இந்தியாவின் தேசிய கணக்கு புள்ளிவிவரங்களுக்கு 'C-தரநிலை (C-grade)’ : சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) மதிப்பீடு, இந்தியாவின் புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தொடர் போதுமான வேகம் பெறாது என்பதைக் காட்டுகிறது. -சித்தார்த் உபாசனி


2023-ஆம் ஆண்டில், சர்வதேச நாணய நிதியம் (International Monetary Fund (IMF)), இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (Gross Domestic Product (GDP)) தொடரை, 2011-12-ஆம் ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்டு, 'முடிந்தவரை விரைவில் மறுசீரமைக்க வேண்டும்' என்று தெரிவித்துள்ளது.


2025-ஆம் ஆண்டிற்கான இந்தியாவின் ஆண்டு ஊழியர் அறிக்கையில், சர்வதேச நாணய நிதியம் (IMF) புதன்கிழமை அன்று இந்தியாவின் தேசிய கணக்கு புள்ளிவிவரங்கள் அல்லது மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தரவுகளுக்கான அதன் 'C' தரத்தை தக்க வைத்துக் கொண்டது. இதன் பொருள், நிதியத்திற்கு வழங்கப்பட்ட தரவுகளில் “கண்காணிப்பிற்கு சற்றே தடையை ஏற்படுத்தும் சில குறைபாடுகள்” உள்ளன என்பதாகும். வெள்ளிக்கிழமை அன்று, புள்ளிவிவரங்கள் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (Ministry of Statistics and Programme Implementation (MoSPI), ஜூலை-செப்டம்பர் மாதங்களில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி விகிதம் ஏப்ரல்-ஜூன் மாதங்களில் இருந்த 7.8 சதவீதத்திலிருந்து எதிர்பாராத விதமாக ஆறு காலாண்டுகளில் இல்லாத அளவிற்கு 8.2 சதவீதமாக உயர்ந்துள்ளது என்று கூறப்படுகிறது.


பொருளாதாரத் தரவுகள் எதிர்பார்ப்புகளை மீறும்போதெல்லாம் — இரண்டாவது காலாண்டில் வளர்ச்சி 7.3 சதவீதமாகக் குறையும் என்று பொருளாதார வல்லுநர்கள் பரவலாகக் கருதினர். மொத்த உள்நாட்டு உற்பத்தி புள்ளிவிவரங்கள் உண்மையில் எதைக் குறிக்கின்றன என்பது குறித்து மீண்டும் கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. ஆனால், இந்தியாவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் குறித்த சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) மதிப்பீட்டிற்கும் ஒரு விளக்கம் தேவைப்படுகிறது.


கண்காணிப்புக்கான தரவு போதுமானதா என்பதை மதிப்பிடுதல்


முதலில் செய்ய வேண்டியவை: சர்வதேச நாணய நிதியம் (IMF) ஏன் இந்தியாவின் தரவுகளை மதிப்பீடு செய்கிறது?


இந்த மதிப்பீடு (Article IV Consultation) பலதரப்பு நிறுவனம் தன் உறுப்பு நாடுகளுடன் ஆண்டுதோறும் நடத்தும் இருதரப்பு பேச்சுவார்த்தையின் ஒரு பகுதியாகும். சர்வதேச நாணய நிதியத்தின் ஒப்பந்தத்தின் 4-ஆம் பிரிவின்படி இது கட்டாயமாகும். இதில் சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் அந்த நாட்டுக்குச் சென்று பொருளாதாரம், நிதி தொடர்பான தகவல்களைச் சேகரித்து, அரசு அதிகாரிகளுடன் நாட்டின் பொருளாதார வளர்ச்சி மற்றும் கொள்கைகள் பற்றி விவாதிப்பார்கள். பேச்சுவார்த்தை முடிந்ததும் ஒரு அறிக்கை தயாரிக்கப்படும்.


2025-ஆம் ஆண்டின் நான்காம் பிரிவுக் கலந்தாலோசனைக்கான (Article IV consultation) தனது அறிக்கையில், சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஊழியர்கள் "பேரியல் பொருளாதார மற்றும் நிதியியல் புள்ளிவிவரங்களின் மேம்பட்ட தரம், கிடைக்கும்தன்மை மற்றும் நேரத்துக்குறைபாடு ஆகியவை கொள்கை உருவாக்கத்தை ஆதரிக்கும்" என்று கூறியுள்ளனர். மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் நுகர்வோர் விலைக் குறியீடு (Consumer Price Index (CPI)) போன்ற முக்கிய பேரியல் பொருளாதாரக் குறிகாட்டிகளைப் புதுப்பிப்பதில் இந்திய அரசாங்கத்தின் தொடர்ச்சியான முயற்சியை ஒப்புக்கொண்ட அதே வேளையில், சர்வதேச நாணய நிதியத்தின் ஊழியர்கள் பல பரிந்துரைகளையும் வழங்கியுள்ளனர். சர்வதேச சிறந்த நடைமுறைகளுக்கு ஏற்ப தேசிய கணக்குகள், விலைகள் மற்றும் பிற முக்கிய புள்ளிவிவரங்களை தவறாமல் திருத்துதல், மக்கள் தொகை கணக்கெடுப்பை முன்னுரிமை அடிப்படையில் நடத்துதல், மற்றும் ஒருங்கிணைந்த பொது அரசாங்கத்தின் (மத்திய மற்றும் மாநிலங்கள்) நிதி கணக்குகளை சரியான நேரத்தில் வழங்குதல் ஆகியவை ஆகும்.



இந்த அறிக்கை இந்திய அரசின் பதிலையும் கொண்டிருந்தது, அதில், புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) மற்றும் நுகர்வோர் விலைக் குறியீட்டு எண் (CPI) தொடர்கள் பிப்ரவரி 2026-ஆம் ஆண்டில் தொடங்கப்படவுள்ள நிலையில், அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களை மேம்படுத்தும் பணி நடந்துகொண்டிருக்கிறது என்று தெரிவிக்கப்பட்டது. "இந்த முன்னேற்றங்களைக் கருத்தில்கொண்டு, அதிகாரிகளின் கண்காணிப்புக்கான தரவு போதுமான மதிப்பீட்டில், குறிப்பாக தேசிய கணக்குகள், அதன் உள்ளடக்கம் மற்றும் துல்லியம் (granularity) உட்பட, மிகவும் சாதகமான மதிப்பீடுகள் தேவை என்று அதிகாரிகள் கருதினர்," என்று அந்த அறிக்கை தெரிவிக்கிறது.


இருப்பினும், சாதகமான மதிப்பீடுகள் வரவில்லை, சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஊழியர்கள் 2024-ஆம் ஆண்டின் நான்காம் பிரிவு ஆலோசனை அறிக்கையிலிருந்து அனைத்து தரங்களையும் தக்க வைத்துக் கொண்டனர். தேசிய கணக்குகள் ‘C’ மதிப்பீட்டைப் பெற்றிருந்தாலும், விலைகள், அரசாங்க நிதி புள்ளிவிவரங்கள், வெளித் துறை புள்ளிவிவரங்கள், பணவியல் மற்றும் நிதி புள்ளிவிவரங்கள் மற்றும் துறைகளுக்கு இடையேயான நிலைத்தன்மை ஆகிய மீதமுள்ள அம்சங்களின் காரணமாக ஒட்டுமொத்த மதிப்பீடு ‘B’ என்கிற தர மதிப்பீட்டில்  இருந்தது.


2024-ஆம் ஆண்டுக்கு முன்பு என்ன நடந்தது?


சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) ஊழியர்களின் தற்போதைய நான்கு அடுக்கு தரவரிசை முறை ஒரு புதிய வளர்ச்சியாகும், இது 2024-ஆம் ஆண்டில் மட்டுமே செயல்படுத்தப்பட்டது. எனவே, 2024-ஆம் ஆண்டின் நான்காம் பிரிவின் ஆலோசனை அறிக்கையில் (Article IV consultation report) இந்தியாவுக்கு வழங்கப்பட்ட மொத்த ‘B’ தரவரிசை இத்தகைய ஒரு தரத்தைப் பெற்றது இதுவே முதல் முறையாகும். அதற்கு முன்னர், 2023-ஆம் ஆண்டில், சர்வதேச நாணய நிதிய ஊழியர்கள் இந்தியாவின் தரவுகள் "பரந்த அளவில் போதுமானவை" என்று குறிப்பிட்டிருந்தனர். 2016-ஆம் ஆண்டு வரை பல ஆண்டுகளாக இதுவே நிலைமையாக இருந்தது. அப்போது அந்த அமைப்பு தரவுகளை "கண்காணிப்புக்கு போதுமானது" என்று மதிப்பிட்டிருந்தது.


கடைசியாக புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) மொத்த உள்நாட்டு உற்பத்தியின் (GDP) தொடரை 2015-ஆம் ஆண்டின் தொடக்கத்தில் புதுப்பித்தது என்பதையும் நினைவு கூர்வது மதிப்புமிக்கது. புதிய வளர்ச்சி புள்ளிவிவரங்கள் அனைவரையும் குழப்பியது. சர்வதேச நாணய நிதிய ஊழியர்கள் கூட தங்கள் 2015-ஆம் ஆண்டு அறிக்கையில், "வரலாற்றுத் தொடர்களில் பெரிய திருத்தங்கள், திருத்தப்பட்ட தொடரின் ஒப்பீட்டளவில் குறுகியகால அளவு, மற்றும் செயல்பாடு வாரியான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் செலவு வாரியான மொத்த உள்நாட்டு உற்பத்திக்கும் இடையேயான பெரிய முரண்பாடுகள் பகுப்பாய்வை சிக்கலாக்குகின்றன" என்று குறிப்பிட்டிருந்தனர்.


பல ஆண்டுகளாக, இந்தியாவின் அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்கள் மீதான அதன் மதிப்பீட்டைக் குறைக்க சர்வதேச நாணய நிதியம் ஏன் அவசியம் என்று உணர்ந்தது? ஒரு காரணத்திற்காக, அது தீர்வு தேவைப்படும் குறைபாடுகளை மீண்டும் மீண்டும் சுட்டிக்காட்டியுள்ளது. தரங்கள் வழங்கப்படாத 2023-ஆம் ஆண்டின் அறிக்கையில் இந்தியாவின் மொத்த உள்நாட்டு உற்பத்தித் தரவு குறித்து

அந்த அமைப்பு என்ன கூறியது என்பதைக் கவனியுங்கள்: 2011-12-ஆம் ஆண்டுகளை அடிப்படை ஆண்டாகக் கொண்ட தொடர் "காலாவதியானது" என்றும், அதை "சாத்தியமான விரைவில் மறுஅடிப்படையாகக்" கொள்ள வேண்டும் என்றும் கூறியிருந்தது.


சர்வதேச நாணய நிதியத்தின் அறிக்கையில் உள்ள மற்றொரு நீண்டகால விமர்சனம் என்னவென்றால், பெயரளவு மொத்த உள்நாட்டு உற்பத்தியிலிருந்து (nominal GDP) உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தியை (real GDP) அடையும்போது பல பொருளாதார நடவடிக்கைகளின் விலையைக் குறைப்பதற்கு உற்பத்தியாளர் விலைக் குறியீட்டிற்குப் (Producer Price Index) பதிலாக மொத்த விலைக் குறியீட்டைப் (Wholesale Price Index) பயன்படுத்துவதே ஆகும் என்றும் தெரிவித்திருந்தது.


அடுத்து என்ன நடக்கும்?


இந்திய அதிகாரிகளுக்கு நியாயமான முறையில், தேசிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் (MoSPI) தனது புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தொடரை 2022-23-ஆண்டுகளை அடிப்படையாகக் கொண்டு வெளியிடுவதற்கு சில

மாதங்களுக்கு முன்புதான் சர்வதேச நாணய நிதியத்தின் (IMF) சமீபத்திய வருடாந்திர அறிக்கை வந்துள்ளது. புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி தொடரின் கீழ் வரும் முதல் காலாண்டு எண், முறையியலில் மாற்றங்களைக் காணும் மற்றும் புதிய தரவு மூலங்களை உள்ளடக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இது அக்டோபர்-டிசம்பர் 2025-ஆம் ஆண்டுக்கான தரவு மற்றும் 2025-26-ஆம் ஆண்டு முழுமைக்குமான இரண்டாவது முன்கூட்டிய மதிப்பீடு வெளியிடப்படும்போது, அதாவது பிப்ரவரி மாதம் 27-ஆம் தேதி, 2026-ஆம் ஆண்டு வெளியிடப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


புதிய மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) தொடர், தேசிய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகத்தின் (MoSPI) மேற்கொள்ளும் பெரிய புள்ளிவிவர மாற்றத்தின் ஓர் பகுதியாகும். இந்த புதிய தொடரின்கீழ் வரும் தரவை வெளியிடுவதற்கு சில நாட்களுக்கு முன், புதிய நுகர்வோர் விலை குறியீடு (CPI) பணவீக்க எண்ணும் வெளியிடப்படும். இது 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 12-ஆம் தேதி வெளியாகும். இந்த நுகர்வோர் விலைக் குறியீடு (CPI) எண் 2023-24–ஆம் ஆண்டில் நடத்தப்பட்ட குடும்ப நுகர்வுச் செலவு கணக்கெடுப்பை அடிப்படையாகக் கொண்டது. இதனால், 2011-12-ஆம் ஆண்டு கணக்கெடுப்பையும் 2012-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட பழைய நுகர்வோர் விலை குறியீடு (CPI) தொடர் மாற்றும் என்றும் தெரிவிக்கப்படுகிறது. 


2022-23 ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்டு தொழில்துறை உற்பத்தி குறியீடு புதுப்பிக்கப்பட்டுள்ளது. மேலும், இந்திய ரிசர்வ் வங்கி (RBI) இனிமேல் தங்களின் வழக்கமான காலாண்டு தகவல்களுக்கு கூடுதலாக, அந்நிய செலாவணி இருப்புநிலை (Balance of Payments) உள்ளிட்ட தரவுகளை மாதந்தோறும் வெளியிடத் திட்டமிட்டுள்ளது என்றும் கூறப்படுகிறது. 


Original article link:


Share: