இந்தியா தனது ஒலிம்பிக் முயற்சியின் ஒரு பகுதியாக அகமதாபாத்தின் விளையாட்டு உள்கட்டமைப்பை முன்னிலைப்படுத்த விரும்புகிறது.
இந்தியா தனது முதல் காமன்வெல்த் விளையாட்டுகளை (Commonwealth Games(CWG)) நடத்திய இருபதாண்டுகளுக்குப் பிறகு, 2030-ம் ஆண்டில் நான்காண்டிற்கொருமுறை நடக்கும் பெருவிழாவின் நூற்றாண்டு விழா பதிப்பை (quadrennial extravaganza’s centenary edition) இந்தியா வரவேற்கும். இந்த நடவடிக்கை இந்தியா ஒரு புகழ்பெற்ற விளையாட்டு தளமாகக் காண விரும்புகிறது என்பதற்கான மற்றொரு தெளிவான அறிகுறியாகும். இதில், அகமதாபாத் நடத்தும் நகரமாகத் (host city) தேர்ந்தெடுக்கும் உத்தியானது, 2036 ஒலிம்பிக்கை அகமதாபாத்தில் நடத்துவதற்கு இந்தியா ஒரு விருப்பக் கடிதத்தை சமர்ப்பித்துள்ளது. இருப்பினும், ஒலிம்பிக் அதன் ஈடுபாட்டையும், பிரம்மாண்டத்தையும் தக்க வைத்துக் கொண்டாலும், காமன்வெல்த் விளையாட்டு (CWG) பல சிக்கல்களை எதிர்கொள்கிறது. காமன்வெல்த் விளையாட்டு ஒரு காலத்தில் பிரிட்டிஷ் பேரரசின் ஏகாதிபத்திய ஒற்றுமையைக் குறிக்கிறது. இன்று, காலனித்துவத்திற்குப் பிந்தைய உலகில் அது பொருத்தமானதாக இருக்க போராடி வருகிறது. இதை நடத்துவதற்கான செலவுகள் தொடர்ந்து அதிகரித்து வருவதால் பல நகரங்கள் வெளியேறிவிட்டன. 2022-ல் பர்மிங்காம் டர்பனை மாற்றியது. ஆஸ்திரேலிய விக்டோரியா மாநிலம் விலகிய பிறகு, கிளாஸ்கோ 2026-ல் களமிறங்கியது. மேலும், கனடா மாகாணமான ஆல்பர்ட்டா பின்வாங்கிய பிறகு அகமதாபாத் இப்போது களமிறங்கியுள்ளது. ஆனால், சில ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவே இந்த போட்டிக்கு அதிக ஆதரவளிக்கவில்லை. 2019-ம் ஆண்டில், அப்போது இந்திய ஒலிம்பிக் சங்கத் தலைவராக இருந்த நரிந்தர் பத்ரா, தனது தனிப்பட்ட திறனில் காமன்வெல்த் விளையாட்டுகளை "தரமற்றது" என்று குறிப்பிட்டார். இந்தியா அதிலிருந்து விலக வேண்டும் என்றும் அவர் கடுமையாக வலியுறுத்தினார். 2010-ம் ஆண்டு இந்தியா விளையாட்டுப் போட்டிகளை நடத்தியபோது, இந்த நிகழ்வு ஊழல் மற்றும் திறமையின்மை தொடர்பான பல குற்றச்சாட்டுகளால் பாதிக்கப்பட்டது.
எனவே, இந்தியா இப்போது என்ன தகுதியைக் காண்கிறது? முதலாவதாக, இது ஒரு மென்மையான சக்தியின் ஒரு முக்கியமான ஊடகமாகச் செயல்படுகிறது. இரண்டாவதாக, நாட்டின் விளையாட்டின் நோக்கங்கள் பன்முகத்தன்மை கொண்டவை. மேலும், அதன் விளையாட்டு வீரர்கள் செயல்திறனில் இந்த வளர்ச்சியைப் பூர்த்தி செய்யவில்லை. இருப்பினும், விளையாட்டின் வெற்றியை விரிவுபடுத்தவும், கிரிக்கெட்டை மட்டும் தாண்டி மற்றவற்றில் முன்னேறவும் ஒரு உண்மையான முயற்சியாகப் பார்க்கப்படுகிறது. இரட்டை ஒலிம்பிக் பதக்கம் வென்ற ஈட்டி எறிதல் வீரர் நீரஜ் சோப்ரா போன்ற உலகத் தரம் வாய்ந்த வீரர்களை இந்தியாவில் வெளிப்படுத்த முடியும். மேலும், முக்கிய விளையாட்டு நிகழ்வுகள், நம் நாட்டில் நடத்தப்படும்போது, ஒரு முழு தலைமுறையையும் ஊக்குவிக்கும் என்ற நம்பிக்கையும் உள்ளது. அவை சிறந்த உள்கட்டமைப்பு மேம்பாட்டிற்கு வழிவகுக்கும். இது விளையாட்டு வீரர்களுக்கு மட்டுமல்ல, பொதுமக்களுக்கும் உதவுகிறது. இருப்பினும், சிக்கல்களும் உள்ளன. விளையாட்டு அடிப்படையில், காமன்வெல்த் விளையாட்டு முக்கியத்துவத்தை இழந்துவிட்டது. கிளாஸ்கோ 2026-ல் 10 துறைகளை மட்டுமே கொண்டிருக்கும். மேலும் பேட்மிண்டன், ஹாக்கி, துப்பாக்கி சுடுதல் மற்றும் கிரிக்கெட் போன்ற விளையாட்டுகள் விலக்கப்பட்டுள்ளன. சர்வதேச தரத்திற்கு பொருந்தக்கூடிய விளையாட்டுகள் மிகக் குறைவு, ஏனெனில் அமெரிக்கா மற்றும் சீனா போன்ற நாடுகள் காமன்வெல்த்தின் ஒரு பகுதியாக இல்லை. கடந்த நான்கு பதிப்புகளில் இந்தியா 61, 66, 64, 101 பதக்கங்களை வென்றுள்ளது. ஆனால் அதைத் தொடர்ந்து வந்த ஒலிம்பிக்கில், ஆறு, ஏழு, இரண்டு மற்றும் ஆறு பதக்கங்களை மட்டுமே பெற்றுள்ளது. இந்தியா வளர்ந்து வரும் ஊக்கமருந்து பிரச்சனையையும் எதிர்கொள்கிறது, இது கவனிக்கப்படாவிட்டால் அதன் நற்பெயருக்கு சேதம் விளைவிக்கும். காமன்வெல்த் விளையாட்டுப் போட்டிகளுக்கான நிதிச் செலவினத்தையும் மனதில் கொள்ள வேண்டும், ஏனெனில் செலவுகள் மிக அதிகமாக இருக்கலாம். எனவே, அகமதாபாத் 2030 வாய்ப்பையும் நம்பிக்கையையும் வழங்குகிறது. இந்தியா தனது தற்போதைய வலிமையைக் காட்டவும், பிரகாசமான விளையாட்டு எதிர்காலத்தை உருவாக்கவும் இதைப் பயன்படுத்தலாம்.