இந்தியாவில் முதல் 10% ஊரகப் பகுதி குடும்பங்கள் 44% நிலத்தை சொந்தமாக வைத்துள்ளனர்: 'உலக சமத்துவமின்மை ஆய்வகத்தின்' ஆய்வு முடிவுகள் பற்றி… -ஆஞ்சல் மேகஸின்

 இந்திய நில சமத்துவமின்மை (land inequality) குறித்த ஆய்வு, மேல்தட்டு 10% மக்கள் 44% நிலத்தை சொந்தமாக வைத்துள்ளனர். அதே, சமயம் 46% ஊரக பகுதிகளில் வசித்து வரும் குடும்பங்கள் நிலமற்றவர்களாக இருக்கின்றனர். இதில் பீகார் மற்றும் பஞ்சாப் மாநிலங்களில் நில சமத்துவமின்மை அதிகமாகக் காணப்படுகிறது.


பாரிஸ் நகரத்தைத் தலைமையிடமாகக் கொண்ட உலக சமத்துவமின்மை ஆய்வகம் வெளியிட்ட ஒரு ஆய்வறிக்கையின்படி, இந்தியாவின் ஊரக பகுதிகளில் நில உரிமை மிகவும் சீரற்ற வகையில் உள்ளது. 46% குடும்பங்கள் நிலமற்றவர்களாக இருக்கும் வேளையில், முதல் 10% குடும்பங்கள் மொத்த நிலப்பரப்பில் 44%-ஐ சொந்தமாக வைத்துள்ளனர். இந்தியாவின் ஊரகப் பகுதிகளில் பெரிய நில உரிமையாளர்களே நில உரிமையில் ஆதிக்கம் செலுத்துகின்றனர். மிகப்பெரிய நில உரிமையாளர் சராசரியாக அந்த பகுதியின் 12% நிலத்தை கட்டுப்பாட்டில் வைத்துள்ளார். அதேநேரத்தில், பீகார் மற்றும் பஞ்சாப் ஆகிய இரண்டு மாநிலங்களில், ஒரே நில உரிமையாளர் பாதிக்கும் மேற்பட்ட நிலத்தை வைத்திருக்கும் ஊரக பகுதிகளின் பங்கு மிக அதிகமாக உள்ளது என்று 'இந்தியாவில் நில சமத்துவமின்மை: இயல்பு, வரலாறு மற்றும் சந்தைகள்' என்ற தலைப்பிலான  ஆய்வறிக்கை கூறுகிறது.


பொருளாதார நிபுணர்களான நிதின் குமார் பார்தி, டேவிட் பிளேக்ஸ்லீ மற்றும் சம்ரீன் மாலிக் ஆகியோர் இணைந்து எழுதிய ஆய்வறிக்கை, முதல் 10%, 5% அல்லது 1% என்ற அளவில் நில உடைமையாளர்கள் அதிக அளவிலான நிலப் பகுதிகளை வைத்துள்ளனர். பீகார் மற்றும் கேரளா மாநிலங்கள் மற்ற மாநிலங்களிலிருந்து தனித்து நிற்கின்றன. ஒட்டுமொத்தமாக, முதல் 10% ஊரகப் பகுதி குடும்பங்கள் மொத்த நிலப்பரப்பில் 44% பகுதியை வைத்திருக்கின்றன. அதேபோல், மேல் மட்டதில் உள்ள 5% குடும்பங்கள் 32% நிலத்தையும், மேல் மட்டதில் 1% குடும்பங்கள் 18% நிலத்தையும் வைத்திருக்கின்றன என்று கூறுகிறது.


இந்த ஆய்வறிக்கை, 2011-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட சமூக-பொருளாதார சாதி கணக்கெடுப்பின் (Socio-Economic Caste Census) முடிவுகளை அடிப்படையாகக் கொண்டுள்ளது. இந்தக் கணக்கெடுப்பு, இந்தியாவின் 10 பெரிய மாநிலங்களான பஞ்சாப், உத்தரப் பிரதேசம், பீகார், ராஜஸ்தான், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, கர்நாடகா, தமிழ்நாடு, கேரளா மற்றும் மேற்கு வங்கம் ஆகிய மாநிலங்களில் உள்ள 270,000 ஊரகப்பகுதிகளைச் சேர்ந்த 65 கோடி மக்களை உள்ளடக்கியது. இது இந்தியாவின் ஊரக பகுதிகளில் இருக்கும் மக்கள்தொகையில் 75% பகுதியை பிரதிநிதித்துவப்படுத்துகிறது.


மாநிலங்களுக்கிடையேயான நில சமத்துவமின்மை (Land inequality among states)


மிகவும் வசதிவாய்ந்த குடும்பத்தினரிடம் உள்ள நிலத்தின் பங்கு, உத்தரப் பிரதேசத்தில் குறைந்தபட்சமாக 7.3 சதவீதமாகவும், பீகாரில் அதிகபட்சமாக 20.1 சதவீதமாகவும் உள்ளது.  வேளாண்மை அதிகமாக உள்ள நான்கு மாநிலங்களில், மத்தியப் பிரதேசம் (51%) மற்றும் பீகாரை (59%) ஒப்பிடுகையில், ராஜஸ்தான் (34%) மற்றும் உத்தரப் பிரதேசத்தில் (39%) நிலமற்றவர்களின் விகிதம் ஒப்பீட்டளவில் குறைவாக உள்ளது. மிகவும் வளர்ச்சியடைந்த வணிக வேளாண் துறைக்குப் பெயர் பெற்ற பஞ்சாபில், நிலமற்றவர்களின் விகிதம் 73% என்ற அளவில் அதிகமாக இருப்பதாக ஆய்வறிக்கை சுட்டிக்காட்டுகிறது.



நில உரிமை முறை (Land ownership pattern)


ஊரகப் பகுதிகளில் வசித்து வரும் குடும்பங்களில் 46% நிலமற்றவர்களாக இருக்கும் நிலையில், நிலம் உள்ள குடும்பங்களில் ஒரு நிலத்தின் சராசரி அளவு 6.2 ஹெக்டேராக உள்ளது. இருப்பினும், 0-1 ஹெக்டேர் நிலம் உள்ள குடும்பங்கள் 28.9% நிலத்தையும், 1-2 ஹெக்டேர் நிலம் உள்ள குடும்பங்கள் 48.6% நிலத்தையும் வைத்துள்ளனர். ஊரகப்பகுதியில் மிகப்பெரிய நில உரிமையாளர் வைத்திருக்கும் நிலத்தின் சராசரிப் பங்கு 12.4% ஆகும். அதே, சமயம் 3.8% ஊரகப்பகுதியில் மிகப்பெரிய நில உரிமையாளர் 50%-க்கும் அதிகமான நிலத்தை வைத்துள்ளதாக ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது.


வேளாண்மைக்கு ஏற்ற தன்மை மற்றும் சந்தை அணுகல் ஆகியவை இணைந்து நிலச் சமமின்மையில் காணப்படும் மாறுபாட்டில் 18.3% வரை பங்களிக்கின்றன என்றும், அதிக வேளாண்மை பணிகள் நடைபெறும் பகுதிகளில் அதிக நில சமத்துவமின்மை நிலவுகிறது என்றும் ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. "மிகவும் சாதகமான வேளாண்-சூழலியல் நிலைமைகளைக் கொண்ட ஊரகப் பகுதிகளில் நிலக் குவிப்பு அதிகமாக உள்ளது. இது பெரிய நில உரிமையாளர்களின் கட்டுப்பாட்டில் உள்ள நிலத்தின் பங்கை அதிகரிக்கிறது ஆய்வறிக்கை  தெரிவித்துள்ளது. பட்டியல் சாதி (SC) மக்கள் தொகை அதிகமாக உள்ள இடங்களில், சமத்துவமின்மையால் மட்டுமே ஏற்படும் சமத்துவமின்மையின் அளவுகள்   அதிகமாக உள்ளன என்றும் ஆய்வறிக்கை  கூறியது.


நகரங்கள், சாலைகள் மற்றும் சந்தைகளுக்கு அருகில் இருப்பது, ஆழமாக வேரூன்றிய நில சமத்துவமின்மையின் வடிவங்களை மாற்றுவதற்குப் போதுமானதாகத் தெரியவில்லை என்பதால், சந்தை அணுகல் மாறிகளும் நில சமத்துவமின்மையைக் குறிக்கின்றன என்று ஆய்வறிக்கை குறிப்பிடுகிறது. நகரங்கள், பெரிய நெடுஞ்சாலைகள் மற்றும் இரயில் நிலையங்களுக்கு மிக அருகில் உள்ள ஊரகப் பகுதிகளில் சமத்துவமின்மை நிலவி வருவதாக சுட்டிக்காட்டியது. சாலைகள் மற்றும் இரயில் நிலையங்களிலிருந்து (2.5 கி.மீ.) உள்ள தூரத்தைவிட, நகரங்களிலிருந்து (10 கி.மீ.) அதிக தூரம் வரை சமத்துவமின்மை அதிகரித்திருப்பதை நாங்கள் காண்கிறோம். மேலும், வங்கி அல்லது வேளாண் சந்தையைக் (mandi) கொண்ட கிராமங்களில் சமத்துவமின்மை அதிகமாக உள்ளது. ஆனால், அருகிலுள்ள ஊரகப் பகுதிக்கும் இதற்கும் எந்த விதமான தொடர்பும் இல்லை என்று அந்த ஆய்வறிக்கை குறிப்பிட்டது.


நிலப் பகிர்வில் வரலாற்று நிறுவனங்களின் தாக்கம் "வலுவாகவும் தொடர்ச்சியாகவும்" உள்ளது. மேலும், முன்பு அரச குடும்பங்களால் ஆளப்பட்ட அரசுகளான "சமஸ்தானங்களில்" (princely states)  உள்ள ஊரகப்பகுதிகள், நேரடியாக பிரிட்டிஷ் ஆட்சியின்கீழ் இருந்த பகுதிகளைக் காட்டிலும், சராசரியாக அனைத்துக் குடும்பங்களிடையேயும் குறைந்த அளவிலான நில ஏற்றத்தாழ்வைக் காட்டுகின்றன என்றும் ஆய்வறிக்கை குறிப்பிட்டது. சமஸ்தானங்களுக்குள் நில சமத்துவமின்மை 2-3 சதவீதப் புள்ளிகள் குறைவாகவும், ஜமீன்தாரி முறை உள்ள இடங்களில் 3-4 சதவீதப் புள்ளிகள் அதிகமாகவும் உள்ளது. ஏனெனில்,  நில உரிமையாளர்களுக்கான கினி (Gini) அளவைக் மட்டும் பார்க்கும்போது குறிப்பிடத்தக்க தாக்கம் எதுவும் காணப்படவில்லை. இதற்கு மாறாக, நிலக்கிழார் அதிகமாக உள்ள பகுதிகள், சிறு உழவர்களின் பங்கில் ஏற்பட்ட குறிப்பிடத்தக்க குறைவு மற்றும் ஆதிக்கம் செலுத்தும் நிலப்பிரபுக்களின் குறிப்பிடத்தக்க இருப்பு ஆகியவற்றால், அதிக அளவிலான நில சமத்துவமின்மை நிலவி வருவதாக  ஆய்வறிக்கை சுட்டிக்காட்டிகிறது.


Original article : Top 10% rural households own 44% land in India: World Inequality Lab study findings, explained. -Aanchal Magazine

Share: