16-வது நிதிக்குழுவின் அறிக்கை -ரோஷ்னி யாதவ்

 


வரவு செலவு அறிக்கையை தாக்கல் செய்தற்கு (பிப்ரவரி 1) அன்று, 16-வது நிதிக்குழுவின் பரிந்துரைகளை அரசாங்கம் ஏற்றுக்கொண்டதாகத் தெரிவித்தார். எனவே, நிதிக்குழு மற்றும் அதன் பரிந்துரைகளைப் பற்றி அறிந்துகொள்வது மிகவும் அவசியமாகிறது.


முக்கிய அம்சங்கள்:


1. நிதிக்குழு என்பது அரசியலமைப்புச் சட்டத்தால் உருவாக்கப்பட்ட ஒரு அமைப்பாகும். இது,  ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே வரிகளைப் பகிர்வது குறித்து முடிவெடுக்கிறது.


2. இந்திய அரசியலமைப்புச் சட்டப்பிரிவு 280(1), குடியரசுத் தலைவர், "இந்த அரசியலமைப்புச் சட்டம் நடைமுறைக்கு வந்த இரண்டு ஆண்டுகளுக்குள், அதன் பிறகு ஒவ்வொரு ஐந்தாவது ஆண்டின் முடிவிலும் அல்லது குடியரசுத் தலைவர் அவசியமாகக் கருதும் அத்தகைய முந்தைய நேரத்திலும்" ஒரு தலைவரையும் நான்கு மற்ற உறுப்பினர்களையும் கொண்ட ஒரு நிதி குழுவை அமைக்க வேண்டும் என்று குறிப்பிடுகிறது.


3. இந்த குழு பின்வரும் விவகாரங்களில் பரிந்துரைகளை வழங்குகிறது:


• ஒன்றிய வரிகளிலிருந்து கிடைக்கும் நிகர வருமானமான 'பிரித்து வழங்கக்கூடிய நிதித் தொகுப்பை' (divisible pool) ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே எவ்வாறு பகிர்ந்தளிப்படுகிறது என்பதே செங்குத்து அதிகாரப் பகிர்வு (vertical devolution) ஆகும்.


• இந்த நிதித்தொகுப்பில் மாநிலங்களின் பங்கை அவற்றுக்கிடையே எவ்வாறு   பகிர்ந்தளிப்படுகிறது என்பதே கிடைமட்டப் பகிர்வு (vertical devolution) ஆகும்.


• இந்தியத் தொகுப்பு நிதியிலிருந்து (Consolidated Fund of India) மாநிலங்களின் வருவாய்க்கான மானிய உதவிகளை நிர்வகிக்க வேண்டிய கொள்கைகள்.


• பொதுவாக ஐந்து ஆண்டுகள் என நிர்ணயிக்கப்பட்ட ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில், அரசாங்கத்தின் மூன்றாம் அடுக்காக உள்ள உள்ளாட்சி அமைப்புகளின் வளங்களுக்குப் பற்றாக்குறையை சரி செய்யும் வகையில், மாநில வருவாயைப் அதிகரிப்பதற்கு என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்.


16-வது நிதிக்குழுவின் பரிந்துரைகள்


1. 16-வது நிதிக்குழு, நிதி ஆயோக்கின் முன்னாள் துணைத் தலைவரான டாக்டர். அரவிந்த் பனகாரியா தலைமையில், 2023 டிசம்பர் 31 அன்று குடியரசுத் தலைவரால் அமைக்கப்பட்டது. இந்தக்குழுவிடம், 2026-ஆம் ஆண்டு ஏப்ரல் 1-ஆம் தேதி தொடங்கி 2031-ஆம் ஆண்டு மார்ச் 31-ஆம் தேதி வரையிலான ஐந்து ஆண்டு காலத்திற்கான தனது பரிந்துரைகளை வழங்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டது.


2. இந்தக்குழு செங்குத்துப் பகிர்வில் (vertical devolution) எந்த மாற்றத்தையும் செய்யவில்லை. பகிர்ந்தளிக்கக்கூடிய நிதித்தொகுப்பில் மாநிலங்களின் பங்கை 41 சதவீதமாகத் தக்கவைத்துள்ளது. இருந்த போதிலும், கிடைமட்டப் பகிர்வைத்  (horizontal devolution) தீர்மானிப்பதில், பயன்படுத்தப்பட வேண்டிய அளவுகோல்கள் மற்றும் மதிப்பீடுகளின் விவகாரத்தில் முந்தைய குழுவிடம் இருந்து இது மாறுபட்டுள்ளது.


3. மாநிலங்களின் பங்கில் ஏற்பட்டுள்ள இந்த மாற்றம், 16-வது நிதிக் குழுவால் ஏற்றுக்கொள்ளப்பட்ட சூத்திரத்தில் ஏற்பட்ட மாற்றத்தால் ஆகும். இது சில புதிய அளவுகோள்கள் உட்பட ஆறு அளவுகோள்களை அடிப்படையாகக் கொண்டது: அவை பின்வருமாறு,


• மக்கள் தொகை (17.5 சதவீத எடை),


• மக்கள்தொகை செயல்திறன் (Demographic performance) (10 சதவீதம்),


• பரப்பளவு (10 சதவீதம்),


• காடுகள் (10 சதவீதம்),


• தனிநபர் மொத்த மாநில உள்நாட்டு உற்பத்தி இடைவெளி (Per capita GSDP distance) (42.5 சதவீதம்) மற்றும்  


• மொத்த உள்நாட்டு உற்பத்திக்கு பங்களிப்புகள் (Contributions to GDP)  (10 சதவீதம்).


4. ’மொத்த உள்நாட்டு உற்பத்தியில் பங்களிப்பு'  (contribution to GDP) என்பதை 10 சதவீத அளவுடன் ஒரு புதிய அளவுகோலாக அறிமுகப்படுத்தியதும், 'பரப்பளவு' அளவுகோலுக்கான அளவை 15 சதவீதத்திலிருந்து 10 சதவீதமாகக் குறைத்ததும், தென்னிந்திய மாநிலங்களுக்குச் சாதகமாக அமைந்திருப்பதாகத் தெரிகிறது.


5. நிதிக் குழு மாநில நிதிகள் போன்ற துறைகளிலும் சில வரவேற்கத்தக்க பரிந்துரைகளை வழங்கியுள்ளது. உதாரணமாக, மாநிலங்கள் வரவுசெலவுத் திட்டத்திற்குப் புறம்பான கடன்களைப் பெறும் நடைமுறையை நிறுத்த வேண்டும் என்றும், அதே நேரத்தில் பற்றாக்குறையை மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (state's gross domestic product (GSDP)) 3 சதவீதமாகக் வைத்திருக்க வேண்டும் என்று நிதிக் குழு வாதிட்டுள்ளது.


6. பொருளாதார ஆய்வறிக்கையிலும் குறிப்பிடப்பட்டுள்ள ‘நிர்வாகச் செலவினங்கள் மூலம் மக்களின் ஆதரவை ஈர்க்கும் அரசியல்’ (fiscal populism) மீதான கவலைகளைக் கருத்தில் கொண்டு, மானியத் திட்டங்களைச் சீரமைக்கவும், தகுதியற்ற தனிப்பட்ட பொருட்களுக்கு மானியம் வழங்கும் திட்டங்கள் மற்றும் நிபந்தனையற்ற நிதிப் பரிமாற்றங்களுக்கான திட்டங்களுக்கு ‘காலவரையறை விதிகளை’ அறிமுகப்படுத்தவும் குழு பரிந்துரைத்துள்ளது.  


7. 16-வது நிதிக்குழு, நாட்டின் மின் விநியோகத் துறையை நவீனமயமாக்குவதற்கும், அதன் நீண்டகால நிதி நெருக்கடியைச் சமாளிப்பதற்கும் ஒரு முக்கிய நடவடிக்கையாக அதைத் தனியார்மயமாக்க வேண்டும் பரிந்துரைத்துள்ளது. தனியார் முதலீட்டாளர்கள் விநியோக நிறுவனங்களைக் கையகப்படுத்திய பிறகு, அவற்றால் பெறப்பட்ட கடன் சுமையிலிருந்து அவர்களைப் பாதுகாப்பதற்கான ஒரு வழிமுறையை உருவாக்குவதன் மூலம் தனியார்மயமாக்கலுக்கு ஊக்கமளிக்க நிதிக்குழு  முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.



8. மின் விநியோக நிறுவனங்களை ஒரு சிறந்த முதலீட்டு வாய்ப்பாக மாற்றுவதற்காக, பெறப்பட்ட அனைத்து நடைமுறை மூலதனக் கடன்கள் மற்றும் பிற சொத்துக்களால் ஆதரிக்கப்படாத கடன்கள் அனைத்தையும் நிறுத்தி வைப்பதற்காக, சிறப்பு நோக்க அமைப்புகளை (special purpose vehicles (SPV)) உருவாக்குமாறு மாநில அரசுகளைக் கேட்டுக்கொள்கிறது.


ஒன்றிய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு வளங்கள் செல்லும் முக்கிய வழிகள்:


ஒன்றிய அரசிடமிருந்து மாநிலங்களுக்கு வளங்கள் செல்லும் மூன்று முக்கிய வழிகள் உள்ளன.


1. முதலாவதாக, அரசியலமைப்பின் பிரிவு 270(1)-ன் கீழ், செஸ் வரிகள், கூடுதல் வரிகள், யூனியன் பிரதேசங்களுக்குச் வழங்க வேண்டிய வரிகள் மற்றும் வசூல் செலவுகள் ஆகியவற்றைத் தவிர்த்து, ஒன்றிய அரசின் வரி வருவாய்கள், நிதிக்குழுவின் பரிந்துரைகளின் அடிப்படையில் ஒன்றிய அரசுக்கும் மாநிலங்களுக்கும் இடையே பகிர்ந்தளிக்கப்டுகின்றன.


2. இரண்டாவதாக, அரசியலமைப்பின் பிரிவு 275(1)-ன் கீழ், மாநிலங்களின் ஒருங்கிணைந்த நிதியங்களுக்குத் (Consolidated Funds of the States) துணையாகச் சில குறிப்பிட்ட மானியங்களை நிதிக்குழு பரிந்துரைக்கிறது.


3. இறுதியாக, அரசியலமைப்பின் பிரிவு 282-ன் கீழ், ஒன்றிய அரசு மாநிலங்களுக்கு   விருப்புரிமை மானியங்களை (discretionary grants) வழங்குகிறது.  முக்கியமாக, இவை ஒன்றிய அரசின் நிதியுதவி பெறும் திட்டங்கள் (Centrally Sponsored Schemes (CSS)) மூலம்  வழங்கப்படுகின்றன.





Share: