தாயின் சாதியை அடிப்படையாகக் கொண்டு மகளுக்கு பட்டியலின சாதிச்சான்றிதழ் வழங்க உச்சநீதிமன்றம் அனுமதிக்கிறது: சட்டம் என்ன சொல்கிறது? -அமால் ஷேக்

"மாறும் காலங்களுக்கு ஏற்ப, ஒரு குழந்தையின் சாதி ஏன் தாயின் சாதியை அடிப்படையாகக் கொண்டு பின்பற்றப்படக்கூடாது?" என்று விசாரணையின்போது, தலைமை நீதிபதி ஒரு தெளிவான, நேரடியான கேள்வியைக் கேட்டார். தலைமை நீதிபதி ஒருவர் இந்தக் கேள்வியை இவ்வளவு வெளிப்படையாக எழுப்பியது இதுவே முதல் முறையாகும்.


 கடந்த திங்கட்கிழமை டிசம்பர் மாதம் 8-ஆம் தேதி, புதுச்சேரியைச் சேர்ந்த ஒரு சிறுமிக்கு, அவரது தந்தை பட்டியலின சமூகத்தைச் சேராதவராக இருந்தாலும், தாயின் ஆதிதிராவிடர் சமூக அடையாளத்தின் அடிப்படையில் பட்டியல் சாதி (SC) சான்றிதழ் பெற உச்சநீதிமன்றம் அனுமதித்தது குறிப்பிடத்தக்கது. தலைமை நீதிபதி சூர்யா காந்த் மற்றும் நீதிபதி ஜாய்மல்யா பக்ஜி ஆகியோர் அடங்கிய அமர்வு, பெரிய அளவிலான பிரச்சினைகள் இன்னும் தீர்மானிக்கப்படாமல் இருக்கும்போது, குழந்தையின் கல்வியைத் தாமதப்படுத்த முடியாது என்று கூறி, சென்னை உயர் நீதிமன்றத்தின் உத்தரவை மாற்ற மறுத்துவிட்டது.


"மாறும் காலங்களுக்கு ஏற்ப, ஒரு குழந்தையின் சாதி ஏன் தாயின் சாதியை அடிப்படையாகக் கொண்டு பின்பற்றப்படக்கூடாது?" என்று விசாரணையின்போது, தலைமை நீதிபதி ஒரு தெளிவான, நேரடியான கேள்வியைக் கேட்டார். தலைமை நீதிபதி ஒருவர் இந்தக் கேள்வியை இவ்வளவு வெளிப்படையாக எழுப்பியது இதுவே முதல் முறையாகும். கடந்த திங்கட்கிழமை பிறப்பிக்கப்பட்ட இந்த உத்தரவு சட்டத்தை நிலைநிறுத்தவில்லை. ஆனால், இந்த விவாதம் நிலையான வம்சாவளி (fixed lineage) பற்றிய பழைய பார்வையிலிருந்து மாறி, ஒரு குழந்தை எந்தச் சமூகச் சூழலில் வளர்க்கப்படுகிறது என்பதற்கே அதிக முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்கிற நிலைக்கு சமூகம் நகர்ந்து வருவதைக் காட்டுகிறது.


சட்டம் என்ன சொல்கிறது


அரசியலமைப்பின் பிரிவுகள் 15 மற்றும் 16 பட்டியல் சாதியினர் (SC) மற்றும் பழங்குடியினர் (ST) சமூகங்களுக்காக சிறப்பு நடவடிக்கைகள் அல்லது திட்டங்களை உருவாக்க அரசுக்கு அனுமதி  அளிக்கின்றன. இருப்பினும், யார் பட்டியல் சாதியினர் அல்லது பழங்குடியினர் என்று தகுதி பெறுகிறார்கள் என்பது சட்டப்பிரிவுகள் 341 மற்றும் 342-ன் கீழ் குடியரசுத் தலைவரின் உத்தரவுகள் மூலம் நிர்ணயிக்கப்படுகிறது. மேலும், இந்த பட்டியல்கள் மாநிலத்திற்கு மாநிலம் மாறுபடும் என்கின்றனர். நடைமுறையில், அரசாங்கங்கள் நீண்டகாலமாக ஒரு அடிப்படை விதியைப் பின்பற்றுகின்றன: ஒரு குழந்தை அதன் தந்தையின் சாதியை அடைப்படையாகக் கொண்டு சாதி அடையாளம் பெறுகிறது. இது பழைய அரசாங்க சுற்றறிக்கைகளிலும், வழக்கமான இந்து சட்டத்திலிருந்தும் (customary Hindu law) வருகிறது. உச்சநீதிமன்றத்தின் 2003-ஆம் ஆண்டு புனித் ராய் வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பு இதை மேலும் வலுப்படுத்தியது. அதில், "எந்தவொரு குறிப்பிட்ட சட்டமும் இல்லாத நிலையில்," ஒரு குழந்தையின் சாதி பொதுவாக தந்தையின் சாதியை அடைபடையாகக் கொண்டு  வழங்கப்பெறும்  என்று தெரிவிக்கப்படுகிறது.


ஆனால், இடஒதுக்கீடு சட்டம் என்பது தனிநபர் சட்டம் அல்ல. அது சமூகப் பின்தங்கிய நிலையைப் பொறுத்தது. விளிம்புநிலை குழுக்களைப் பாதுகாப்பது பற்றிக் கூறும் அரசியலமைப்புச் சட்டப்பிரிவுகள் 39 மற்றும் 46, சாதியை ஒரு பரம்பரைச் சொத்தாக அங்கீகரிப்பதற்குப் பதிலாக, கட்டமைப்பு ரீதியான தடைகளை எதிர்கொள்வதற்காகவே சலுகைகள் உள்ளன என்பதை வலியுறுத்த பயன்படுத்தப்பட்டுள்ளன.

உச்சநீதிமன்றம் முன்பு என்ன கூறியது


தற்போதைய நிலைப்பாடு அப்படியே உள்ளது: ஒரு குழந்தை தந்தையின் சாதிய அடிப்படையைச் சேர்ந்ததாகக் கருதப்படுகிறது. ஆனால், இது ஒரு ஊகம் மட்டுமே என்று உச்சநீதிமன்றம் மீண்டும் மீண்டும் கூறியுள்ளது. புனித் ராய் வழக்கில் (2003), "ஒரு நபர்... தன் சாதியைத் தன் தந்தையிடமிருந்து பெறுவார், தாயிடமிருந்து அல்ல" என்று நீதிமன்றம் கூறியது. இருப்பினும், முக்கிய தீர்ப்பு இதை ஒரு கடினமான விதியாக (hard rule) அமைக்கவில்லை. அதற்குப் பதிலாக, நீதிமன்றம் பொதுவான உண்மைக் கருதுகோள் மட்டுமே என்றும் குறிப்பிட்டது. இது "சிறப்பு சூழ்நிலைகளில் மாற்றப்படலாம்" என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.  பட்டியல் சாதி (SC) தகுதி கோரிய அந்த நபர், நீதிமன்றத்தில் பெற்றோரில் ஒருவரையும் ஆஜர்படுத்தவில்லை. நீதிபதிகள் ஆதாரச் சட்டத்தின்கீழ் (Evidence Act) மறைக்கப்பட்ட சாட்சியங்கள் பாதகமானவை என்று நீதிபதிகள் கருதினர்.   நீதிமன்றம் "தாயின் சாதி வழியாக இட ஒதுக்கீடு கிடையாது" என்று எதுவும் சொல்லவில்லை – மனுதாரர் தன் தாய் அந்தச் சாதியைச் சேர்ந்தவர் என்பதை நிரூபிக்கத் தவறிவிட்டார் என்று மட்டுமே தீர்ப்பளித்தது.


ஒன்பது ஆண்டுகளுக்குப் பிறகு, ரமேஷ்பாய் வழக்கில், நீதிமன்றம் புனித் ராய் வழக்கையும், ஒரு பெண் தன் கணவரின் சாதியை ஏற்றுக்கொள்வது குறித்த வால்சம்மா பால் (1996) வழக்கின் முக்கியப் பகுதியையும் மறுஆய்வு செய்தது. ஒரு குழந்தையின் சாதியைத் தீர்மானிக்க அந்தக் கூற்றைப் பயன்படுத்துவது “தவறானது மற்றும் பிழையானது” என்று நீதிபதிகள் கூறினர். அதற்குப் பதிலாக, உண்மையான அளவுகோல் என்பது வாழும் அனுபவமே என்று அவர்கள் தீர்ப்பளித்தனர். ஒரு முன்னேறிய சாதியில் பிறந்து, தத்தெடுப்பு, திருமணம் அல்லது மதமாற்றம் மூலம் பிற்படுத்தப்பட்ட சாதியில் வைக்கப்பட்ட ஒரு குழந்தை, “வாழ்க்கையில் சாதகமான தொடக்கத்தைக்” கொண்டிருப்பதால், இடஒதுக்கீடு சலுகைகளுக்குத் தகுதியற்றது என்றும் குறிப்பிட்டனர். ஒரு குழந்தையை அந்தப் பெற்றோர் வளர்த்தனர், அந்த சமூகத்தில் வாழ்ந்தனர், அதன் சமூக நிலைமைகளை அனுபவித்தனர் என்பதற்கு ஆதாரங்கள் இருந்தால் மட்டுமே, கலப்புத் திருமணத் தம்பதியரின் குழந்தை ஆதி திராவிடர் (SC) பெற்றோரின் சாதியைக் கோர முடியும் என்றும் கூறியுள்ளனர். சாதிச் சலுகைகளை “மரபுரிமையாகக் கருத முடியாது” என்றும் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

Original link:

SC allows issuance Scheduled Caste certificate for girl based on mother’s caste: What does the law say?



Share: