ஆந்திரப் பிரதேசம் குறைந்த கருவுறுதல் (low fertility) விகிதம் குறித்து கவலைப்படுகிறது என்றால், சிக்கிம் பல ஆண்டுகளாக இந்தப் பிரச்சினையை எதிர்கொள்கிறது. மேலும், சிக்கிம் இந்தியாவில் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதத்தைக் கொண்டுள்ளது. இது, உலகின் மிகக் குறைந்த கருவுறுதல் சமூகங்களுடன் ஒப்பிடுகையில், ஒரு பெண்ணுக்கு சுமார் 1.1 குழந்தைகள் என்ற விகிதத்தில் உள்ளது.
ஆந்திரப் பிரதேச முதல்வர் என். சந்திரபாபு நாயுடு சமீபத்தில் குறிப்பிட்ட அறிக்கையானது, இரண்டாவது அல்லது மூன்றாவது குழந்தையைப் பெற்ற தம்பதிகளுக்கு ரூ.25,000 ரொக்க ஊக்கத்தொகையை முன்மொழிந்தபோது, அது இந்தியாவின் மக்கள்தொகை எதிர்காலம் குறித்த ஒரு முக்கியமான கேள்வியை மீண்டும் எழுப்பியது. நிதி ஊக்கத்தொகைகளை வழங்குவதன் மூலம் அரசாங்கங்கள் பிறப்பு விகிதத்தை அதிகரிக்க முடியுமா? என்பதுதான் முக்கிய கேள்வியாக உள்ளது. ஆந்திரப் பிரதேசம் இன்று ஒரு பெண்ணுக்கு சுமார் 1.4 என்ற விகிதத்தில் குழந்தைகளின் மொத்த கருவுறுதல் விகிதத்தைப் பதிவு செய்கிறது. இது 2.1 என்ற மாற்று அளவை விடக் கணிசமாகக் குறைவாகும். மக்கள்தொகையில் வயதானவர்களைக் கொண்டு நீண்டகால பொருளாதார விளைவுகள் குறித்து கவலை கொண்ட மாநில அரசு, அதிக குழந்தைகளைப் பெற குடும்பங்களை ஊக்குவிக்கும் வழிகளை அரசு ஆராய்ந்து வருகிறது.
தம்பதிகளுக்கு அதிக குழந்தைகளைப் பெற அரசு பணம் செலுத்துவது குறித்த யோசனை துணிச்சலாகத் தோன்றலாம். இருப்பினும், சிக்கிமில் பல ஆண்டுகளாக நடந்துவரும் இதேபோன்ற ஒரு அணுகுமுறையை இந்தியா ஏற்கனவே முயற்சித்துள்ளது. ஆந்திரப் பிரதேசம் குறைந்த கருவுறுதல் குறித்து கவலைப்படுகிறது என்றால், சிக்கிம் சில காலமாக மிகக் குறைந்த கருவுறுதல் நிலையை எதிர்கொண்டு வருகிறது. மேலும் சிக்கிமானது இந்தியாவில் மிகக் குறைந்த கருவுறுதல் விகிதத்தைக் கொண்டுள்ளது. அதன் கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு சுமார் 1.1 குழந்தைகள் ஆகும். இது இந்தியாவிலேயே மிகக் குறைவு மற்றும் உலகிலேயே காணப்படும் மிகக் குறைந்த அளவிற்கு அருகில் உள்ளது. மக்கள்தொகையில் வயதானவர்கள் மற்றும் குறைந்து வரும் பணியாளர்கள் உட்பட இத்தகைய கடுமையான சரிவின் தாக்கங்கள் குறித்து கவலை கொண்ட சிக்கிம் அரசு நடவடிக்கை எடுக்க முடிவு செய்தது.
2022-ம் ஆண்டில், தம்பதிகள் அதிக குழந்தைகளைப் பெற ஊக்குவிப்பதற்காகவே அரசு தொடர்ச்சியாக பல சலுகைகளை அறிமுகப்படுத்தியது. இது எந்தவொரு இந்திய மாநிலமும் முயற்சித்த, மிகவும் விரிவான பிறப்புக்கு முந்தைய கொள்கையாக இருக்கலாம். அரசுப் பணியாளர்களுக்கு, பிரசவத்துடன் நேரடியாக இணைக்கப்பட்ட சம்பள உயர்வுகளை அரசு அறிமுகப்படுத்தியது. மேலும் இரண்டாவது குழந்தை பிறக்கும்போது ஒரு கூடுதல் சம்பள அதிகரிப்பும், மூன்றாவது குழந்தை பெறும்போது பணியாளருக்கு இரண்டு கூடுதல் சம்பள உயர்வு வழங்கப்பட்டன. இந்த திட்டத்தின் பலன் நேரடியானது. குழந்தைகளை வளர்ப்பது குறைந்த செலவில் நடந்தால், குடும்பங்கள் அதிக குழந்தைகளைப் பெறுவது குறித்து அதிக நம்பிக்கையுடன் உணரக்கூடும்.
