திறன் இந்தியா திட்டம், கடுமையான சவால்களாகவும் கால்கோடியன் பிழைகளாகவும். -சந்தோஷ் மெஹ்ரோத்ரா, ஏ. சிங்

 இந்தியாவின் மக்கள்தொகைப் பலனைப் பயன்படுத்துவதற்கு திறன் நிதியுதவியை (skill financing) சீரமைப்பது மிக முக்கியமானது.


வாழ்நாளில் ஒருமுறை மட்டுமே கிடைக்கும் வாய்ப்புகளுக்கு கடின உழைப்பு தேவை. 2040-ஆம் ஆண்டுக்குள் முடிவடையும் இந்தியாவின் மக்கள்தொகை ஈவுத்தொகை, அத்தகைய ஒரு வாய்ப்பாகும். பல ஐரோப்பிய ஒன்றிய நாடுகளும் சீனாவும் திறன் அமைப்புகளுக்கு வெற்றிகரமாக நிதியளித்துள்ளன. இந்த நாடுகளில், இடைநிலை நிலை மாணவர்களில் தோராயமாக 50% பேர் தொழிற்கல்வி பிரிவுகளில் சேர்ந்துள்ளனர். இந்தியாவில் அந்தப் பங்கு 1.3% ஆகும். இது 1990-ஆம் ஆண்டுவரை பள்ளிக் கல்வியையும், 2006-ஆம் ஆண்டு வரை புறக்கணித்த தொழிற்கல்வி முறையைப் பிரதிபலிக்கிறது.


இருப்பினும், 2020-ஆம் ஆண்டில், இந்தியாவின் தேசிய கல்விக் கொள்கை (National Education Policy (NEP)), 2025-ஆம் ஆண்டுக்குள், மாணவர்களில் பாதிப் பேர் தொழிற்கல்வியை பற்றி தெரிந்து கொள்வார்கள் என்றும் கூறியது. ஆனால் "வெளிப்படுத்தப்பட்டது" என்ற வார்த்தை, கொள்கை வகுப்பாளர்கள் இன்னும் வரையறுக்கப்பட்ட மனநிலையைக் கொண்டுள்ளனர் என்பதைக் காட்டுகிறது. பெரும்பாலான நாடுகளில், தொழிற்கல்வி கல்வி தொடர்பாக நிதிநிலை அறிக்கை 2% பெறுகிறது. சீனா மற்றும் ஜெர்மனியைப் பொறுத்தவரை, இது 11% ஆகும். அமைச்சகங்களில் பயிற்சித் திட்டங்கள் பிளவுபபட்டு  இருப்பதால், பொது வெளியில் கிடைக்கும் தரவு எதுவும் இந்தியாவில் இல்லை. இந்தியாவின் உத்தி, ஆண்டுதோறும் தடுமாறும் நிதி நிலை அறிக்கையின் அறிவிப்புகளைச் சார்ந்துள்ளது. கடந்த ஆண்டு கொண்டாடப்பட்ட ஒரு திட்டம் அடுத்த ஆண்டு மறக்கப்படுகிறது. 2026-ஆம் ஆண்டு நிதியாண்டு நிதிநிலை அறிக்கையில் அறிவிக்கப்பட்ட பயிற்சித் திட்டத்தைக் கவனியுங்கள்: ஒதுக்கப்பட்ட நிதியில் 5% மட்டுமே செலவிடப்பட்டது மற்றும் அதன் வடிவமைப்பு பயனற்றதாக நிரூபிக்கப்பட்டது.


இந்திய தலைமை கணக்குத் தணிக்கையாளர் அறிக்கைகள் மற்றும் எழுப்பப்பட்ட பிரச்சினைகள்


Galgotian blunders = கல்கோடியாஸ் பல்கலைக்கழகத்தின் ரோபோடாக் மோசடி போன்ற வகையில், மிகைப்படுத்தப்பட்ட முட்டாள்தனமான அல்லது மோசடியான தவறுகள் / ஏமாற்று செயல்கள். (அதாவது, சீனாவில் தயாரான ரோபோ நாயை தங்கள் சொந்த கண்டுபிடிப்பு என்று பொய்யாகக் காட்டி, AI உச்சி மாநாட்டில் அவமானகரமாக அம்பலமான அளவுக்கு மிகுந்த அறிவு இழிவும், பொய்மையும் கொண்ட பிழைகள்.) 


இந்தியாவை “உலகின் திறன் மையமாக” மாற்றுவதற்கான மிகப்பெரிய பணிகள், “கால்கோடியன்” (Galgotia) தவறுகளுடன் பொருந்தாது. திறன் மேம்பாட்டுக்கான நிதியளிப்பு (financing skills) மிகவும் முக்கியமானது. 2025-ஆம் ஆண்டில் இந்திய தலைமை தணிக்கையாளர் (CAG) முதன்மை திறன் இந்தியா திட்டமான பிரதம மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா  (Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY)) திட்டத்தின் 2015-22ஆம் ஆண்டு செயல்பாடுகளை தணிக்கை  செய்தார். பத்து ஆண்டுகளுக்கு முன்பு, தலைமை தணிக்கையாளர் திறன் நிறுவனங்கள் விதிகளை பின்பற்றுவது மற்றும் கண்காணிப்பு தொடர்பான பிரச்சினைகளை ஆய்வு செய்தார்.


இரண்டு அறிக்கைகளும் நிதி முறைகேடு (financial impropriety) தொடர்பான பிரச்சினைகளை எழுப்புகின்றன. 2015-ல், தலைமை தணிக்கையாளர் நிதி அறிக்கைகள் தாமதமாக வந்ததை  கவனித்தது. 2025-ல், அறிக்கையில் 94.5% வங்கி கணக்குகள் தவறானவை என்றும், குறுகியகால பயிற்சியில் (short-term training) 41% மாணவர்கள் மட்டுமே வேலைவாய்ப்பு பெற்றுள்ளனர் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.


2015–2025 காலத்தில் நாம் எவ்வாறு முன்னேறினோம்? குறுகியகால திறன் சுற்றுச்சூழல் அமைப்பு தொடங்கப்பட்டபோது, ​​திறன்களுக்கான துடிப்பான பொது-தனியார் (public-private) சந்தையை உருவாக்குவதே தொலைநோக்குப் பார்வையாக இருந்தது. இருப்பினும், கடந்த பத்தாண்டுகளில், குறுகிய கால பயிற்சி மூலம் அளவில் கவனம் செலுத்துவது வரையறுக்கப்பட்ட பலன்களையே அளித்துள்ளது. தலைமை தணிக்கையாளர் நேரடியாக கவனம் செலுத்தும் விஷயம் நிதிப் பயன்பாடு என்பதால், இதற்காக மூன்று யோசனைகள் கீழே கொடுக்கப்பட்டுள்ளன.


பிரதம மந்திரி கௌஷல் விகாஸ் யோஜனா  (Pradhan Mantri Kaushal Vikas Yojana (PMKVY)) திட்டத்தின் மூலம் எந்த செயல்பாட்டு நிதியும் வழங்கப்படவில்லை என்ற கற்பனை செய்து பாருங்கள். ஆண்டுக்கு ரூ. 10,000 கோடி செலவானது மாணவர்களுக்கு திறன் கடன்களாக (skill loans) வழங்கப்பட்டிருந்தால் என்ன ஆகும்?


இது மாணவர்களுக்கு அதிக தேர்வுகளுக்கு வழிவகுத்திருக்கும்.  நிறுவனங்கள் சேர்க்கைக்காக போட்டியிடும்போது அவற்றின் தரத்தை மேம்படுத்தியிருக்கும், தேவை சார்ந்த திறன் மேம்பாட்டை ஊக்குவித்தது, பொருளாதாரரீதியாக பின்தங்கிய பின்னணியைச் சேர்ந்த மாணவர்கள் இதன் மூலம் பயன்பெற்றிருப்பார்கள். கல்விக் கடன்களைப் போன்ற ஒரு மாதிரியைப் பின்பற்றியிருக்கலாம். மோசமான நிலை என்பது  செயல்படாத சொத்துக்கள் ஆகும். அதைக் கையாள நமக்கு வழிகள் உள்ளன. நாம் இப்போதும் அவ்வாறு செய்யலாம் மற்றும் திறன் கடன்களை சிறப்பாகப் பயன்படுத்தலாம். ஏற்கனவே ஒரு கொள்கை கட்டமைப்பு உள்ளது. முன்னுரிமை மாற்றப்பட வேண்டும்: PMKVY நிதியின் ஒரு பகுதி திறன் கடன்கள் மூலம் வழங்கப்படலாம். இதனை செயல்படுத்த திட்ட வடிவமைப்பு (design work) தேவைப்படும். இதில் வங்கிகள் மற்றும் வங்கியல்லாத நிதி நிறுவனங்கள் (non-banking financial companies) பங்குபெறும் ஒரு சந்தை தேவை. மேலும் கேள்வி எழுப்பத் தக்கது: தேசிய திறன் மேம்பாட்டுக் கழகம் ஏன் வங்கி சாரா நிதி நிறுவனமாகத் தொடங்கியது. பின்னர் பயிற்சியாளர்களுக்கு நிதியளிப்பவராக மாறியது. இப்போது முக்கிய அரசாங்கத் திட்டங்களைச் செயல்படுத்துவது ஏன் என்பது கேள்விக்குறியாக உள்ளது.


தேசிய திறன் மேம்பாட்டு நிறுவனம் (National Skill Development Corporation) முதலில் ஏன் வங்கியல்லாத நிதி நிறுவனம் (non-banking finance company) ஆக தொடங்கியது, பின்னர் பயிற்சி நிறுவனங்களுக்கு நிதியளிப்பாளர் (funder) ஆனது, இப்போது பிரதமமாக அரசு திட்டங்களை (government schemes) நிறைவேற்றுகிறது  என்பது கேள்விக்குரியது.


உயர்திறன் ஊக்கத்திட்டங்களை (skill vouchers) பயன்படுத்துதல்


உயர்திறன் ஊக்கத்திட்டங்களை பயன்படுத்துவது மற்றொரு மாணவர்-அடிப்படையிலான திறன் நிதியளிப்பு (trainee-based skills financing) யோசனை ஆகும். பொதுநிதிகளை (public funds) பயன்படுத்த இது மிகவும் பயனுள்ளதாக இருக்கும். இது கொள்கையமைப்பாளர்களுக்கு (policymakers) தற்காலிக சுதந்திரத்தையும், மாணவர்களுக்கு தேவையான வாய்ப்பையும் வழங்கும். வாழ்நாள் முழுவதும் கற்றல் என்ற தேசிய கல்விக் கொள்கையின் முன்னுரிமையை செயல்படுத்த இதைவிட சிறந்த வழி எதுவுமில்லை.


ஊக்கத்திட்டங்கள் நிறுவனத்தை (institution) பின்பற்றி செல்லாமல், மாணவரை பின்பற்றுவதால், திறன் பயிற்சிகளுக்கு ஊக்குவிப்பு கிடைக்கும். இதனால் போட்டியுள்ள சந்தை (competitive market) உருவாகும்.


ஊக்கத்திட்டங்கள் நிறுவனத்தைவிட பயிற்சி பெறுபவரைப் பின்தொடர்வதால், அது விளைவுகளையும் ஊக்குவிக்கும். ஒரு போட்டி சந்தையை உருவாக்குகிறது. செயற்கை நுண்ணறிவு (AI), டிஜிட்டல் திறன்கள் மற்றும் பசுமைத் திறன்கள் போன்ற துறைகளில் மாணவர்கள் புதிய திறன்களைக் கற்றுக்கொள்ள ஊக்கத்திட்டங்கள் உதவும். பணியிடத்தில் பெண்களின் பங்களிப்பை அதிகரிப்பது அல்லது உலகளாவிய வேலைகளுக்கு வெளிநாட்டு மொழிகளைக் கற்பிப்பது போன்ற முக்கியமான இலக்குகளையும் அவை ஆதரிக்கலாம்.


மாணவர்களின் உணரும் சக்தி தரத்தையும் பொறுப்பையும் மேம்படுத்தும் மற்றும் தேவை அடிப்படையிலான திறன் சந்தையை (demand-based skills market) இயக்கும். சிங்கப்பூரும், குரோஷியாவும் இவற்றை சிறப்பாக செயல்படுத்தியுள்ளன. பள்ளிப் படிப்பை முடித்தவர்கள் பட்டப்படிப்புகளைத் தவறவிடுவதற்குப் பதிலாக தொழிற்கல்வி படிப்புகளைத் தொடர இது போன்ற ஊக்கத்திட்டங்கள் ஊக்குவிக்கும். இது பெரும்பாலும் மூன்றாம் நிலை சேர்க்கையை அதிகரிக்கிறது.


திறன் வரி (Skill Levies) யோசனை


90-க்கும் மேற்பட்ட நாடுகளில் பயன்படுத்தப்படும் ஒழுங்கமைக்கப்பட்ட தொழில்கள் மீதான திறன் வரிகள் மற்றொரு அடிப்படை யோசனையாகும். நன்கு வடிவமைக்கப்பட்ட திறன் வரி திறன்களுக்கு நிலையான நிதியளிக்கும். 2017-ஆம் ஆண்டில், 12-வது ஐந்தாண்டு திட்டத்திற்காக இந்திய அரசாங்கத்திற்கு திருப்பிச் செலுத்தக்கூடிய தொழில் பங்களிப்பை (Reimbursable Industry Contribution (RIC)) வடிவமைத்து பரிந்துரைத்தோம். அந்த நேரத்தில் 62-க்கும் மேற்பட்ட நாடுகள் இதைச் செய்து கொண்டிருந்தன. இப்போது, ​​90-க்கும் மேற்பட்ட நாடுகள் நல்ல காரணங்களுக்காக அதை ஏற்றுக்கொண்டுள்ளன.


லாட்டின் அமெரிக்கா, ஜெர்மனி, சிங்கப்பூர், தென் ஆப்பிரிக்கா மற்றும் தென் கொரியாவில், இந்த மாதிரியான மாதிரிகள் தொழிற்துறைகளின் திறன் உரிமையை உறுதி செய்யவும், அரசியல் மற்றும் நிதிநிலை அறிக்கை சுழற்சிகளிலிருந்து தனிமைப்படுத்தப்பட்ட நிலையான நிதியளிப்பை உருவாக்கவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. நிறுவனத்தின் அளவு மற்றும் ஊதியத்துடன் பங்களிப்புகளை இணைத்து பயிற்சி முடிந்ததும் அதை தொழிற்துறைக்கு திருப்பி வழங்குவதால், திறன் மேம்பாட்டுக்குப் பொறுப்பான முதலாளிகள் முழுமையாக பொறுப்பேற்கின்றனர்.


இன்று, திறன் திட்டங்கள் விநியோகம் சார்ந்தவை மற்றும் அரசாங்கத்தால் நிதியளிக்கப்படுகின்றன.


இன்று, முதலாளிகள் திறன் பயிற்சியில் போதுமான அளவு ஈடுபடுவதில்லை. அரசாங்கத்திற்கு திருப்பிச் செலுத்தக்கூடிய தொழில் பங்களிப்பில் (Reimbursable Industry Contribution (RIC)) சீர்திருத்தத்தைப் பயன்படுத்தி, திறன் மேம்பாட்டிற்கான முழுப் பொறுப்பையும் முதலாளிகள் ஏற்கும் வகையில் அமைப்பை மாற்ற முடியும். இந்த அணுகுமுறை மற்ற நாடுகளில் வெற்றிகரமாக சோதிக்கப்பட்டுள்ளது. ஆனால் இந்த மாற்றத்தைச் செய்வதற்கு ஒரு சிறிய கால அவகாசம் மட்டுமே உள்ளது.


இறுதியாக, அரசாங்கக் கொள்கைகள் நிகழ்நேர திறன் தேவைகளை அடிப்படையாகக் கொண்டிருக்க வேண்டும். இதைச் செய்ய, தெளிவான மற்றும் வெளிப்படையான விதிகள் தேவை. இணைய வேலை வாரியங்கள் தங்கள் வணிகத்தைப் பாதுகாக்கும் வகையில் தரவைப் பகிர்ந்து கொள்ள வேண்டும்.  அதே நேரத்தில் அரசாங்கம் ஒட்டுமொத்த போக்குகளைப் புரிந்துகொள்ளவும் உதவ வேண்டும். தரவுச் செயலாக்கம் மற்றும் AI இதற்கு உதவும். ஒரு முறை அல்லது அவ்வப்போது திறன் இடைவெளி ஆய்வுகள் போதாது. பகிரப்பட்ட தரவை தேசிய தொழில் சேவை (National Career Service (NCS)) தரவுதளத்தில் வெளியிடலாம்.  இந்தியாவின் தொழிலாளர் சந்தை தகவல் அமைப்பை உருவாக்குவதற்கான இலக்கு இன்னும் நிறைவேறவில்லை. திறன் திட்டமிடலுக்கான ஒரேவழி இதுவாக இருக்கலாம்.


திட்டமிடலில் நாம் தவறுகளைச் செய்துவிட்டோம். இந்தியாவின் மக்கள்தொகை ஈவுத்தொகை (demographic dividend) 2040-ல் முடிவடையும். மாற்றத்தைச் செய்ய வேண்டிய நேரம் இது - அது சாத்தியம் என்பதை நாங்கள் அறிவோம், மேலும் நாங்கள் வெற்றி பெறுவோம் என்று நம்புகிறோம்.


சந்தோஷ் மெஹ்ரோத்ரா ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழகத்தின் முன்னாள் பேராசிரியராகவும், IZA தொழிலாளர் பொருளாதார நிறுவனத்தின் ஆராய்ச்சி உறுப்பினராகவும் உள்ளார். ஏ. சிங் ஒரு கணினி பொறியாளர், ஹைதராபாத்தில் உள்ள இந்திய வணிகப் பள்ளியில் (IIndian School of Business (ISB)) வணிக நிர்வாகத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர், மேலும் ஒரு திறன் பயிற்சியாளர் ஆவார்.


Original article : Skill India as herculean challenges, Galgotian blunders -Santosh Mehrotra, A. Singh

Share: