இந்தத் தோல்விக்கான ஒரு காரணம், தண்டனைத் தீர்ப்புடன் இணைந்திருக்கும் களங்கமே (stigma attached) ஆகும். பாரதிய நாகரிக் சுரக்ஷா சன்ஹிதா (BNSS) சட்டத்தின் பிரிவு 294-ன் கீழ் செய்யப்படும் ஒரு வெற்றிகரமான மேற்கொள்ளப்படும் ஒரு குற்ற ஒப்புதல் பேரம், முறையான தண்டனைத் தீர்ப்பையே பெற்றுத் தருகிறது.
இந்தியாவில் தொடர்ந்து தோல்வியடைந்து வரும் குற்ற ஒப்புதல் பேரம் (plea bargaining) பேசும் முறைக்குத் தேவையான சீர்திருத்தங்களை மறுஆய்வு செய்வதற்காக, பலதரப்பட்ட பங்குதாரர்கள் மாநாட்டைக் கூட்ட மத்திய உள்துறை அமைச்சகம் எடுத்த முடிவு பாராட்டத்தக்கது. குற்ற ஒப்புதல் பேரம் (Plea bargaining) என்பது விசாரணைக்கு முந்தைய, பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படும் ஒரு ஒப்பந்தமாகும். இதில் குற்றம் சாட்டப்பட்டவர், குறைந்த குற்றத்தை ஒப்புக்கொள்கிறார் அல்லது குறைக்கப்பட்ட தண்டனையை ஏற்றுக்கொள்கிறார். இது ஏழு ஆண்டுகளுக்கும் குறைவான தண்டனைகளைக் கொண்ட குற்றங்களுக்குப் பொருந்தும்.
பல நாடுகளில், குற்றவியல் நீதி அமைப்பின் மீதான சுமையைக் குறைப்பதற்கான ஒரு முக்கிய வழிமுறையாக இந்த குற்ற ஒப்புதல் பேரம் (Plea bargaining) உள்ளது. இந்தியாவில் குற்ற ஒப்புதல் பேரம் மிகக் குறைந்த அளவில், அதாவது 1 சதவீதத்திற்கும் குறைவாகவே பயன்படுத்தப்படுகிறது. ஆனால் அமெரிக்காவில், ஏறக்குறைய 90-95 சதவீத குற்றவியல் வழக்குகள் குற்ற ஒப்புதல் பேரம் மூலம் தீர்க்கப்படுகின்றன. கனடாவில், இந்த எண்ணிக்கை சுமார் 85-90 சதவீதமாக உள்ளது. ஆஸ்திரேலியாவில், சுமார் 80-90 சதவீத வழக்குகள் இத்தகைய குற்ற ஒப்புதல்களில் முடிவுக்கு வருகின்றன.
2005-ம் ஆண்டின் குற்றவியல் சட்ட (திருத்த) சட்டத்தின் மூலம், குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (Code of Criminal Procedure (CrPC)) குற்ற ஒப்புதல் பேரம் அறிமுகப்படுத்தப்பட்டது. இருப்பினும், வழக்காடுபவர்கள் அதைப் பயன்படுத்தத் தயாராக இல்லை என்பது விரைவில் தெளிவாகியது.
குற்ற ஒப்புதல் பேரம் (plea bargaining) நடைமுறைப்படுத்தப்படாததையும், அது குறித்த அலட்சியத்தையும் சரிசெய்வது குறித்த இரண்டையும் கவனத்தில் கொள்வது முக்கியம். ஏனெனில், நீதிமன்றங்கள் தங்களின் முழு கொள்ளளவையும் கிட்டத்தட்ட எட்டிவிட்டன. தற்போது, 58.8 மில்லியன் வழக்குகள் நிலுவையில் உள்ளன. எனவே, சீர்திருத்தம் தேவைப்படும் பகுதிகளைக் கண்டறியும் இந்த நடவடிக்கை முக்கியத்துவம் வாய்ந்தது. அதிலும் குறிப்பாக புதிய குற்றவியல் சட்டங்கள் குற்ற ஒப்புதல் பேரத்தைச் சீர்திருத்துவதற்கான வாய்ப்பை இழந்துவிட்டதால் இது மேலும் முக்கியத்துவம் பெறுகிறது.
இந்தத் தோல்விக்கு ஒரு முக்கிய காரணம், தண்டனையின் மீதான தீர்ப்பின் களங்கத்துடன் தொடர்புடையது. பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதாவின் (BNSS) பிரிவு 294-ன் கீழ் செய்யப்படும் ஒரு வெற்றிகரமான குற்ற ஒப்புதல் பேரம், முறையான தண்டனைத் தீர்ப்பையே அளிக்கிறது. 2023-ம் ஆண்டுக்கான தேசிய குற்றப் பதிவுப் பணியகத்தின் (National Crime Records Bureau (NCRB)) தரவுகளின்படி, விசாரிக்கப்பட்ட 1.65 கோடி குற்ற வழக்குகளில், 35,889 வழக்குகள் மட்டுமே குற்ற ஒப்புதல் பேரம் மூலம் தீர்க்கப்பட்டன. இதன் விளைவாக, வழக்குகளின் தீர்வு விகிதம் 0.216 சதவீதமாக உள்ளது. குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனைக் குறைப்பு பெறுவதும் நேரடி விடுதலைக்கு வழிவகுக்காது, ஏனெனில் குற்றம் சாட்டப்பட்டவர் குறைக்கப்பட்ட தண்டனையை அனுபவிக்க வேண்டியுள்ளது.
இதற்கு மாறாக, பாரதிய நாகரிக் சுரக்ஷா சம்ஹிதாவின் (BNSS) பிரிவு 359, குற்றங்களை "சமரசமாக்குவதற்கு" வழிவகை செய்கிறது. இது, பாதிக்கப்பட்டவர்களும் குற்றம் சாட்டப்பட்ட தரப்பினரும் விசாரணையைத் தவிர்ப்பதற்காக, குறிப்பிட்ட சிறிய குற்றங்களைச் சமரசம் செய்துகொள்ள அனுமதிக்கிறது. சமரசமாக்குதல் (settlement) என்பது ஒரு முறையான தீர்வு போலச் செயல்பட்டு, குற்றம் சாட்டப்பட்டவர் விடுதலையாவதற்கு வழிவகுக்கிறது. எனவே, சமரசமாக்குதல் முறையானது, குற்ற ஒப்புதல் பேரத்தின் எதிர்கால வாய்ப்புகளுக்கு ஒரு பெரும் அடியாக அமைந்துள்ளது. குற்ற ஒப்புதல் பேரம் என்ற கருத்தை நடைமுறைப்படுத்த அரசுத் தரப்பு வழக்கறிஞர்கள் போதுமான முயற்சிகளை மேற்கொள்ளவில்லை. மாறாக, அவர்களின் அக்கறையின்மையும், பயிற்சி மற்றும் நிபுணத்துவம் இல்லாமையும் குற்ற ஒப்புதல் பேரம் பேசும் முறையை கணிசமாகப் பலவீனப்படுத்தியுள்ளன.
முன்மொழியப்பட்ட இந்த மாநாடு, பொறுப்பான அதிகாரிகளிடையே இணக்க முறைகளையும் பொறுப்புணர்வையும் நிறுவுவதன் மூலம், குற்ற ஒப்புதல் பேரம் பேசும் முறையின் பயன்பாடுகளை இன்னும் சற்று கடுமையாக்க முடியும். சமரசம் மற்றும் குற்ற ஒப்புதல் பேரம் ஆகிய வழக்குகளில் உள்ள முரண்பாடான சூழ்நிலையைச் சமன் செய்ய வேண்டிய அவசியம் உள்ளது. சமரசம் செய்வதன் மூலம் விடுதலை கிடைப்பதால், குற்ற ஒப்புதல் பேரம் அவ்வளவு ஈடுபாடு உள்ளதாக இல்லை என்ற ஒரு கருத்து நிலவுகிறது. இது தொடர்பாக வழிகாட்டுதல்கள் உருவாக்கப்பட வேண்டும். ஒரு வழிகாட்டப்பட்ட செயல்முறை, கிடைக்கக்கூடிய தேர்வுகள் ஒன்றுக்கொன்று முரண்படாமல் இருப்பதை உறுதி செய்யும்.
அதிக தண்டனையை பெறும் விகிதங்களில் அல்லாமல், குற்ற ஒப்புதல் பேரம் பேசும் வழக்குகளைத் திறம்படவும் தரமாகவும் தீர்ப்பதில் ஆர்வம் கொண்ட ஒரு பேச்சுவார்த்தை நடத்தும் அரசு வழக்கறிஞர் விரும்பத்தக்கவர் ஆவர். கனடியன் மாதிரி (Canadian model) இதற்கு ஒரு நல்ல எடுத்துக்காட்டு. விசாரணைக் கைதிகளில் பெரும்பான்மையினரைப் பிரதிநிதித்துவப்படுத்தும் சட்ட உதவி வழக்கறிஞர்களுக்குக் கட்டாயப் பயிற்சி இந்த சீர்திருத்தத்துடன் இணைக்கப்பட வேண்டும். இந்த நடவடிக்கைகள் அனைத்திற்கும் முழுமையான நீதித்துறை மதிப்பீடு தேவைப்படுகிறது. இரு தரப்பினரும் ஒரு சமரசத்திற்கு ஒப்புக்கொண்டாலும் இது அவசியமாகும். இது தொடர்புடைய உண்மைகள் நிரூபிக்கப்படுவதையும் நீதிபதி உறுதிசெய்து, தண்டனை வரம்பிற்குள் வரும் ஒரு தண்டனையை நீதிபதி விதிக்க வேண்டும்.
உயர்நீதிமன்றத்தின் ஓர் உத்தரவு, சட்டத் திருத்தம் ஏதுமின்றி இவை அனைத்தையும் செயல்படுத்துவதை உறுதிசெய்யும். குற்ற வகை, அதன் விளைவு மற்றும் தீர்வுக்கான கால அளவு ஆகியவற்றின் அடிப்படையில் பிரிக்கப்பட்ட, மாதாந்திர மாவட்ட அளவிலான அறிக்கையிடலைக் கோரும் உயர்நீதிமன்றத்தால் கட்டளையிடப்பட்ட தரவுப் பலகையானது, தற்போது குற்ற ஒப்புதல் பேரம் பேசுதலில் இல்லாத பொறுப்புணர்வு செயல்முறையை உருவாக்கும். மேலும், மாவட்ட நீதிமன்றங்களுக்குப் பயிற்சி பெற்ற ஒருங்கிணைப்பாளர், சட்ட உதவி அதிகாரி மற்றும் பாதிக்கப்பட்டோர் தொடர்பு அலுவலருடன் கூடிய ஒரு தனிப்பட்ட குற்ற ஒப்புதல் பேரம் பேசும் நடுநிலைப் பிரிவு (mediation cell) தேவைப்படுகிறது.
இரண்டு நடவடிக்கைகள் மூலம் குற்ற ஒப்புதல் பேரத்தை, மேலும் ஈடுபாடுடையதாக மாற்றலாம். ஒன்று, சிறைவாசத்தின் விளைவுகளால் எழும் எந்தவொரு தகுதியிழப்பையும் நீக்குவதன் மூலம், குற்ற ஒப்புதல் பேரத்தில் இணைக்கப்பட்டுள்ள தண்டனையை களங்கமற்றதாக மாற்றலாம். இரண்டாவதாக, பேச்சுவார்த்தை மூலம் எட்டப்பட்ட குற்ற ஒப்புதலின் விளைவுகளில் ஒன்றாக விடுதலையை அறிமுகப்படுத்தலாம். குற்ற ஒப்புதல் பேரத்தின் மூலம் வரும் கைதிகள், பிணை, தண்டனைக் குறைப்பு மற்றும் பிந்தைய கவனிப்பு போன்ற நடவடிக்கைகளுக்குச் சாதகமாகப் பரிசீலிக்கப்படலாம்.
கட்டுரையாளர், டெல்லி தேசிய சட்டப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தர் ஆவார்.
Original Link: Plea bargaining, a reform new criminal laws missed