Showing posts with label வினாத்தாள் கசிவு. Show all posts
Showing posts with label வினாத்தாள் கசிவு. Show all posts

செயற்கை நுண்ணறிவு மற்றும் பிளாக்செயின் தொழில்நுட்பம் தேர்வுத் தாள் கசிவை சரிபார்க்க முழுமையான அணுகுமுறையின் ஒரு பகுதியாக மட்டுமே இருக்க முடியும் -சுபிமல் பட்டாச்சார்யா

     18-வது மக்களவைக் கூட்டத்தொடர் துவங்கி புதிய அரசு பதவியேற்கும் முன்பே, தேசிய தேர்வு முகமை (National Testing Agency (NTA)) நடத்திய இரண்டு முக்கிய நுழைவுத் தேர்வுகள் குறித்து குறிப்பிடத்தக்க சர்ச்சை எழுந்துள்ளது. இந்த தேர்வுகள்:


NEET- இது அரசு மற்றும் தனியார் மருத்துவக் கல்லூரிகளில் இளங்கலை மருத்துவப் படிப்புகள் மற்றும் சில முதுகலைப் படிப்புகள் ஆகியவற்றில் சேர்வதற்கான தரப்படுத்தப்பட்ட தேர்வாகும். பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வு (NET) இந்திய நாட்டவர்கள் நாடு முழுவதும் உள்ள பல்கலைக்கழகங்கள் மற்றும் கல்லூரிகளில் உதவி பேராசிரியர்கள் மற்றும் இளநிலை ஆராய்ச்சியாளர் பதவிகளுக்கு (junior research fellows) தகுதி பெற முடியுமா என்பதைத் தீர்மானிக்கிறது.


பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வு முனைவர் பட்டம் மற்றும் திட்டங்களுக்கு விண்ணப்பிப்பவர்களுக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துகிறது. இதற்கிடையில், மே 5-ஆம் தேதி நடந்த பல்கலைக்கழக மானியக் குழுவின் தேசிய தகுதித் தேர்வு தேர்வில் விருப்ப மதிப்பெண்கள், ஏமாற்றுதல் மற்றும் ஆள்மாறாட்டம் போன்ற முறைகேடுகள் நடந்ததாக குற்றச்சாட்டுகள் எழுந்தன. ஜூன் 18-ஆம் தேதி, தேசிய தகுதித் தேர்வு ரத்து செய்யப்பட்டது. தேர்வுக்கு 48 மணி நேரத்திற்கு முன்பு வினாத் தாள் கசிந்ததாகவும், சமூக ஊடக தளங்களில் வினாத்தாள் பதிவேற்றம் செய்யப்பட்டு விற்கப்படுவதாகவும் தகவல்கள் வெளிவந்தன.


தகுதியான பல்லாயிரக்கணக்கான விண்ணப்பதாரர்கள் மற்றும் அவர்களது பெற்றோர்களிடையே கடுமையான கவலைகளையும் ஏமாற்றத்தையும் ஏற்படுத்தியுள்ளது. உயர்கல்விக்கான நுழைவுத் தேர்வுகளை நடத்துவதற்கு தன்னாட்சி முறையில் செயல்பட்டாலும், தேசிய தேர்வு முகமை (National Testing Agency (NTA)) பல்வேறு சோதனைகளை செய்த பிறகும், இந்த நிலை ஏற்பட்டுள்ளது. இந்த முறைகேடுகளை தடுப்பதற்கு ஒன்றிய அரசு இஸ்ரோவின் முன்னாள் தலைவரும், ஐஐடி கான்பூரில் உள்ள கவர்னர்கள் குழுவின் தலைவருமான கே ராதாகிருஷ்ணன் தலைமையில் ஏழு பேர் கொண்ட உயர்மட்டக் குழுவை அமைத்துள்ளது. தேர்வுச் செயல்பாட்டில் சீர்திருத்தங்களை பரிந்துரைப்பது, தரவு பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துவது மற்றும் தேசிய தேர்வு முகமையின் கட்டமைப்பு மற்றும் செயல்பாடுகளை மதிப்பிடுவது அவர்களின் பணியாகும். மத்திய புலனாய்வுப் பிரிவு (Central Bureau of Investigation (CBI)) விசாரணை நடத்தி வருகிறது. இது எதிர்காலத்திற்கான செயல் முறைகளை வழங்க உதவும். இளம் மாணவர்களிடையே நம்பிக்கையை மீண்டும் ஏற்படுத்துவது அமைப்புக்கு சவாலான பணியாக இருக்கலாம்.


இன்று, தொழில்நுட்பம் தேர்வுகளில் முக்கியப் பங்கு வகிக்கிறது. மேலும் 2017-ல் நிறுவப்பட்டதிலிருந்து, தேசிய தேர்வு முகமை (National Testing Agency (NTA)) இந்தியாவில் பல தேர்வுகளை வெற்றிகரமாக நடத்தி வருகிறது. கூட்டு நுழைவுத் தேர்வு மற்றும் பொது மேலாண்மை நுழைவுத் தேர்வு (Common Management Admission Test (CMAT)) ஆகியவை இதில் அடங்கும். NEET-UG, ஒளியியல் குறி அங்கீகாரம் (optical mark recognition (OMR)) வடிவத்தில் பேனா மற்றும் காகிதத் தேர்வு, ஒரே அமர்வில் நடத்தப்பட்டுள்ளது. மறுபுறம், 2018-ல் கணினி அடிப்படையிலான பயன்முறைக்கு மாறிய NET தேர்வு, இந்த ஆண்டு பேனா மற்றும் காகித OMR வடிவத்திற்கு திரும்பியது. தொழில்நுட்பச் சிக்கல்கள், வரையறுக்கப்பட்ட தேர்வு அட்டவணைகள், தரப்படுத்தல் சிரமங்கள் மற்றும் தேர்வுப் பொருட்களை எடுத்துச் செல்வது மற்றும் பாதுகாப்பாக சேமிப்பது பற்றிய கவலைகள் போன்ற சவால்கள் நீடித்தாலும், ஒட்டுமொத்தமாக, தேசிய தேர்வு முகமையால் நடத்தப்பட்ட தேர்வுகள் முந்தைய ஆண்டுகளைவிட பல்வேறு முன்னேற்றங்களை அடைந்துள்ளது. 


தொழில்நுட்பத்திற்கு முன்பு, அந்த வினாத்தாள் கசிவுகள் வேறு வழிகளைக் கொண்டிருந்தன. இன்று, அவர்கள் சமூக ஊடகங்களைப் பயன்படுத்துகின்றனர். இந்தியாவில் தேர்வுத்தாள் கசிவுகளுக்கு அடிக்கடி குற்றம் சாட்டப்பட்டாலும், அது மட்டும் பொறுப்பல்ல. கசிந்த தகவல்களை விரைவாக விநியோகிக்க இது ஒரு கருவி மட்டுமே. இது கசிவுகளையோ அல்லது அவற்றுக்கான தேவையையோ தொடங்கவில்லை. நடந்ததை பற்றி குறைகூறுவது பிரச்சனைகளுக்குத் தீர்வாகாது.  தேசிய தேர்வு முகமையின் ஹேக் செய்யப்பட்டது என்ற கருத்தும் பரவலாக இருந்தது.

 

தேர்வுக் கசிவுகளைத் திறம்பட எதிர்த்துப் போராட, ஒரு முழுமையான அணுகுமுறை தேவை. ஊழலுக்கு எதிரான நடவடிக்கைகளை வலுப்படுத்துதல் (anti-corruption measures), பாதுகாப்பு நெறிமுறைகளை மேம்படுத்துதல், கல்வி அமைப்பைச் சீர்திருத்தம் ஆகியன இதில் இருக்க வேண்டும். தேர்வு அழுத்தத்தைக் கற்பித்தல், சமூகப் பொருளாதார ஏற்றத்தாழ்வுகளை நிவர்த்தி செய்தல், நியாயமற்ற வழிமுறைகளுக்கான தேவையைக் குறைக்க ராதாகிருஷ்ணன் குழு அமைக்கபப்ட்டது.


ராதாகிருஷ்ணன் குழுவின் பரிந்துரைகள்: தேர்வுமுறையின் ஒருமைப்பாட்டை உறுதிசெய்ய அதிநவீன தொழில்நுட்பங்களை உள்ளடக்கிய விரிவான, பிளாக்செயின் அடிப்படையிலான கேள்வி வங்கி, கேள்வி வங்கிகளைச் சேமிக்கவும் நிர்வகிக்கவும் பிளாக்செயின் தொழில்நுட்பத்தைப் பயன்படுத்தவும், கேள்வி அணுகல் தணிக்கை செய்யக்கூடிய பாதையுடன் சேதமடையாத சேமிப்பு போன்ற பல அடுக்கு அணுகுமுறையை ராதாகிருஷ்ணன் குழு ஆராய வேண்டும். பாதுகாப்பான பயோமெட்ரிக் அங்கீகாரம், ஏமாற்று முயற்சிகளைத் தடுக்க கைரேகை, முக அங்கீகாரம், விழித்திரை ஸ்கேன் மற்றும் உயிரோட்டத்தைக் கண்டறிதல் ஆகியவற்றைப் பயன்படுத்தவும். தகவமைப்பு சோதனை தொழில்நுட்பத்தை பயன்படுத்தலாம். ஒவ்வொரு மாணவருக்கும் ஒரு தனித்துவமான கேள்விகளை வழங்குவதன் மூலம் வினாத்தாள் கசிவு அபாயத்தைக் குறைக்கவும்.  தேர்வுகளை வழங்க கணினியைப் பயன்படுத்தவும், ஒன்றிய  சேவையகங்களின் மீதான நம்பிக்கையை குறைக்கவும் மற்றும் சாத்தியமான விநியோகிக்கப்பட்ட சேவை மறுப்பு (Distributed Denial-of-Service (DDoS)) சைபர் தாக்குதல்களின் தாக்கத்தை குறைக்கவும். செயற்கை நுண்ணறிவு அடிப்படையிலான பதில் சரிபார்ப்பு மாணவர்களிடையே ஏமாற்றுதல் அல்லது கூட்டுறவைக் குறிக்கும் வடிவங்களைக் கண்டறிய செயற்கை நுண்ணறிவு நெறிமுறைகளைப் பயன்படுத்தவும் வெளிப்படைத்தன்மையை உறுதிப்படுத்தவும் அங்கீகரிக்கப்படாத மாற்றங்களைத் தடுக்கவும் முடிவுகளை வெளியிடுவதற்கு பிளாக் செயின் (blockchain) தொழில்நுட்பத்தை ப் பயன்படுத்தலாம்.

Share:

நீட் தேர்வில் கடுமையான சீர்திருத்தம் தேவை

நீட் தேர்வை JEE போல இணையவழியில் நடத்த வேண்டும். 


இந்த ஆண்டுக்கான தேசியத் தகுதி மற்றும் நுழைவுத் தேர்வு (National Eligibility cum Entrance Test (NEET)) சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. வேகமாக நகரும் நிகழ்வுகளுக்கு மத்தியில், கல்வி அமைச்சர் தர்மேந்திர பிரதான் 'இரண்டு நிலைகளில் தவறு' நிகழ்ந்ததை ஒப்புக்கொண்டார். இந்த ஒப்புதல் வரவேற்கத்தக்கது. ஒரு தவறை ஒப்புக்கொள்வது திருத்த நடவடிக்கைகளுக்கான முதல் படியாகும். தேசியத் தேர்வு முகமை ஒரு குழுவை அமைத்துள்ளது. முறைகேடுகள் குறித்த குற்றச்சாட்டுகளை இந்தக் குழு விசாரிக்கும். 


ஆனால் இந்தத் தேர்வுக்காக தங்கள் வாழ்க்கை அனைத்தையும் பணயம் வைத்துள்ள 24 லட்சம் பெற்றோர்கள் மற்றும் அவர்களின் குழந்தைகளுக்கு, விரைவான தீர்வு தேவை. இந்த நிலைமை மிகவும் குழப்பமாக உள்ளது. நாட்டின் மிக முக்கியமான நுழைவுத் தேர்வுகளில் ஒன்று நல்லெண்ணத்துடன் நடத்தப்படுவது முக்கியம். மருத்துவம் போன்ற முக்கியமான படிப்பிற்கு இது மிகவும் முக்கியமானது. இந்த ஆண்டு நடைபெற்ற தேர்வில் 67 பேர் முதலிடம் பிடித்துள்ளனர். இந்த முதலிடம் பிடித்தவர்களில் ஆறு பேர் ஃபரிதாபாத்தில் உள்ள ஒரே மையத்தைச் சேர்ந்தவர்கள். 2016ஆம் ஆண்டில் நீட் தொடங்கப்பட்டதிலிருந்து மொத்த முதலிடம் பெற்றவர்களின் எண்ணிக்கை வெறும் 74 மட்டுமே. ஆரம்பத்தில், 1,563 விண்ணப்பதாரர்களுக்கு கருணை மதிப்பெண்கள் வழங்கப்பட்டன. வினாத்தாளுக்கு விடையளிக்க அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட நேரம் கிடைக்காததே இதற்குக் காரணம். இந்த நிலைமை முடிவை சிதைத்துள்ளது. 


கருணை மதிப்பெண்களை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இருப்பினும், இந்த மாணவர்களுக்கு மறுதேர்வு விருப்பம் வழங்கப்பட்டுள்ளது. கடந்த மே மாதம் நீட் தேர்வு நடைபெறுவதற்கு முன்பு பாட்னாவில் 13 பேர் கைது செய்யப்பட்டனர். அவர்கள் 'வினாத்தாள் கசிவில்' ஈடுபட்டதாகக் கூறப்படுகிறது. பிற மாநிலங்களைச் சேர்ந்த தேர்வர்கள் ஏன் குஜராத்தில் உள்ள மையங்களை தேர்வு செய்தனர் என்ற சந்தேகம் எழுந்துள்ளது. இந்த சம்பவங்கள் நம்பிக்கையை ஏற்படுத்தாததால் முழுமையாக மறுதேர்வு நடத்த வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது. இந்தக் கோரிக்கை பரிசீலிக்கப்பட வேண்டியது. சேர்க்கை செயல்முறையில் தாமதங்கள் அல்லது மறுதேர்வு நடத்துவதில் உள்ள சிரமங்கள் இருந்தாலும் இது உண்மைதான். 


இதற்கிடையில், நீட் தேர்வை மறுசீரமைக்க வேண்டும். இது ஜே.இ.இ போல இணையவழி முறையில் நடத்தப்பட வேண்டும். ஜே.இ.இ.யில் வினாத்தாள் கசிவு இல்லை. GMAT மற்றும் GRE போன்ற உலகளாவிய தேர்வு வினாத்தாள்களுக்கு பல சேர்க்கைகளைப் பயன்படுத்துகின்றன. மின்னணுத் தேர்வுகள் பிழை-ஆதார மதிப்பெண்களையும் உறுதி செய்கின்றன. நீட் தேர்வில் கூறப்பட்டது போல் மதிப்பெண் சான்றிதழ்களில் குளறுபடிகள் இல்லை. நேரடித் தேர்வில் வினாத்தாள் கசிவுக்கான வாய்ப்பு அதிகம் என்று நிபுணர்கள் குறிப்பிடுகின்றனர். ஏனென்றால், ஃப்ரேமிங் முதல் அச்சிடுதல் மற்றும் விநியோகம் வரை மனிதர்கள் பனியாற்றுகின்றனர். 


பிழையற்ற தேர்வு முறை மட்டுமே மருத்துவக் கல்வியில் உள்ள சிக்கல்களைத் தீர்க்காது. 1.08 லட்சம் மருத்துவ இடங்கள் உள்ளன, அவை தனியார் மற்றும் அரசு நிறுவனங்களுக்கு இடையே சமமாக பிரிக்கப்பட்டுள்ளன. இருப்பினும், இந்த ஆண்டு 13 லட்சத்துக்கும் மேற்பட்ட மாணவர்கள் தேர்வில் தேர்ச்சி பெற்றனர். இதனால் 12 லட்சம் பேர் இடங்கள் இன்றி தவிக்கின்றனர். இந்த மாணவர்களில் பலர் மருத்துவம் படிக்க பங்களாதேஷ், நேபாளம், உக்ரைன் மற்றும் பிற மத்திய ஆசிய நாடுகளுக்குச் செல்கின்றனர். முதல் ஒரு லட்சம் இடங்களில் உள்ளவர்களுக்குகூட ஒரு இடத்தை உறுதி செய்யமுடியாது என்பது அநீதியானது. தனியார்க் கல்லூரிகள் தங்களுக்கு எட்டாத அளவுக்கு சேர்க்கைக் கட்டணத்தை வசூலிப்பதே இதற்குக் காரணம். திறனை அதிகரிப்பதே தீர்வு. கல்வி மற்றும் பராமரிப்பு செலவைக் குறைக்க அதிக அரசு மருத்துவக் கல்லூரிகளை உருவாக்க வேண்டும். தற்போதுள்ள மருத்துவமனைகளுடன் மருத்துவக் கல்லூரிகளையும் சேர்ப்பதன் மூலம் இதைச் செய்யலாம். தனியார் அமைப்புகளின் விகிதத்தைக் குறைப்பது சுகாதாரக் கல்வி மற்றும் சேவைகளை சிறப்பாகவும் மலிவாகவும் மாற்றும்.


Share: