ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் பிரிவு 17A எதை வலியுறுத்துகிறது? அரசியலமைப்புச் சட்டத்தின்படி பிரிவு 17A அனுமதிக்கப்படுகிறதா என்பது குறித்து நீதிமன்றங்கள் ஏன் முரண்பட்ட தீர்ப்பை வழங்கினார்? இது குறித்து உச்சநீதிமன்றத்தின் முந்தைய தீர்ப்புகள் என்ன கூறியுள்ளன? அரசு ஊழியர்களிடையே நிலவும் ஊழலைக் கையாள்வதற்குத் தேவையான அமைப்புரீதியான சீர்திருத்தங்கள் யாவை?
தற்போதைய செய்தி: 1988-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டத்தின் (Prevention of Corruption Act (PCA)) பிரிவு 17A-ன் அரசியலமைப்புச் செல்லுபடித்தன்மை குறித்து உச்சநீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு இருவேறு தீர்ப்பை வழங்கியுள்ளது. இந்த பிரிவு, அரசு ஊழியர் ஒருவர் தனது அலுவல் பணிகளில் செய்ததாகக் கூறப்படும் எந்தவொரு குற்றத்தையும் விசாரிப்பதற்கு முன், அரசாங்கத்திடமிருந்து உரிய முன் அனுமதி பெற வேண்டும்.
1988-ஆம் ஆண்டு ஊழல் தடுப்புச் சட்டம் (Prevention of Corruption Act (PCA)) என்றால் என்ன?
ஒன்றிய அரசு 1962-ஆம் ஆண்டு K. சந்தானம் தலைமையில் ஊழலைத் தடுப்பதற்கான ஒரு குழுவை அமைத்தது. சந்தானம் குழு 1964-ஆம் ஆண்டு தனது அறிக்கையை சமர்ப்பித்தது. இது லஞ்சம் மற்றும் முறைகேடுகளுக்கு எதிரான கடுமையான சட்டங்களுக்கு வழிவகுத்தது. இறுதியில், ஊழல் தொடர்பான அனைத்துப் பிரச்சினைகளையும் கையாள்வதற்காக, 1988-ல் ஊழல் தடுப்புச் சட்டம் (PCA) என்ற முழுமையான சட்டம் இயற்றப்பட்டது.
ஊழல் தடுப்புச் சட்டம், 1988, அரசு ஊழியர்கள் பொதுப் பணிகளைச் செய்யும்போது செய்யும் குற்றங்களுக்கான தண்டனைகளை வழங்குகிறது. 'அரசு ஊழியர்' என்பதில் எந்தவொரு அரசாங்க அல்லது உள்ளாட்சி அதிகார ஊழியர், எந்தவொரு நீதிபதி, எந்தப் பதவியின் காரணமாக பொதுக் கடமையைச் செய்ய வேண்டியுள்ளாரோ அத்தகைய நபர் ஆகியோர் அடங்குவர். 'பொதுக் கடமை' (Public duty) என்பது, அரசாங்கத்திற்கோ, பொதுமக்களுக்கோ அல்லது ஒட்டுமொத்த சமூகத்திற்கோ நலன் உள்ள ஒரு கடமையைக் குறிக்கும். ஊழல் தடுப்புச் சட்டம், 1988-ன் கீழ் தண்டனைக்குரிய குற்றங்களின் வகைகளில் லஞ்சம், பிரதிபலன் இல்லாமல் முறையற்ற ஆதாயம் பெறுதல், குற்றவியல் முறைகேடு போன்றவை அடங்கும்.
பிரிவு 17A என்றால் என்ன?
1988-ஆம் ஆண்டு PCA ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 19, ஒரு பொது ஊழியர்மீது நீதிமன்றத்தில் வழக்குத் தொடருவதற்கு முன்பு, அரசாங்கத்திடமிருந்து முன் அனுமதியைப் பெற வேண்டும். இருப்பினும், வேண்டுமென்றே செய்யப்படும் ஊழலுக்கும், தவறாக நடக்கக்கூடிய நல்லெண்ணத்தில் எடுக்கப்பட்ட முடிவுகளுக்கும் இடையில் வேறுபாடு இருக்க வேண்டும் என்று கருதப்பட்டது. தவறான வழக்குத் தொடரப்படும் என்ற அச்சம் காரணமாக அதிகாரிகள் தைரியமான மற்றும் சரியான நேரத்தில் முடிவுகளை எடுக்கத் தயங்குகிறார்கள். இந்தப் பிரச்சினையைத் தீர்க்க, 2018-ஆம் ஆண்டில் ஊழல் தடுப்புச் சட்டத்தில் திருத்தம் மூலம் செய்ததன் நாடாளுமன்றம் பிரிவு 17A-ஐச் சேர்த்தது.
இந்தப் பிரிவின்படி, ஒரு பொது ஊழியர் தனது அலுவல்பூர்வ செயல்பாடு அல்லது கடமைகளை நிறைவேற்றும்போது எடுத்த பரிந்துரை அல்லது முடிவு தொடர்பான எந்தவொரு குற்றத்தையும் விசாரிக்க அல்லது விசாரணை செய்ய, அரசாங்கத்திடமிருந்து முன் அனுமதி பெற வேண்டும்.
முந்தைய தீர்ப்புகள் என்னவாக இருந்தன??
வினீத் நரேன் vs இந்திய ஒன்றியம் (1998) வழக்கில், சில வகை பொது ஊழியர்களுக்கு எதிராக விசாரணையைத் தொடங்குவதற்குமுன் நியமிக்கப்பட்ட அதிகாரியின் முன் அனுமதியை கட்டாயமாக்கும் மத்திய புலனாய்வுப் பிரிவுக்கு (Central Bureau of Investigation (CBI)) வழங்கப்பட்ட 'ஒற்றை வழிகாட்டுதல்' என்று குறிப்பிடப்படும் நிர்வாக உத்தரவை உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. அதைத் தொடர்ந்து, 2003-ஆம் ஆண்டில், CBI-ன் செயல்பாட்டை நிர்வகிக்கும் டெல்லி சிறப்பு காவல் நிறுவனச் சட்டத்தை (Delhi Special Police Establishment Act (DSPE Act)) நாடாளுமன்றம் திருத்தியது. இணைச் செயலாளர் அல்லது அதற்கு மேற்பட்ட பதவியில் உள்ள அதிகாரிகளுக்கு எதிராக எந்தவொரு விசாரணையையும் தொடங்க ஒன்றிய அரசின் முன் அனுமதி தேவை என்று இந்தச் சட்டத்தில் பிரிவு 6A சேர்க்கப்பட்டது. சட்டத்தின் முன் அனைவரும் சமம் என்பதை உறுதிசெய்யும் அரசியலமைப்பின் 14-வது பிரிவை மீறுவதாக இருந்ததால் (equality before law) உச்சநீதிமன்றத்தால் ரத்து செய்யப்பட்டது.
தற்போது வழங்கப்பட்ட முரண்பட்ட தீர்ப்புகள்?
உச்சநீதிமன்றத்தின் ஒரு பிரிவு அமர்வு வழங்கிய தற்போதைய தீர்ப்பு, ஒன்றிய அரசுக்கு எதிராக பொது நல வழக்கு மையம் (Centre for Public Interest Litigation (CPIL)) தாக்கல் செய்த ஒரு பொது நல வழக்கின் (Public Interest Litigation (PIL)) மீதானது ஆகும். நேர்மையான அதிகாரிகளைத் தொந்தரவு தரும் மற்றும் ஆதாரமற்ற புகார்களிலிருந்து பாதுகாப்பதற்காக, விசாரணை தொடங்குவதற்கு முன் அனுமதி பெறுவது அவசியம் என்று நீதிபதி K.V. விஸ்வநாதன் தீர்ப்பளித்தார். அத்தகைய பாதுகாப்பு இல்லாத பட்சத்தில், அதிகாரத்துவம் அதிகப்படியாகப் பாதுகாப்பான வழிகளைப் பின்பற்றத் தொடங்கிவிடும் என்று நீதிபதி எச்சரித்தார். அரசாங்கம் அல்லாமல், ஒரு சுதந்திரமான அமைப்பு ஒப்புதல் அளித்தால்தான் பிரிவு 17A செல்லுபடியாகும் என்றும் அவர் கூறினார். தனது உத்தரவில், பிரிவு 17A-ஐ லோக்பால் மற்றும் லோக் ஆயுக்தாக்கள் (Lokpal and Lokayuktas Act) சட்டம், 2013 உடன் இணைத்த நீதிபதி, ஒன்றிய மற்றும் மாநில அரசு ஊழியர்களுக்கு முறையே லோக்பால் அல்லது லோக் ஆயுக்தாக்களிடமிருந்து ஒரு உறுதிப்படுத்தப்பட்ட கருத்தைப் பெற்ற பின்னரே அரசாங்கம் ஒப்புதல் அளிக்க வேண்டும் என்று தெரிவித்தார்.
மறுபுறம், நீதிபதி பி. வி. நாகரத்னா, பிரிவு 17A அரசியலமைப்பிற்கு முரணானது என்றும், அது நீதிமன்றத்தால் முந்தைய வழக்குகளில் ரத்து செய்யப்பட்ட ‘வித்தியாசமாகவோ தோன்றும் ஒரு சட்டம் அல்லது விதி’ (Old wine in new bottle) போன்றது என்றும் தீர்ப்பளித்தார். சட்டப்பிரிவு 14, சட்டங்கள் வெவ்வேறு வழக்குகளுக்கு இடையே தெளிவாக வேறுபடுத்திக் காட்ட வேண்டும் என்றும், சட்டத்தின் நோக்கத்துடன் நியாயமான தொடர்பு கொண்டிருக்க வேண்டும் என்றும் கோருகிறது. ஆனால், பிரிவு 17A இந்தத் தேவைகளைப் பூர்த்தி செய்யவில்லை என்று அவர் கூறினார். நேர்மையான அதிகாரிகள் மீது வழக்குத் தொடர்வதற்கு முன்பு அரசாங்கத்தின் அனுமதி தேவைப்படும் ஊழல் தடுப்புச் சட்டத்தின் பிரிவு 19-ன் கீழ் அவர்கள் ஏற்கனவே பாதுகாக்கப்படுகிறார்கள் என்றும் நீதிபதி பி. வி. நாகரத்னா கூறினார்.
இந்த விவகாரம் இப்போது முதன்மை அமர்வால் விசாரிக்கப்பட்டு ஒரு தீர்ப்பு வழங்கப்படும். இதற்கிடையில், இரண்டு முறையான சீர்திருத்தங்கள் தேவைப்படுகின்றன. முதலாவதாக, வழக்குகளை விரைவாக முடித்து, ஊழல் தடுப்பு நடவடிக்கையாக செயல்படும் குற்றவாளிகளுக்கு தண்டனைகளை வழங்க வேண்டும். இரண்டாவதாக, தவறான மற்றும் தீங்கிழைக்கும் புகார்களுக்கு (malicious complaints) அபராதம் விதிக்கப்படலாம். இது மக்கள் வழக்கமாகவோ அல்லது தேவையற்ற காரணங்களுக்காகவோ புகார் (habitual and vexatious) அளிப்பதைத் தடுக்கும்.
ஆர். ரங்கராஜன் ஒரு முன்னாள் இந்திய ஆட்சிப் பணி அதிகாரி மற்றும் ‘Courseware on Polity Simplified’ என்ற நூலின் ஆசிரியர். இவர் தற்போது இந்திய ஆட்சிப் பணி அகாடமியில் பயிற்சி அளிக்கிறார்.
Original Article : Should corruption charges need prior sanction? -Rangarajan R.