இந்திய அரசியலமைப்பு மேற்கத்திய கருத்துக்களுக்கு அப்பாற்பட்டது. இதனால்தான் இது இவ்வளவு காலமாக நிலைத்து நிற்கிறது. -ரோச்சனா பாஜ்பாய், மனஸ் ரதுரி

அதன் உருவாக்குநர்கள், மேற்கத்திய தாராளவாத அரசியலமைப்புவாதத்தின் வரையறுக்கப்பட்ட கற்பனையால் கட்டுப்படுத்தப்படவில்லை, அதன் முக்கியத்துவம் அரசு கட்டுப்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. மாறாக சமூகத்தில், குழுக்கள் மற்றும் சமூகங்கள் அரசிலிருந்து தனித்தனியாக அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றன என்பதை அங்கீகரித்தன.


இந்திய அரசியலமைப்பு ஏற்றுக்கொள்ளப்பட்ட 76வது ஆண்டு நிறைவை இன்று குறிக்கிறது. ரத்தம் சொட்டச் சொட்டப் பிரிவினையும், காலனிய ஆட்சியிலிருந்து அதிகார மாற்றமும் நிகழ்ந்த சூழலில் பிறந்தது இந்திய அரசியலமைப்புச் சட்டம், அது காலத்திற்கு முந்தையது. மேற்கத்திய அரசியலமைப்புகளிலிருந்து இது பல விவகாரங்களில் விலகிச் செல்கிறது. அதிலிருந்து பல கருத்துக்களை கடன் வாங்குவதாக நமது அரசியலமைப்பு குற்றம் சாட்டப்படுகிறது. இந்தியாவில் அரசியலமைப்பு உரிமைகள் தனிநபர் குடிமை மற்றும் அரசியல் சுதந்திரங்களைப் பாதுகாப்பது குறித்த மேற்கத்திய கருத்தை உள்ளடக்கியது, ஆனால், அதை தாண்டியும் செல்கிறது. இவை சமூக வாழ்வில் உள்ள சமத்துவமின்மையை நிவர்த்தி செய்வதற்கும் குழுவால்-வேறுபடுத்தப்பட்ட உரிமைகளை அங்கீகரிப்பதற்கு அரசு மேற்கொள்ள நடவடிக்கையை முன்வைக்கின்றன.


முதலாவதாக, இந்திய அரசியலமைப்பு சமத்துவத்திற்கான உரிமையை வலியுறுத்துகிறது. மேலும், மேற்கத்திய அரசியலமைப்புகளைப் போல் இல்லாமல், ஆழ்ந்த சமத்துவமற்ற சமூகத்தில் அதன் தாக்கங்களை விரிவுபடுத்துகிறது. பிரிவு 14 - சட்டத்தின் முன் அனைவரும் சமம் மற்றும் அனைத்து மக்களுக்கும் சட்டங்களின் சமமான பாதுகாப்பு- மற்றும் பிரிவு 15 - குடிமக்களுக்கு எதிராக அரசு பாகுபாடு காட்டுவதைத் தடை செய்தல் - போன்ற விதிகள் ஒரு புதிய சமூக உருவாக்கத்தைக் குறிக்கின்றன. சாதி தொடர்பாக, மேற்கத்திய அரசியலமைப்புகளைப் போல் இல்லாமல், அதன் சமத்துவ விதிகள் தனிநபர்களுக்கு எதிரான பாகுபாட்டின் சமூக ஆதாரங்களை அடையாளம் காண்கின்றன. எனவே, பிரிவு 15 (2)-ன் கீழ், குடிமக்கள் பொது இடங்களை அணுகுவதில் அரசிடமிருந்து மட்டுமல்ல, தனியார் மக்களிடமிருந்தும் பாகுபாட்டிலிருந்து பாதுகாக்கப்பட வேண்டும். பிரிவு 17 தீண்டாமையை சட்டவிரோதமாக்குகிறது. அதேபோல், சாதி மற்றும் நிலப்பிரபுத்துவத்துடன் பிணைக்கப்பட்ட கடன் அடிமைத்தன நிலைமைகளுக்கு பதிலளிக்கும் விதமாக, பிரிவு 23 மனித கடத்தல் மற்றும் கட்டாய உழைப்பை தடை (human trafficking and forced labour) செய்கிறது. எனவே, இந்திய அரசியலமைப்பை உருவாக்கியவர்கள் மேற்கத்திய தாராளவாத அரசியலமைப்புவாதத்தால் கட்டுப்படுத்தப்படவில்லை. அதன் முக்கியத்துவம் மாநிலக் கட்டுப்பாட்டில் இருந்தது, அதற்குப் பதிலாக சமூகத்தில், குழுக்கள் மற்றும் சமூகங்கள் மாநிலத்திலிருந்து தனித்தனியாக அதிகாரத்தைப் பயன்படுத்துகின்றன என்பதை அங்கீகரித்தன.


இரண்டாவதாக, மேற்கத்திய தாராளமய ஜனநாயக நாடுகளில் அனுமதிக்கப்படுவதற்கு பல ஆண்டுகளுக்கு முன்பே, அரசியலமைப்பு, குழு-வேறுபடுத்தப்பட்ட உரிமைகளை பரந்த அளவில் சமத்துவ தாராளமய கட்டமைப்பிற்குள் அங்கீகரித்தது. மத சிறுபான்மையினர் மற்றும் வரலாற்றுரீதியாக ஓரங்கட்டப்பட்ட குழுக்களுக்கான பாதுகாப்புகள் குறித்து அரசியலமைப்பு சபையில் சூடான விவாதங்கள் நடந்தன, அவை அரசியலமைப்பின் முதல் வரைவிலிருந்து இறுதிவரை ஓரளவு குறைக்கப்பட்டன. குறிப்பாக, மத சிறுபான்மையினருக்கான சட்டமன்ற ஒதுக்கீடுகள் (legislative quotas) 1949-ல் திரும்பப் பெறப்பட்டன. இருப்பினும், பி.ஆர். அம்பேத்கர் போன்ற தலைவர்களின் உத்தரவின் பேரில், கட்டமைப்பு ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்ய மாறுபட்ட அணுகுமுறை தேவை என்பதை அரசியலமைப்பு அங்கீகரித்தது. குடிமை-உரிமைகள் சட்டத்தில் (civil-rights legislation) அமெரிக்கா முன்னேறுவதற்கு பத்தாண்டுகளுக்கு முன்னரே, 1950-ல் உறுதியான நடவடிக்கையை அரசியலமைப்புமயமாக்குவதில் இந்தியா அனைத்து நாடுகளுக்கும் முன்னோடியாக இருந்தது.


அரசியலமைப்பு மத பன்முகத்தன்மைக்கு ஒரு நுட்பமான அணுகுமுறையை ஏற்றுக்கொண்டது. இது ஒரு மதச்சார்பற்ற அரசை நிறுவியது. இந்தச் சொல் 1976-ல் அறிமுகப்படுத்தப்பட்டது.


பிரிவுகள்

முக்கியத்துவம்

பிரிவு 25

தனிநபர்களுக்கான மத சுதந்திரங்களைப் பாதுகாக்கிறது.

பிரிவு 26

குழுக்களுக்கான மத சுதந்திரங்களைப் பாதுகாக்கிறது மற்றும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள் மற்றும் பார்சிகள் போன்ற சிறுபான்மையினர் இந்தப் பிரிவின் கீழ் தங்கள் மத குடும்பச் சட்டங்களைத் (religious family laws) தக்க வைத்துக் கொண்டனர்.

பிரிவு 27

எந்தவொரு மதத்திற்கும் கட்டாய வரி விதிப்பை தடை செய்கிறது. 

பிரிவு 28

அரசு நிதியுதவி பெறும் கல்வி நிறுவனங்களில் கட்டாய மத போதனையைத் தடை செய்கிறது.

பிரிவு 29 மற்றும் 30

மத மற்றும் மொழி சிறுபான்மையினருக்கு தங்கள் மொழி, எழுத்து, பண்பாட்டைப் பாதுகாப்பதற்கும், கல்வி நிறுவனங்களை உருவாக்கி நிர்வகிப்பதற்குமான உரிமைகள் இந்தப்பிரிவுகளின் மூலம் உறுதிப்படுத்தப்பட்டது.


அரசியலமைப்பில் சில பலவீனங்கள் உள்ளன. அது தனிப்பட்ட சுதந்திரங்களையும் பன்முகத்தன்மையையும் பாதுகாக்கிறது. ஆனால், இந்த உரிமைகள் பல சூழ்நிலைகளில் பலவீனமாக உணரப்படலாம். குறிப்பாக, காலனித்துவ சட்டங்களைச் செயல்படுத்தும் அவசரகால விதிகள் உட்பட பல்வேறு சூழ்நிலைகளில் உரிமைகள் மற்றும் தீர்வுகள் வரையறுக்கப்பட்டுள்ளன. நீதிமன்ற மறுஆய்வுக்கான சாத்தியக்கூறுகள் இருந்தபோதிலும், அன்றைய அரசாங்கத்தால்

தீர்மானிக்கப்படும் உரிமைகளின் விதிவிலக்குகள் மற்றும் இடைநீக்கங்களுடன், அரசியலமைப்பு பரந்த விருப்புரிமை அதிகாரங்களைக் (discretionary powers) கொண்ட ஒரு சக்திவாய்ந்த நிர்வாகத்தை உருவாக்கியது.


இருந்தபோதிலும், அரசியலமைப்பு 75 ஆண்டுகளுக்கும் மேலாக ஒரு மகத்தான, பன்முகத்தன்மை கொண்ட அரசியலுக்கான வழிகாட்டியாக நிலைத்து நிற்கிறது. மேலும், ஓரங்கட்டப்பட்டவர்களுக்கு ஒரு நம்பிக்கைக்குரிய புத்தகமாக உள்ளது. இது உலகளாவிய அடிப்படையில் ஒரு சாதனையாகும். அரசியலமைப்புகள் சட்ட நூல்கள் மட்டுமல்ல. இந்தியாவின் நம்பிக்கைகள் மற்றும் நாட்டினர்கள் பற்றிய கதையை அரசியலமைப்புச் சட்டம் சொல்கிறது. தேசிய ஒற்றுமைக்கு ஒரே மாதிரியான தன்மை (uniformity) தேவையில்லை என்பதையும், ஆழமான ஏற்றத்தாழ்வுகளும் சமூக வேறுபாடுகளும் நிறைந்த சூழல்களில் சமத்துவம் என்பது அனைவருக்கும் ஒரே மாதிரியான நடத்தை என்று பொருள்படாது என்பதையும் அரசியலமைப்பு  உணர்த்துகிறது.


பாஜ்பாய் லண்டன் பல்கலைக்கழகத்தில் SOAS-ல் அரசியல் பேராசிரியராகவும், ரதுரி O P ஜிண்டால் குளோபல் பல்கலைக்கழகத்தில் இணைப் பேராசிரியராகவும் உள்ளார்.

Original Article: Indian Constitution went beyond Western notions. This is why it has endured


Share: