இந்தியாவில் உள்ள தொழிலாளர் சட்டக் குறியீடுகள் (Labour Codes), கிக் மற்றும் டிஜிட்டல் இயங்குதள தொழிலாளர்கள் (gig and platform workers) தொடர்பான பிரச்சினைகளை எவ்வாறு கையாள்கின்றன? -குஷ்பூ குமாரி

 முக்கிய அம்சங்கள்:


- நாடாளுமன்றம் 2019-ல் ஊதியச் சட்டத்தையும், 2020-ல் மீதமுள்ள மூன்று சட்டங்களான - தொழிலாளர் உறவுகள் சட்டம்; சமூகப் பாதுகாப்பு சட்டம் மற்றும் தொழில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் பணி நிலைமைகள் சட்டத்தையும் - அங்கீகரித்தது.


— இந்தப் புதிய தொழிலாளர் குறியீடுகள் 29 பழைய தொழிலாளர் சட்டங்களை மாற்றும். கிக் மற்றும் டிஜிட்டல் இயங்குதள தொழிலாளர்கள் உட்பட அனைத்து தொழிலாளர்களுக்கும் சமூகப் பாதுகாப்பு சலுகைகளை வழங்குவதே அவர்களின் குறிக்கோள், ஏனெனில் அவை முதல் முறையாக கிக் தொழிலாளர்கள், டிஜிட்டல் இயங்குதள தொழிலாளர்கள் மற்றும் தள ஒருங்கிணைப்பாளர்கள் (aggregators) யார் என்பதை தெளிவாக வரையறுக்கின்றன.


- ஒரு தொழிலாளி வீட்டிற்கும் வேலைக்குச் செல்லும் போது விபத்து ஏற்பட்டால், அது இப்போது வேலை தொடர்பான விபத்தாகக் கருதப்படும் என்றும், அந்தத் தொழிலாளி இழப்பீடு பெறத் தகுதியுடையவர் என்றும் தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.


- இருப்பினும், இந்த விதிகள் நிலையான கால வேலைவாய்ப்புக்கான விதிமுறைகள், ஆட்குறைப்பு மற்றும் தொழிற்சங்கங்களின் வேலைநிறுத்த உரிமையைக் குறைத்தல் போன்ற சில சர்ச்சைக்குரிய விதிகளைக் கொண்டுள்ளன. இந்த சட்டங்கள்  முன்னர் தொழிற்சங்கங்களால் விமர்சனத்திற்கு உள்ளாகின.


— இந்த தொழிலாளர் சீர்திருத்தங்கள், தொழிலாளர்களின் உரிமைகளைப் பாதுகாக்கும் மற்றும் இந்தியாவின் பொருளாதார வளர்ச்சியை வலுப்படுத்தும் எதிர்காலத்திற்குத் தயாராக இருக்கும் சுற்றுச்சூழல் அமைப்பை உருவாக்கும் என்று பிரதமர் கூறினார்.


- வரைவு செயல்முறையின்போது மேற்கொள்ளப்படும் பரந்த அளவிலான ஆலோசனைகளுக்கு ஏற்ப, இந்த சட்டங்களின் கீழ் தொடர்புடைய விதிகள், ஒழுங்குமுறைகள், திட்டங்கள் போன்றவற்றை இறுதி செய்வதில் அரசாங்கம் பொதுமக்கள் மற்றும் பங்குதாரர்களுடன் இணைந்து செயல்படும்.


— கர்நாடகா, தெலுங்கானா, பீகார் மற்றும் ராஜஸ்தான் போன்ற சில மாநிலங்கள் சமீபத்தில் கிக் தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்புச் சட்டங்களைக் கொண்டுவருவதற்கான நடவடிக்கையும், ஒன்றிய அரசு அதன் சமூகப் பாதுகாப்புச் சட்டத்தை முன்னெடுத்துச் செல்வதில் முக்கியப் பங்கைக் கொண்டிருக்கும் என்று நிபுணர்கள் தெரிவித்தனர்.


- நான்கு தொழிலாளர் சட்டங்களின் கீழ், பெண்கள் இரவு நேரப் பணிகளிலும், அனைத்து வகையான வேலைகளிலும் (நிலத்தடி சுரங்கம் மற்றும் கனரக இயந்திரங்கள் உட்பட) அவர்களின் ஒப்புதல் மற்றும் கட்டாயப் பாதுகாப்பு நடவடிக்கைகளுக்கு உட்பட்டு வேலை செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்று அமைச்சகம் தெரிவித்துள்ளது.


        - தொழிலாளர் குறியீடுகள் நிலையான கால வேலைவாய்ப்பு (FTE) என்ற கருத்தையும் அறிமுகப்படுத்துகின்றன, இதன் கீழ் முதலாளிகள் ஒரு நிலையான கால ஒப்பந்தத்தின் கீழ் நேரடியாக, தொழில்துறையின் பருவகாலத்தின் அடிப்படையில் ஒப்பந்தத்தின் நீளத்தை மாற்றியமைக்கும் நெகிழ்வுத்தன்மையுடன் தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த முடியும்.


— புதிய தொழிலாளர் சட்டங்கள், முதலாளிகள் நிலையான கால வேலைவாய்ப்பு (Fixed Term Employment (FTE)) மூலம் ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்த அனுமதிக்கின்றன. அவர்களின் வணிகத் தேவைகள் அல்லது பருவகால வேலைகளைப் பொறுத்து, தொழிலாளர்களை எவ்வளவு காலம் வேலைக்கு அமர்த்துவது என்பதை நிறுவனங்கள் தீர்மானிக்கலாம்.



- நிலையான கால வேலைவாய்ப்பு சட்டத்தின் கீழ், தொழிலாளர்கள் ஒரு வருடம் தொடர்ச்சியான பணிக்குப் பிறகு பணிக்கொடைக்கு தகுதி பெறுவார்கள் என்று அமைச்சகம் கூறியது. தற்போது, ​​ஐந்து ஆண்டுகள் தொடர்ச்சியான சேவைக்குப் பிறகு பணிக்கொடை (gratuity) வழங்கப்படுகிறது.


- ஊதிய சட்டம் ஒரு தொழிலாளியின் சம்பளம் எவ்வாறு பிரிக்கப்படுகிறது என்பதை மாற்றுகிறது. இது அடிப்படை ஊதியப் பங்கை அதிகரிக்கிறது. இதனால் தொழிலாளர்கள் சிறந்த சமூகப் பாதுகாப்பு சலுகைகளைப் பெற முடியும். குறிப்பாக, சேவைத் துறை உள்ள தொழிலாளர்களுக்கு இந்த சட்டத்தின் மூலம் தேவையான பாதுகாப்பை வழங்க முடிடியும்.


- தற்போதைய அரசாங்கத்தின் நலத்திட்டங்களின் வரம்பிலிருந்து தொழிலாளர்களுக்கான சமூகப் பாதுகாப்பு ஏற்பாடுகளை விரிவுபடுத்துவதையும் இந்த சட்டங்கள் நோக்கமாகக் கொண்டுள்ளன. சமூகப் பாதுகாப்புக் குறியீட்டின்படி, கிக் தொழிலாளர்களைப் பணியமர்த்தும் தள ஒருங்கிணைப்பாளர்கள் (aggregators) சமூகப் பாதுகாப்பிற்காக ஆண்டு வருவாயில் 1-2 சதவீதத்தை பங்களிக்க வேண்டும். மொத்த பங்களிப்பு தள ஒருங்கிணைப்பாளர்கள் செலுத்த வேண்டிய தொகையில் 5 சதவீதத்திற்கு குறையாமல் இருக்க வேண்டும். இந்தத் திட்டத்தின் வரையறைகளை இறுதி செய்வதற்கு அரசாங்கம் செயல்பட்டு வருவதாக அதிகாரிகள் தெரிவித்தனர்.


— மனிஷ் சபர்வால்: நான்கு தொழிலாளர் சட்டங்களும் சரியானவை அல்ல, அதில் ஒன்று மட்டுமே இருக்க வேண்டும். இருப்பினும், இந்தியாவில் சிறந்த வேலைவாய்ப்புகளை உருவாக்க உதவுவதில் அவை ஒரு முக்கிய நடவடிக்கையாகும். சட்டங்கள் எளிமையானதாகவும், அதிகப்படியான விதிகள் மற்றும் ஒழுங்குமுறைகளை விட நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டதாகவும் இருக்கும் எதிர்காலத்தையும் அவை காட்டுகின்றன என்று எழுதி இருக்கிறார்.


— தொழிலாளர் சட்டங்களை அறிவிப்பது பின்தங்கிய மாநிலங்களுக்கு உதவுகிறது. ஏனெனில், அவர்களின் இடம்பெயர்வு - மக்களை வேலைகளுக்கு அழைத்துச் செல்வதற்குப் பதிலாக வேலைகளுக்கு அழைத்துச் செல்வது - கடவுளின் விருப்பம் அல்ல.


— பீகாரில் பெரும்பாலான மக்கள் குறைந்த ஊதியம் பெறும் வேலைகளில் அல்லது சுயதொழில்களில் வேலை செய்கிறார்கள். இதனால் அவர்களால் வாழ்வதற்கான போதுமான வருமானத்தை பெற முடியாது. முக்கியப் பிரச்சனை என்னவென்றால், பீகாரில் உற்பத்தி, நல்ல ஊதியம் தரும் வேலையை வழங்கும் போதுமான வணிகங்கள் அல்லது தொழில்கள் இல்லை.


— புதிய தொழிலாளர் சட்டங்கள் 1,228 பிரிவுகளை 480-ஆகவும், 1,436 விதிகளை 351-ஆகவும், 84 பதிவேடுகளை 8-ஆகவும், 31 அட்டவணைகளை 1 ஆகவும், 8 பதிவேடுகளை 1-ஆகவும், 4 உரிமங்களை 1-ஆகவும் குறைக்கின்றன. இது ஆயிரக்கணக்கான இணக்க நடவடிக்கைகளை ஆயுதமாக்கிய 65 பிரிவுகளை குற்றமற்றவையாக (decriminalise) மாற்றியுள்ளன.


— இது வேலை மற்றும் அமைப்புசாரா தொழிலாளர்களுக்கு சமூகப் பாதுகாப்பை விரிவுபடுத்துகிறது. பெண்கள் மீதான நியாயமற்றக் கட்டுப்பாடுகளை நீக்குகிறது. மேலும், மாநிலங்களுக்கு இடையே இடம்பெயர்ந்த தொழிலாளர்களுக்கு சலுகைகளின் பெயர்வுத்திறனை (portability of benefits) செயல்படுத்துகிறது.


- தொழிலாளர் குறியீடுகள் நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்ட ஒரு அமைப்பை ஏற்றுக்கொள்கின்றன. அரசாங்கம் முக்கியமாக இரண்டு விஷயங்களை மட்டுமே நம்பியிருக்கும்: அவை நாடாளுமன்றத்தால் நிறைவேற்றப்பட்ட சட்டங்கள், மற்றும் அதிகாரப்பூர்வமாக அரசிதழில் வெளியிடப்பட்ட சட்டங்கள் ஆகும்.


— கடந்தகாலத்தில், சுற்றறிக்கைகள், அரசாங்க உத்தரவுகள், ஒழுங்குமுறைகள், வழிகாட்டுதல்கள், குறிப்புகள், கொள்கைகள் மற்றும் பல போன்ற பல வேறுபட்ட கருவிகள் பயன்படுத்தப்பட்டன. இது பெரும்பாலும் குழப்பத்தை ஏற்படுத்தியது. பொறுப்புணர்வைக் குறைத்தது, சட்டத்தின் ஆட்சியை பலவீனப்படுத்தியது.


— இந்தியாவின் தொழிலாளர் சட்டங்கள் நமிகவும் தீங்கு விளைவிக்கும், குறிப்பாக, சிறு வணிகங்களுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் இருந்தன. பெரிய நிறுவனங்களுக்கு பணம் மற்றும் தொடர்புகள் இருந்ததால் அவற்றைக் கையாள முடிந்தது. இந்தச் சட்டங்கள் பல சீன தொழிற்சாலைகள் இந்தியாவிற்கு இடம்பெயர்வதைத் தடுத்தன.


- இந்தச் சட்டங்கள் இந்தியாவின் தொழிலாளர்களில் 50% பேரை குறைந்த ஊதியம் பெறும் சுயதொழில் அல்லது விவசாய வேலைகளைச் செய்ய வைத்தன. பெரும்பாலும் தங்களைத் தாங்களே சுரண்டின. சட்டங்கள் எழுதப்பட்ட, விளக்கப்பட்ட விதம் மற்றும் அமல்படுத்தப்பட்ட விதத்தில் ஏற்பட்ட ஊழல் மற்றும் குழப்பம், சட்டத்தின் ஆட்சியின் மீதான மக்களின் மரியாதையை இழக்கச் செய்தன.


உங்களுக்குத் தெரியுமா?


— முன்னதாக, இந்தியாவில் மிகவும் சிக்கலான மற்றும் பழைய தொழிலாளர் சட்டங்கள் அதிகமாக இருந்தன. இதனால் வணிகங்கள் விதிகளைப் பின்பற்றி அதிக தொழிலாளர்களை வேலைக்கு அமர்த்துவது கடினமாக இருந்தது. கிக் தொழிலாளர்கள், இயங்குதள தொழிலாளர்கள், குறு, சிறு மற்றும் நடுத்தர நிறுவனங்களில் பணியாற்றும் தொழிலாளர்கள் (Micro, Small, and Medium Enterprises (MSME’s)) மற்றும் இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் போன்ற பல தொழிலாளர்கள் அனைத்து இடங்களிலும் ஒரே மாதிரியான சமூகப் பாதுகாப்பைப் பெறவில்லை. வெவ்வேறு மாநிலங்கள் தங்கள் சொந்த தொழிலாளர் சட்டங்களை மாற்றத் தொடங்கின. இது குழப்பமான விதிகளின் கலவையை உருவாக்கியது. எனவே, இந்த முழு அமைப்பையும் எளிமைப்படுத்தவும் மேம்படுத்தவும் புதிய தொழிலாளர் சட்டங்கள் கொண்டு வரப்பட்டன.


— தொழிலாளி (Labour) என்பது ஒரு பொதுப் பட்டியல் பாடமாகும். மேலும், பெரும்பாலான மாநிலங்கள் நான்கு சட்டங்களுடன் இணைக்கப்பட்ட விதிகளை இறுதி செய்திருந்தாலும், நாடு முழுவதும் செயல்படுத்தல் போதிய அளவில் இல்லை. இந்த தாமதம் தொழிலாளர்களுக்கான சீரற்ற சமூகப் பாதுகாப்பு மற்றும் பல மாநிலங்களில் செயல்படும் முதலாளிகளுக்கு இடையே சிக்கலான தன்மைக்கு வழிவகுக்கிறது.


Original Article: How do the Labour Codes address issues related to gig and platform workers in India?


Share: