பிரதம மந்திரி போஷன் சக்தி நிர்மான் திட்டம் (PM POSHAN) ஏன் வெறும் ஊட்டச்சத்து நடவடிக்கை மட்டுமல்ல? -ரிதுபர்ண பட்கிரி

ஊட்டச்சத்தை வழங்குவதோடு மட்டுமல்லாமல், பிரதம மந்திரி போஷன் சக்தி நிர்மான் (Pradhan Mantri Poshan Shakti Nirman (PM POSHAN)) திட்டம் குழந்தைகள் பள்ளிக்குச் செல்ல உதவுகிறது, நியாயம், சமத்துவத்தை ஆதரிக்கிறது. அவர்களின் ஒட்டுமொத்த குழந்தை வளர்ச்சி மற்றும் மேம்பாட்டிற்கு முக்கியப் பங்காற்றி வருகிறது. பள்ளி மாணவர்களிடையே ஊட்டச்சத்து விழிப்புணர்வு இந்த நோக்கங்களை எவ்வாறு ஆதரிக்க முடியும். மேலும், இந்தியா முழுவதும் இந்தத் திட்டத்தை எவ்வாறு திறம்பட செயல்படுத்த முடியும்? 



இந்தியா கடுமையான ஊட்டச்சத்து பிரச்சினைகளை எதிர்கொள்வதால் இந்த நடவடிக்கைகள் முக்கியமானவை. ஜூலை 28, 2025 அன்று வெளியிடப்பட்ட ஐக்கிய நாடுகள் சபையின் 2025-ஆம் ஆண்டு உணவுப் பாதுகாப்பு மற்றும் ஊட்டச்சத்து நிலை (Food Security and Nutrition in the World (SOFI)) அறிக்கையின்படி, 5 வயதுக்குட்பட்ட குழந்தைகளிடையே உலகின் மிக உயர்ந்த எடை இழப்பு விகிதம் 18.7 சதவீதமாக இந்தியாவில் பதிவாகியுள்ளது. 15 முதல் 49 வயது வரையிலான பெண்களிடையே குழந்தை வளர்ச்சி குறைபாடு மற்றும் இரத்த சோகையின் (anaemia) பரவல் பற்றிய தரவுகளும் கவலையளிக்கின்றன.





உணவு மற்றும் பள்ளி உணவு உரிமையிலிருந்து


நமது அரசியலமைப்புச் சட்டம், உணவு உரிமையை (Right to Food), அடிப்படை வாழ்க்கை உரிமையின் ஒரு பகுதியாகப் பாதுகாக்கிறது. பிரிவு 21-ன் கீழ், ஒவ்வொரு குடிமகனும் கண்ணியமாக வாழ போதுமான நல்ல உணவைப் பெறுவதை உறுதி செய்கிறது. அரசுக்கு வழிகாட்டும் நெறிமுறை கோட்பாடுகளில் (Directive Principles of State Policy (DPSP)) உள்ள பிரிவு 47, அரசாங்கம் அனைவருக்கும் ஊட்டச்சத்து நிலைகளையும் பொது சுகாதாரத்தையும் மேம்படுத்த வேண்டும் என்று கோருகிறது.


1975ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட ஒருங்கிணைந்த குழந்தை மேம்பாட்டு சேவைகள் (Integrated Child Development Services (ICDS)) திட்டம், குழந்தைகளின் ஊட்டச்சத்து, தாய்வழி ஆரோக்கியம் மற்றும் குழந்தை பருவ வளர்ச்சியை மேம்படுத்துவதை நோக்கமாகக் கொண்ட முதல் முழுமையான முயற்சியாகும். இதைத் தொடர்ந்து 1993ஆம் ஆண்டில் தேசிய ஊட்டச்சத்து கொள்கை (National Nutrition Policy (NNP)) மற்றும் 2018ஆம் ஆண்டில் தேசிய ஊட்டச்சத்து திட்டம் (National Nutrition Mission (NNM)) போன்ற திட்டங்கள் அறிமுகப்படுத்தப்பட்டன.


மதிய உணவுத் திட்டம் (midday meal scheme), குழந்தைகளின் ஊட்டச்சத்து குறைபாட்டைக் கையாள்வதற்கான மற்றொரு முயற்சியாகும். முன்னதாக பள்ளிகளில் மதிய உணவுக்கான தேசியத் திட்டம் அல்லது மதிய உணவுத் திட்டம் என்று அழைக்கப்பட்ட பிரதம மந்திரி போஷன் சக்தி நிர்மான் (Pradhan Mantri Poshan Shakti Nirman (PM POSHAN)) திட்டம் 2021ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இந்தத் திட்டம் 2026-ஆம் ஆண்டு வரை தொடரும்.


பிரதம மந்திரி போஷன் சக்தி நிர்மான் திட்டத்தின் கீழ், ஒன்றிய அரசு உணவு தானியங்களை வழங்குகிறது. மூலப்பொருட்களின் விலையை மாநிலங்களுடன் (மற்றும் சட்டமன்றங்களைக் கொண்ட டெல்லி மற்றும் புதுச்சேரி யூனியன் பிரதேசங்களுடன்) 60:40 விகிதத்தில் பகிர்ந்து கொள்கிறது; வடகிழக்கு மற்றும் இமயமலைப் பகுதியில் உள்ள மாநிலங்களுக்கு, இந்த விகிதம் 90:10 ஆக உள்ளது. இந்தத்திடம் அடிப்படை உணவுகளை அதிக சத்தானதாக இரும்புச்சத்து, ஃபோலிக் அமிலம் மற்றும் வைட்டமின்களைச் சேர்ப்பதை ஊக்குவிக்கிறது.


பிரதம மந்திரி போஷன் சக்தி நிர்மான் திட்டம் "சமூகப் பங்கேற்பு மூலம் மாணவர்களுக்குச் சத்தான சிறப்பு உணவை வழங்கும்" (tithi bhojan) திட்டத்தையும் ஆதரிக்கிறது. இந்தத்திட்டத்தில் நன்கொடையாளர்கள், பள்ளி மாணவர்களுக்கு பண்டிகைகள் அல்லது முக்கியமான நாட்களில் கூடுதல் சுவையான உணவை வழங்குகிறார்கள். பள்ளிகளில் ஊட்டச்சத்து தோட்டங்கள் மற்றொரு முக்கியமான முன்னேற்றமாகும். இந்த தோட்டங்கள் குழந்தைகள் இயற்கையைப் பற்றி அறிய உதவுவதோடு, பள்ளிகள் தங்கள் மதிய உணவில் வளாகத்தில் வளர்க்கப்படும் புதிய காய்கறிகள் மற்றும் தாவரங்களைப் பயன்படுத்த அனுமதிக்கின்றன.


மதிய உணவு அதிக கற்றல் மதிப்பெண்களுக்கு பங்களிக்கிறது


பள்ளி உணவுத் திட்டங்கள் (School meal programmes) குழந்தைகளின் கல்வி மற்றும் ஊட்டச்சத்துக்கு இரண்டு வழிகளில் பங்களிக்கின்றன: மாணவர்களின் எண்ணிக்கை, வருகைப் பதிவை அதிகரிப்பதன் மூலமும், குழந்தைகள் பள்ளிப் படிப்பை இடைநிறுத்துவதைத் தடுப்பதன் மூலமும் பள்ளிகளுக்கு உதவுகிறது. அதே நேரத்தில் சிறந்த உணவை எடுத்துக்கொள்வதன் மூலம் அவர்களின் கற்றல் திறனில் கவனத்தை அதிகரிக்கிறது. இந்த திட்டங்கள் இந்தியாவில் ஊட்டச்சத்து குறைபாடு சுழற்சியை உடைப்பதன் மூலம் தலைமுறைகளுக்கு நீண்டகால நன்மைகளை (intergenerational benefits) வழங்குகின்றன.


தனிகா சக்ரவர்த்தி மற்றும் ராஜ்ஸ்ரீ ஜெயராமன் ஆகியோரால் 2019-ஆம் ஆண்டு நடத்தப்பட்ட பள்ளி உணவு மற்றும் கற்றல் சாதனை: வளர்ச்சிப் பொருளாதார இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு, நீண்ட காலத்திற்கு பள்ளி உணவைப் பெறும் குழந்தைகள் கணிதத்திலும் வாசிப்பிலும் அதிக மதிப்பெண் பெறுவதைக் காட்டுகிறது.


உணவு வகைகள் பெரும்பாலும் மாநில அரசால் முடிவு செய்யப்படுகின்றன. இது எளிதில் கிடைக்கும் உள்ளூர் உணவுகளை சேர்க்க உதவுகிறது. பள்ளிகள் உள்ளூர் சமையல்காரர்களையும் உதவியாளர்களையும் பணியமர்த்துகின்றன. அவர்களில் பலர் விளிம்புநிலை சமூகங்களைச் சேர்ந்த பெண்களாக உள்ளனர். அனைத்து குழந்தைகளும் ஒரே சமையலறையில் ஒன்றாக சாப்பிட ஊக்குவிப்பதன் மூலம் சாதி, வர்க்கம், மதம் அல்லது பாலின அடிப்படையிலான பாகுபாட்டைக் குறைப்பதையும் இந்தத் திட்டம் நோக்கமாகக் கொண்டுள்ளது.


இருப்பினும், நாட்டின் பல்வேறு பகுதிகளில் சமூக பாகுபாடு இன்னும் இருப்பதாக பல ஆய்வுகள் குறிப்பிடுகின்றன. உதாரணமாக, ரித்திகா கெராவின் "முதல் நாள் உணவுகள்: சாதனைகள் மற்றும் சவால்கள்" (2006-ல் பொருளாதார மற்றும் அரசியல் வார இதழில் வெளியிடப்பட்டது) என்ற கட்டுரை, இத்தகைய பாகுபாடு பெரும்பாலும் சாதி அடிப்படையில் குழந்தைகளை உணவு நேரத்தில் பிரித்தல், தலித்துகளை சமையல்காரர்களாக நியமிப்பதற்கு எதிர்ப்பு மற்றும் உணவில் முட்டை மற்றும் இறைச்சியைச் சேர்ப்பது குறித்து சர்ச்சைகள் உள்ளன.


புரதக் குறைபாட்டை எவ்வாறு நிவர்த்தி செய்வது?


இந்தியாவில் ஊட்டச்சத்து சமூக மற்றும் கலாச்சார காரணிகளால் வடிவமைக்கப்படுகிறது என்பது தெளிவாகத் தெரிகிறது. நாட்டின் பன்முகத்தன்மை கொண்ட புவியியல் மற்றும் கலாச்சார பன்முகத்தன்மை பிரதம மந்திரி போஷன் சக்தி நிர்மான் திட்டத்தை செயல்படுத்துவதில் தனித்துவமான சவால்களை எதிர்கொண்டு வருகிறது.


கர்நாடகாவின் பெங்களூருவில் உள்ள ஐந்து அரசுப் பள்ளிகளில் 2023ஆம் ஆண்டு நடத்தப்பட்ட ஆய்வில், இந்தியாவின் பெங்களூருவில் மாணவர்களின் ஊட்டச்சத்துக்கு மதிய உணவுத் திட்டத்தின் பங்களிப்பு: மறுபரிசீலனை செய்ய வேண்டிய நேரம் (சர்வதேச சமூக மருத்துவம் மற்றும் பொது சுகாதார இதழில் வெளியிடப்பட்டது) என்ற தலைப்பில், 3.6 குழந்தைகளில் 1 குழந்தை மட்டும் தனது உணவில் புரதக் குறைபாட்டைக் கொண்டிருப்பதைக் கண்டறிந்துள்ளது.


இந்த இடைவெளியைக் குறைக்க, உணவு வகைகளில் அதிக பருப்பு வகைகள், முட்டை, இறைச்சி, பால் பொருட்கள் மற்றும் ஊட்டச்சத்து நிறைந்த உள்ளூர் உணவுகளைச் சேர்க்க வேண்டும். ஆனால், சைவ உணவு உண்பவர்கள் அதிகம் உள்ள பல பகுதிகளில் முட்டை மற்றும் இறைச்சியைச் சேர்ப்பது சவாலாகவே உள்ளது. தாவர அடிப்படையிலான புரத மூலங்கள் அதிக விலை கொண்டதாக உள்ளன மற்றும் உணவுகளை போல அதிக ஊட்டச்சத்தையும் வழங்குவதில்லை.


விவசாயிகள் உற்பத்தியாளர் அமைப்புகளிடமிருந்து பருப்பு வகைகள், முட்டைகள் மற்றும் பால் ஆகியவற்றை நேரடியாக கொள்முதல் செய்வது செலவைக் குறைக்க உதவும். இந்த மாதிரி பிரேசிலின் தேசிய பள்ளி உணவுத் திட்டத்தால் (National School Feeding Program (PNAE)) செயல்படுத்தப்படுகிறது. ஜப்பான் மற்றொரு உதாரணத்தை வழங்குகிறது: அந்த நாட்டின் பள்ளி உணவுத் திட்டங்களில், மாணவர்கள் வகுப்பறையில் ஒன்றாக மதிய உணவை சாப்பிடுகிறார்கள், மேசைகளை அமைப்பது, சமையலறையிலிருந்து உணவு கொண்டு வருவது, பரிமாறுவது மற்றும் தூய்மைபணியை செய்வது போன்ற பொறுப்புகளை ஏற்றுக்கொள்கிறார்கள். 2005ஆம் ஆண்டில், ஜப்பான் அனைத்துப் பள்ளிகளிலும் உணவு மற்றும் ஊட்டச்சத்து குறித்த கல்வியைக் கற்பிக்க ஒரு சட்டத்தை இயற்றியது.


உண்மையில், பள்ளி பாடத்திட்டத்தில் ஊட்டச்சத்து கல்வியை ஒருங்கிணைப்பது குழந்தைகளிடையே அவர்களின் உணவுப் பழக்கம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த உதவும். ஐக்கிய ரட்சியம் மற்றும் பிரேசிலிய பள்ளி உணவுத் திட்டங்களைப் போலவே, சர்க்கரை, மாற்றுக் கொழுப்பு (trans fat), நிறைவுற்ற கொழுப்பு (Saturated fat), உப்பு மற்றும் பதப்படுத்தப்பட்ட உணவுகள் மீதான கட்டுப்பாடுகள் ஆகியவற்றிற்கான உணவுப் பரிந்துரைகளைச் சேர்க்கலாம். 2025ஆம் ஆண்டில், பதப்படுத்தப்பட்ட உணவுகளின் ஆரோக்கிய பாதிப்புகள் குறித்து மாணவர்களுக்குக் கல்வி கற்பிக்குமாறு டெல்லி அரசாங்கம் பள்ளிகளைக் கேட்டுக் கொண்டது. இதுபோன்ற நடவடிக்கைகளை அகில இந்திய அளவில் மேற்கொள்ள  வேண்டும்.


பள்ளி உணவில் காலை உணவைச் சேர்க்க மாநிலங்கள், யூனியன் பிரதேசங்கள் வலியுறுத்துகின்றன.


ராஜஸ்தான், கேரளா, சத்தீஸ்கர், லட்சத்தீவுகள், குஜராத் மற்றும் டெல்லி போன்ற பல மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்கள் பிரதம மந்திரி போஷன் திட்டத்தில் காலை உணவைச் சேர்க்க முன்மொழிந்துள்ளன. அரசுப் பள்ளிகளில் 1–5 வகுப்புகள் வரை உள்ள தொடக்கப் பள்ளிக் குழந்தைகளுக்கு 2022-ஆம் ஆண்டு தமிழ்நாடு காலை உணவுத் திட்டத்தைத் (Tamil Nadu government’s breakfast scheme) தொடங்கியது. மற்ற மாநிலங்களும் தமிழ்நாடு அரசால் தொடங்கப்பட்ட மாதிரியைப் பின்பற்றலாம்.


இந்த உணவில் தமிழ்நாட்டில் உப்புமா, பொங்கல் போன்ற தென்னிந்திய உணவுகள் இருக்கும். இதை மற்ற மாநிலங்களில் உள்ள உள்ளூர் சத்தான காலை உணவுப் பொருட்களுடன் மாற்றியமைக்கலாம். சுவாரஸ்யமாக, இட்லி மற்றும் தோசை ஆகியவை உணவில் சேர்க்கப்படவில்லை. ஏனெனில், அவை அதிக அளவிலான கார்போஹைட்ரேட்டுகள் மற்றும் குறைந்த அளவிலான புரத சத்தத்தை கொண்டுள்ளன. தொற்று அல்லாத நோய்களால் ஏற்படும் பொது சுகாதார பிரச்சினைகளைத் தடுப்பதற்கு உணவுப் பன்முகத்தன்மையை (dietary diversity) அறிமுகப்படுத்துவதும் முக்கியம்.


பிரதம மந்திரி போஷன் திட்டத்தை வலுப்படுத்துதல்


இருப்பினும், மதிய உணவு மற்றும் முன்மொழியப்பட்ட காலை உணவு திட்டத்தை நிர்வகிப்பவர்களின் அழுத்தத்தை குறைப்பது முக்கியமானதாக இருக்கும். பள்ளி உணவுத் திட்டங்களுக்கான மேற்பார்வை மற்றும் திட்டமிடல் போன்ற கூடுதல் பணிகளை ஆசிரியர்கள் கையாள்வதால், அவர்களுக்கு மன அழுத்தம் மற்றும் பணிச்சுமையை ஏற்படுத்துகிறது.


இருப்பினும், பிரதம மந்திரி போஷன் திட்டத்தின் கீழ், ஒரு குழந்தைக்கு வழங்கப்படும் உணவுக்கான செலவை அதிகரிக்க வேண்டிய அவசியம் உள்ளது என்பதை மறுக்க முடியாது. இது பள்ளி உணவுகளின் தரம் மற்றும் பன்முகத்தன்மையை மேம்படுத்தவும் உதவும். சமையல் தரத்தில் சீரற்றத் தன்மை மற்றும் சரிவைத் தவிர்க்க உணவு வகைகளை தொடர்ந்து மாற்றியமைப்பது முக்கியமான நடவடிக்கையாக இருக்கும்.


உணவு வழிகாட்டுதல்கள் புதுப்பிக்கப்பட்டு, பழங்கள் மற்றும் பச்சைக் காய்கறிகளை அதிக அளவில் சேர்த்து, தானியங்களின் பயன்பாட்டை குறைக்க வேண்டும். பல பள்ளிகளில் சரியான சமையலறைகள், சேமிப்பு மற்றும் சுகாதாரம் இல்லாததால், உணவு மூலம் பரவும் நோய்கள் ஏற்படலாம். இது சிறந்த உள்கட்டமைப்பில் முதலீடு செய்ய வேண்டியதன் அவசியத்தைக் காட்டுகிறது.


பள்ளிகளில் குறை தீர்க்கும் வழிமுறைகளை உருவாக்குவது, இதன்மூலம் ஏற்படும் பிரச்சினைகளை சரிசெய்வதை உறுதிசெய்ய உதவும். அனைத்திற்கும் மேலாக, பிரதம மந்திரி போஷன் திட்டம் என்பது வெறும் ஊட்டச்சத்து நடவடிக்கை மட்டுமல்ல, கல்வி அணுகல், சமூக சமத்துவம் மற்றும் குழந்தை வளர்ச்சியை அதிகரிப்பதற்கான ஒரு முக்கியமான திட்டமாகும்.


Original Article: Why PM POSHAN is more than just a nutritional intervention?.

Share: