தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்தை (Tribunals Reforms Act) உச்சநீதிமன்றம் ஏன் ரத்து செய்தது? அதன் பொருள் என்ன? -வினீத் பல்லா

இந்த வாரம், தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்தை (Tribunals Reforms Act) உச்சநீதிமன்றம் ரத்து செய்தது. இந்த 2021-ம் ஆண்டு இயற்றப்பட்ட ஒரு சட்டமானது நிர்வாகத்திற்கு அவற்றின் செயல்பாட்டில் அதிக அதிகாரத்தை அளிக்கும் வகையில் தீர்ப்பாயங்களின் செயல்பாட்டை மறுசீரமைக்கிறது. நீதிமன்றம் அதன் முந்தைய தீர்ப்புகளை அனுமதிக்க முடியாத 'சட்டமன்ற மீறல்' (legislative override) என்று அழைத்தது. இதை பற்றி கீழே சுருக்கமான ஒரு பார்வை,


அரசியலமைப்பு கொள்கைகளின் இறுதி தீர்ப்பாளராக நீதித்துறையின் பங்கை உறுதிப்படுத்தும் ஒரு குறிப்பிடத்தக்க தீர்ப்பில், உச்ச நீதிமன்றம் புதன்கிழமை தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டம்-2021 ஐ (Tribunals Reforms Act) ரத்து செய்தது.


நீதிமன்ற தீர்பாயங்களின் சுதந்திரம் மற்றும் நிர்வாகம் தொடர்பாக நீதித்துறைக்கும், நிர்வாகத்திற்கும் இடையிலான நீண்ட சர்ச்சையில் இந்தத் தீர்ப்பு ஒரு முக்கிய தருணமாகும். ஏற்கனவே, அரசியலமைப்பிற்கு முரணானது என்று அறிவிக்கப்பட்ட ஒரு சட்டத்தை நாடாளுமன்றம் மீண்டும் இயற்ற முடியாது என்று நீதிமன்றம் கருதுகிறது.


உச்சநீதிமன்றம் என்ன தீர்ப்பளித்தது?


தீர்ப்பாயங்கள் என்பது, சர்ச்சைகளுக்கு (disputes) விரைவான மற்றும் சிறப்புத் தீர்வை வழங்குவதற்காக அமைக்கப்பட்ட அரை-நீதித்துறை அமைப்புகளாகும் (quasi-judicial bodies). அவற்றின் நோக்கம் உயர் நீதிமன்றங்களின் பணிச்சுமையைக் குறைப்பதாகும்.


2021-ம் ஆண்டு நிறைவேற்றப்பட்ட தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டம், தீர்ப்பாயங்களின் செயல்பாட்டை மறுசீரமைக்கும் ஒரு சட்டமாகும். இது இந்த அரை-நீதித்துறை அமைப்புகளின் (quasi-judicial bodies) மீது ஒன்றிய அரசுக்கு அதிக கட்டுப்பாட்டை வழங்குகிறது. குறிப்பாக, தீர்ப்பாய உறுப்பினர்களின் நியமனங்கள், பதவிக்காலம் மற்றும் சேவை நிலைமைகள் ஆகியவற்றை உள்ளடக்கியது.


இந்திய தலைமை நீதிபதி பி.ஆர்.கவாய் மற்றும் நீதிபதி கே.வினோத் சந்திரன் ஆகியோர் அடங்கிய இரண்டு நீதிபதிகள் கொண்ட அமர்வு, 2021-ம் ஆண்டு தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டம் (Tribunal Reforms Act) அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்தது. இந்தச் சட்டம் முந்தைய உச்ச நீதிமன்றத் தீர்ப்புகளை மீற முயற்சித்ததாகக் கூறியது. குறிப்பாக, ஜூலை 2021-ல் மெட்ராஸ் வழக்கறிஞர் சங்கம் வழக்கில் (Madras Bar Association (V) case) ஒரு அவசரச் சட்டத்தில் இதே போன்ற விதிகளை ரத்து செய்த தீர்ப்புகளை அனுமதிக்க முடியாத "சட்டமன்ற மீறல்" என்று நீதிமன்றம் கண்டறிந்தது.


நீதிமன்றத்தின் கூற்றுப்படி, இந்தச் சட்டம் "முந்தைய தீர்ப்புகளில் அடையாளம் காணப்பட்ட குறைபாடுகளை நீக்கத் தவறிவிட்டது. அதற்குப் பதிலாக அவற்றை ஒரு புதிய பெயரில் அதே குறைபாடுகளை மீண்டும் கொண்டுவருகிறது”. இதன் காரணமாக, இது "அரசியலமைப்பு மேலாதிக்கக் கோட்பாட்டை மீறுகிறது".


இதன் விளைவாக, தீர்ப்பாய உறுப்பினர்களுக்கு ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை கட்டாயமாக்கும் மற்றும் வழக்கறிஞர்களுக்கான 50 வயதுடையவர்களாக இருக்க வேண்டும் என்ற அதன் முந்தைய தீர்ப்புகளில் வகுக்கப்பட்ட கொள்கைகள், அனைத்து நியமனங்களையும் தொடர்ந்து நிர்வகிக்கும் என்று நீதிமன்றம் உத்தரவிட்டது. நீதிமன்றம் பல ஆண்டுகளாக பரிந்துரைத்து வரும் தீர்ப்பாயங்களின் நியமனங்கள் மற்றும் செயல்பாட்டை மேற்பார்வையிட ஒரு சுதந்திர அமைப்பான தேசிய தீர்ப்பாய ஆணையத்தை (National Tribunals Commission) நான்கு மாதங்களுக்குள் நிறுவவும் ஒன்றிய அரசுக்கு உத்தரவிட்டது.


தீர்ப்பாயங்கள் தொடர்பான நீண்டகால மோதல்


இந்தத் தீர்ப்பு 2017-ல் தொடங்கிய சட்டமன்றத்திற்கும் நீதித்துறைக்கும் இடையிலான நீண்ட சர்ச்சையின் சமீபத்திய பகுதியாகும். இதே ஆண்டின் நிதிச் சட்டம், தீர்ப்பாயங்களுக்கான விதிகளை உருவாக்கும் அதிகாரத்தை ஒன்றிய அரசுக்கு வழங்கியது. 2019 ரோஜர் மேத்யூ வழக்கில் ஒரு அரசியலமைப்பு அமர்வு இந்த விதிகளை ரத்து செய்தது. இந்த விதிகள் நீதித்துறை சுதந்திரத்தை பலவீனப்படுத்தியதாக நீதிமன்றம் கூறியது.


2020-ம் ஆண்டு ஒன்றிய அரசு புதிய விதிகளை அறிவித்தபோது, ​​மெட்ராஸ் வழக்கறிஞர் சங்கம் (Madras Bar Association) அவற்றை எதிர்த்து, சவால் செய்தது. இந்த வழக்கின் மீதான தீர்ப்பில், உச்சநீதிமன்றம் இந்தக் கொள்கைகளை மீண்டும் வலியுறுத்தி, ஐந்து ஆண்டு பதவிக்காலத்தை பரிந்துரைத்தது.


இருப்பினும், பின்னர் ஒன்றிய அரசு ஏப்ரல் 2021-ல் ஒரு அவசரச் சட்டத்தை பிறப்பித்தது. இது பதவிக்காலத்தை நான்கு ஆண்டுகளாக நிர்ணயித்து குறைந்தபட்ச நியமன வயதை 50-ஆக நிர்ணயித்தது. ஆனால், மூன்று மாதங்களுக்குப் பிறகு நீதிமன்றம் இந்த அவசரச் சட்டத்தை "தன்னிச்சையானது" என்று ரத்து செய்யப்பட்டது. நேரடி சட்டமன்ற பதிலில், நாடாளுமன்றம் ஒரு மாதத்திற்குப் பிறகு தீர்ப்பாய சீர்திருத்தச் சட்டத்தை நிறைவேற்றியது. நீதிமன்றம் அரசியலமைப்பிற்கு விரோதமானது என்று அறிவித்த அதே விதிகளை மீண்டும் அமல்படுத்தியது. இது தற்போதைய சவாலுக்கு வழிவகுத்தது.


முப்பதாண்டுகளுக்கும் மேலாக, உச்சநீதிமன்றம் ஒன்பது முக்கியத் தீர்ப்புகளை வழங்கியுள்ளது. 1987-ம் ஆண்டு எஸ்.பி. சம்பத் குமார் வழக்கு தொடங்கி 2021-ம் ஆண்டு தீர்ப்பு வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இவை தீர்ப்பாயங்களின் சுதந்திரத்தில் கூட்டாக ஒரு வலுவான நீதித்துறையை உருவாக்கியுள்ளன. இந்த முடிவுகளின் மூலம், நீதிமன்றம் பிணைப்பு அரசியலமைப்புக் கொள்கைகளின் தொகுப்பை வகுத்துள்ளது. தீர்ப்பாயங்கள் அவற்றை ஆதரிக்கும் துறைகளிலிருந்து சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று அது கூறியது. தேர்வுக் குழுக்கள் (selection committees) நிர்வாகத்திலிருந்து சுதந்திரத்தை உறுதிசெய்ய நீதித்துறை முதன்மையைக் கொண்டிருக்க வேண்டும். அதன் உறுப்பினர்கள் பாதுகாப்பான மற்றும் போதுமான நீண்ட பதவிக்காலம் (குறைந்தது ஐந்து ஆண்டுகள்) கொண்டிருக்க வேண்டும் மற்றும் தீர்ப்பாயங்கள் மீது உயர்நீதிமன்றங்களின் நீதித்துறை மறுஆய்வு (judicial review) அதிகாரம் அரசியலமைப்பின் அடிப்படை கட்டமைப்பின் ஒரு பகுதியாகும் என்று கூறியது.


சட்டம் ஏன் ரத்து செய்யப்பட்டது?


சட்டத்தை நிராகரிப்பதற்கான மூன்று முக்கியக் காரணங்களை நீதிமன்ற அமர்வு வழங்கியது. முதலாவதாக, இந்த விஷயத்தை ஒரு பெரிய அமர்வுக்கு பரிந்துரைக்க வேண்டும் என்ற ஒன்றிய அரசின் கடைசி நிமிட கோரிக்கையை அது தள்ளுபடி செய்தது. சம்பந்தப்பட்ட அரசியலமைப்பு கேள்விகள் ஏற்கனவே முந்தைய வழக்குகளில் "அரசியலமைப்பு அமர்வுகளால் விரிவாக ஆராயப்பட்டுள்ளன" என்றும், தற்போதைய வழக்கு "எந்தவொரு புதிய அல்லது தீர்க்கப்படாத அரசியலமைப்பு கேள்வியையும் முன்வைக்கவில்லை" என்றும் நீதிமன்றம் குறிப்பிட்டது.


நீதிமன்றம் இந்தக் கோரிக்கையை தாமதப்படுத்தும் தந்திரம் என்று அழைத்தது. தீர்ப்பை ஒத்திவைப்பது "இந்த நிச்சயமற்றத் தன்மையை நீட்டிக்கும், இது வழக்குத் தொடுப்பவர்களுக்கும் நீதி நிர்வாகத்திற்கும் தீங்கு விளைவிக்கும்" என்று கூறியது.


இரண்டாவதாக, புதிய சட்டத்தை இயற்றுவதன் மூலம் நாடாளுமன்றம் ஒரு நீதித்துறை தீர்ப்பை சாதாரணமாக ரத்து செய்ய முடியாது என்று நீதிமன்றம் கூறியது. இதன் தொடர்ச்சியாக தீர்ப்புகளை மேற்கோள்காட்டி, நீதிமன்றத்தால் சுட்டிக்காட்டப்பட்ட "குறைபாட்டை சரிசெய்ய" (cure the defect) சட்டமன்றம் ஒரு சட்டத்தை இயற்ற முடியும் என்றாலும், "ஏற்கனவே ரத்து செய்யப்பட்ட ஒரு விதியை மீண்டும் எழுதவோ அல்லது மீண்டும் உருவாக்கவோ முடியாது" என்று அது விளக்கியது. 2021 சட்டம் 2021 அவசரச் சட்டத்தில் ரத்து செய்யப்பட்ட விதிகளின் "அப்படியே மீண்டும் கூறப்பட்டது” (verbatim reprise) என்றும் எனவே "அனுமதிக்க முடியாத சட்டமன்ற மீறல்" என்றும் நீதிமன்றம் கண்டறிந்தது.

மூன்றாவதாக, உறுப்பினர்களின் பதவிக்காலம் மற்றும் வயது ஆகியவை நீதித்துறை மறுஆய்வின் (judicial review) எல்லைக்கு அப்பாற்பட்ட "தூய்மையான கொள்கையின்" விஷயங்கள் என்ற அரசாங்கத்தின் வாதத்தை அது நிராகரித்தது. நீதிமன்றம் தூய கொள்கை முடிவுகளில் தலையிடவில்லை என்றாலும், தீர்ப்பாயங்களின் சுதந்திரம் அரசியலமைப்பு கொள்கையின் ஒரு விஷயம் என்று நீதிமன்றம் விளக்கியது.


அரசியலமைப்பு மற்றும் அதிகாரங்களைப் பிரிப்பு கோட்பாட்டிலிருந்து பிரித்தெடுக்கப்பட்ட நியமனங்களில் நீதித்துறை முதன்மை, உறுப்பினர்களுக்கான பதவிக்காலப் பாதுகாப்பு மற்றும் நிர்வாகக் கட்டுப்பாட்டிலிருந்து சுதந்திரம் ஆகிய இந்தக் கொள்கைகள், "சுருக்கமான நீதித்துறை விருப்பங்கள் அல்ல" என்று நீதிமன்றம் கூறியது. ஆனால், தீர்ப்பாயங்கள் தொடர்பான எந்தவொரு சட்டமும் பூர்த்திசெய்ய வேண்டியது "அரசியலமைப்புத் தேவைகள்" என்று நீதிமன்றம் கூறியது.


நீதிமன்றத்தின் மறுப்பு


நீதிமன்ற தீர்ப்புகளைப் பின்பற்ற தொடர்ந்து மறுப்பது, மீண்டும் மீண்டும் தொடரப்படும் மற்றும் தவிர்க்கக்கூடிய வழக்குகளுக்கு வழிவகுத்ததாக நீதிமன்றம் கண்டதற்கு, இந்தத் தீர்ப்பு அரசாங்கத்தைக் கடுமையாகக் கண்டித்தது.


நீதிமன்றம் ஏற்கனவே வகுத்துள்ள தெளிவான கொள்கைகளைப் பின்பற்றுவதற்குப் பதிலாக, சட்டமன்றம் அதே அரசியலமைப்பு தொடர்பான விவாதங்களை மீண்டும் திறக்கும் விதிகளை மீண்டும் கொண்டு வந்தது துரதிர்ஷ்டவசமானது என்று நீதிமன்ற அமர்வு கூறியது. நீதித்துறை அமைப்பு ஏற்கனவே ஏராளமான வழக்குகளை எதிர்கொள்கிறது என்று அது குறிப்பிட்டது. இந்தநேரத்தில், அதே பிரச்சினைகளை மீண்டும் எழுப்புவது மதிப்புமிக்க நீதித்துறையின் நேரத்தை வீணடிக்கிறது என்றும் அது கூறியது. இந்த நேரத்தை முக்கியமான பொது மற்றும் அரசியலமைப்பு விஷயங்களை முடிவு செய்யப் பயன்படுத்தியிருக்கலாம்.


இந்த நிறுவன நிலைப்பாடு காலியிடங்களை நிரப்புவதில் நீண்ட தாமதங்களை ஏற்படுத்தியுள்ளது. எடுத்துக்காட்டாக, டிசம்பர் 2022 முதல் அரசாங்க தரவுகள், தேசிய நிறுவனச் சட்டத் தீர்ப்பாயத்தில் (National Company Law Tribunal) அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 32 ஆக இருந்தபோதிலும், 24 காலியிடங்கள் இருந்தன. ஆயுதப்படைத் தீர்ப்பாயத்திலும் (Armed Forces Tribunal) 24 காலியிடங்கள் இருந்தன, அதே நேரத்தில் அதன் அனுமதிக்கப்பட்ட பணியிடங்கள் 34 ஆகும். இரயில்வே உரிமைகோரல் தீர்ப்பாயத்தில் (Railway Claims Tribunal), துணைத் தலைவர் (நீதித்துறை) பதவிகள் இரண்டும் காலியாக இருந்தன. அதேபோல், கூடுதலாக, 20 நீதித்துறை உறுப்பினர் பதவிகளில் 16 காலியாக இருந்தன.


இந்த தாமதங்கள் தீர்ப்பாயங்களை "கிட்டத்தட்ட செயலிழந்து" விட்டுவிட்டன என்று உச்ச நீதிமன்றம் முன்னர் குறிப்பிட்டுள்ளது. நீதிமன்றத்தின் வழிகாட்டுதலின்படி, ஒரு சுதந்திரமான தேசிய தீர்ப்பாய ஆணையத்தை நிறுவுவது, இந்த முறையான பிரச்சினைக்கு நீண்டகால தீர்வாகக் கருதப்படுகிறது.


இந்தத் தீர்ப்பின் மூலம், இப்போது பொறுப்பு அரசாங்கத்திடம் உள்ளது. அது ஆணையத்தை நிறுவ வேண்டும் அல்லது நீதித்துறையால் நிர்ணயிக்கப்பட்ட அரசியலமைப்பு கட்டமைப்பிற்குள் பொருந்தக்கூடிய ஒரு புதிய சட்டத்தை உருவாக்க வேண்டும்.


Original Article: Why SC struck down the Tribunals Reforms Act and what it means?.


Share: