செயல்படாத INO-வும் செயல்படவிருக்கும் JUNO-வும் -வாசுதேவன் முகுந்த்



INO : இந்தியாவை தளமாகக் கொண்ட நியூட்ரினோ ஆய்வகம் - India-based Neutrino Observatory 


JUNO : ஜியாங்மென் நிலத்தடி நியூட்ரினோ ஆய்வகம் - Jiangmen Underground Neutrino Observatory


முந்தைய பத்தாண்டுகளில், ஒரு முக்கியமான அறிவியல் மர்மத்தை (scientific mystery) உடைக்க உதவும் திறனை இந்தியா கொண்டிருந்தது. ஆனால், இப்போது சீனா முன்னேறியுள்ளது


சீனா தனது, ஜியாங்மென் நிலத்தடி நியூட்ரினோ ஆய்வகத்தை (Jiangmen Underground Neutrino Observatory(JUNO)) கட்டி முடித்துள்ளது. இது இந்தியாவை தளமாகக் கொண்ட நியூட்ரினோ ஆய்வகம் (India-based Neutrino Observatory(INO)) பல ஆண்டுகளாக முடங்கி இருப்பதால் ஒரு கசப்பான தருணமாகும். JUNO மற்றும் INO இரண்டும் நியூட்ரினோக்கள் எனப்படும் துணை அணு துகள்களைப் (subatomic particles) படிக்க வடிவமைக்கப்பட்டுள்ளன. ஏனெனில், நியூட்ரினோக்கள் துணை அணு துகள்கள், அவை அரிதாகவே பொருளுடன் தொடர்பு கொள்வதால் அவற்றைக் கண்டறிவது மிகவும் கடினம். இதனால்தான் INO மற்றும் JUNO இரண்டு ஆய்வகங்களும் மிகப் பெரியவை. அதிக பொருள் நியூட்ரினோக்கள் தொடர்பு கொள்ளும் வாய்ப்புகளை அதிகரிக்கிறது. இதனால் விஞ்ஞானிகள் அவற்றை ஆய்வுசெய்ய அதிக வாய்ப்புகளை வழங்குகின்றன.


ஜூனோவில் (JUNO) முன்னேற்றம்


இருப்பினும், இந்தியாவில் INO-வின் பிரச்சனைகளுக்கு இந்த உணர்வுக் கருவியின் (detector) பெரிய அளவு பங்களிப்பு காரணமாக இருக்கலாம். INO உணர்வுக் கருவி (INO detector) 50 கிலோடன் எடை கொண்டது. இது ஒரு ஆய்வகத்திலோ அல்லது ஏற்கனவே உள்ள இருப்பிடத்திலோ பொருத்த முடியவில்லை. இதனால், தமிழ்நாட்டின் தேனியில் உள்ள ஒரு மலைக்குள் இதை வைக்க INO குழு திட்டமிட்டது. மற்ற ஆராய்ச்சிக்கான வசதிகளும் அங்கு நிறுவப்பட

இருந்தன. மேலும், மலையின் பாறையாந்து உணர்வுக் கருவிகளுக்கு இயற்கையான கேடயமாக செயல்படும். இது ஒரு விலையுயர்ந்த தனி கட்டமைப்பின் தேவையைத் தவிர்த்தது.


இருப்பினும், இந்தப் பகுதியில் கட்டுமான நடவடிக்கைகளின் அளவும், திட்டத்திற்கு நிதியளிக்க உதவிய அணுசக்தித் துறையின் ஈடுபாடும், உள்ளூர் மக்களை கவலையடையச் செய்தன மற்றும் உள்ளூர் தலைவர்கள் அரசியல் ஆதாயம் பெற இதைப் பயன்படுத்தினர். INO-இன் ஒத்துழைப்பானது (பின்னோக்கிப் பார்க்கும்போது) நடைமுறையைப் பின்பற்றாமல், இந்தத் திட்டம் எவ்வளவு பாதிப்புகுள்ளதாக மாறக்கூடும் என்பதை மதிப்பிடாமல் தவறு செய்தது. அவ்வாறு செய்திருந்தால், சில பொதுமக்களின் உணர்வுகளுக்கு சிறப்பாக பதிலளிக்கவும் நிர்வகிக்கவும் உதவியிருக்கும்.


2010-களின் பிற்பகுதியில், சீனா ஜூனோவுடன் விரைவாக முன்னேறி வந்ததால் INO-ன் தாமதங்கள் கவலைக்கிடமாக இருந்தன. உணர்வுக் கருவியை  (detector) இயக்க குறைந்த எண்ணிக்கையிலான மானியங்கள் மற்றும் வெளிநாட்டு முதலீடுகளைப் பெறும் நம்பிக்கையில் INO ஒத்துழைப்பில் சிக்கல் இருந்தது. ஜூனோவை 2020-ம் ஆண்டுக்குள் முடிக்க சீனா திட்டமிட்டது. இருப்பினும், அந்த காலக்கெடு ஐந்து ஆண்டுகள் முன்னதாக இருந்தது. 2025-ஐ இலக்காகக் கொண்டிருந்திருந்தால், INO-க்கு சிறந்த வாய்ப்பு கிடைத்திருக்கலாம். ஏனென்றால் அது இனி ஒரு இறுக்கமான காலக்கெடுவை எதிர்கொள்ளாது. ஒருவேளை அது இன்னும் வெற்றி பெற்றிருக்காது என்றாலும் அது சாத்தியமற்றதாகவும் இருந்திருக்காது.


இன்று, INO திட்டம் முடங்கி இருக்கும் நிலையில், ஜூனோ (JUNO) அதன் முதல் பகுப்பாய்வுகளை வெளியிட்டுள்ளது. நவம்பர் 18 அன்று ஜூனோ குழு இரண்டு முன் அச்சிடப்பட்ட ஆவணங்களை பதிவேற்றியது. ஒன்று "JUNO உணர்வு கருவிகளின் ஆரம்ப செயல்திறன் முடிவுகளை" (initial performance results of the JUNO detector) அறிவித்தது. ஆர்மீனியா, பெல்ஜியம், பிரேசில், சிலி, தைவான், செக் குடியரசு, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இத்தாலி, பாகிஸ்தான், ரஷ்யா, ஸ்லோவாக்கியா, தாய்லாந்து, இங்கிலாந்து மற்றும் அமெரிக்கா ஆகிய நாடுகளைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் பங்கேற்றதன் மூலம், இந்தியா விரும்பிய சர்வதேச ஒத்துழைப்பை எதிர்பார்த்தது என்பதை அதன் நாடுகளின் ஆராய்ச்சியாளர் பட்டியல் வெளிப்படுத்துகிறது.


இந்தியாவிலிருந்து எந்த ஆராய்ச்சியாளர்களும் ஏன் சேர்க்கப்படவில்லை என்பது தெளிவாகத் தெரியவில்லை. விண்வெளி அறிவியல் துறையில் இதேபோன்ற ஒரு பிரச்சினையை பத்திரிகையாளர் ஜதன் மேத்தா குறிப்பிட்டார். 2020-ம் ஆண்டில் சீனா தனது சாங்-இ-5 (Chang’e-5) பயணத்தில் சந்திரனில் இருந்து கொண்டு வந்த பாறைகளை அணுகுவதற்கான பயன்பாடுகளின் (முதல்) பட்டியலில் இந்தியாவைச் சேர்ந்த ஆராய்ச்சியாளர்கள் இல்லாததால் அவர்கள் குறிப்பிடத்தக்கவர்களாக இருந்தனர். நியூட்ரினோ இயற்பியல் மற்றும் சந்திர மாதிரிகளை பகுப்பாய்வு செய்வதில் இந்தியா நீண்ட வரலாற்றைக் கொண்டுள்ளது. மேலும், இந்தத் துறைகளில் பல சிறந்த அறிஞர்களைக் கொண்டுள்ளது.


இரண்டாவது முன் அச்சிடப்பட்ட ஆய்வறிக்கை INO-ன் ஆய்வின் நோக்கத்தை விவரித்தது. நியூட்ரினோக்களைக் கண்டறிவது மிகவும் கடினம் என்றாலும், இயற்பியலாளர்கள் அவை மூன்று வகைகளில் அல்லது நிலைகளில் வருகின்றன என்பதையும், அவை விண்வெளியில் பயணிக்கும்போது இந்த வகைகளுக்கு இடையில் மாறலாம் என்பதையும் கண்டுபிடித்துள்ளனர்.


மூன்று நியூட்ரினோ நிறைகள் எவ்வாறு வரிசைப்படுத்தப்படுகின்றன என்பதைக் கண்டறிவது ஒரு முக்கியமான திறந்த கேள்வியாக, இது நியூட்ரினோ அலைவுகளுடன் தொடர்புடையது. இந்த அலைவுகள் மூன்று கோணங்களால் விவரிக்கப்படுகின்றன. அவை, θ-12 (தீட்டா ஒன்று இரண்டு), θ-13 (தீட்டா ஒன்று மூன்று), மற்றும் θ-23 (தீட்டா இரண்டு மூன்று) ஆகும். முந்தைய சோதனைகள் θ-13 ஐ அளவிட்டன. மேலும், JUNO மற்றும் INO ஆகியவை நியூட்ரினோ நிறை வரிசையை தீர்மானிக்க இந்த முந்தைய வரிசையைப் பயன்படுத்த வடிவமைக்கப்பட்டன. இரண்டாவது ஆய்வறிக்கையில், JUNO ஒத்துழைப்புக்குழு θ-12-ஐ மிகவும் துல்லியமாக அளவிட்டதாக, முந்தைய கண்டுபிடிப்புகளுடன் பரவலாக ஒத்துப்போகும் வகையில் தெரிவித்தது.


இதன் பின்னணியில், உயர் ஆற்றல் இயற்பியல் நிறுவனத்தின் விஞ்ஞானியும், JUNO திட்ட மேலாளரும், செய்தித் தொடர்பாளருமான யிஃபாங் வாங், “இந்த அளவிலான துல்லியத்துடன், ஜூனோ விரைவில் நியூட்ரினோ நிறை வரிசையை தீர்மானிக்கும், மூன்று-நிலை அலைவு கட்டமைப்பை சோதிக்கும், அதைத் தாண்டி புதிய இயற்பியலைத் தேடும்” என்று கூறியிருந்தார்.


உயரும் தடை


INO திட்டக் குழு (சில சமயங்களில்), அதிகாரிகள், அரசியல் தலைவர்கள், சில சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் ஆகியோர் இந்த நீண்ட போராட்டத்தில் நடந்துகொண்ட விதம் பற்றி நாம் விவாதிக்கலாம். ஆனால் இந்தத் துறையில் ஒரு பேருந்தை ஒருமுறை தவறவிட்டால் அடுத்த பேருந்தைப் பிடிக்கலாம் என்று பொருளில்லை; அடுத்த முறை உங்கள் முயற்சிக்கு ஏதாவது பலன் வேண்டுமானால் அது சாதாரண பேருந்தைவிட மிகவும் அதிநவீனமான ஒன்றாக இருக்க வேண்டும் என்று அர்த்தம். கடந்த புத்தாண்டில் இந்தியாவுக்கு ஒரு முக்கியமான அறிவியல் மர்மத்தை உடைக்க உதவும் திறனும் வளங்களும் இருந்தன. ஆனால் JUNO அந்த சவாலை வென்றுவிட்டால், அடுத்த பெரிய மர்மத்தைத் தாக்க இந்தியாவிடம் தேவையான வளங்கள் இருக்காது — ஏனெனில் அது இன்னும் அதிக சிறப்புத் தேவைப்படும், இன்னும் அதிநவீன தொழில்நுட்பங்களை வேண்டி நிற்கும். அப்படியிருந்தாலும், இளம் விஞ்ஞானிகளின் புத்திக் கூர்மையையும், வளம் படைக்கும் திறமையையும் எதிர்த்து பந்தயம் கட்ட ஒரு முட்டாள் மட்டுமே துணிவான்.


"வளக் கட்டுப்பாடுகள்" (resource constraints) என்ற யோசனை மிகவும் வெறுப்பூட்டுகிறது. சில நேரங்களில் இந்த கட்டுப்பாடுகள் உண்மையானவை. மற்ற நேரங்களில், ஆராய்ச்சிக்கு நிதியளிப்பதைத் தவிர்ப்பதற்கு அல்லது உள்ளூர் சமூகங்கள் அதன் விளைவுகளை நிர்வகிக்க உதவும் திறன்கள் மற்றும் பொருட்களை வழங்குவதைத் தவிர்ப்பதற்கு நிர்வாகிகளால் அவை ஒரு சாக்காகப் பயன்படுத்தப்படுகின்றன. இருப்பினும், இந்தியா ஒரு பெரிய அறிவியல் திட்டத்திற்குத் தயாராக இல்லை என்று எங்களால் நம்ப முடியவில்லை. வானியல் மற்றும் பாதுகாக்கப்பட்ட பாதுகாப்பு பகுதிகளில் உள்ள பெரிய தரைத்தள அடிப்படையிலான தொலைநோக்கிகள் பெரிய அறிவியலின் எடுத்துக்காட்டுகளாகும். மேலும் இந்தியாவில் ஏற்கனவே அவற்றில் பல உள்ளன. ஒருவேளை பெரிய பாடம் என்னவென்றால், நமது விஞ்ஞானிகள் மட்டும் தயாராக இருக்கிறார்களா என்பதை மட்டும் வைத்து அத்தகைய திட்டத்தை முயற்சிக்கக்கூடாது, அறிவியலுக்கு அப்பாற்பட்ட மற்றும் தரைதளத்தில் உள்ள நிலைமைகளும் தயாராக உள்ளனவா என்பதையும் நாம் சரிபார்க்க வேண்டும்.


Original Article: The INO that wasn’t and the JUNO that is 

Share: