அறிவியலை வெற்றிகரமாக தொழில்துறையாக மாற்றிய நாடுகள் ஒரு நடைமுறையைச் சிறப்பாகச் செய்தன. அவை, நிறுவனத்தின் செலவினங்களை பல்கலைக்கழகங்களின் நலன்களுடன் இணைத்து, அந்த இணைப்பை பல ஆண்டுகளாக நிலையாக வைத்திருந்தன
பொது மானியங்களை மட்டும் பயன்படுத்தி இந்தியா தனது வளர்ச்சி இலக்குகளை அடைய முடியாது. அறிவியலை வெற்றிகரமாக தொழில்துறையாக மாற்றிய நாடுகள் ஒரு முக்கிய காரியத்தைச் செய்தன. அவை நிறுவனச் செலவினங்களை பல்கலைக்கழக பலங்களுடன் இணைத்து, பல ஆண்டுகளாக அந்த சீரமைப்பைப் பராமரித்தன. கொள்கைக்கான கேள்வி தெளிவாக உள்ளது. தனியார் ஆராய்ச்சி செலவுகளை ஒரு குறிப்பிட்ட காலத்திற்கு பெருநிறுவன சமூகப் பொறுப்பிலிருந்து (Corporate social responsibility (CSR)) ஆய்வக நேரத்தை வாங்குதல், முனைவர் பட்டக் குழுக்களுக்கு நிதியளித்தல் மற்றும் முன்மாதிரி திட்டங்களை பதிவு செய்தல் போன்ற ஒரு கணிக்கக்கூடிய பாதைக்கு எவ்வாறு நகர்த்துவது?
உலகளாவிய அளவுகோல்கள்
முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்கள் தொழில்துறை அளவில் புதுமைக்கான பெரும் தொகையை செலவிடுகின்றன. 2024-ம் ஆண்டில், மெட்டாவின் ஆராய்ச்சி செலவு சுமார் $44 பில்லியனை எட்டியது. இதன் வருவாயில் மூன்றில் ஒரு பங்கிற்காக உள்ளது. ஆல்பபெட், அமேசான், ஆப்பிள், ஐபிஎம் மற்றும் மைக்ரோசாப்ட் ஆகியவை பல பில்லியன் டாலர் திட்டங்களை அறிவித்தன. அமெரிக்காவில், நிறுவனங்கள் 2022-ம் ஆண்டில் உள்நாட்டு ஆராய்ச்சிக்காக சுமார் $692 பில்லியனை செலவிட்டன, நிகர விற்பனையில் சுமார் $14 டிரில்லியன் ஆகும். இது விற்பனையில் தோராயமாக 5% ஆகும். கொள்கை கருவிகள் இந்த முதலீட்டை பல்கலைக்கழக ஒத்துழைப்புகளாக மாற்ற உதவுகின்றன. தேசிய அறிவியல் அறக்கட்டளையின் தொழில்-பல்கலைக்கழக கூட்டுறவு ஆராய்ச்சி மையங்கள், போட்டிக்கு முந்தைய பல்கலைக்கழகப் பணிகளுக்கான நிறுவனக் கட்டணங்களைத் திரட்டுகின்றன. தொழில்துறை தொடர்பான சிக்கல்களைச்
சமாளிக்கும் அதே வேளையில் திறமையாளர்களைப் பயிற்றுவிக்கும் பல பல்கலைக்கழக கூட்டமைப்புகளுக்கு குறைமின்கடத்திகள் ஆராய்ச்சிக் கழகம் (Semiconductor Research Corporation) நிதியளிக்கிறது.
சீனாவின் ஹூவாய் (Huawei) 2024-ம் ஆண்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்காக 179.7 பில்லியன் யுவானை செலவினத்ததாக அறிவித்தது. இது வருவாயில் 20.8%-க்கு சமம். ஹூவாயின் (Huawei) பணியாளர்களில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுப் (R&D) பணிகளில் உள்ளனர். சீன பன்னாட்டு ஆட்டோமொபைல் நிறுவனமான Build Your Dreams, 2024-ம் ஆண்டில் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் (R&D) 54.2 பில்லியன் யுவானை முதலீடு செய்தது. இது சுமார் தோராயமாக 777 பில்லியன் யுவான் வருவாய், அதாவது அதன் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டில் கிட்டத்தட்ட 7% ஆகும்.
இந்த எடுத்துக்காட்டுகள் தெளிவான போக்கைக் காட்டுகின்றன. கூட்டு மையங்கள், பகிரப்பட்ட திட்டங்கள், நீண்டகால கூட்டமைப்பு மற்றும் திறந்த திறமைக்கான பாதைகள் மூலம் பெருநிறுவன ஆராய்ச்சி வளாகங்களுடன் செயல்படுகிறது. இந்தியா இதை இந்திய விதிமுறைகளின்படி விரிவுபடுத்த வேண்டும். உலகளாவிய அறிவியலுக்குத் திறந்த நிலையில் இருந்து, இந்தியாவின் தேவைகளில் கண்டுபிடிப்புகளை மையமாகக் கொண்டு, தன்னிறைவை அடைவதே இதன் நோக்கம். தனியார் ஆராய்ச்சி செலவுகளுக்கு உயர்கல்வி நிறுவனங்களுடன் (higher education institutions (HEI)) அளவு, முன்கணிப்பு மற்றும் கட்டமைக்கப்பட்ட இணைப்புகள் தேவை.
தற்போது, இந்தியாவின் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கான மொத்த உள்நாட்டு செலவினம் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் 0.65% ஆகும். நிறுவனங்கள் இதில் ஐந்தில் இரண்டு பங்கு நிதியளிக்கின்றன. மேம்பட்ட பொருளாதாரங்கள் பெருநிறுவன நிதியில் அதிக பங்கைக் கொண்டுள்ளன. இருப்பினும், இந்தியாவில் குறிப்பிடத்தக்க எடுத்துக்காட்டுகள் உள்ளன. டாடா மோட்டார்ஸ் நிதியாண்டு 24-ல் சுமார் ₹4.38 லட்சம் கோடி வருவாயையும், ₹29,398 கோடி ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவினத்தையும், அதாவது 6.7% தீவிர நிலையையும் பதிவு செய்துள்ளது. சன் பார்மா நிதியாண்டு-24 இல் உலகளாவிய வருவாயில் 6.7% ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுத் துறையில் முதலீடு செய்தது. டாக்டர் ரெட்டி ₹22.9 பில்லியனை, அதாவது விற்பனையில் சுமார் 8.2% ஐ செலவிட்டது. பாரத்
எலக்ட்ரானிக்ஸ் நிதியாண்டு-24-ல் 6.24% வருவாயை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டுக்கு அர்ப்பணித்தது, இது ஒரு இராஜதந்திர துறையில் ஒரு முக்கிய அறிகுறியாகும். ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் நிதியாண்டு 2024-25-ல் ₹4,100 கோடிக்கு மேல் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு செலவினங்களைப் பதிவு செய்தது.
இந்தியா ஏற்கனவே வலுவான கூட்டாண்மை தளங்களைக் கொண்டுள்ளது. ஐஐடி மெட்ராஸ் ஆராய்ச்சி பூங்கா, ஆசிரிய ஆய்வகங்கள் மற்றும் மாணவர் குழுக்கள் கிட்டத்தட்ட 200-க்கும் மேற்பட்ட நிறுவனங்களை நடத்துகிறது. இந்த அமைப்பு தினசரி சிந்தனைகள் மற்றும் திறமைகளை உருவாக்குகிறது. பாதுகாப்பு அமைச்சகம், பாதுகாப்பு சிறப்புக்கான கண்டுபிடிப்பு (Innovation for Defence Excellence(iDEX)) மூலம் தொடக்க மற்றும் ஆராய்ச்சி ஆய்வகக் குழுவை ஊக்குவிக்கிறது. சனந்தில் (Sanand) உள்ள மைக்ரான் அசெம்பிளி, சோதனை, குறியிடுதல் மற்றும் பேக்கேஜிங் (Assembly, Testing, Marking, and Packaging (ATMP)) திட்டத்தில் காணப்படுவதுபோல், இந்திய குறைகடத்தி திட்டத்தில் தொழில் முதலீடுகளை திறன்சார்ந்த பாதைகள் மற்றும் கல்வி கூட்டாண்மைகளுடன் இணைக்கிறது.
கொள்கை நடவடிக்கைகள்
இந்த படிகள் ஒரு உறுதியான அடித்தளத்தை வழங்குகின்றன. இப்போது பணி அவற்றை அளவிடுவதும், துறைகள் முழுவதும் தனியார் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு (R&D) செலவினங்கள் மற்றும் பல்கலைக்கழக இணைப்புகளுக்கான தெளிவான எதிர்பார்ப்புகளை அமைப்பதும் ஆகும்.
1. முதலில், ஆட்டோமொபைல், மருந்தியல், எலக்ட்ரானிக்ஸ், பாதுகாப்பு, விண்வெளி மற்றும் எரிசக்தி ஆகிய துறைகளுக்கு மூன்றாண்டு R&D-முதலீடு-விற்பனை விகிதங்களை (R&D-to-sales ratios) நாம் நிர்ணயிக்க வேண்டும். இவை ஆண்டுதோறும் படிப்படியாக உயர வேண்டும், அதே நேரத்தில் ஏற்றுமதி இலக்குகளுடனும் பணப்புழக்க உண்மை நிலவரங்களுடனும் சமநிலைப்படுத்தப்பட்டிருக்க வேண்டும். பகிரப்பட்ட அறிவுசார் சொத்து (Intellectual Property) கட்டமைப்புகளை நாம் பயன்படுத்த வேண்டும்; இவை வெளியீடு (publication) மற்றும் வணிகமயமாக்கல் (commercialisation) ஆகிய இரண்டுக்கும் ஒருசேர வெகுமதி அளிக்கும் விதத்தில் அமைய வேண்டும்.
2. கூட்டுத் திட்டங்களை ஊக்குவிக்கவும்: கூட்டு நிதியளிக்கப்பட்டு பகிரப்பட்ட வசதிகளைப் பயன்படுத்தும் திட்டங்களுக்கு வெகுமதி அளிக்கவும். திறந்த தரவு மற்றும் தொழில்துறை தொடர்பான செயல்திறன் குறிகாட்டிகளுடன் பல ஆண்டு திட்டங்களுக்கு உயர் கல்வி நிறுவனங்கள் வழியாக தொழில்துறை நிதி பாயும்போது பொருத்தமான மானியங்களை வழங்கவேண்டும். பல்கலைக்கழகத்தால் நடத்தப்படும் முன்முயற்சித் திட்டங்கள் மற்றும் தொழில்துறையின் மணிநேரத்திற்கு முன்பதிவு செய்யக்கூடிய சோதனைத் தளங்களுக்கு ஒரு பிரத்யேக பட்ஜெட்டை உருவாக்க வேண்டும். தனிமைப்படுத்தப்பட்ட திட்டங்களுக்குப் பதிலாக சிக்கல்களின் போர்ட்ஃபோலியோவில் கவனம் செலுத்தும் பல பல்கலைக்கழக மையங்களை அமைக்கவும் மையப்படுத்த வேண்டும்.
3. வரி சலுகைகளை நவீனமயமாக்குதல்: தரப்படுத்தப்பட்ட விலக்குகள் காப்புரிமைகள், தரநிலை பங்களிப்புகள், மருத்துவ இலக்குகள் அல்லது கள சோதனைகள் போன்ற அளவிடக்கூடிய வெளியீடுகளில் கவனம் செலுத்தலாம். அங்கீகாரம் பெற்ற பல்கலைக்கழகங்களுடன் இணைந்து பணியாற்றுவதற்கும், தொழில்துறையில் பட்டதாரி ஆராய்ச்சியாளர்களை பணியமர்த்துவதற்கும் ஊக்கத்தொகைகளை இணைக்கவும்.
4. கற்பித்தல் ஒத்துழைப்பு: ஆசிரியர்களையும் முனைவர் பட்டங்களையும் தொழில்துறையுடன் இணைந்து பணியாற்றவும், அறிவுசார் சொத்துரிமைக்கு (IP) பேச்சுவார்த்தை நடத்தவும், மொழிபெயர்ப்புத் திட்டங்களை நிர்வகிக்கவும் அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். தயாரிப்புக் குழுக்களில் அதிக முனைவர் பட்டங்களைக் கொண்டு வந்து, துணை நியமனங்களுடன் இரட்டை-பாதை தலைமைகளை உருவாக்க வேண்டும் மற்றும் பெருநிறுவன திட்ட வரைபடங்களுடன் இணைக்கப்பட்ட முனைவர் பட்டக் குழுக்களுக்கு நிதியுதவி பெற ஆதரவு பெற வேண்டும்.
5. வெளிப்படைத்தன்மையை அதிகரிக்கவும்: பட்டியலிடப்பட்ட நிறுவனங்களை ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு முதலீட்டையும் இந்திய உயர் கல்வி நிறுவனங்களுக்குச் செல்லும் செலவினங்களின் பங்கையும் தெரிவிக்க வேண்டும். பொது வெளிப்படுத்தல் வாரியங்கள் ஆராய்ச்சியை இராஜதந்திர ரீதியில் பார்க்க ஊக்குவிக்கிறது. இந்திய மொழிகளிலும் பயிற்சியாளர் நட்பு வடிவங்களிலும்
முடிவுகளைப் பகிரவும். இது ஆராய்ச்சி வாழ்க்கைக்கு கௌரவத்தை உருவாக்குகிறது மற்றும் திறமையை ஈர்க்கிறது.
இந்தியாவின் பல்கலைக்கழக வளாகங்கள் உலகின் மிகவும் ஆற்றல்மிக்க சந்தைகளில் சிலவற்றிற்கு அடுத்ததாக உள்ளன. மேலும், அவை பரந்த மனித விசாரணையின் ஒரு பகுதியாக தொழில்நுட்பத்தை ஆராயும் அறிவு மரபுகளைக் கொண்டுள்ளன. பெருநிறுவன ஆராய்ச்சி இந்த பாரம்பரியத்துடன் இணைக்கும்போது, தீர்வுகள் வலுவையும் சூழலையும் பெறுகின்றன மற்றும் உயர் செயல்திறன் கொண்ட பெருநிறுவன ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டிற்குத் தேவையானதைப் பொருத்துகின்றன.
இந்தியாவிடம் ஆய்வுக்கூடங்கள், திறமையான மனிதவளம், சந்தைகள் ஆகியவை உள்ளன. தொழில்துறைக்கு முன் உள்ள பணி தெளிவாக உள்ளது: வெளிப்படையான இலக்குகளை நிர்ணயிப்பது, உண்மையான ஆய்வுக்கூட நேரத்தை வாங்கும் மானியங்களைப் பொருத்துவது, மேலும் சிறப்பாக ஒத்துழைப்பது. கல்வி நிறுவனங்களுக்கு முன் உள்ள பணி நேரடியானது: அளக்கக்கூடிய மதிப்புக்காக ஆராய்ச்சியை வடிவமைப்பது, தொழில்துறையின் கேள்விகளை வரவேற்பது, வெற்றியின் ஆதாரங்களை காட்டுவது. இதைச் செய்தால், ஆராய்ச்சி ஒரு தேசிய விநியோகச் சங்கிலியாக மாறும், வெறும் ஆசை நினைப்பாக இருக்காது.
மாமிதலா ஜெகதேஷ் குமார், முன்னாள் UGC தலைவர் மற்றும் முன்னாள் துணைவேந்தர், JNU
Original article link: