"நாங்கள் சட்டத்தை பின்னோக்கிப் பார்க்கும் (retrospective) வகையில் மாற்றுவோம், உங்களைத் தேடி வருவோம்" என்று ராகுல்காந்தி தேர்தல் சீர்திருத்தத்தின் அவசியத்தை வலியுறுத்தி, எதிர்க்கட்சிகள் எழுப்பிய எந்தவொரு கவலைக்கும் இந்திய தேர்தல் ஆணையம் பதிலளிக்கவில்லை என்று குற்றம் சாட்டினார்.
செவ்வாய்க்கிழமை (டிசம்பர் 10) மக்களவையில் தேர்தல் சீர்திருத்தங்களின் அவசியம் குறித்துப் பேசிய எதிர்க்கட்சித் தலைவர் ராகுல் காந்தி, இந்திய தேர்தல் ஆணையம் (Election Commission of India (ECI)) "அதிகாரத்தில் இருப்பவர்களுடன் கூட்டுச் சேர்ந்துள்ளது" என்று குற்றம் சாட்டினார். மேலும், "பின்னோக்கிய" (retrospective) நடவடிக்கை குறித்து அதிகாரிகளை எச்சரித்தார்.
"நாங்கள் பின்னோக்கிப் பார்க்கும் வகையில் சட்டத்தை மாற்றுவோம், உங்களைத் தேடி வருவோம்" என்று அவர் கூறினார். 2023-ம் ஆண்டு சட்டத்தை மேற்கோள் காட்டி, இந்திய தேர்தல் ஆணைய (ECI) அதிகாரிகளுக்கு ஆட்சியில் இருக்கும்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு விதிவிலக்கு அளிக்கிறது. சட்டம் என்ன சொல்கிறது, மக்கள் ஏன் அதை விமர்சித்தார்கள் என்பது இங்கே குறிப்பிட்டுள்ளது..
1991 சட்டத்தை திருத்துதல்
தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்கள் (நியமனம், பணி நிபந்தனைகள் மற்றும் பதவிக்காலம்) சட்டம் (Chief Election Commissioner and Other Election Commissioners (Appointment, Conditions of Service and Term of Office) Act) நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டு டிசம்பர் 2023-ல் சட்டமாக அறிவிக்கப்பட்டது.
சட்ட அமைச்சர் அர்ஜுன் ராம் மேக்வால் நாடாளுமன்றத்தில் விவரித்த இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தொடர்பாக "அரை வேக்காடு" (half-baked) 1991 சட்டத்தை புதுப்பிக்க இந்த சட்டம் நோக்கமாக இருந்தது. இது தலைமை தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் தேர்தல் ஆணையர்களின் (ECs) நியமனம், சம்பளம் மற்றும் நீக்கம் ஆகியவற்றை வழங்கியது.
நியமன செயல்முறை
பிரதமர், மத்திய அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் மக்களவையில் உள்ள பிரதிநிதிகள் அடங்கிய தேர்வுக் குழுவின் (Selection Committee) பரிந்துரையின் அடிப்படையில் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் தேர்தல் ஆணையர்கள் குடியரசுத்தலைவரால் நியமிக்கப்படுவார்கள் என்று சட்டம் கூறுகிறது. இந்தக் குழுவில் காலியிடம் இருந்தாலும்கூட இந்தத் தேர்வுக் குழுவின் பரிந்துரைகள் செல்லுபடியாகும்.
தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) மற்றும் தேர்தல் ஆணையங்களுக்கான நியமன செயல்முறை குறித்து எதிர்க்கட்சிகள் மற்றும் குடிமை சமூகத்தினரிடமிருந்து கடுமையான விமர்சனங்களைப் பெற்றது. இது நிர்வாகக் குழு இந்திய தேர்தல் ஆணையத்தைக் (ECI) கட்டுப்படுத்த அனுமதிக்கிறது என்று அவர்கள் கூறினர்.
பொதுவாக, தலைமைத் தேர்தல் ஆணையருக்குப் (CEC) பிறகு அடுத்த மூத்த தேர்தல் ஆணையர் (EC) நியமிக்கப்பட்டு வந்தார். மார்ச் 2023-ல், மத்திய அரசு சர்ச்சைக்குரிய மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்துவதற்கு முன்பு, உச்சநீதிமன்றம் இந்திய தேர்தல் ஆணையம் (ECI) நிர்வாகக் கட்டுப்பாட்டிலிருந்து சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று குறிப்பிட்டது. மேலும் பிரதமர், மக்களவை மற்றும் இந்திய தலைமை நீதிபதி ஆகியோரைக் கொண்ட ஒரு தேர்வுக் குழுவின் அடிப்படையில் நியமனங்கள் செய்யப்பட வேண்டும் என்று உத்தரவிட்டது.
ஆனால் மசோதா அறிமுகப்படுத்தப்பட்டபோது, சட்ட அமைச்சகம் தலைமைத் தேர்தல் ஆணையருக்கு (CEC) பதிலாக மற்றொரு மத்திய அமைச்சரவை உறுப்பினரை தேர்வுக் குழுவில் நியமித்தது. செவ்வாயன்று ராகுல்காந்தி இந்த மாற்றத்தைக் குறிப்பிட்டார்.
“இந்திய தேர்தல் ஆணையம் (ECI) தேர்வுக் குழுவிலிருந்து இந்திய தலைமை நீதிபதி (CJI) நீக்கப்பட்டது ஏன்? நான் அந்தக் குழுவின் ஒரு பகுதியாக இருக்கிறேன். ஆனால், எனக்கு எந்தக் கருத்தும் இல்லை... பிரதமரும் அமித் ஷாவும் தேர்தல் ஆணையராக யார் என்பதைத் துல்லியமாகத் தீர்மானிக்க ஏன் இவ்வளவு ஆர்வமாக உள்ளனர்?" என்று அவர் கேட்டார்.
தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC), தேர்தல் ஆணையர்களுக்கான (EC) அதிகாரம்
சட்டத்தின் பிரிவு 16 குறிப்பிடுவதாவது, “தற்போதைக்கு சட்ட நடைமுறையில் உள்ள வேறு எந்தச் சட்டத்திலும் என்ன இருந்தாலும், எந்தவொரு நீதிமன்றமும் தலைமைத் தேர்தல் ஆணையர் (CEC) அல்லது தேர்தல் ஆணையராக (EC)இருக்கும் அல்லது இருந்த எந்தவொரு நபருக்கும் எதிராக எந்தவொரு சிவில் அல்லது குற்றவியல் நடவடிக்கைகளையும் ஏற்றுக்கொள்ளவோ அல்லது தொடரவோ கூடாது. அவர் தனது அதிகாரப்பூர்வ கடமை அல்லது செயல்பாட்டை நிறைவேற்றும் போது அல்லது செயல்படுவதாகக் கூறும்போது அவர் செய்த எந்தவொரு செயல், விஷயம் அல்லது வார்த்தை, செய்த, அல்லது பேசிய எந்தவொரு செயலுக்கும், விஷயத்திற்கும் அல்லது வார்த்தைக்கும் இது பொருந்தும்”
இதன் பொருள் தலைமை தேர்தல் ஆணையர்களும் தேர்தல் ஆணையர்களும் பதவியில் இருக்கும்போது எடுக்கப்பட்ட நடவடிக்கைகளுக்கு சட்டப்பூர்வ விலக்கு அளிக்கப்படுகிறார்கள். ராகுல் காந்தியும் செவ்வாயன்று தனது உரையில் இந்தக் கருத்தை எடுத்துரைத்தார்.
“இந்தச் சட்டம் தங்களைத் தப்பிக்க அனுமதிக்கும் என்ற எண்ணத்தில் அவர்கள் (CEC மற்றும் EC-கள்) உள்ளனர். அது அப்படி இல்லை, ஆனால் நாங்கள் சட்டத்தை மாற்றி அதை பின்னோக்கிச் செய்வோம்” என்று அவர் கூறினார்.
இந்திய தேர்தல் ஆணையம் (ECI) vs எதிர்க்கட்சி
சமீபத்திய மாதங்களில், ஆளும் கட்சிக்கு ஆதரவாக தேர்தல் கையாளுதலை அனுமதிப்பதாகவோ அல்லது எளிதாக்குவதாகவோ இந்திய தேர்தல் ஆணையம் (ECI) மீது எதிர்க்கட்சி அடிக்கடி குற்றம் சாட்டி வருகிறது. 2024 மக்களவைத் தேர்தல்கள் மற்றும் ஹரியானா, மகாராஷ்டிரா மற்றும் பீகார் உட்பட பல மாநிலத் தேர்தல்கள் தொடர்பாக ‘இந்தியா’ கூட்டணி மிகப்பெரிய தேர்தல் மோசடி குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது.
Original link: