Showing posts with label நீட் தேர்வு. Show all posts
Showing posts with label நீட் தேர்வு. Show all posts

தேசியத் தேர்வு முகமையை சரிசெய்ய வேண்டியதன் அவசியம்

 தேசியத் தேர்வு முகமையின் நம்பகத்தன்மையை மீட்டெடுக்க ஒரு மறுசீரமைப்பு தேவை. 

தேசியத் தேர்வு முகமை (National Testing Agency (NTA)) நம்பகத்தன்மையுடன் இருப்பதாக அறிவித்த ஒரு நாள் கழித்து யுஜிசி-நெட் (UGC-NET) தேர்வு ரத்து செய்யப்பட்டது. குறிப்பாக நீட்-யுஜி மருத்துவம் (NEET-UG (medicine)) மற்றும் ஜேஇஇ பொறியியல் (JEE (engineering)) பற்றிய புகார்களுக்குப் பிறகு இது தேசிய தேர்வு முகமைக்கு புதிய சிக்கல்களை ஏற்படுத்தியுள்ளது. யுஜிசி-நெட் (UGC-NET) தேர்வு ரத்து செய்யப்பட்டதற்கு கல்வி அமைச்சகத்தின் பதில், நீட் நிலைமையைக் கையாண்ட விதத்துடன் முரண்படுகிறது, இது கடந்தகால தவறுகளிலிருந்து பாடம் கற்றுக்கொண்டதாகக் கூறுகிறது. 


நீட் தேர்வு வழக்கைப் போலல்லாமல், விண்ணப்பதாரர்களிடமிருந்து முறையான புகார்கள் இல்லாமலேயே, உள்துறை அமைச்சகத்தின் சைபர் கிரைம் குழுவின் தகவல்களின் அடிப்படையில் அமைச்சகம் விரைவாக செயல்பட்டது. யுஜிசி-நெட் (UGC-NET) ரத்து செய்யப்பட்டு, புதிய தேர்வு நடத்தப்படும். நீட் தேர்வுக்கு அப்படி எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றாலும், இந்த வழக்கை சிபிஐ விசாரிக்கும். ஒன்பது லட்சத்துக்கும் மேற்பட்ட UGC-NET தேர்வர்களுக்கு மாதக்கணக்கில் படித்தவர்கள், நீண்ட தூரம் பயணம் செய்தவர்கள், சிலர் தங்கள் செலவுக்காகக் கடன் வாங்கியவர்கள் ஆகியோருக்கு இது பெரிய ஆதரவு அல்ல.


இளைஞர்களின் பல கேள்விகளுக்கு பதில் இல்லை. 2018ஆம் ஆண்டு வரை மத்திய இடைநிலைக் கல்வி வாரியத்தால் (CBSE) தேசியத் தகுதித் தேர்வு (NET) நேரடியாக (Offline) நடத்தப்பட்டது, பின்னர் தேசியத் தேர்வு முகமையின் (NTA) கீழ் ஆன்லைனுக்கு மாறியது, இந்த ஆண்டு ஆஃப்லைன் வடிவத்திற்குத் திரும்புவது ஏன் என்பது ஒரு முக்கிய கேள்வி. இந்த மாற்றம் வினாத்தாள் கசிவு அபாயத்தை அதிகரிக்கலாம். தேர்வர்களிடம் நம்பிக்கையை மீண்டும் உருவாக்க NTA-க்கு வெளிப்படையான விசாரணைகள் மிக முக்கியம். மற்றொரு பிரச்சினை பொறுப்பு வகிப்பவர்களை பொறுப்பேற்க வைப்பது. எதிர்காலத்தில் தொழில்நுட்ப சிக்கல்கள், ஏமாற்றுதல், வினாத்தாள் கசிவுகள் மற்றும் தேர்வில் ஆள்மாறாட்டத்தைத் தடுக்க சீர்திருத்தத்தை அரசாங்கம் பரிசீலிக்க வேண்டும்.


பல இளம், மற்றும் படித்த இந்தியர்கள் புதிய தேர்வர்கள் தேர்வு முகமையின் சிக்கல்களால் பாதிக்கப்பட்டுள்ளனர். சில அரசியல்வாதிகள் தேசியத் தேர்வு முகமையை கலைத்துவிட்டு மாநிலங்களே நுழைவுத்தேர்வை நடத்த அனுமதிக்க விரும்புகிறார்கள். இது மத்திய அரசின் கட்டுப்பாட்டைக் குறைத்து, பல்வேறு மாநிலங்களின் பெரிய அளவிலான தேர்வுகளை எளிதாக நிர்வகிப்பதைச் செய்யலாம். இருப்பினும், சில நாடு தழுவிய தேர்வுகள் இன்னும் தேவைப்படும். தேர்வு முறையின் நேர்மையை மேம்படுத்த மாநிலங்களும் மத்திய அரசும் இணைந்து செயல்பட வேண்டும். எனவே, தேர்வு முறையின் ஒருமைப்பாட்டை மீட்டெடுப்பதில் மாநிலங்கள் மத்திய அரசுடன் இணைந்து செயல்பட வேண்டும்.

Original link:
Share:

நீட் தேர்வில் கடுமையான சீர்திருத்தம் தேவை

நீட் தேர்வை JEE போல இணையவழியில் நடத்த வேண்டும். 


இந்த ஆண்டுக்கான தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (National Eligibility cum Entrance Test (NEET)) சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக நகரும் நிகழ்வுகளுக்கு மத்தியில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் 'இரண்டு நிலைகளில் தவறு' நிகழ்ந்ததை ஒப்புக்கொண்டார். இந்த ஒப்புதல் வரவேற்கத்தக்கது. ஒரு தவறை ஒப்புக்கொள்வது திருத்த நடவடிக்கைகளுக்கான முதல் படியாகும். தேசியத் தேர்வு முகமை ஒரு குழுவை அமைத்துள்ளது. முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளை இந்தக் குழு விசாரிக்கும். 


ஆனால் இந்தத் தேர்வுக்காக தங்கள் வாழ்க்கை அனைத்தையும் பணயம் வைத்துள்ள 24 லட்சம் பெற்றோர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு, விரைவான தீர்வு தேவை. இந்த நிலைமை மிகவும் குழப்பமாக உள்ளது. நாட்டின் மிக முக்கியமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்று நல்லெண்ணத்துடன் நடத்தப்படுவது முக்கியம். மருத்துவம் போன்ற முக்கியமான படிப்பிற்கு இது மிகவும் முக்கியமானது. இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் 67 பேர் முதலிடம் பிடித்துள்ளனர். இந்த முதலிடம் பிடித்தவர்களில் ஆறு பேர் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள். 2016ஆம் ஆண்டில் நீட் தொடங்கப்பட்டதிலிருந்து மொத்த முதலிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை வெறும் 74 மட்டுமே. ஆரம்பத்தில், 1,563 விண்ணப்பதாரர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. வினாத்தாளுக்கு விடையளிக்க அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் கிடைக்காததே இதற்குக் காரணம். இந்த நிலைமை முடிவை சிதைத்துள்ளது. 


கருணை மதிப்பெண்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இருப்பினும், இந்த மாணவர்களுக்கு மறுதேர்வு விருப்பம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்பு பாட்னாவில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 'வினாத்தாள் கசிவில்' ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பிற மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்கள் ஏன் குஜராத்தில் உள்ள மையங்களை தேர்வு செய்தனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவங்கள் நம்பிக்கையை ஏற்படுத்தாததால் முழுமையாக மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்பட வேண்டியது. சேர்க்கை செயல்முறையில் தாமதங்கள் அல்லது மறுதேர்வு நடத்துவதில் உள்ள சிரமங்கள் இருந்தாலும் இது உண்மைதான். 


இதற்கிடையில், நீட் தேர்வை மறுசீரமைக்க வேண்டும். இது ஜே.இ.இ போல இணையவழி முறையில் நடத்தப்பட வேண்டும். ஜே.இ.இ.யில் வினாத்தாள் கசிவு இல்லை. GMAT மற்றும் GRE போன்ற உலகளாவிய தேர்வு வினாத்தாள்களுக்கு பல சேர்க்கைகளைப் பயன்படுத்துகின்றன. மின்னணுத் தேர்வுகள் பிழை-ஆதார மதிப்பெண்களையும் உறுதி செய்கின்றன. நீட் தேர்வில் கூறப்பட்டது போல் மதிப்பெண் சான்றிதழ்களில் குளறுபடிகள் இல்லை. நேரடித் தேர்வில் வினாத்தாள் கசிவுக்கான வாய்ப்பு அதிகம் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனென்றால், ஃப்ரேமிங் முதல் அச்சிடுதல் மற்றும் விநியோகம் வரை மனிதர்கள் பனியாற்றுகின்றனர். 


பிழையற்ற தேர்வு முறை மட்டுமே மருத்துவக் கல்வியில் உள்ள சிக்கல்களைத் தீர்க்காது. 1.08 லட்சம் மருத்துவ இடங்கள் உள்ளன, அவை தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு இடையே சமமாக பிரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த ஆண்டு 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இதனால் 12 லட்சம் பேர் இடங்கள் இன்றி தவிக்கின்றனர். இந்த மாணவர்களில் பலர் மருத்துவம் படிக்க பங்களாதேஷ், நேபாளம், உக்ரைன் மற்றும் பிற மத்திய ஆசிய நாடுகளுக்குச் செல்கின்றனர். முதல் ஒரு லட்சம் இடங்களில் உள்ளவர்களுக்குகூட ஒரு இடத்தை உறுதி செய்யமுடியாது என்பது அநீதியானது. தனியார்க் கல்லூரிகள் தங்களுக்கு எட்டாத அளவுக்கு சேர்க்கைக் கட்டணத்தை வசூலிப்பதே இதற்குக் காரணம். திறனை அதிகரிப்பதே தீர்வு. கல்வி மற்றும் பராமரிப்பு செலவைக் குறைக்க அதிக அரசு மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க வேண்டும். தற்போதுள்ள மருத்துவமனைகளுடன் மருத்துவக் கல்லூரிகளையும் சேர்ப்பதன் மூலம் இதைச் செய்யலாம். தனியார் அமைப்புகளின் விகிதத்தைக் குறைப்பது சுகாதாரக் கல்வி மற்றும் சேவைகளை சிறப்பாகவும் மலிவாகவும் மாற்றும்.


Share:

நீட் சர்ச்சை : ஒரு சீர்குலைந்தத் தேர்வு

     இந்த ஆண்டு தேர்வு குறித்த சர்ச்சை, அமைப்பு ரீதியான இடைவெளிகள் மற்றும் தீர்க்கப்பட வேண்டிய பிரச்சினைகளை சுட்டிக்காட்டுகிறது.


இந்த ஆண்டு தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (National Eligibility-Cum-Entrance Test (NEET)) குறித்த சர்ச்சை நீண்டகால அமைப்பு ரீதியான பிரச்சினைகளை வெளிச்சம் போட்டுக் காட்டுகிறது. தேசியத் தேர்வு முகமை (National Testing Agency (NTA)) 1,500-க்கும் மேற்பட்ட விண்ணப்பதாரர்களின் சலுகை மதிப்பெண்களை (grace marks) ரத்து செய்து அவர்களுக்கு மீண்டும் தேர்வெழுதுவதற்கான வாய்ப்பையும் அவர்கள் வழங்கியுள்ளனர். இந்த மாணவர்கள் ஆரம்பத்தில் தவறான வினாத்தாளைப் பெற்றனர். இதன் விளைவாக, அவர்கள் சரியானத் தாளினை பெறும்போது இழந்த நேரத்தை ஈடுசெய்ய கூடுதல் மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. இந்த "தொழில்நுட்பக் கோளாறை" ஒப்புக்கொள்ள பல மனுக்களைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றம் தேசியத் தேர்வு முகமை (NTA) அழுத்தம் கொடுக்க வேண்டியிருந்தது. இதில், 4,500-க்கும் மேற்பட்ட தேர்வு மையங்களில் ஆறு தேர்வு மையங்களில் மட்டுமே தவறு நடந்ததாக கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் தெரிவித்தார். இருந்தபோதிலும், இத்தகைய பிழைகள் குறிப்பிடத்தக்கவை. குறிப்பாக, ஒவ்வொரு மதிப்பெண்ணும் முக்கியமானதாக இருக்கும். உயர்கல்விக்கான தேசிய அளவிலான தேர்வுகளை நிர்வகிப்பதற்கு 2017-ல் தேசியத் தேர்வு முகமை (NTA) நிறுவப்பட்டது. இது இந்திய தொழில்நுட்பக் கழகங்கள் (Indian Institutes of Technology (IIT)) கூட்டு நுழைவுத் தேர்வில் சிறப்பாக செயல்படுகிறது. ஆனால், இந்த ஆண்டு நீட் தேர்வை கையாண்ட விதம் விமர்சனத்துக்கு உள்ளானது. தேர்வின் நேர்மை பாதிக்கப்பட்டுள்ளதாக உச்சநீதிமன்றம் குறிப்பிட்டுள்ளது.


உச்சநீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்ட மனுக்கள், பல மாணவர்கள் சரியான மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர், இது குறிப்பிடத்தக்க கவனத்தைப் பெற்றுள்ளது. முந்தைய ஆண்டுகளுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டு 67 மாணவர்கள் அதிக மதிப்பெண்கள் பெற்றுள்ளனர். இன்னும் சிலர் சற்று குறைவாக மதிப்பெண் பெற்றனர். கடந்த ஆண்டு இரண்டு அதிக மதிப்பெண் பெற்றவர்கள், 2022ல் ஒருவர், 2021ல் மூன்று பேர் ஆவார். இந்த எதிர்பாராத மாறுபட்ட எண்ணிக்கை நியாயமற்ற உரிமைகோரல்களுக்கு வழிவகுத்தன. தேசியத் தேர்வு முகமையின் (NTA) விளக்கங்கள் நம்பும்படியாக இல்லை. இந்த முகமையானது, ஆரம்பத்தில் "ஒப்பீட்டளவில் எளிதான தாளிற்கு" (relatively easy paper) அதிக மதிப்பெண்களை வழங்கியது. பின்னர், அதற்குப் பதிலாக சலுகை மதிப்பெண்கள் (grace marks) வழங்குவதாக மாறியது. இருப்பினும், இந்த நாளிதழின் அறிக்கையின்படி, அதிக மதிப்பெண் பெற்ற 67 பேரில் ஆறு பேர் மட்டுமே இந்த கூடுதல் மதிப்பெண்களைப் பெற்றுள்ளனர்.


நீட் தேர்வுக்கு விண்ணப்பித்தவர்களின் எண்ணிக்கை கடந்த 10 ஆண்டுகளில் இருமடங்காக அதிகரித்துள்ளது. இந்த ஆண்டு, 1,10,000 இடங்களுக்கும் குறைவான இடங்களுக்கு, 24 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் போட்டியிட்டனர். இந்தியாவில் மருத்துவம் மற்றும் பொறியியல் கல்விக்கு அதிக முக்கியத்துவம் கொடுக்கப்படுகிறது. இந்தத் தொழிலைத் தேடும் மாணவர்களின் எண்ணிக்கைக்கும் கிடைக்கும் வாய்ப்புகளுக்கும் இடையே உள்ள இடைவெளி காரணமாக இது கடுமையான போட்டிக்கு வழிவகுத்தது. இதன் விளைவாக, NEET இப்போது விண்ணப்பதாரர்களின் மருத்துவத் திறனை மதிப்பிடுவதைவிட அவர்களை நீக்குவதில் அதிகக் கவனம் செலுத்துகிறது. தேர்வு மிகவும் போட்டித்தன்மை வாய்ந்தது. இதில், 0.25% போட்டியாளர்கள் மட்டுமே சிறந்த கல்லூரிகளில் சேருகிறார்கள். சமீபத்திய ஆண்டுகளில், கல்வியின் தன்மையை சீர்திருத்துவதற்கான விவாதங்களை அரசாங்கம் தொடங்கியுள்ளது. மருத்துவக் கல்வியில் உள்ள குறைபாடுகளை நிவர்த்திசெய்ய இதுபோன்ற முயற்சிகள் தேவை. உதாரணமாக, கல்லூரிகள் மற்றும் பல்கலைக்கழகங்களில் ஆண்டுக்கு இருமுறை சேர்க்கைக்கான பல்கலைக்கழக மானியக் குழுவின் (University Grants Commission (UGC)) சமீபத்திய ஏற்பாட்டை அரசாங்கம் பரிசீலிக்கலாம். ஆண்டுக்கு இரண்டு முறை நீட் தேர்வை நடத்துவது மருத்துவக் கல்வி அமைப்பின் மீதான அழுத்தத்தைக் குறைக்கும். எதிர்காலத்தில், அதிக வாய்ப்புகளை உருவாக்கி அவற்றை எளிதாக அணுகுவதற்கான வழிகளைக் கண்டறிய வேண்டும். இது தேர்வுமுறையில் மன அழுத்தத்தைக் குறைக்க உதவும்.


Share: