இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினருக்கான (Creamy Layer) அளவுகோலாகப் பெற்றோரின் வருமானம் குறித்த உச்சநீதிமன்றத் தீர்ப்பு: நீதிமன்றம் கூறியது என்ன? என்னென்ன மாற்றங்கள் பரிந்துரைக்கப்பட்டுள்ளன? - ஷியாம்லால் யாதவ்

பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினர்களுக்கு, இதர பிற்படுத்தப்பட்ட இடஒதுக்கீடு சலுகைகளைப் பெறுவதற்கான உரிமை இல்லை என்றும் பொதுத்துறை நிறுவனங்கள் (PSU) மற்றும் தனியார் துறையில் வேலை செய்பவர்களின் குழந்தைகள் மற்றும் அரசு துறையில் வேலை செய்பவர்களின் குழந்தைகள் இடையிலான சமத்துவம் (equivalence) குறித்து நீதிமன்றம் கூறியது இதுதான்.



புதன்கிழமை உச்சநீதிமன்றம், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினரிடையே (Other Backward Classes (OBCs)) பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினரை தீர்மானிக்க வருமானம் மட்டுமே அளவுகோலாக இருக்க முடியாது என்று தீர்ப்பளித்தது. மேலும், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார் துறை ஊழியர்கள் மற்றும் அரசுத் துறையில் உள்ளவர்களுக்கு இடையிலான சமநிலை குறித்த நீண்டகால கேள்வியைத் தீர்த்து வைத்துள்ளது.


பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவில் உள்ளவர்களுக்கு, இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினருக்கான இடஒதுக்கீடு சலுகைகள் பெறும் உரிமை இல்லை. நீண்டகாலமாகத் தொடர்ந்து வரும் இந்தப் பிரச்சினை எதைப் பற்றியது என்பதையும், அது ஏற்படுத்தும் விளைவுகளையும் இங்கே காணலாம்.


புதிதாக என்ன தீர்ப்பு  வழங்கப்பட்டுள்ளது ?


புதன்கிழமை, 2025 அக்டோபர் 30 அன்று வழங்கப்பட்டிருந்த (reserved) தீர்ப்பை உச்சநீதிமன்றம் நிறுத்திவைத்து. நீதிபதிகள் பி.எஸ். நரசிம்ம மற்றும் நீதிபதி ஆர். மகாதேவன் ஆகியோர் அடங்கிய கூடுதல் அமர்வு, “பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினரை விலக்குவதன் நோக்கம், அதே சமூகத்தில் ஒரே அளவுகோலில் இருக்கும் மக்களுக்குள் செயற்கையான வேறுபாடு உருவாக்குவது அல்ல என்று நீதிமன்றம் கூறியது. ஒரே நிலைமையில் இருக்கும் இதர பிற்படுத்தப்பட்ட பிரிவை சேர்ந்த விண்ணப்பதாரர்களுக்கு வேறுபட்ட முறையில் நடந்து கொள்வது சட்ட ரீதியாகவும் அரசியலமைப்புரீதியாகவும் தவறானது என்றும் நீதிமன்றம் தெரிவித்தது.


பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினருக்கான அளவுகோல் தொடர்பாக பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel and Training (DoPT)) அக்டோபர் 14, 2004 அன்று வெளியிட்ட கடிதத்தின் காரணமாக எழும் மனுக்களை அமர்வு விசாரித்தது. இது செப்டம்பர் 1993-ல் நீண்டகாலத்திற்கு முன்பு வெளியிடப்பட்ட நிர்வாக ஆணையை (Official Memorandum (OM) தெளிவுபடுத்தியது.


பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினருக்கான அளவுகோலைத் தீர்மானிப்பதற்கான வருமானம் அல்லது சொத்து மதிப்பீட்டிலிருந்து, ஊதிய வருமானத்தையும் உழவர்களுக்கான வருமானத்தையும் நிர்வாக ஆணை (OM) விலக்கி வைத்திருந்தபோதிலும், 2004-ஆம் ஆண்டு அக்டோபர் 14 அன்று வெளியிடப்பட்ட கடிதம், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் தனியார்துறையில் வேலை செய்பவர்களின் வருமானத்தையும் கணக்கில் கொள்ள வேண்டும் என்று கூறியது. இதனால் அரசு ஊழியர்களின் குழந்தைகள் மற்றும் பொதுத்துறை நிறுவனங்கள்/தனியார் துறை ஊழியர்களின் குழந்தைகளுக்கு இடையே வேறுபாடு (discrimination) ஏற்பட்டது என்று நீதிமன்றம் குறிப்பிட்டது.


பொதுத்துறை நிறுவனங்கள் அல்லது தனியார்துறையில் வேலை செய்பவர்களின் குழந்தைகளை, பெற்றோரின் சம்பள வருமானத்தை மட்டும் அடிப்படையாக கொண்டு இட ஒதுக்கீட்டில் இருந்து நீக்குவது சரியல்ல நடைமுறை அல்ல என்று நீதிமன்றம் கூறியது. அவர்களின் பதவி (Group A, B, C, D போன்ற நிலைகள்) என்ன என்பதையும் கவனிக்க வேண்டும். இதைப் பார்க்காமல் வருமானத்தை மட்டும் வைத்து முடிவு செய்தால், ஒரே நிலைமையில் இருக்கும் மக்களுக்குள் தேவையற்ற வேறுபாடு ஏற்படும். இது அரசியலமைப்பின் சமத்துவக் கொள்கைப் பிரிவு 14, 15, 16-க்கு எதிரானதாக இருக்கும் என்று நீதிமன்றம் தெரிவித்தது.




பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினர் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பில் சேர்க்கப்பட வேண்டும் என்ற கருத்தின் தோற்றம்


1992-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் வழங்கிய முக்கியமான தீர்ப்பான இந்திரா சாஹ்னி எதிர் இந்திய ஒன்றியம் (Indra Sawhney v. Union of India) வழக்குத் தாக்கல் செய்யப்பட்ட பிறகு, இதர பிற்படுத்தப்பட்ட சமூகத்துக்குள் பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினரை சேர்க்க வேண்டும் என்ற கருத்து அறிமுகப்படுத்தப்பட்டது.


செப்டம்பர் 8, 1993 அன்று, பணியாளர் மற்றும் பயிற்சித் துறை (Department of Personnel and Training (DoPT))  ஒரு சுற்றறிக்கையை வெளியிட்டது. அதில் யார் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்கள் என்பதை வகைப்படுத்தினார்கள். அவர்களில் யார் பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவை சேர்ந்தவர்கள் என்பதை தெளிவுபடுத்தியது.


அரசுப் பணிகளில் இருப்பவர்களுக்கு, 'பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினர்' என்பது அரசியலமைப்பு பதவிகளை வகிக்கும் நபர்கள்; அகில இந்திய சேவைகள், ஒன்றிய சேவைகள் மற்றும் மாநில அரசு பணிகளின் குரூப்-ஏ/வகுப்பு-II அதிகாரிகள்; ஒன்றிய மற்றும் மாநிலத்தின் குரூப்-பி/வகுப்பு-II பணிகள்; பொதுத்துறை நிறுவனங்களின் ஊழியர்கள்; ஆயுதப்படை அதிகாரிகள்; தொழில் வல்லுநர்கள் மற்றும் வர்த்தக, தொழில் துறையைச் சேர்ந்தவர்கள்; சொத்து உரிமையாளர்கள்; மற்றும் வருமானம்/செல்வச் சோதனை போன்ற குழுக்களைக் குறிப்பிடுகிறது.


பெற்றோரில் ஒருவர் Group-A அதிகாரியாக நேரடியாக நியமிக்கப்பட்டவர் அல்லது 40 வயதுக்கு முன் அந்த பதவிக்கு பதவி உயர்வு பெற்றவர் என்றால், அவர்களின் குழந்தைகள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கான சலுகையை பெறமுடியாது. அதேபோல், அவர்களின் பெற்றோரும் Group-B அதிகாரிகளாக நேரடியாக நியமிக்கப்பட்டவர்கள் என்றால், அவர்களின் குழந்தைகளும் பொருளாதாரத்தில் முன்னேறிய  பிரிவினராக கருதப்படுவர்.


ஆயுதப்படைகளைப் பொறுத்தவரை, லெப்டினன்ட் கர்னல் பதவி வரை உள்ள அதிகாரிகள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கான ஒதுக்கீட்டைப் பெறலாம். ஆனால், உயர் பதவிகள் பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பில் உள்ளன.


அரசுத் துறையில் இல்லாதவர்களுக்கான அளவுகோல் 1993-ல் ஆண்டுக்கு ரூ.1 லட்சமாக நிர்ணயிக்கப்பட்டது. இது காலப்போக்கில் திருத்தப்பட்டது. 2017-ஆம் ஆண்டு முதல், இந்த வருமான வரம்பு ரூ.8 லட்சமாக உள்ளது.


1993-ஆம் ஆண்டின் பணியாளர் மற்றும் பயிற்சித் துறை நிர்வாகக் குறிப்பு மற்றும் அக்டோபர் 2004-ஆம் ஆண்டின் விளக்கம் ஆகியவை எவை?


2004 அக்டோபர் 14 அன்று பணியாளர் மற்றும் பயிற்சித் துறை, OBC Creamy Layer குறித்து ஒரு விளக்கத்தை வெளியிட்டது. அதன் 9-வது பத்தியில் பின்வருமாறு குறிப்பிடப்பட்டிருந்தது: "அரசுப் பணிகளில் உள்ள பதவிகளுக்கு இணையான அல்லது ஒப்பிடக்கூடிய பதவிகள் குறித்த மதிப்பீடு செய்யப்படாத நிறுவனங்களில் பணிபுரியும் நபர்களின் மகன் மற்றும் மகள்களின் 'Creamy Layer' அங்கீகாரம் பின்வருமாறு தீர்மானிக்கப்படுகிறது: பெற்றோரின் ஊதியம் வாயிலாக வரும் வருமானம் மற்றும் பிற ஆதாரங்கள் (ஊதியம் மற்றும் விவசாய நிலம் தவிர) வாயிலாக வரும் வருமானம் ஆகியவை தனித்தனியாகக் கணக்கிடப்படுகின்றன. பெற்றோரின் ஊதிய வருமானமோ அல்லது பிற ஆதாரங்கள் (ஊதியம் மற்றும் விவசாய நிலம் தவிர) வாயிலாக வரும் வருமானமோ, தொடர்ந்து மூன்று ஆண்டுகளுக்கு ஆண்டுக்கு ரூ. 2.5 லட்சம் என்ற வரம்பை மீறினால், அத்தகைய நபர்களின் மகன் மற்றும் மகள்கள் 'Creamy Layer' பிரிவைச் சேர்ந்தவர்களாகக் கருதப்படுவர்.


ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசு ஆட்சியில், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த வாக்காளர்களைக் கவரும் முயற்சிகளில் ஈடுபட்டது. 2014-ஆம் ஆண்டு வரை, பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் இந்தச் சுற்றறிக்கை கடிதம் போதுமான அளவு செயல்படுத்தப்படவில்லை.


பணியாளர் மற்றும் பயிற்சித் துறை  இந்த விளக்கத்தின் அடிப்படையில் சாதிச் சான்றிதழ்களைச் சரிபார்க்கத் தொடங்கியதன் மூலம், 2015-ஆம் ஆண்டின் குடிமைப் பணித் தேர்வு (Civil Service Examination (CSE)) (2016-ஆம் ஆண்டுத் தொகுதி) முதல் இது திறம்படச் செயல்படுத்தப்படத் தொடங்கியது.

பல்வேறு  ஒன்றிய  மற்றும் மாநில அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள், பல்கலைக்கழகங்கள் மற்றும் தனியார்துறை ஊழியர்களிடையே "பதவிச் சமத்துவத்தை" (equivalence) நடைமுறைப்படுத்துவதற்கான ஒரு முன்மொழிவை ஒன்றிய அரசு பரிசீலித்து வந்தது. இது குறித்து 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' நாளிதழ் ஆகஸ்ட் 2025-ல் செய்தி வெளியிட்டிருந்தது. இருப்பினும், அந்த அமைச்சரவைக் குறிப்பின் வரைவு (draft cabinet note) அதிகாரப்பூர்வமாக முன்வைக்கப்படவில்லை என்று வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.


பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் இந்த விளக்கத்தினால் ஏற்பட்ட தாக்கம் என்ன?


2016-ஆம் ஆண்டுத் தொகுதி முதல், 100 இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை தேர்வர்கள் பல்வேறு அதிகாரிகளிடமிருந்து சாதிச் சான்றிதழ்களைப் பெற்று, குடிமைப் பணித் தேர்விலும் (CSE) தேர்ச்சி பெற்றிருந்தபோதிலும், பணியாளர் மற்றும் பயிற்சித் துறையின் பரிசீலனையின்போது நிராகரிக்கப்பட்டுள்ளனர். இவர்கள் பிற தேர்வுகளில் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்த தேர்வர்களாகத் தகுதி பெற்றிருந்தபோதிலும், குடிமைப் பணித் தேர்வில் இவர்களின் கோரிக்கையை பணியாளர் மற்றும் பயிற்சித் துறை நிராகரித்துவிட்டது.


இதனால் பாதிக்கப்பட்ட தேர்வர்களில் சிலர், சென்னை, டெல்லி மற்றும் கேரளா போன்ற பல்வேறு உயர் நீதிமன்றங்களை அணுகினர்.


இத்தகைய வழக்குகளில் ஒன்று, ரோஹித் நாதன் என்பவரால் சென்னை உயர்நீதிமன்றத்தில் தொடரப்பட்டது. இவ்வழக்கை சஷாங்க் ரத்னூ என்பவர் உச்சநீதிமன்றம் வரை சென்று வாதாடினார்.


நாதன் போலவே, வழக்கறிஞராகப் பணிபுரியும் ரத்னூவும் இந்த விளக்கத்தால் பாதிக்கப்பட்ட ஒரு தேர்வர் ஆவார். அவர் 688-வது ரேங்க் பெற்றார். 2016-ஆம் ஆண்டில் இந்திய வருவாய் பணியை (Indian Revenue Service (IRS)) பெற்று விடுவார் என்ற நம்பிக்கையுடன் இருந்தார். ஆனால், பொதுப் பிரிவின் விண்ணப்பித்தரராக அறிவிக்கப்பட்டதால் அவர் எந்தப் பணியிலும் சேர முடியவில்லை.


பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினர்  ஒதுக்கீடு


செப்டம்பர் 1993 சுற்றறிக்கையில், "சம்பளம்" அல்லது " வேளாண்மை" மூலம் கிடைக்கும் வருமானம் பொருளாதாரத்தில் முன்னேறிய பிரிவினர் என்ற  நிலையைத் தீர்மானிப்பதற்கான வருமானம் மற்றும் செல்வத்தின் சோதனைக்கு கணக்கிடப்படாது என்று திட்டவட்டமாகக் கூறப்பட்டது.


2019-ஆம் ஆண்டு நரேந்திர மோடி அரசாங்கத்தால் அறிமுகப்படுத்தப்பட்ட பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினருக்கான (EWS) இடஒதுக்கீட்டை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள் மீதான விசாரணையின் போது, பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவுகளுக்கும் இதர பிரிப்படுத்தப்பட்ட வகுப்பை சேர்ந்தவர்களுக்கும் வருமான அளவுகோல் ரூ.8 லட்சமாக ஏன் ஒரே மாதிரியாக உள்ளது என்று உச்சநீதிமன்றம் கேட்டபோது, அப்போதைய வருவாய் செயலாளர் அஜய் பூஷண் பாண்டே தலைமையிலான குழுவின் வழக்கறிஞர், 1993-ஆம் ஆண்டு அதே சுற்றறிக்கையை அடிப்படையாகக் கொண்டு, "இதர பிரிப்படுத்தப்பட்ட வகுப்பினர்களில் பொருளாதாரத்தில் முன்னேறிய வகுப்பை சேர்ந்தவர்களுக்கு" வருமானத்தைக் கணக்கிடும்போது, "சம்பளம் அல்லது விவசாய நிலத்திலிருந்து வரும் வருமானம்" அதில் இருந்து "விலக்கப்பட்டிருந்தது" என்றும்; பொருளாதாரரீதியாக நலிவடைந்த பிரிவினரின் வருமானம் "சேர்க்கப்பட்டிருந்தது" என்றும் பூஷன் பாண்டே வாதிட்டார்.


உச்சநீதிமன்ற தீர்ப்பால் யார் பயனடைவார்கள்?


இந்த தீர்ப்பின் பயன் இனி தேர்வு எழுதும் விண்ணப்பதாரர்களுக்கு மட்டும் அல்ல; ஏற்கனவே தேர்வு எழுதி அரசு சேவைகளில் பணிபுரிபவர்களுக்கும் கிடைக்கும். தற்போது பல்வேறு சேவைகளில் பணிபுரியும் சிலருக்கு நல்ல  சேவைகள் வழங்கப்படலாம். ஏற்கனவே பல்வேறு அரசு சேவைகளில் பணிபுரிபவர்களில் சிலருக்கு மேலான தரம் கொண்ட சேவைகள் வழங்கப்படலாம். குறிப்பாக அவர்கள் அகில இந்தியப்பணிகளில் இருந்தால் அவர்களில் சிலருக்கு வேறு நிலைகள் வழங்கப்படலாம். முன்பு எந்த பணியையும் பெற முடியாதவர்களுக்கு, இப்போது அவர்கள் இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினராக நிலை மாற்றப்பட்டதால், புதிய நிலைகளின்அடிப்படையில் பணி வழங்கப்படும்.


இந்த தீர்ப்பின்படி பொருளாதாரத்தில் முன்னேறாத பிரிவினர் (non-creamy layer) தகுதி உள்ள விண்ணப்பதாரர்களுக்கு தேவைப்பட்டால், அரசு கூடுதல் பணியிடங்களை (supernumerary posts) உருவாக்க வேண்டும் என்று உத்தரவிடுவதில் எங்களுக்கு எந்த சிரமமும் இல்லை. ஆனால், அவர்கள் மற்ற அனைத்து தகுதிகளையும் பூர்த்தி செய்திருக்க வேண்டும் என்று உச்சநீதிமன்றம் தெரிவித்தது.


Original Link: SC verdict on parental income as OBC creamy layer criterion: What has court said, what changes.


Share: