பசுமை எஃகு (Green steel) இந்தியாவின் காலநிலை இலக்குப் பாதையை வடிவமைக்க முடியும் -சஞ்சீவ் பால்

கார்பன் திறனற்ற தொழில்நுட்பங்களில் பில்லியன் கணக்கான டாலர்களை முடக்குவது சுற்றுச்சூழலுக்கு பேரழிவை ஏற்படுத்தும் மற்றும் இந்திய பொருளாதாரத்திற்கு தீங்கு விளைவிக்கும்.


இந்தியா ஒரு திருப்புமுனையில் உள்ளது. கடந்த ஆண்டு, மத்திய சுற்றுச்சூழல் அமைச்சர் பூபேந்தர் யாதவ் பிரேசிலின் பெலேமில் நடைபெற்ற COP30 மாநாட்டின் பிரதிநிதிகளிடையே உரையாற்றியதாவது, ​​திருத்தப்பட்ட மற்றும் மேலும் லட்சியமான தேசிய அளவில் நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பை (Nationally Determined Contribution (NDC)) சமர்ப்பிக்க இந்தியா உறுதிபூண்டுள்ளதாக அவர் தெரிவித்தார். இது திருத்தப்பட்ட உறுதிமொழியுடன் மட்டுமல்லாமல், பொருளாதாரம் முழுவதும் கார்பன் நீக்கத்திற்கான தெளிவான திட்டங்களுடன், கார்பன் நீக்கம் செய்ய கடினமாக இருக்கும் துறைகள் உட்பட, ஒரு தலைவராக இந்தியா தன்னை நிலைநிறுத்திக் கொள்ள இது ஒரு வாய்ப்பாகும்.


இங்கு எஃகுத் துறையைவிட முக்கியமான தொழில் வேறு எதுவும் இல்லை.


வழிநடத்த ஒரு வாய்ப்பு


வளர்ந்து வரும் மிகப்பெரிய பொருளாதாரங்களில் ஒன்றாக, எஃகுத் துறை இந்தியாவின் வளர்ச்சியின் ஒரு அடித்தளமாகும். இது உள்கட்டமைப்பு மற்றும் தொழில்துறை வளர்ச்சியை ஊக்குவிக்கிறது. உண்மையில், இந்தியாவின் முழுத் திறனையும் வெளிக்கொணர, எஃகு உற்பத்தி தற்போதைய ஆண்டுக்கு சுமார் 125 மில்லியன் டன்களிலிருந்து நூற்றாண்டின் நடுப்பகுதியில் 400 மில்லியன் டன்களுக்கு மேல் அதிகரிக்க வேண்டும். இவ்வளவு குறுகிய காலத்தில் இந்த அளவிலான வளர்ச்சி முன்னோடியில்லாதது. இது தவிர்க்க முடியாமல் ஒரு பெரும் செலவைக் கோரும். தற்போது, ​​எஃகுத் துறை இந்தியாவின் கார்பன் வெளியேற்றத்தில் சுமார் 12% உற்பத்தி செய்கிறது. இதற்குக் முக்கியக் காரணம், இந்தத் துறை இன்னும் நிலக்கரியை அதிகமாகச் சார்ந்திருப்பதே ஆகும்.


மற்ற வளர்ந்துவரும் பொருளாதாரங்களைப் போலவே, இந்தியாவும் நீண்டகால காலநிலை இலக்குகளை அடைவதோடு, தொடர்ச்சியான வளர்ச்சியை உறுதிசெய்யும் இரட்டை சவாலை எதிர்கொள்கிறது.


இந்த இரண்டு இலக்குகளையும் அடைவதற்கு மிக முக்கியமானது, அதிக கார்பன் உமிழ்வு உள்கட்டமைப்பில் முடக்குவதைத் தவிர்ப்பது. இன்று எஃகுத் துறையில் செய்யப்படும் முதலீடுகள் எஃகுத் துறையின் நீண்ட எதிர்காலத்தைத் தீர்மானிக்கும். இந்த மாற்றத்தில் தொலைநோக்குப் பார்வை இல்லையென்றால், பில்லியன் கணக்கான டாலர் மதிப்புள்ள கார்பன் திறனற்ற தொழில்நுட்பங்களைச் சிக்கிக் கொள்ளக்கூடும். இது சுற்றுச்சூழலுக்கு பேரழிவை ஏற்படுத்துவது மட்டுமல்லாமல், நடுத்தர முதல் நீண்டகாலத்திற்கு இந்தியப் பொருளாதாரத்தை ஈடுபாடுடையதாக மாற்றாது.


உலகளாவிய சந்தைகள் தங்கள் நிலைப்பாட்டை தெளிவுபடுத்தியுள்ளன. உலகெங்கிலும் உள்ள நாடுகள் எஃகுத் துறையை மாற்றுவதற்கு முக்கியமான நடவடிக்கைகளை எடுத்து வருவதை நாம் காண்கிறோம். உதாரணமாக, சீனா, எஃகு தயாரிப்பில் நிலக்கரியைச் சார்ந்திருப்பதைக் குறைக்க, அதன் ஸ்கிராப் அடிப்படையிலான இரண்டாம் நிலை எஃகு உற்பத்தியையும், பசுமை ஹைட்ரஜனில் முதலீட்டையும் அதிகரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.


இதற்கிடையில், ஐரோப்பிய ஒன்றியம் சுமார் இருபதாண்டுகளாக கார்பனை நீக்கும் பயணத்தில் உள்ளது. அதன் கார்பன் எல்லை சரிசெய்தல் செயல்முறை (Carbon Border Adjustment Mechanism (CBAM)) பிராந்தியத்திற்கு எஃகு ஏற்றுமதி செய்பவர்களுக்கு தூய்மையான எஃகு தயாரிப்பிற்கு மாறுவதை உந்துகிறது.


குறைந்த கார்பன் உற்பத்தியை நிரூபிக்க முடியாத நாடுகள் கடுமையான எல்லை வரிவிதிப்புகளை எதிர்கொள்ள நேரிடும். உயர்தர ஏற்றுமதி சந்தைகளுக்கான அணுகலை இழக்க நேரிடும் மற்றும் உலகம் அவசரமாகத் தேவைப்படும் எரிசக்தி மாற்றத்தில் பின்தங்கியவர்கள் என்று முத்திரை குத்தப்படும் அபாயத்தை அவர்கள் எதிர்கொள்கின்றனர். பசுமை எஃகு உற்பத்தி துறையில் முன்கூட்டியே செயல்படும் நாடுகள் ஒரு தெளிவான போட்டிக்கான நன்மையை அடையும். இந்தியாவின் எஃகுத் துறை தாமதப்படுத்த முடியாது. இந்த எச்சரிக்கைகள் நீண்டகாலமாக இந்தியாவின் எஃகுத் துறையால் கவனிக்கப்பட்டு வருகின்றன. இந்தத் துறை ஏற்கனவே சரியான திசையில் நடவடிக்கைகளை எடுக்கத் தொடங்கியுள்ளது. டாடா ஸ்டீல் வெடிப்பு உலைகளில் ஹைட்ரஜனை செலுத்துவதை முன்னோட்டமாக செயல்படுத்தியுள்ளது. புதுப்பிக்கத்தக்க மின் கொள்முதல் ஒப்பந்தங்களை அளவிடுகிறது மற்றும் கார்பன் பிடிப்பு தீர்வுகளை ஆராய்ந்துள்ளது. இதற்கிடையில், JSW ஸ்டீல் மற்றும் JSPL ஆகியவை பசுமை ஹைட்ரஜன் ஒருங்கிணைப்பை ஆராய்ந்து வருகின்றன. அதேநேரத்தில், இந்திய எஃகு ஆணையம் (Steel Authority of India Limited (SAIL)) வெடிப்பு உலைகளை நவீனமயமாக்கி குறைந்த கார்பன் உற்பத்தி வழிமுறைகளையும் ஆராய்ந்து வருகிறது.


இந்த மாற்றம் நிறுவனங்களுக்குள் உள்ள உயர்மட்டத் தலைமையால் இயக்கப்படுகிறது. இதற்கு துணிச்சலான இராஜதந்திர தேர்வுகளும் புதுமைகளில் நீடித்த முதலீடும் தேவை. இந்த முன்னேற்றம் முக்கியமானது என்றாலும், இந்தத் துறை இன்னும் அதிகமாகச் செய்ய முடியும்.


இந்தத் தொழில் துறை முன்னோடித் திட்டங்களிலிருந்து செயல்விளக்க ஆலைகளுக்கும் நகர வேண்டும். பின்னர் முழு அளவிலான பூஜ்ஜியத்திற்கு அருகிலான கார்பன் தொழில்நுட்பங்களுக்கும் விரைவாக நகர வேண்டும். சிறிய மற்றும் நடுத்தர எஃகு உற்பத்தியாளர்கள், அதிக கார்பன் திறன் கொண்ட எஃகு உற்பத்தி செய்ய கிடைக்கக்கூடிய சிறந்த தொழில்நுட்பங்கள் மற்றும் மூலப்பொருட்களைப் பயன்படுத்துவதன் மூலம் காலநிலை அவசரநிலையின் யதார்த்தத்திற்கு ஏற்ப மாற்றியமைக்க வேண்டும்.


இந்தத் துறை இனி வழக்கம்போல வணிக ரீதியாக அதிக கார்பன் கொண்ட வெடிப்பு உலை தொழில்நுட்பத்தில் முதலீடு செய்யக்கூடாது. அனைத்து புதிய உற்பத்தித் திறன்களும் கூடிய விரைவில் குறைந்த அல்லது பூஜ்ஜியத்திற்கு அருகிலான கார்பன் கொண்டதாக இருக்க வேண்டும்.


இதுவரை மேற்கொள்ளப்பட்ட கொள்கை முன்னேற்றம்


இந்தத் துணிச்சலான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கு, பொறுப்பான நிர்வாகிகள் மற்றும் வாரியங்கள் துறையின் போக்கு குறித்து நம்பிக்கை கொண்டிருக்க வேண்டும். இங்குதான் நீண்டகால தொழில்துறை திட்டமிடலை வழிநடத்தும் நிலையான கொள்கை அறிக்கைகள் நடைமுறைக்கு வருகின்றன.


எஃகுத் துறைக்கு வழிகாட்டுவதில் இந்தியா முக்கிய முன்னேற்றம் கண்டுள்ளது. கடந்த ஆண்டு செப்டம்பரில், அரசாங்கம் பசுமை எஃகு வரைபடத்தை வெளியிட்டது. இது இந்தத் துறையின் கார்பன் நீக்கத்திற்கான நடைமுறைத் திட்டத்தை அமைத்தது. டிசம்பர் 2024-ல் பசுமை எஃகு வகைப்பாட்டை வெளியிடப்பட்டதன் மூலம், அத்தகைய வரையறையை முறைப்படுத்திய முதல் நாடாக இந்தியா மாறியது. கார்பன் கடன் வர்த்தகத் திட்டத்தின் (Carbon Credit Trading Scheme (CCTS)) கீழ் 253 எஃகு அலகுகளுக்கான புதுப்பிக்கத்தக்க திறன் மற்றும் கார்பன் உமிழ்வு தீவிர இலக்குகளை விரிவுபடுத்தும் தேசிய பசுமை ஹைட்ரஜன் திட்டம், வேகத்தைக் காட்டுகின்றன.


இருப்பினும்கூட, வகைப்பாட்டியல் தொடங்கப்பட்டு ஒரு வருடம் ஆன பிறகும், நிலக்கரி அடிப்படையிலான வெடிப்பு உலைகளிலிருந்து முதலீட்டை உண்மையில் மாற்றுவதற்கான கொள்கை ஊக்கத்தொகைகள் இன்னும் நடைமுறைக்கு வரவில்லை. மேலும், இந்தியா தனது பொருளாதாரத்தில் விலையுயர்ந்த பழங்கால தொழில்நுட்பங்களைத் தொடர்ந்து சேர்க்கும் ஒரே நாடாக இருக்கும் அபாயம் உள்ளது.


பசுமை எஃகுக்கான தடைகள் குறிப்பிடத்தக்கவை ஆனால் அவற்றை தீர்க்கக்கூடியவை. வரையறுக்கப்பட்ட விநியோகம் மற்றும் பசுமை ஹைட்ரஜனின் அதிக விலை, தொழில்துறைக்கு அர்ப்பணிக்கப்பட்ட புதுப்பிக்கத்தக்க ஆற்றல் போதுமானதாக இல்லாதது, இந்தியாவில் ஒரு சிறிய மற்றும் முறைசாரா ஸ்கிராப் சந்தை, மற்றும் இடைநிலைப் எரிபொருளாக நிலையான, மலிவு விலையில் இயற்கை எரிவாயுவின் தேவை. மற்ற சவால்கள் கார்பன் பிரித்தெடுப்பிற்காக இயற்கை கார்பன் சேமிப்பு இடங்களைக் கண்டறிந்து மேம்படுத்துதல், பசுமை எஃகு திட்டங்களுக்கு நீண்டகால குறைந்த செலவிலான கடன்கள் இல்லாதது மற்றும் தொழிலாளர் பயிற்சி மற்றும் தொழில்நுட்ப ஆதரவின் தேவை ஆகியவை ஆகும். இந்தச் சிக்கல்களில் பல கொள்கை மற்றும் முதலீடு தொடர்பானவை. கடந்த பத்தாண்டுகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி துறையில் காணப்பட்டதைப் போல, இந்தத் துறைகளில் இந்தியா விரைவாக மாற்றத்தை ஏற்படுத்த முடியும் என்பதை நிரூபித்துள்ளது.


இந்த வாய்ப்பைப் பயன்படுத்திக் கொள்ள, அரசாங்கம் இந்தத் துறைக்கு ஒரு நியாயமான ஒழுங்குமுறை ஆணையமாகச் செயல்பட வேண்டும். மேலும் தொழில்துறை அதன் மூலதன முதலீடுகளைத் திட்டமிட தெளிவான, கடுமையான குறுகிய, நடுத்தர மற்றும் நீண்டகால கார்பன் உமிழ்வு இலக்குகளை நிர்ணயிக்க வேண்டும். இதில் கார்பன் விலை நிர்ணய முறையை அறிமுகப்படுத்துவதும் அடங்கும். இது மதிப்புச் சங்கிலி மூலம் பசுமை எஃகு செலவை பரப்புவதற்கான பொருத்தமான வழிமுறையை வழங்கும்.


ஐரோப்பாவில், ஒரு டன் CO2-க்கான கார்பன் விலை 90-100 டாலரை எட்டிய பின்னரே, பூஜ்ஜியத்திற்கு அருகிலான உமிழ்வுத் தொழில்நுட்பங்கள் சாத்தியமானவையாக மாறின. இந்தியா தனது சொந்த கார்பன் உமிழ்வு இலக்குகளை திட்டமிடும்போது இந்த அனுபவத்திலிருந்து கற்றுக்கொள்ளலாம்.


பசுமை எஃகு வகைப்பாடு நன்கு சமூகமயமாக்கப்படுவதையும், பசுமை எஃகுக்கான பொது கொள்முதல் கொள்கை மூலம் உள்நாட்டு சந்தையை உருவாக்குவதையும், பொருத்தமான சான்றிதழ் வழிமுறைகள் மற்றும் லேபிளிங் மூலம் பசுமையான தயாரிப்புகளை மேம்படுத்துவதையும் நாம் காண வேண்டும்.


எஃகு தொழில் ஹைட்ரஜன் அடிப்படையிலான உற்பத்திக்கு மாறும்போது, ​​இயற்கை எரிவாயு ஒரு இடைநிலை எரிபொருளாகச் செயல்படும். எஃகுத் துறைக்கு இயற்கை எரிவாயு கிடைப்பதை அரசாங்கம் ஒரு முன்னுரிமையாகக் கொள்ள வேண்டும். பசுமை மின்சாரம், பசுமை ஹைட்ரஜன் அல்லது இயற்கை எரிவாயுவிற்கான குழாய்கள் அல்லது கைப்பற்றப்பட்ட கார்பன்-டை-ஆக்சைடை வெளியேற்றக் குழாய்களுக்கான உள்கட்டமைப்பை நிறுவனங்களால் சொந்தமாக அமைத்துக்கொள்ள முடியாது. பசுமை எஃகு மேம்பாட்டிற்கான முக்கியப் பகுதிகளில் மையங்களை அரசாங்கம் அமைக்க வேண்டும். இந்த மையங்கள் நிறுவனங்கள் உள்கட்டமைப்புச் செலவுகளைப் பகிர்ந்துகொள்ள அனுமதிக்கும்.


குறைந்த கார்பன் உற்பத்திக்கு சுமார் 30% முதல் 50% வரை அதிக மூலதனம் தேவைப்படுகிறது. இந்தக் கொள்கைகள் இந்திய முன்னுதாரணத்தில் பொருத்தமானவை மற்றும் அவசரமானவையாக ஆக்குகிறது. இந்த மாற்றத்தை சாத்தியமாக்க எஃகு உற்பத்தியாளர்களுக்கு சில நிதி ஆதரவும் தேவைப்படலாம். இந்த மாற்றம் சமமாக இருப்பதை உறுதிசெய்ய சிறிய நிறுவனங்களுக்கு நிச்சயமாக சில கூடுதல் ஆதரவு தேவைப்படும்.


ஒரு இராஜதந்திரக் கட்டாயம் 


பசுமை எஃகு இனி விருப்பத்தேர்வாக இருக்க முடியாது. இது இந்தியாவின் காலநிலை இலக்குகள், பொருளாதார எதிர்காலம் மற்றும் நிலையான தொழில்துறையில் உலகளாவிய தலைமைத்துவத்திற்கு மையமாக உள்ளது. புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாடு, காலநிலை ராஜதந்திரம் மற்றும் சுத்தமான தொழில்நுட்ப அளவீடு ஆகியவற்றில் இந்தியா ஏற்கனவே உலகளாவிய தலைமையை நிரூபித்துள்ளது. இப்போது எஃகுத் துறைதான் அடுத்த எல்லை. இது ஒரு முக்கியமான சோதனையாகவும், ஒரு தனித்துவமான வாய்ப்பாகவும் உள்ளது.


உறுதியான பெருநிறுவன நடவடிக்கையை வலுவான, சந்தைக்கு ஏற்ற கொள்கை கட்டமைப்புடன் இணைப்பதன் மூலம், இந்தியா எஃகு கார்பன் வெளியேற்றத்தைக் குறைக்க முடியும். இது பொருளாதாரப் போட்டித்தன்மையைப் பாதுகாக்கும் மற்றும் உலகளாவிய தொழில்துறை தரங்களை வடிவமைக்க உதவும்.


சஞ்சீவ் பால் எஃகுத் துறையில் ஒரு மூத்த நிபுணர். அவர் முன்பு டாடா ஸ்டீல் நிறுவனத்தில் பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் நிலைத்தன்மைக்கான துணைத் தலைவராக இருந்தார்.


 Original Article : Green steel can shape India’s climate goals trajectory -Sanjiv Paul

Share: