கல்வி உரிமை சட்டம் (Right to Education Act) 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு மட்டுமே இலவச மற்றும் கட்டாயக் கல்வியை உறுதி செய்கிறது. பள்ளிக்குச் செல்லவில்லை என்று புகாரளித்த குழந்தைகளில் கணிசமான எண்ணிக்கையிலானோர் 14 வயது வரம்பை மீறியிருக்கலாம்.
குழந்தைகளுக்கான சட்ட நடவடிக்கை மற்றும் நடத்தை மாற்ற மையம் (Centre for Legal Action and Behaviour Change for Children (C-LAB)) மற்றும் அவுட்லைன் இந்தியா ஆகிய நிறுவனங்கள் 2025-ஆம் ஆண்டு நடத்திய ஓர் ஆய்வில், அசாம், பீகார், கர்நாடகா, மகாராஷ்டிரா மற்றும் ராஜஸ்தான் ஆகிய ஐந்து மாநிலங்களில் உள்ள 757 ஊரக பகுதிகளில் 10,474 சிறுமிகள் பள்ளிக்குச் செல்லவில்லை என்பது கண்டறியப்பட்டுள்ளது. 6 முதல் 18 வயதுக்குட்பட்ட 5,781 மாணவிகள் பள்ளிக்குச் செல்லாத நிலையில், பீகார் மாநிலத்தில்தான் பள்ளிக்குச் செல்லாத மாணவிகளின் எண்ணிக்கை அதிகமாக உள்ளது. அதைத் தொடர்ந்து ராஜஸ்தான் (1,627), அசாம் (1,127), கர்நாடகா (1,051) மற்றும் மகாராஷ்டிரா (888) ஆகிய மாநிலங்கள் உள்ளன.
அனைவருக்கும் கல்வி வழங்குவதில் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவது ஒரு பெரிய தடையாக இருந்து வருகிறது. இது இரு பாலினத்தவரையும் பாதிக்கிறது; சமீபத்திய ஆதாரங்கள் பெண்களைவிட அதிக சிறுவர்கள் பள்ளியிலிருந்து விலகுவதைக் காட்டுகின்றன. இது குழந்தைகளின் எதிர்கால வேலைவாய்ப்பு வாய்ப்புகள், அறிவுசார் வளர்ச்சி மற்றும் ஒட்டுமொத்த மேம்பாடு போன்றவற்றை பலவீனப்படுத்துவது மட்டுமல்லாமல், அவர்களை குழந்தை தொழிலார்கள் மற்றும் பிற பாதிப்புகளுக்கும் ஆளாக்குகிறது. பெண்களைப் பொறுத்தவரை, இது அவர்களின் கண்ணியம், சுயநிர்ணய உரிமை மற்றும் இனப்பெருக்க சுகாதாரத் தேர்வுகளைப் பாதிக்கிறது. பள்ளிப்படிப்பை பாதியிலேயே நிறுத்துவது பொருளாதார முன்னேற்றத்திற்கும், நிலையான வளர்ச்சிப் பாதைகளுக்கும் தடையாக அமைகிறது.
கல்வி உரிமைச் சட்டம் (Right to Education (RTE)) பல ஆண்டுகளாக அமலில் இருந்தும், ஐந்து மாநிலங்களில் இந்தப் பிரச்சினை ஒரு தொடர்ச்சியான பிரச்சினையாகவே உள்ளது. U-DISE தரவுகளுடன் தரவுகளுடன் ஒப்பிட்டு மேற்கொள்ளப்பட்ட இந்த அறிக்கை, தொடக்கப் பள்ளி (வகுப்புகள் 1-5) மற்றும் நடுநிலைப் பள்ளி (வகுப்புகள் 6-8) நிலைகளை விட, உயர்நிலைப் பள்ளி (வகுப்புகள் 9-10) மற்றும் மேல்நிலைப் பள்ளி (வகுப்புகள் 11-12) நிலைகளில் பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துவதும் விகிதங்கள் அதிகமாக இருப்பதாகத் தெரிவிக்கிறது.
கல்வி உரிமைச் சட்டம் 14 வயது வரையிலான குழந்தைகளுக்கு மட்டுமே இலவச மற்றும் கட்டாயக் கல்வியை உறுதி செய்கிறது. பள்ளிக்குச் செல்லவில்லை என்று புகாரளித்த குழந்தைகளில் கணிசமான எண்ணிக்கையிலானோர் 14 வயது வரம்பை மீறியிருக்கலாம். மேலும், 14 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளுக்கு இலவச மற்றும் கட்டாயக் கல்வியை வழங்குவதற்கு குறிப்பிட்ட அரசுத் திட்டம் அல்லது ஒழுங்குமுறை கட்டமைப்பு எதுவும் இல்லை. இது அவர்களை, குறிப்பாகப் பெண்களை, பல்வேறு வகையான சுரண்டல்களுக்கும், குழந்தைத் திருமணத்திற்கும் ஆளாகக்கூடியவர்களாக ஆக்குகிறது.
பீகாரின் மாநிலத்தின் நிலை மற்ற மாநிலங்களை சற்று வேறுபாடானது. அந்த மாநிலத்தில் பெண்கள் மிகவும் முன்னதாகவே பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்துகின்றனர் - உயர்நிலைப் பள்ளியில் 6.6 சதவீதமும், உயர்நிலைப் பள்ளியில் 6.8 சதவீதமும் நிறுத்தும் அளவு உள்ளது. மேல் தொடக்கப் பள்ளிக் கல்வி மட்டத்தில் ஏன் அதிக மாணவர்கள் பள்ளியை விட்டு வெளியேறுகிறார்கள் என்பதைக் கண்டறிய, ஒரு ஆழமான பகுப்பாய்வு தேவைப்படுகிறது.
மேலும், U-DISE தரவுகள் 2019 மற்றும் 2025ஆம் ஆண்டிற்கு இடையில் அரசுப் பள்ளிகளின் எண்ணிக்கையில் குறிப்பிடத்தக்க சரிவைக் குறிக்கின்றன. இது பள்ளிகளின் இணைப்புகள் அல்லது மூடல்கள் காரணமாக இருக்கலாம். மதிப்பிடப்பட்ட 32,500 பள்ளிகள் மூடப்பட்டன (23,000) அல்லது இணைக்கப்பட்டன (9,500), இது சுமார் 5.3 லட்சம் குழந்தைகளை பாதித்தது மற்றும் சேர்க்கையில் 7.2 சதவீத வீழ்ச்சிக்கு பங்களித்தது. பள்ளி மூடல்/இணைப்பு வசிப்பிடத்திற்கும் பள்ளிகளுக்கும் இடையிலான தூரத்தை கணிசமாக அதிகரிக்கக்கூடும், இது RTE சட்டத்தில் பரிந்துரைக்கப்பட்ட விதிமுறைகளை மீறுகிறது. இது குழந்தைகளின் பள்ளிப்படிப்பு அணுகலையும் பாதிக்கிறது.
பள்ளிக்குச் செல்வதற்கான தடைகள் சிக்கலானவையாகவும் சுவாரஸ்யமானவையாகவும் உள்ளன. சமூக-கலாச்சார காரணிகளில், குழந்தைத் திருமணம் என்பது பள்ளிக்குச் செல்லாததற்கு ஒரு முக்கிய காரணமாக இன்றும் இருந்து வருகிறது. குழந்தைத் திருமணம் என்பது பீகார், அசாம் மற்றும் ராஜஸ்தான் மாநிலங்களில் நீண்டகாலமாக நிலவிவரும் ஒரு சமூகப் பிரச்சனையாகும். 2022 மற்றும் 2025-க்கு இடையில் இத்தகைய நிகழ்வுகள் குறைந்திருந்தாலும், இது இன்னும் சாதாரணமாகவே காணப்படுகிறது. மேலும், இது பெரும்பாலும் சிறுமிகள் பள்ளியை விட்டு வெளியேற காரணமாகிறது.
மோசமான பொருளாதார நிலைமைகள், போதுமான உள்கட்டமைப்பு இல்லாமை, பாதுகாப்பு கவலைகள், கலாச்சார விதிமுறைகள்/களங்கம், போக்குவரத்து பற்றாக்குறை மற்றும் பிற காரணிகள் உட்பட பள்ளிக்குச் செல்லாததற்கு பல பரந்த காரணங்களை இந்த ஆய்வு அடையாளம் கண்டுள்ளது.
பள்ளிப் படிப்பை பாதியில் நிறுத்தும் பிரச்சினையைத் தீர்ப்பதற்கும், இந்தியாவில் பள்ளி கல்வியை அனைவருக்கும் கிடைக்கச் செய்வதற்கும் அந்த அறிக்கை பல பரிந்துரைகளை முன்வைத்தது. அரசாங்கத்திற்கும் குடிமைச் சமூகத்திற்கும் இடையிலான ஒத்துழைப்பின் மூலம் நிலைநிறுத்தப்படும் பன்முகத் தலையீடுகளைச் செயல்படுத்துவது மிகவும் முக்கியம். மேலும், அனைத்துக் குழந்தைகளுக்கும் கல்வி கிடைப்பதை உறுதி செய்வதற்கு, இலவச மற்றும் கட்டாயக் கல்வி உரிமைச் சட்டத்தை ((Right to Education (RTE))) திறம்படச் செயல்படுத்துவது முக்கியமான நடவடிக்கையாகும். பெண் குழந்தைகளுக்கான கல்வியை மேம்படுத்துவதற்கும், குழந்தை திருமணங்களைத் தடுப்பதற்கும், 18 வயது வரை அல்லது மேல்நிலைப் பள்ளிப் படிப்பு முடியும் வரை பெண் குழந்தைகளை உள்ளடக்கும் வகையில் கல்வி உரிமைச் சட்டத்தில் தேவையான திருத்தங்களை மேற்கொள்வது மிகவும் முக்கியம். கூடுதலாக, பள்ளி இடைநிற்றல் விகிதங்களைக் கையாள்வதற்காகப் பெண் குழந்தைகளுக்கான இலக்கு சார்ந்த தக்கவைப்புத் திட்டங்களைச் செயல்படுத்துவதும், பள்ளிப் படிப்பை நிறைவு செய்வதை ஊக்குவிப்பதற்காக உதவித்தொகைத் திட்டங்களைச் செயல்படுத்துவதும் மிகவும் முக்கியம்.
எழுத்தாளர் புது டெல்லியில் உள்ள இந்திய சமூக நிறுவனத்தில் உதவிப் பேராசிரியராகப் பணியாற்றுகிறார்.
Original link:
How – and why – the Right to Education ends too early for girls in India.