ஆனால் அந்தக் கொள்கை இன்னும் மிகவும் தொலைவு சென்றது. அரசு ஊழியர்களான பெண்களுக்கு, பிரசவத்திற்குப் பிறகு உதவி செய்ய அரசு நிதியுதவி பெறும் குழந்தை பராமரிப்பு உதவியாளர்கள் (childcare attendants) வழங்கப்பட்டனர். இது, பல வேலை செய்யும் பெண்கள் எதிர்கொள்ளும் தொழில்முறை பொறுப்புகளுக்கும் பெற்றோர்ப்பு பொறுப்புகளுக்கும் இடையே ஏற்படும் முரண்பாட்டைக் குறைப்பதற்காகவே நோக்கமாக இருந்தது. மகப்பேறு விடுப்பு (maternity leave) ஒரு ஆண்டாக நீட்டிக்கப்பட்டது மற்றும் தந்தையாருக்கான விடுப்பு (paternity leave) அறிமுகப்படுத்தப்பட்டது. இதன் மூலம், பெற்றோர் என்பது இருவருக்கும் பகிரப்பட்ட பொறுப்பு என்பதை அங்கீகரித்தது.
இந்த ஊக்கத்தொகை அரசு பணியாளர்களுக்கு மட்டும் அல்ல. தனியார் துறையில் பணிபுரியும் தாய்மார்களுக்கும் இந்த திட்டம் அடங்கும். இரண்டாவது குழந்தை பிறந்து ஒரு வருடத்திற்கு மாதம் ரூ.5,000 மற்றும் மூன்றாவது குழந்தை பிறந்து மாதம் ரூ.10,000 வழங்கப்படும் என்று அரசு உறுதியளித்தது. சிக்கிம் மாநிலத்தின் கொள்கையின் மிகவும் புதுமையான அம்சம் மக்கள்தொகை விவாதங்களில் பெரும்பாலும் புறக்கணிக்கப்படும் ஒரு காரணியான கருவுறாத் தன்மையை (infertility) நிவர்த்தி செய்தது. ஆச்சரியமாக, மாநிலம் இதை நேரடியாகக் கவனிக்க முடிவு செய்தது.
வாத்சல்யா திட்டத்தின் (Vatsalya scheme) கீழ், இயற்கையாகவே கருத்தரிக்க முடியாத தம்பதிகளுக்கு செயற்கை கருத்தரித்தல் (in vitro fertilisation (IVF)F) சிகிச்சைக்கு அரசாங்கம் நிதி உதவி வழங்கியது. செயற்கை கருத்தரித்தல் (IVF) பல லட்ச ரூபாய் செலவாகும். இந்த அதிக செலவு காரணமாக, பல குடும்பங்கள் இதை பயன்படுத்தாத சூழ்நிலை உள்ளது. தகுதியான தம்பதிகளுக்கு இரண்டு செயற்கை கருத்தரித்தல் (IVF) சுழற்சிகள் வரை நிதியளிக்க அரசு முன்வந்தது. இதற்கான பதில் விரைவாக இருந்தது. ஆரம்ப கட்டத்தில் மட்டும், சுமார் 38 பெண்கள் செயற்கை கருத்தரித்தல் (IVF) சிகிச்சைக்காகச் சேர்ந்தனர். இது மாநிலத்தின் பிறப்பு விகிதம் குறைந்து வருவதற்கு கருவுறாத் தன்மை ஒரு முக்கியப் பங்களிப்பாகும் என்பதைக் குறிக்கிறது.
இந்தக் கொள்கைகள் இணைந்து ஒரு பரந்த மற்றும் முழுமையான அணுகுமுறையை உருவாக்கியது. இது நிதி ஊக்கத்தொகைகள், வேலை செய்யும் தாய்மார்களுக்கான குழந்தை பராமரிப்பு ஆதரவு, விரிவாக்கப்பட்ட பெற்றோர் விடுப்பு மற்றும் அரசாங்கத்தால் ஆதரிக்கப்படும் கருவுறுதல் சிகிச்சையை ஆதரித்தது. இருப்பினும் இந்த சலுகைகள் இருந்தபோதிலும், சிக்கிம் மாநிலத்தின் கருவுறுதல் விகிதம் மிகவும் குறைவாகவே உள்ளது மற்றும் எதிர்பார்க்கப்படும் குழந்தை வளர்ச்சி இன்னும் நிறைவேறவில்லை. கருவுறுதல் ஏன் தொடர்ந்து குறைந்து வருகிறது என்பதைப் புரிந்துகொள்ள மாநில அரசு தேசிய ஆராய்ச்சி நிறுவனங்களுடன் இணைந்து பணியாற்றியது. சிக்கிம் மாநிலத்தின் அனுபவம் ஒரு பரந்த உலகளாவிய முறையை பிரதிபலிக்கிறது. உலகெங்கிலும் உள்ள அரசாங்கங்கள் நிதி ஊக்கத்தொகைகள் மற்றும் சமூக நலன்கள் மூலம் பிரசவத்தை ஊக்குவிக்க முயற்சித்தன. இருப்பினும், முடிவுகள் அரிதாகவே எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்துள்ளன
சிங்கப்பூரை எடுத்துக் கொள்ளுங்கள், மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) சுமார் 1.0 ஆகும். இது பத்தாண்டுகளாக, நகர-மாநிலம் தாராளமான குழந்தை ஊக்கத்தொகை (generous baby bonuses), வரி தள்ளுபடிகள், மானிய விலையில் குழந்தை பராமரிப்பு மற்றும் குழந்தைகளைக் கொண்ட குடும்பங்களுக்கு வீட்டுவசதி போன்ற ஊக்கத்தொகைகளை வழங்கி வருகிறது. இந்த நடவடிக்கைகள் இருந்தபோதிலும், அதன் கருவுறுதல் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது மற்றும் உலகிலேயே மிகக் குறைந்த நாடுகளில் ஒன்றாக உள்ளது. பின்னர் தென் கொரியா, மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) சுமார் 0.7 ஆகும். நாடு குழந்தைப் பிறப்புக்கு ஆதரவான திட்டங்களில் மிகப்பெரிய பொது வளங்களை முதலீடு செய்துள்ளது. இதில் அரசாங்கம் பண மானியங்கள், குழந்தை பராமரிப்பு மானியங்கள், வீட்டுவசதி ஆதரவு மற்றும் நீண்ட பெற்றோர் விடுப்பு ஆகியவற்றை வழங்கியுள்ளது. இருப்பினும் கருவுறுதல் விகிதம் தொடர்ந்து குறைந்து வருகிறது. தென் கொரியா உலகளவில் மிகக் குறைந்த பிறப்பு விகிதத்தை கொண்டுள்ளது. ஜப்பான், மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) சுமார் 1.3 என்பதுடன் இதேபோன்ற சிக்கலை எதிர்கொள்கிறது. அதன் கருவுறுதல் விகிதம் மாற்று நிலைக்குக் கீழே உள்ளது.
சீனா கூட, பத்தாண்டுகளாக நீடித்த ஒரு குழந்தைக்கான அணுகுமுறையை கைவிட்ட பிறகு, மொத்த கருவுறுதல் விகிதம் (TFR) சுமார் 1.0 ஆக உள்ளது. அதன் பிறகு, தம்பதிகள் இரண்டு குழந்தைகளையும் பின்னர் மூன்று குழந்தைகளையும் பெற ஊக்குவித்தது. அரசாங்கம் இந்த மாற்றத்தை ஊக்கத்தொகைகள் மற்றும் கொள்கை மாற்றங்களுடன் ஆதரித்தது. இருப்பினும், பிறப்புகளில் எதிர்பார்க்கப்படும் உயர்வு நடக்கவில்லை. பிறப்பு விகிதங்கள் தொடர்ந்து குறைந்து வருகின்றன. வளர்ந்த நாடுகளில், ஹங்கேரி மட்டுமே ஒரு பகுதி வெற்றியாகக் குறிப்பிடப்படுகிறது.
2011 காலகட்டத்தில், ஹங்கேரியின் கருவுறுதல் விகிதம் ஒரு பெண்ணுக்கு சுமார் 1.23 குழந்தைகளாகக் குறைந்தது. வீட்டுவசதி மானியங்கள், குடும்பங்கள் பல குழந்தைகளைப் பெற்ற பிறகு தள்ளுபடி செய்யப்படும் மானியக் கடன்கள் மற்றும் நான்கு அல்லது அதற்கு மேற்பட்ட குழந்தைகளைக் கொண்ட தாய்மார்களுக்கு வாழ்நாள் வருமான வரி விலக்குகள் உள்ளிட்ட ஒரு குடும்ப சார்பு கொள்கையை அரசாங்கம் அறிமுகப்படுத்தியது. அடுத்த பத்தாண்டில், கருவுறுதல் சுமார் 1.55 ஆக உயர்ந்துள்ளது. இருப்பினும், இது இன்னும் 2.1 என்ற மாற்று அளவைவிட மிகக் குறைவாகவே உள்ளது. சில மக்கள்தொகை ஆய்வாளர்கள் இந்த அதிகரிப்பின் ஒரு பகுதி, ஒட்டுமொத்தமாக அதிக குழந்தைகளைப் பெறுவதற்குப் பதிலாக, தம்பதிகள் முன்னதாகவே குழந்தைகளைப் பெறுவதை பிரதிபலிக்கிறது என்று நம்புகிறார்கள். இதற்கான, காரணம் தெளிவாக உள்ளது. குழந்தைகளைப் பெறுவது பற்றிய முடிவுகள் அரிதாகவே நிதி நன்மைகளை மட்டுமே அடிப்படையாகக் கொண்டவை. ஹங்கேரிய அணுகுமுறையை நெருக்கமாக ஆய்வுக்கு உட்படுத்த வேண்டும்.
நவீன சமூகங்களில், கருவுறுதல் சரிவு வலுவான கட்டமைப்பு மாற்றங்களால் இயக்கப்படுகிறது. பெண்கள் தாமதமாக திருமணம் செய்துகொண்டு நீண்ட தொழில் வாழ்க்கையை உருவாக்குவதிலும் கவனம் செலுத்துகிறார்கள். நகர்ப்புற வாழ்க்கை முறைகள் வீட்டுவசதி, கல்வி மற்றும் குழந்தை பராமரிப்புக்கான செலவை அதிகரிக்கின்றன. பல தம்பதிகள் பெரிய குடும்பங்களை வளர்ப்பதைவிட குறைவான குழந்தைகளில் அதிக வளங்களை முதலீடு செய்ய விரும்புகிறார்கள். இதுபோன்ற சூழ்நிலைகளில், ஒரு முறை பணம் செலுத்துதல் அல்லது மாதாந்திர மானியம், தாராளமாக இருந்தாலும்கூட, குடும்பங்கள் எடுக்கும் அடிப்படை முடிவுகளை மாற்றாது.
இதன் பொருள் அரசாங்கங்கள் எதுவும் செய்யக்கூடாது என்பதல்ல. சர்வதேச அனுபவமான, கருவுறுதல் என்பது குடும்ப வாழ்க்கையில் நீண்டகால நம்பிக்கையை விட ஒரு முறை மட்டுமே வழங்கப்படும் நிதி ஊக்கத்தொகை காரணமாக பிறப்பு விகிதங்கள் பெரிதாக அதிகரிப்பதில்லை. சில நாடுகள், பிறப்பு விகிதங்களை உறுதிப்படுத்தியுள்ள, பிரான்ஸ் (France) மற்றும் நார்டிக் நாடுகள் (Nordic countries) போன்றவை இதை வெற்றிகரமாகச் செய்துள்ளன. அவர்கள் குறைவான விலையில் குழந்தை பராமரிப்பு, பெற்றோர்களுக்கு மகப்பேறு விடுப்பு, நெகிழ்வான பணியிடங்கள் மற்றும் வீட்டுவசதி ஆதரவு வழியாக பெற்றோரை நவீன வாழ்க்கையுடன் இணக்கமாக்குவதன் மூலம் அவ்வாறு செய்தன.
இந்த சூழலில் பார்க்கும்போது, ஆந்திரப் பிரதேசத்தின் முன்மொழிவை ஒரு உறுதியான தீர்வாகக் கருதக்கூடாது. இந்தக் கொள்கையானது அணுகுமுறையாகவும் பார்க்க வேண்டும். சிக்கிமின் அனுபவம் ஒரு பயனுள்ள பாடத்தை வழங்குகிறது. மக்கள்தொகை போக்குகள் மெதுவாக ஆனால் சக்திவாய்ந்ததாக நகர்கிறது. இதற்கு அரசாங்கங்கள் ஊக்கத்தொகைகள் மற்றும் மானியங்கள் மூலம் பிரசவத்தை ஊக்குவிக்க முயற்சிக்கலாம், ஆனால் ஒரு குழந்தையை உலகிற்கு கொண்டு வருவதற்கான முடிவு இறுதியில் ஒரு குடும்பத்தின் பொருளாதார எதிர்காலம் மற்றும் சமூக நிலைத்தன்மையில் உள்ள நம்பிக்கையை பிரதிபலிக்கிறது. பணத்தை வழங்குவதன் மூலம் இந்த நம்பிக்கையை உருவாக்க முடியாது.
எஸ்.ஒய். குரைஷி இந்தியாவின் முன்னாள் தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் ”The Population Myth: Islam, Family Planning and Politics in India” என்ற புத்தகத்தின் ஆசிரியர்.
Original article : When the state pays for babies: Some lessons from Sikkim?. -S Y Quraishi