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு என்று அழைக்கப்படுகிறது. மக்கள் தொகை கணக்கெடுப்பு நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் உள்ள மக்களைக் கணக்கிடுகிறது. ஆனால், இது பிரிட்டிஷ் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள அனைத்து பகுதிகளையும் உள்ளடக்கவில்லை. இது ஒரு ஒத்திசைவற்ற மக்கள்தொகை கணக்கெடுப்பு, அதாவது எல்லா இடங்களிலும் ஒரே நேரத்தில் நடத்தப்படவில்லை.


1881-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு : மக்கள்தொகை கணக்கெடுப்பு  பிப்ரவரி 17, 1881 அன்று W.C ப்லோடன், இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையரால் நடத்தப்பட்டது. 1881-ம் ஆண்டின் நடந்த இந்த மக்கள்தொகை கணக்கெடுப்பு ஒரு பெரிய முன்னேற்றத்தை குறிக்கிறது. மக்கள்தொகை கணக்கெடுப்புக்கு இது மிகவும் நவீனமான மற்றும் ஒருங்கிணைந்த அணுகுமுறையை நோக்கி நகர்ந்தது. 1881-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு முழுமையான கணக்கெடுப்பு மட்டுமல்ல, மக்கள்தொகை, பொருளாதாரம் மற்றும் சமூக பண்புகளின் வகைப்படுத்துவதையும் இது நோக்கமாகக் கொண்டுள்ளது.


இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பு காஷ்மீர் தவிர பிரிட்டிஷ் இந்தியாவின் முழுப் பகுதியையும் உள்ளடக்கியது. அதில் இந்திய அரசாங்கத்துடன் அரசியல் ரீதியாக இணைக்கப்பட்ட மாநிலங்களும் அடங்கும். இருப்பினும், பிரெஞ்சு மற்றும் போர்த்துக்கீசிய காலனித்துவ பிரதேசங்கள் சேர்க்கப்படவில்லை.


1921-ம் ஆண்டு மக்கள்தொகை கணக்கெடுப்பு : இந்த கணக்கெடுப்பு, இந்தியப் பேரரசு என அழைக்கப்படும், இந்திய அரசாங்கத்தால் நேரடியாகக் கட்டுப்படுத்தப்படும் முழுப் பகுதியையும் உள்ளடக்கியது. பொதுவாக, பிரிட்டிஷ் இந்தியா என்று குறிப்பிடப்படும் இந்திய மாநிலங்கள், அரசியல் தொடர்பாக இந்தியத் தலைவர்களால் நிர்வகிக்கப்படும் பகுதிகளை உள்ளடக்கியது. இது, ஒன்றிய அரசுடன் அல்லது பல்வேறு மாகாண அரசுகளுடன் அரசியல் உறவைக் கொண்டிருந்தனர்.


1951-ம் ஆண்டின் மக்கள்தொகை கணக்கெடுப்பு : சுதந்திர இந்தியாவின் முதல் மக்கள்தொகை கணக்கெடுப்பு 1951-ம் ஆண்டில் நடத்தப்பட்டது. இது நாட்டின் தற்போதைய தொடரில் ஏழாவது மக்கள் தொகைக் கணக்கெடுப்பைக் குறிக்கிறது. குறிப்பிடத்தக்க வகையில், ஜம்மு & காஷ்மீரின் முழுப் பகுதியும் இந்த மக்கள் தொகை கணக்கெடுப்பில் இருந்து விலக்கப்பட்டது. அதற்குப் பதிலாக, முந்தைய மக்கள் தொகை கணக்கெடுப்பு புள்ளிவிவரங்களின் தரவுகளைப் பயன்படுத்தி மதிப்பிடப்பட்டது.


1971-ம் ஆண்டு மக்கள் தொகைக் கணக்கெடுப்பு : இது தொடர்ச்சியான 11-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். இடைக்கால நாடாளுமன்றத் தேர்தலுடன் முரண்படுவதைத் தவிர்க்க இது வழக்கத்தை விட வேறு நேரத்தில் நடத்தப்பட்டது.


2011-ம் ஆண்டு, மக்கள் தொகை கணக்கெடுப்பு : 2011-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு என்பது இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு அமைப்பால் நடத்தப்பட்ட 15-வது தேசிய மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகும். இது இரண்டு கட்டங்களாக மேற்கொள்ளப்பட்டது. இவை, வீடுவாரியான பட்டியல் மற்றும் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆகியவை ஆகும்.


குறிப்பிடத்தக்க வகையில், கோவிட்-19 தொற்றுநோய் பரவலால் 2021-ம் ஆண்டு (16-வது மக்கள் தொகை கணக்கெடுப்பு) ஒத்திவைக்கப்பட்டது. மேலும், இது அடுத்த ஆண்டு நடத்தப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.






உங்களுக்கு தெரியுமா?

          1951-ம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்பு வரை ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் தற்காலிக அடிப்படையில் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான அமைப்பு அமைக்கப்பட்டது. 1948-ம் ஆண்டில், மக்கள் தொகை கணக்கெடுப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டது. இந்த சட்டம் மக்கள் தொகை கணக்கெடுப்பு நடத்துவதற்கான ஒரு கட்டமைப்பை வழங்கியது. மக்கள் தொகை கணக்கெடுப்பு அதிகாரிகளின் கடமைகள் மற்றும் பொறுப்புகள் குறித்தும் கோடிட்டுக் காட்டப்பட்டுள்ளது. மே 1949-ம் ஆண்டில், இந்திய அரசு மக்கள்தொகையின் அளவு மற்றும் மேம்பாடு பற்றிய தரவுகளை சேகரிக்க ஒரு முறையான அணுகுமுறையை உருவாக்க முடிவு செய்தது. இதைச் செய்ய, அவர்கள் உள்துறை அமைச்சகத்திற்குள் ஒரு அமைப்பை உருவாக்கினர். இந்த அமைப்பு இந்தியத் தலைமைப் பதிவாளர் (Registrar General of India) கீழ் இருந்தது. அவர், முன்னாள் மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையராகவும் பணியாற்றுகிறார்.


இந்தியாவில் மக்கள் தொகை கணக்கெடுப்பு எவ்வாறு நடத்தப்படுகிறது?


இந்திய மக்கள் தொகைக் கணக்கெடுப்பு என்பது உலகின் மிகப்பெரிய நிர்வாக மற்றும் புள்ளிவிவரப் பயிற்சியாகும். பத்தாண்டு கால மக்கள்தொகை கணக்கெடுப்பை நடத்துவதற்கான பொறுப்பு, இந்திய அரசாங்கத்தின் உள்துறை அமைச்சகத்தின் ஒரு பகுதியாக இருக்கும் இந்தியத் தலைமைப் பதிவாளர் (Registrar General of India) மற்றும் மக்கள்தொகைக் கணக்கெடுப்பு ஆணையரிடம் உள்ளது.


ஒன்றிய அரசு, மாநில மற்றும் யூனியன் பிரதேச (UT) அரசாங்கங்களுடன் இணைந்து, நாடு முழுவதும் இந்த விரிவான நிர்வாக செயல்பாட்டை நடத்துகிறது. ஒவ்வொரு மாநிலம் மற்றும் யூனியன் பிரதேசத்தின் நிர்வாகம், மக்கள் தொகைக் கணக்கெடுப்பு சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்கும், மேம்பாடான தரவைப் பராமரிப்பதற்கும், அந்தந்தப் பகுதிகளின் முழுமையான கணக்கெடுப்பை உறுதி செய்வதற்கும் பொறுப்பாகும்.


மக்கள்தொகை கணக்கெடுப்பு இரண்டு முக்கிய படிகளைக் கொண்டுள்ளது. அவை, வீடுவாரியான பட்டியல் மற்றும் எண்ணும் பயிற்சி, அதைத் தொடர்ந்து உண்மையான மக்கள் தொகைக் கணக்கெடுப்பு ஆகும். மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆண்டுக்கு முந்தைய ஆண்டின் நடுப்பகுதியில் வீடுவாரியான பட்டியலிடுதல் மற்றும் எண்ணிக்கையின் அடிப்படையில் நிகழ்கின்றன. பிப்ரவரியில் இரண்டு முதல் மூன்று வாரங்களுக்கு மக்கள் தொகை கணக்கெடுப்பு நடைபெறுகிறது. மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆண்டின் மார்ச் 1 அன்று இந்தியாவின் மக்கள்தொகை கணக்கெடுப்பு எண்ணிக்கையில் பிரதிபலிக்கின்றன.


சமூக-பொருளாதார மற்றும் சாதிவாரி கணக்கெடுப்பு 2011

        சமூக-பொருளாதார மற்றும் சாதிவாரிக் கணக்கெடுப்பு என்பது கிராமப்புற மற்றும் நகர்ப்புற குடும்பங்களின் சமூகப் பொருளாதார நிலையைப் பற்றிய ஆய்வு மற்றும் முன் வரையறுக்கப்பட்ட அளவுகளின் அடிப்படையில் குடும்பங்களின் தரவரிசையை அனுமதிக்கிறது. 


பிப்ரவரி மாத கணக்கெடுப்பின் போது ஏற்பட்ட பிறப்பு மற்றும் இறப்புகளை நிவர்த்தி செய்ய, கணக்கெடுப்பாளர்கள் மார்ச் முதல் வாரத்தில் வீடுகளுக்கு சென்று தேவையான திருத்தங்களைச் செய்ய வேண்டும். மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான தயாரிப்புகள் பொதுவாக மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்கு முன்பே தொடங்கும். இந்த செயல்முறை பல இடைநிலை படிகளை உள்ளடக்கியது. முழுத் தரவையும் தொகுத்து வெளியிட பல மாதங்கள் முதல் சில ஆண்டுகள் வரை ஆகலாம்.


மக்கள் தொகை கணக்கெடுப்பு தரவு மற்றும் எல்லை நிர்ணயம் எவ்வாறு தொடர்புடையது?


மிக சமீபத்திய மக்கள்தொகை கணக்கெடுப்பின்படி மக்கள்தொகை அடிப்படையில் தேர்ந்தெடுக்கப்பட்ட அமைப்புகளின் மாநிலங்களில் தொகுதிகளின் எல்லைகளை நிர்ணயிக்கும் அல்லது மறுவரையறை செய்யும் செயல்முறையே எல்லை நிர்ணயம் ஆகும். எல்லை நிர்ணயத்தின் முக்கிய நோக்கம் மக்கள்தொகையின் சமமான பிரதிநிதித்துவத்தை உறுதி செய்வதாகும்.


எல்லை நிர்ணயத்திற்கும் மக்கள் தொகை கணக்கெடுப்புக்கும் இடையே தெளிவான தொடர்பு உள்ளது. இந்திய அரசியலமைப்புச் சட்டத்தின் பிரிவு 82, ஒவ்வொரு மக்கள் தொகை கணக்கெடுப்புக்குப் பிறகும் எல்லைகளை மாற்றியமைக்க வேண்டும். "ஒவ்வொரு மக்கள்தொகை கணக்கெடுப்பு முடிந்ததும், மாநிலங்களுக்கு மக்கள் மன்றத்தில் இட ஒதுக்கீடு மற்றும் ஒவ்வொரு மாநிலத்திலும் தொகுதிகளாகப் பிரிப்பது ஆகியவை அத்தகைய அதிகாரத்தால் மறுசீரமைக்கப்படும் மற்றும் நாடாளுமன்றம் சட்டத்தால் தீர்மானிக்கும் முறையாகும்" என்று இந்தப் பிரிவு கூறுகிறது


42-வது அரசியலமைப்பு திருத்தம் 1976-ம் ஆண்டில் அறிமுகப்படுத்தப்பட்டது. இந்த திருத்தம் 170-வது பிரிவை மாற்றியது மற்றும் எல்லை நிர்ணய செயல்முறையை நிறுத்தி வைத்தது. 2000-ம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் முடிவுகள் கிடைக்கும் வரை எல்லை நிர்ணயம் நடைபெறாது. 2001-ம் ஆண்டில், எல்லை நிர்ணயம் மீதான தடை மேலும் 25 ஆண்டுகளுக்கு நீட்டிக்கப்பட்டது. 2001-ம் ஆண்டில் 84 வது அரசியலமைப்பு திருத்தம் 2026-ம் ஆண்டுக்குப் பிறகு நடத்தப்பட்ட மக்கள் தொகை கணக்கெடுப்பின் அடிப்படையில் மட்டுமே அடுத்த எல்லை நிர்ணயம் செய்ய முடியும் என்று கூறியது. சட்டப்பிரிவு 170 சட்டமன்றங்களின் கட்டமைப்பை உள்ளடக்கியது. இது "மக்கள் தொகை" என்ற வார்த்தையின் விளக்கத்தை உள்ளடக்கியது. இந்த சொல் முக்கியமானது, ஏனெனில் இது பிராந்திய தொகுதிகளைப் பிரிப்பதற்கான அடிப்படையாகப் பயன்படுத்தப்படுகிறது.



எல்லை நிர்ணயம் செய்வது யார்?

      எல்லை நிர்ணயம் என்பது எல்லை நிர்ணய ஆணைய சட்டத்தின் விதிகளின் கீழ் இந்திய அரசாங்கத்தால் நியமிக்கப்பட்ட ஒரு சுதந்திரமான எல்லை நிர்ணய ஆணையத்தால் மேற்கொள்ளப்படுகிறது. எல்லை நிர்ணய ஆணையம் இந்திய குடியரசுத் தலைவரால் நியமிக்கப்பட்டு இந்திய தேர்தல் ஆணையத்துடன் இணைந்து செயல்படுகிறது. இது பின்வருவனவற்றை உள்ளடக்கியது. இவை, ஓய்வுபெற்ற உச்ச நீதிமன்ற நீதிபதி, இந்திய தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் அந்தந்த மாநில தேர்தல் ஆணையர்கள் ஆகியோர் அடங்கும். ஆணையத்தின் உத்தரவுகள் இறுதியானவை என்றும், எந்த நீதிமன்றத்தின் முன்பும் கேள்வி கேட்க முடியாது என்றும், அது தேர்தலை காலவரையின்றி நடத்தும் என்றும் அரசியலமைப்புச் சட்டம் கட்டளையிடுகிறது.






எல்லை நிர்ணயத்தின் வரலாறு


சுதந்திரத்திற்குப் பிறகு (1951 முதல் 2011 வரை) பத்தாண்டு கால மக்கள் தொகை கணக்கெடுப்பு ஏழு முறை நடத்தப்பட்டாலும், எல்லை நிர்ணயம் நான்கு முறை மட்டுமே (1952, 1953, 1973 மற்றும் 2002 இல்) மேற்கொள்ளப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், கடைசி எல்லை நிர்ணயம், மக்கள்தொகை அடிப்படையில் தொகுதிகளின் எல்லைகளை மட்டுமே மறுசீரமைத்தது. மேலும், 1976 முதல் நிலையான இடங்களின் எண்ணிக்கையை அதிகரிக்க வழிவகுக்கவில்லை.




Original article:

Share: