பத்திர சட்ட மசோதாவில் ஒரு சிக்கலான பிரிவு உள்ளது. -எம்.எஸ். சஹூ, சிகேஜி நாயர்

 நிர்வாக விதிமுறைகளிலிருந்து பொதுத்துறை நிறுவனங்களுக்கு பரந்த விலக்கு அளிப்பது பொறுப்புணர்வு மற்றும் போட்டித்தன்மையை பாதிக்கும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.


இந்தியாவின் பத்திரச் சட்டக் கட்டமைப்பை நவீனமயமாக்குவதற்கான ஒரு குறிப்பிடத்தக்க மற்றும் காலதாமதமான முயற்சியாக 2025-ஆம் ஆண்டு பத்திரச் சந்தைக் குறியீட்டு (Securities Market Code Bill) மசோதா உள்ளது. இது பல நன்மைகளைக் கொண்டுள்ளது. இருப்பினும், ஒரு விதி, பிரிவு 65(2), மசோதா முன்னெடுக்க  முயற்சிக்கும் சீர்திருத்த நெறிமுறையின் உணர்வை பலவீனப்படுத்தும் அபாயத்தை ஏற்படுத்துகிறது.


பிரிவு 65(2)  ஒன்றிய  அரசுக்கு பொது நலனுக்காக, எந்த பட்டியலிடப்பட்ட பொது துறை நிறுவனமாக (public sector company (PSC)) இருந்தாலும், முதலீட்டு வெளியீடு, குறைந்தபட்ச சலுகை அளவு, பத்திரங்கள் வெளியீடு மற்றும் பரிமாற்றம், நிறுவனர் மேலாண்மை, தகவல் வெளியீடு, முக்கியமாகப் பெறுதல் மற்றும் கைப்பற்றல் விதிகள், பொதுப் பங்குதாரர்முறை, சுமை மற்றும் நிதிசார்பான விதிகள், அபாய மேலாண்மை மற்றும் தொடர்புடைய விவகாரங்களில் உள்ள அனைத்து தேவைகளிலிருந்து விலக்கு அளிக்கும் அதிகாரத்தை வழங்குகிறது. இதன்மூலம், நிர்வாகம் ஒரு முழு சொத்துரிமை வகைக்கான முக்கிய பத்திர சந்தை விதிகளை (ownership class) தற்காலிகமாக நிறுத்திவைக்க முடியும். இது 1991-க்குப் பிறகு இந்தியாவில் செய்யப்பட்ட பொருளாதார சீர்திருத்தங்களின் அடிப்படைக் கோட்பாட்டில் நேரடியாக தாக்கத்தை  ஏற்படுத்துகிறது.


பொருளாதார தாராளமயமாக்கல் (Economic liberalisation) என்பது தனியார் நிறுவனங்கள் சந்தையில் நுழைய அனுமதி வழங்குவது மட்டுமல்ல; இது சந்தைகளில் அரசின் பங்கை மறுபரிசீலனை செய்வதற்காக  அறிமுகப்படுத்தப்பட்டது. துறைசார் இடஒதுக்கீடு குறைக்கப்பட்டு இறுதியில் ஒழிக்கப்பட்டது; வங்கி, தொலைத்தொடர்பு மற்றும் காப்பீட்டில் போட்டி அறிமுகப்படுத்தப்பட்டது; மற்றும் முதலீட்டு விலக்கு வணிக நிறுவனங்களில் மாநிலங்களின் உரிமையை பலவீனப்படுத்தியது. சீர்திருத்த ஒருமித்த கருத்து ஒரு எளிய முன்மொழிவின் அடிப்படையில் அமைந்தது: அரசு ஒரு சலுகை பெற்ற சந்தை பங்கேற்பாளரிடமிருந்து விதி வகுப்பாளராகவும் நடுவராகவும் மாறும். பிரிவு 65(2) சொத்துரிமை அடிப்படையிலேயே விதிகளின் வேறுபாட்டை மீண்டும் அறிமுகப்படுத்துவதன் மூலம் அந்த சமநிலையை சீர்குலைக்கிறது.

            

நடுநிலைமைக்கு குறைந்த முக்கியத்துவம்


சீர்திருத்தத்தின் முக்கியமான அடித்தளம் போட்டித்தன்மை (competitive neutrality) ஆகும். ஒரே சந்தையில் செயல்படும் பொது மற்றும் தனியார் நிறுவனங்கள் ஒரே போட்டி சட்டம், ஒரே தகவல் வெளியீட்டு தரங்கள், ஒரே மேலாண்மை எதிர்பார்ப்புகளுக்கு ஏற்ப செயல்படுகின்றன. ஒரு நிறுவனம் பொது சந்தைகளிலிருந்து மூலதனம் (capital) ஈட்டினால், அது பொது சந்தை விதிகளுக்கு ஏற்ப இருக்க வேண்டும். ஆனால், பரிந்துரைக்கப்பட்ட விலக்கு (exemption) விதி இந்த அடிப்படை யோசனையிலிருந்து விலகிச் செல்கிறது. இது இரட்டை ஆட்சியை உருவாக்குகிறது. இதில் தனியார் நிறுவனங்கள் நிர்வாகம், வெளிப்படுத்தல் மற்றும் கையகப்படுத்தல் விதிமுறைகளால் முழுமையாகக் கட்டுப்பட்டிருக்கும். அதேநேரத்தில் பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிர்வாக அறிவிப்பு மூலம் அவற்றிலிருந்து விடுவிக்கப்படலாம். இது சமநிலையை சீர்குலைத்து, ஒழுங்குமுறை எதிர்பார்ப்புகளில் நிச்சயமற்ற தன்மையை உண்டாக்குகிறது.




அடிப்படையில், இந்த விதி சந்தை அணுகலுக்கும் சந்தை ஒழுக்கத்திற்கும் இடையே ஒரு முரண்பாடான உறவை உருவாக்குகிறது. பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்கள் பங்குச் சந்தைகளை அணுகுகின்றன. நிறுவன மற்றும் வெளிநாட்டு முதலீட்டாளர்களை ஈர்க்க, திரவீகம் (liquidity) மற்றும் விலை கண்டறிதல் (price discovery) ஆகியவற்றில் நன்மை பெறுகின்றன. மேலும், disinvestment திட்டங்களை ஆதரிக்க சந்தை மதிப்பீட்டை (market valuation) நம்புகின்றன. ஆனால், பிரிவு 65(2)-ன் படி, இந்நிறுவனங்கள் முதலீட்டாளர்களின் நம்பிக்கைக்கு அடித்தளமாக இருக்கும், பொதுப் பங்குதாரர்முறை, கையகப்படுத்துதல் பாதுகாப்புகள், மேலாண்மை தரங்கள், அபாய மேலாண்மை விதிகளாகும் போன்ற விதிகளிலிருந்து விலக்கு பெறலாம்.


சந்தைகள் பரஸ்பர நம்பிக்கையில் இயங்குகின்றன: பணத்தைப் பெறுவதற்கு வெளிப்படைத்தன்மை, கணிப்பான திட்டமிடல், ஒரே விதிமுறைகளை பின்பற்றுதல் மிகவும் முக்கியம். சந்தையின் ஒழுங்குமுறைக்கு முழுமையாக உட்படாமல் அதன் நன்மைகளை அனுபவிப்பது என்பது ஒழுங்குமுறைக்கு கட்டுப்படாத சலுகைகளை உருவாக்குவதாகும். காலப்போக்கில், இத்தகைய சமச்சீரற்ற தன்மை, பல ஆண்டுகளாக கடினமாகக் கட்டமைக்கப்பட்ட அமைப்பின் மீதான நம்பிக்கையை பலவீனப்படுத்தும்.


'பொது நலன்' (public interest) என்ற நியாயப்படுத்தல் மட்டுமே இதற்கு முக்கிய காரணமாகும். ஆனால், பொது நலன் என்பது அரசு உரிமையிலிருந்து மட்டுமே வழங்கப்படுகிறது என்று கருத முடியாது. பட்டியலிடப்பட்ட பல பொதுத்துறை நிறுவனங்கள், ஒப்பிடக்கூடிய அளவிலான தனியார் நிறுவனங்கள் நேரடியாகப் போட்டியிடும் துறைகளில் செயல்படுகின்றன: அவை வங்கி, காப்பீடு, எரிசக்தி, உள்கட்டமைப்பு மற்றும் நிதி சேவைகளாகும். ஒரு பொதுத்துறை எஃகு நிறுவனமும் ஒரு தனியார் துறை எஃகு நிறுவனமும் ஒரே வாடிக்கையாளர்களுக்கு சேவை செய்து ஒரே மூலதனச் சந்தையை அணுகினால், ஒன்றை நிர்வாக விதிமுறைகளிலிருந்து விலக்கி, மற்றொன்றை முழுமையாக சேர்த்து வைத்திருப்பதற்கான தன்மையை நிலைநிறுத்துவது கடினமாகிவிடும்.


பல பொது துறைக் நிறுவனங்கள் ஏற்கனவே தனி சட்டங்களின்கீழ் செயல்பட்டு வருகின்றன. இது தனித்துவமான ஆளுகை (Governance) கட்டமைப்புகளை வழங்குகிறது. வேறுபாடு முக்கியமென கருதப்படும் இடங்களில், நாடாளுமன்ற அதை கவனமாக விளக்கியுள்ளது. பிரிவு 65(2) இந்த ஒழுங்குகளை மீறி, நிர்வாகத்துக்கு அதிகாரத்தை தருகிறது. இத்தகைய அறிவிப்பு அடிப்படையிலான அதிகாரம், ஒழுங்குமுறை சுயாட்சி மற்றும் முன்கணிப்பு பற்றிய கேள்விகளை எழுப்புகிறது. 


விதிகள் நிலைத்திருக்கவும், வெளிப்படையாகவும், தற்காலிக அழுத்தங்களிலிருந்து பாதுகாக்கப்படவும் உருவானது. ஒரு வெளியீட்டாளருக்கு அல்லது வெளியீட்டாளர்களின் சில வகைகளுக்கு தனி விதிவிலக்குகள் வழங்கப்படுமெனில், முதலீட்டாளர்களுக்கு  குழப்பம் ஏற்படலாம். குறிப்பாக, ஒழுங்குமுறை விதிகளின் நிலைத்தன்மையை மதிக்கும் உலகளாவிய நிறுவனங்களிடையே குழப்பம் ஏற்படும்.


ஒழுங்குமுறை தளர்வு நிறுவனத்தின் மதிப்பை அதிகரிக்கும் என்பதில் என்பதற்கு போதுமான சான்றுகள் இல்லை. கடந்த சில ஆண்டுகளில், பல துறைகளில் தனியார் நிறுவனங்கள், அதே அளவிலான பொதுத்துறை நிறுவனங்களைவிட அதிக மதிப்பீட்டு விகிதங்களைப் பெற்றுள்ளன. சந்தைகள் நிர்வாகத் தரம், வாரிய சுதந்திரம், வெளிப்படையான தகவல் பகிர்வு மற்றும் நம்பகமான சிறிய பங்குதாரர் பாதுகாப்பை மதிக்கின்றன. இது போன்ற துறைகளை பலவீனப்படுத்துவது செயல்திறனை மேம்படுத்தாது; இது நிர்வாக அபாயத்தையும் மூலதனச் செலவையும் அதிகரிக்க செய்யும்.


பாதுகாப்பு தேவைகள்


பட்டியலிடப்பட்ட பொதுத்துறை நிறுவனங்களில் உள்ள சிறுபான்மை பங்குதாரர்கள், சில்லறை முதலீட்டாளர்கள், ஓய்வூதிய நிதிகள் மற்றும் உள்நாட்டு நிறுவனங்கள் உட்பட, கையகப்படுத்தல் விதிமுறைகள், பொது பங்கு தேவைகள் மற்றும் பாதுகாப்பிற்காக வெளிப்படுத்தல் தரநிலைகளை நம்பியுள்ளனர். அரசு கட்டுப்படுத்தும் பங்குதாரராகவும் விதிகளை உருவாக்கும் நிறுவனமாகவும் இருக்கும்போது, ​​அத்தகைய பாதுகாப்புகள் முக்கியத்துவம் பெறுகின்றன. இந்த தரநிலைகளை புறக்கணிக்கும் எந்தவொரு நடவடிக்கையும் அதிக பொதுத்துறை நிறுவனங்களை பட்டியலிடுவது மற்றும் பங்கு விற்பனையை அதிகரிப்பது என்பது சட்டத்திற்கு எதிரான நடவடிக்கையாகும்.


அரசு தனது நிறுவனங்களைப் பாதுகாப்பது இயற்கையானது. குறிப்பாக, பொது வளங்கள் மற்றும் கொள்கை நோக்கங்கள் ஒன்றாக இணைந்து செயல்படும் இடங்களில்  இது  இயற்கையானது. ஆனால், அதிகப்படியான பாதுகாப்பு எதிர் விளைவை ஏற்படுத்தும்.


இந்த மசோதா,  நம்பகமான மற்றும் உலகளாவிய போட்டித்தன்மை வாய்ந்த மூலதனச் சந்தைகளுக்கான இந்தியாவின் உறுதிப்பாட்டை வலுப்படுத்த ஒரு வாய்ப்பாகும். அந்த உறுதிப்பாடு ஒழுங்குமுறைக்கு முன் சமத்துவம், நிறுவன தெளிவு மற்றும் போட்டி நடுநிலைமை ஆகியவற்றில் தங்கியுள்ளது. பிரிவு 65(2), அதன் தற்போதைய வடிவத்தில், உரிமையானது மீண்டும் ஒழுங்குமுறை கடமையை தீர்மானிக்கக்கூடும்  என்ற  அபாயங்களைக் கொண்டுள்ளது.


பொதுத்துறைநிறுவனங்கள் பொதுச் சந்தைகளில் இருந்து நிதி பெற விரும்பினால், அதற்குப் பிறகு வரும் கட்டுப்பாடுகளை ஏற்றுக்கொள்ள வேண்டும். பட்டியலிடப்பட்ட பொதுத்துறைநிறுவனங்கள்களை முக்கிய பத்திர சந்தை துறைகளிலிருந்து விலக்கு அளிக்க அரசாங்கத்தை அனுமதிக்கும் பிரிவு 65(2), 30 ஆண்டுகால பொருளாதார சீர்திருத்தத்தை மாற்றியமைக்கும் அபாயத்தைக் கொண்டுள்ளது. வெளிப்படையான ஆலோசனை, ஒரே மாதிரியான அனைத்து நிறுவனங்களுக்கும் பொருந்தக்கூடிய ஒழுங்குமுறை திருத்தங்கள் அல்லது நாடாளுமன்றத்தில் விவாதிக்கப்படும் இலக்கு சார்ந்த மாற்றங்கள் மூலம் உண்மையான துறைசார்ந்த சவால்களை எதிர்கொள்ள முடியும்.



போட்டிச் சந்தைகளில் வேறுபட்ட ஒழுங்குமுறை விதிகளுக்கு உரிமை மட்டுமே அடிப்படையாக மாற முடியாது. ஒரு நவீன பத்திரக் குறியீடு சமமான விதிகளையும் நிறுவன நம்பகத்தன்மையையும் வலுப்படுத்த வேண்டும். அவற்றை பலவீனப்படுத்தக்கூடாது



சாஹூ இந்திய திவால்நிலை மற்றும் நொடிப்புநிலை வாரியத்தின் முன்னாள் தலைவர்; நாயர் தேசிய பத்திர சந்தை நிறுவனத்தின் முன்னாள் இயக்குநர்.


Original article : Securities Bill has a problematic Section. -MS Sahoo CKG Nair

Share: