Showing posts with label சான்றிதழ்களில் குளறுபடி.. Show all posts
Showing posts with label சான்றிதழ்களில் குளறுபடி.. Show all posts

நீட் தேர்வில் கடுமையான சீர்திருத்தம் தேவை

நீட் தேர்வை JEE போல இணையவழியில் நடத்த வேண்டும். 


இந்த ஆண்டுக்கான தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (National Eligibility cum Entrance Test (NEET)) சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக நகரும் நிகழ்வுகளுக்கு மத்தியில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் 'இரண்டு நிலைகளில் தவறு' நிகழ்ந்ததை ஒப்புக்கொண்டார். இந்த ஒப்புதல் வரவேற்கத்தக்கது. ஒரு தவறை ஒப்புக்கொள்வது திருத்த நடவடிக்கைகளுக்கான முதல் படியாகும். தேசியத் தேர்வு முகமை ஒரு குழுவை அமைத்துள்ளது. முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளை இந்தக் குழு விசாரிக்கும். 


ஆனால் இந்தத் தேர்வுக்காக தங்கள் வாழ்க்கை அனைத்தையும் பணயம் வைத்துள்ள 24 லட்சம் பெற்றோர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு, விரைவான தீர்வு தேவை. இந்த நிலைமை மிகவும் குழப்பமாக உள்ளது. நாட்டின் மிக முக்கியமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்று நல்லெண்ணத்துடன் நடத்தப்படுவது முக்கியம். மருத்துவம் போன்ற முக்கியமான படிப்பிற்கு இது மிகவும் முக்கியமானது. இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் 67 பேர் முதலிடம் பிடித்துள்ளனர். இந்த முதலிடம் பிடித்தவர்களில் ஆறு பேர் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள். 2016ஆம் ஆண்டில் நீட் தொடங்கப்பட்டதிலிருந்து மொத்த முதலிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை வெறும் 74 மட்டுமே. ஆரம்பத்தில், 1,563 விண்ணப்பதாரர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. வினாத்தாளுக்கு விடையளிக்க அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் கிடைக்காததே இதற்குக் காரணம். இந்த நிலைமை முடிவை சிதைத்துள்ளது. 


கருணை மதிப்பெண்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இருப்பினும், இந்த மாணவர்களுக்கு மறுதேர்வு விருப்பம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்பு பாட்னாவில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 'வினாத்தாள் கசிவில்' ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பிற மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்கள் ஏன் குஜராத்தில் உள்ள மையங்களை தேர்வு செய்தனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவங்கள் நம்பிக்கையை ஏற்படுத்தாததால் முழுமையாக மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்பட வேண்டியது. சேர்க்கை செயல்முறையில் தாமதங்கள் அல்லது மறுதேர்வு நடத்துவதில் உள்ள சிரமங்கள் இருந்தாலும் இது உண்மைதான். 


இதற்கிடையில், நீட் தேர்வை மறுசீரமைக்க வேண்டும். இது ஜே.இ.இ போல இணையவழி முறையில் நடத்தப்பட வேண்டும். ஜே.இ.இ.யில் வினாத்தாள் கசிவு இல்லை. GMAT மற்றும் GRE போன்ற உலகளாவிய தேர்வு வினாத்தாள்களுக்கு பல சேர்க்கைகளைப் பயன்படுத்துகின்றன. மின்னணுத் தேர்வுகள் பிழை-ஆதார மதிப்பெண்களையும் உறுதி செய்கின்றன. நீட் தேர்வில் கூறப்பட்டது போல் மதிப்பெண் சான்றிதழ்களில் குளறுபடிகள் இல்லை. நேரடித் தேர்வில் வினாத்தாள் கசிவுக்கான வாய்ப்பு அதிகம் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனென்றால், ஃப்ரேமிங் முதல் அச்சிடுதல் மற்றும் விநியோகம் வரை மனிதர்கள் பனியாற்றுகின்றனர். 


பிழையற்ற தேர்வு முறை மட்டுமே மருத்துவக் கல்வியில் உள்ள சிக்கல்களைத் தீர்க்காது. 1.08 லட்சம் மருத்துவ இடங்கள் உள்ளன, அவை தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு இடையே சமமாக பிரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த ஆண்டு 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இதனால் 12 லட்சம் பேர் இடங்கள் இன்றி தவிக்கின்றனர். இந்த மாணவர்களில் பலர் மருத்துவம் படிக்க பங்களாதேஷ், நேபாளம், உக்ரைன் மற்றும் பிற மத்திய ஆசிய நாடுகளுக்குச் செல்கின்றனர். முதல் ஒரு லட்சம் இடங்களில் உள்ளவர்களுக்குகூட ஒரு இடத்தை உறுதி செய்யமுடியாது என்பது அநீதியானது. தனியார்க் கல்லூரிகள் தங்களுக்கு எட்டாத அளவுக்கு சேர்க்கைக் கட்டணத்தை வசூலிப்பதே இதற்குக் காரணம். திறனை அதிகரிப்பதே தீர்வு. கல்வி மற்றும் பராமரிப்பு செலவைக் குறைக்க அதிக அரசு மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க வேண்டும். தற்போதுள்ள மருத்துவமனைகளுடன் மருத்துவக் கல்லூரிகளையும் சேர்ப்பதன் மூலம் இதைச் செய்யலாம். தனியார் அமைப்புகளின் விகிதத்தைக் குறைப்பது சுகாதாரக் கல்வி மற்றும் சேவைகளை சிறப்பாகவும் மலிவாகவும் மாற்றும்.


Share: