இந்தியாவின் நகரங்களை மறுவடிவமைப்பதற்கான ஒரு புதிய ஒப்பந்தம் -ஸ்ரீனிவாஸ் கதிகிதலா

 நகர்ப்புற சவால் நிதி, இந்தியா நகர்ப்புற உள்கட்டமைப்பிற்கான சந்தை இணைப்பு, சீர்திருத்தம் சார்ந்த மற்றும் விளைவு சார்ந்த கட்டமைப்பை நோக்கிய மாற்றத்தைக் குறிக்கிறது.


இந்தியாவின் நகரமயமாக்கல் இப்போது ஒரு முக்கியமான கட்டத்தில் உள்ளது. இன்று நகரங்கள் நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பெரும் பங்கை வழங்குகின்றன. அவை மிகவும் சுறுசுறுப்பான பொருளாதாரக் குழுக்களை நடத்துகின்றன மற்றும் மில்லியன் கணக்கான மக்களின் வாழ்க்கைத் தரத்தை பெருகிய முறையில் வடிவமைக்கின்றன. இருப்பினும் அவை தொடர்ச்சியான உள்கட்டமைப்பு தொடர்பான பற்றாக்குறைகள், காலநிலை பாதிப்புகள், நிதிக் கட்டுப்பாடுகள் மற்றும் நிறுவன பாகுபாடு எதிர்கொள்கின்றன. உற்பத்திரீதியாகவும், நிலையானதாகவும், அனைவரையும் உள்ளடக்கியதாகவும் நகரமயமாக்குவதே முக்கிய சவாலாகும்.


சமீபத்தில் அங்கீகரிக்கப்பட்ட நகர்ப்புற சவால் நிதி (Urban Challenge Fund (UCF)) ஒரு குறிப்பிடத்தக்க மாற்றத்தைக் குறிக்கிறது. 2025–26 நிதியாண்டு முதல் 2030–31 நிதியாண்டு வரை ரூ.1 லட்சம் கோடி மத்திய உதவி ஒதுக்கீட்டையும், மொத்த முதலீட்டில் கிட்டத்தட்ட ரூ.4 லட்சம் கோடியை ஊக்குவிக்கும் என்று எதிர்பார்க்கப்படும் வடிவமைப்பையும் கொண்டு, இந்த நிதி, நகர்ப்புற உள்கட்டமைப்பிற்கான சந்தை இணைக்கப்பட்ட, சீர்திருத்தம் சார்ந்த மற்றும் விளைவு சார்ந்த கட்டமைப்பை நோக்கிய மாற்றத்தைக் குறிக்கிறது.

மத்திய உதவி மொத்த திட்ட செலவில் 25 சதவீதமாக வரையறுக்கப்பட்டுள்ளது. மேலும், நகரங்கள் சந்தை மூலங்களிலிருந்து குறைந்தபட்சம் 50 சதவீத செலவை திரட்ட வேண்டும். மீதமுள்ள தொகை மாநில அரசுகள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள் அல்லது பிற நிறுவனங்களில் இருந்து வரலாம். இது நகர்ப்புற உள்கட்டமைப்பு பெருகிய முறையில், வருவாய் ஆதரவு திட்டங்கள் மூலம் மூலதனச் சந்தைகளை அதிகளவில் அணுக வேண்டும் என்பதைக் குறிக்கிறது.


நகர்ப்புற சவால் நிதி (UCF) மூன்று நிலைகளைச் சுற்றி கட்டமைக்கப்பட்டுள்ளது. முதலாவது, வளர்ச்சி மையங்களாக நகரங்கள், ஒருங்கிணைந்த இடம்சார்ந்த மற்றும் போக்குவரத்து திட்டமிடல், பொருளாதார வழித்தடங்களில் உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை, சுற்றுலா அல்லது தளவாடக் குழுக்கள் போன்ற பொருளாதார வலிமைகளின் வளர்ச்சியை ஆதரிக்கிறது. இதன் நோக்கம் சொத்துக்களை உருவாக்குவது மட்டுமல்ல, போட்டித்தன்மை மற்றும் உற்பத்தித்திறனை மேம்படுத்துவதாகும்.


இரண்டாவது, நகரங்களின் ஆக்கப்பூர்வமான மறுவடிவமைப்பு, வரலாற்று மையங்கள் மற்றும் மத்திய வணிக மாவட்டங்களின் நெரிசல் மற்றும் சரிவை நிவர்த்தி செய்கிறது. பழுப்பு நில மீளுருவாக்கம், போக்குவரத்து சார்ந்த மேம்பாடு மற்றும் பொது நிலத்தை மறுசீரமைப்பதை ஊக்குவிப்பதன் மூலம், நிதி தற்போதுள்ள நகர்ப்புற தடங்களுக்குள் மதிப்பைத் திறக்க முயல்கிறது.


மூன்றாவது நீர் மற்றும் சுகாதாரம், சேவை செறிவு, கழிவுநீர் மறுபயன்பாடு, வெள்ளத்தைக் குறைத்தல் மற்றும் மரபுசார்ந்த கழிவு தளங்களை சரிசெய்தல் ஆகியவற்றை வலியுறுத்துகிறது. காலநிலை மீள்தன்மை இந்தக் கட்டமைப்பில் பின்னிப் பிணைந்துள்ளது.


மிகவும் புதுமையான பிரிவுகளில் ஒன்று ரூ.5,000 கோடி கடன் திருப்பிச் செலுத்தும் உத்தரவாதத் திட்டம் ஆகும். முதல் முறையாக, சிறிய நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், குறிப்பாக 1 லட்சத்திற்கும் குறைவான மக்கள்தொகை கொண்ட நகரங்கள் அடங்கும். மலைப்பாங்கான மற்றும் வடகிழக்கு மாநிலங்களில் உள்ள நகரங்களுடன், இப்போது மத்திய அரசின் கட்டமைக்கப்பட்ட உத்தரவாதங்களுடன் சந்தை நிதியை அணுக அனுமதிக்கப்படுகின்றன.

மத்திய உதவிக்கான அணுகல் சீர்திருத்தங்களைப் பொறுத்தது. நகரங்கள் முதலில் தங்கள் கடன் தகுதியை மேம்படுத்தும், சொத்து மேலாண்மை அமைப்புகளை வலுப்படுத்தும், சேவை வழங்கலை மின்னணுமயமாக்கும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தும் மற்றும் நிலப் பயன்பாடு மற்றும் இயக்கத் திட்டமிடலுக்கான ஒருங்கிணைந்தக் கட்டமைப்புகளை ஏற்றுக்கொள்ளும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


நகர்ப்புற சவால் நிதி (UCF) தனியார் துறையின் பங்கையும் மறுவரையறை செய்கிறது. சந்தை நிதியுதவியை கட்டாயமாக்குவதன் மூலமும், கட்டமைக்கப்பட்ட இடர்-பகிர்வு ஏற்பாடுகளை (risk-sharing arrangements) ஊக்குவிப்பதன் மூலமும், வடிவமைப்பு, நிதி மற்றும் செயல்பாடுகளில் வலுவான தனியார் பங்களிப்பை அனுமதிக்கிறது.



இந்தக் கொள்கை திட்டத் தயாரிப்புக்கு ஆதரவு, பரிவர்த்தனை ஆலோசனை உதவி மற்றும் டிஜிட்டல் கண்காணிப்பு அமைப்புகள், திட்ட நம்பகத்தன்மை மற்றும் முதலீட்டாளர் நம்பிக்கையை வலுப்படுத்தும் நோக்கம் கொண்டவை. திறம்பட செயல்படுத்தப்பட்டால், இது இந்தியாவின் நகராட்சி பத்திர சந்தையை வலுப்படுத்தலாம் மற்றும் நகர்ப்புற உள்கட்டமைப்பிற்கான நிதி தளத்தை விரிவுபடுத்தலாம்.



வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகம் நகர்ப்புற சவால் நிதியை (UCF) ஒரு பரந்த சுற்றுச்சூழல் அமைப்பிற்குள் நிலைநிறுத்தியுள்ளது. மாநிலங்கள், நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகள், நிதி நிறுவனங்கள், கடன் மதிப்பீட்டு நிறுவனங்கள் மற்றும் தனியார் அளவில் உருவாக்குபவர்கள் ஆகியோர் போட்டித்தன்மை வாய்ந்த சவால் அடிப்படையிலான செயல்முறையின் மூலம் ஈடுபடுவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயல்முறை தயார்நிலை மற்றும் புதுமைக்கு வெகுமதி அளிக்கிறது.



நகர்ப்புற சவால் நிதி (UCF) நகரமயமாக்கலை ஒரு முதலீட்டு வாய்ப்பாக மறுவடிவமைக்கிறது. முதலீட்டின் மூலம் உருவாக்கக்கூடிய மற்றும் பலப்படுத்தக்கூடிய பகுதிகளாக இது நகரங்களைப் பார்க்கிறது. சந்தை ஒழுக்கம், சீர்திருத்த ஊக்கத்தொகைகள் மற்றும் அளவிடக்கூடிய விளைவுகளை அதன் வடிவமைப்பில் சேர்ப்பதன் மூலம், இந்தியாவின் நகர்ப்புற மாற்றத்தின் அடுத்த கட்டத்தை இயக்க முயல்கிறது.



கட்டுரையாளர் வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகார அமைச்சகத்தின் செயலாளர் ஆவர்.


Original article : A new compact to reshape India’s cities -Srinivas Katikithala

Share: