முக்கிய அம்சங்கள் :
மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ், சிறுத்தைகளை வரவேற்க குனோவில் இருந்தார். அவர் அடையாளமாக அவற்றை சிறப்பாக தயாரிக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட உறைகளில் விடுவித்தார். "செப்டம்பர் 17, 2022 அன்று நமீபியாவிலிருந்து எட்டு சிறுத்தைகள் முதன்முதலில் இந்தியாவிற்கு மீண்டும் அறிமுகப்படுத்தப்பட்டன. மேலும், பிப்ரவரி 2023-ல் தென்னாப்பிரிக்காவிலிருந்து 12 கொண்டு வரப்பட்டன. போட்ஸ்வானாவிலிருந்து 9 சிறுத்தைகள், அதில் 6 பெண் சிறுத்தைகள் மற்றும் 3 ஆண் சிறுத்தைகள் ஆகும். மத்தியப் பிரதேசத்தின் குனோ தேசிய பூங்காவிற்கு (Kuno National Park) வந்ததை அறிவிப்பதில் நான் மகிழ்ச்சியடைகிறேன்," என்று யாதவ் கூறினார்.
போட்ஸ்வானாவில் இருந்து சிறுத்தைகளின் வருகையுடன், இந்தியாவின் சிறுத்தை எண்ணிக்கை இப்போது 48 ஆக உள்ளது. அந்த எண்ணிக்கையில் 29 இந்தியாவில் பிறந்த குட்டிகளும் அடங்கும். இது இந்தத் திட்டத்தின் நீண்டகால வெற்றியின் மிகவும் உன்னிப்பாகக் கவனிக்கப்பட்ட அடையாளமாக மாறியுள்ளது. 2023 முதல், குனோவில் 30 குட்டிகள் வரை பிறந்துள்ளன. அவற்றில் 28 உயிர் பிழைத்துள்ளன.
போட்ஸ்வானாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான கூட்டாண்மை முறையான வகையில் சமீபத்தியது. ஆனால், உலகளாவிய வனவிலங்கு பாதுகாப்புக்கான பரந்த உறுதிப்பாட்டை அடிப்படையாகக் கொண்டது. இது நவம்பர் 2025-ல், போட்ஸ்வானா அதிபர் டுமா கிதியோன் போகோ விலங்குகளை நன்கொடையாக வழங்குவதன் மூலம் இந்தியாவின் சிறுத்தை மறு அறிமுகம் செய்வதற்கான முயற்சியை ஆதரிப்பதற்கு உறுதியளித்தபோது இந்தத் திட்டத்திற்கான வடிவம் பெற்றது. இந்த ஒப்பந்தம் பின்னர் அரசாங்கத்திற்கு அரசாங்க ஏற்பாடாக முறைப்படுத்தப்பட்டது. இந்த செயல்முறை இறுதியில் சனிக்கிழமை விலங்குகளை மாற்றுவதற்கு வழிவகுத்தது.
சிறுத்தைகள் பயணிக்க அனுமதிக்கப்படுவதற்கு முன்பு, அவை போட்ஸ்வானாவில் 30 நாட்கள் கட்டாய குறைந்தபட்ச தனிமைப்படுத்தல் காலத்திற்கு உட்படுத்தப்பட்டன. இது சர்வதேச வனவிலங்கு இடமாற்றங்களுக்கான ஒரு நிலையான விதி. இந்த நேரத்தில், அவை விரிவான கால்நடை பரிசோதனைகளை மேற்கொண்டன. போட்ஸ்வானா வன கால்நடை மருத்துவர்கள் மற்றும் வனவிலங்கு நிபுணர்கள் குழுவும் விலங்குகளுடன் இந்தியாவுக்குச் சென்று குனோவில் ஆரம்ப கண்காணிப்பு கட்டத்தில் அவர்கள் இந்திய அதிகாரிகளை ஆதரிப்பார்கள்.
போட்ஸ்வானா வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறையின் தலைமை கால்நடை அதிகாரி எம்மாடி ரூபன், விலங்குகள் புறப்படும்போது அவை நல்ல ஆரோக்கியத்துடன் இருந்ததை உறுதிப்படுத்தினார்.
ஒன்பது சிறுத்தைகளும் குனோவில் உள்ள பெரிய, வேலி அமைக்கப்பட்ட தனிமைப்படுத்தப்பட்ட உறைகளில் வைக்கப்பட்டுள்ளன. அங்கு, அவை 15 முதல் 30 நாட்கள் வரை இருக்கும். இந்தக் காலகட்டத்தில், வனவிலங்கு கால்நடை மருத்துவர்கள் மற்றும் வன அதிகாரிகள் அவற்றின் உணவுப் பழக்கம், இயக்கம், இந்திய இரை இனங்களுக்கு எதிர்வினை மற்றும் நிலப்பரப்புக்கு ஏற்ப சரிசெய்தல் ஆகியவற்றை அவர்கள் கண்காணிப்பார்கள். வழக்கமான கண்காணிப்பு சுகாதார அளவுரு நிலைமைகள் தொடர்ந்து மேற்கொள்ளப்படும். ஆரோக்கியம் உறுதிசெய்யப்பட்டவுடன், விலங்குகள் மென்மையான-வெளியீட்டு வனப்பகுதிகளில் இறுதியில் விடுவிக்கப்படுவதற்கு முன்பு நிகழ்நேர கண்காணிப்புக்காக ஜிபிஎஸ் (GPS) செயற்கைக்கோள் காலர்கள் பொருத்தப்படும்.
சிறுத்தைகள் இறுதியாக விடுவிக்கப்படுவதற்கு முன்பு ஒரு மாதத்திற்கு தனிமைப்படுத்தலில் வைக்கப்படும் என்று சிறுத்தை திட்டம் (Project Cheetah) இயக்குநர் உத்தம் குமார் சர்மா தெரிவித்தார். இந்த 9 விலங்குகளும் உலகின் மிக முக்கியமான சிறுத்தை எண்ணிக்கையில் ஒன்றைக் கொண்ட ஒரு நாட்டிலிருந்து வருகின்றன.
போட்ஸ்வானாவின் வனவிலங்கு மற்றும் தேசிய பூங்காக்கள் துறை மற்றும் தென்னாப்பிரிக்க சிறுத்தைகள் பற்றிய 2023 பாதுகாப்பு நிலை அறிக்கையின்படி, போட்ஸ்வானாவில் 1,694 வயது வந்த மற்றும் சுதந்திரமான இளம் பருவ சிறுத்தைகள் இருப்பதாகக் கூறுகிறது. இது தோராயமாக 7,100 தனிநபர்களைக் கொண்ட உலகளாவிய சிறுத்தை மக்கள்தொகையில் சுமார் 24 சதவீதம் ஆகும். அவற்றின் பரப்பளவு சுமார் 459,567 சதுர கிலோமீட்டர் அல்லது நாட்டின் சுமார் 79 சதவீதத்தை உள்ளடக்கியது.
முக்கியமாக, போட்ஸ்வானாவின் சிறுத்தைகளில் தோராயமாக 76.9 சதவீதம் முறையாக பாதுகாக்கப்பட்ட பகுதிகளுக்கு வெளியே வாழ்கின்றன. மாறாக அவை சமூகம் மற்றும் வணிக விவசாய நிலங்களில் வாழ்கின்றன. இதனால், அவை மனித செயல்பாடு மற்றும் கால்நடைகளுடன் நிலப்பரப்புகளை ஏற்றுக் கொள்வதற்கு தனித்துவமான அடையாளத்தைக் கொண்டுள்ளன. போட்ஸ்வானாவில் உள்ள எண்ணிக்கை அண்டை நாடான நமீபியா, தென்னாப்பிரிக்கா மற்றும் ஜிம்பாப்வேயில் உள்ள சிறுத்தைகளுடன் இணைக்கப்பட்டுள்ளது. இது பரந்த தென்னாப்பிரிக்க சிறுத்தைகளின் ஒரு முக்கிய அங்கமாக அமைகிறது.
போட்ஸ்வானாவின் சிறுத்தைகளின் எண்ணிக்கை கடந்த இருபதாண்டுகளாக ஒப்பீட்டளவில் நிலையானதாக இருந்தாலும், உலகளவில் சிறுத்தை இனங்களின் சரிவைக் கருத்தில் கொண்டு குறிப்பிடத்தக்க சாதனையாகும். இது குறைந்து வரும் இரை இனங்கள், குறிப்பாக ஸ்பிரிங்போக் மற்றும் இம்பாலா, அதிகப்படியான மேய்ச்சல் மற்றும் கால்நடை வேலிகள் மூலம் வாழ்விடச் சீரழிவு மற்றும் தென்னாப்பிரிக்க வரம்பின் பரந்த பிரிவினையாக இருப்பதால் இந்த எண்ணிக்கை அழுத்தத்தில் உள்ளது என்று 2023 அறிக்கை குறிப்பிடுகிறது. பிரிவினையாக இருப்பது, மரபணு இனப்பெருக்கத்திற்கு ஆபத்தை விளைவிக்கும் மற்றும் இனங்களின் நம்பகத்தன்மையை மேலும் அச்சுறுத்தும் என்று அறிக்கை எச்சரிக்கிறது.
உங்களுக்குத் தெரியுமா?
சிறுத்தைகள் (அசினோனிக்ஸ் ஜுபாட்டஸ்) கருப்பு புள்ளிகளுடன் கூடிய பழுப்பு நிற முடிகளுக்கு நன்கு அறியப்பட்டவை. அவை விலங்குகளை அடையாளம் காண உதவும் தனித்துவமான வடிவத்தில் வைக்கப்பட்டுள்ளன.
இந்தியா ஆசிய சிறுத்தைகளின் தாயகமாக இருந்தது. தேசிய புலிகள் பாதுகாப்பு ஆணையத்தின் கூற்றுப்படி, 1952-ம் ஆண்டில், சிறுத்தை இந்தியாவில் இல்லாமல் போனது. இது அச்சுறுத்தல்களின் உச்சக்கட்டத்திற்கு ஆளானது. இப்போது, ஆசிய சிறுத்தை ஈரானில் மட்டுமே உயிர்வாழ்வதாக நம்பப்படுகிறது.
சிறுத்தைகளின் பாதுகாப்பு நிலை: சர்வதேச இயற்கை பாதுகாப்பு ஒன்றியம் (IUCN) சிவப்பு பட்டியல், ஆசிய சிறுத்தை "மிகவும் ஆபத்தான நிலையில்", ஆப்பிரிக்க சிறுத்தை பாதிக்கப்படக்கூடியதாக (Vulnerable (VU)) பட்டியலிடப்பட்டுள்ளது.
வனவிலங்கு பாதுகாப்புச் சட்டம், 1972: ஆசிய சிறுத்தை மற்றும் ஆப்பிரிக்க சிறுத்தை இரண்டும் அட்டவணை I-ன் கீழ் வைக்கப்பட்டுள்ளன.
நமீபியா மற்றும் தென்னாப்பிரிக்காவிலிருந்து மத்தியப் பிரதேசத்தில் உள்ள குனோ தேசிய பூங்காவிற்கு ஆப்பிரிக்க சிறுத்தைகளை கண்டங்களுக்கு இடையேயான இடமாற்றத்துடன், சிறுத்தை திட்டம் (Project Cheetah) செப்டம்பர் 2022-ல் தொடங்கப்பட்டது.
Original article : What is Project Cheetah? -Roshni Yadav