ஆரவல்லி மலைகளைப் பாதுகாக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்? -குஷ்பூ குமாரி, ரோஷ்னி யாதவ்

தற்போதைய செய்தி: நவம்பர் 20 அன்று, சுரங்கத்தை கட்டுப்படுத்துவதற்காக ஆரவல்லி மலைகளின் வரையறை குறித்த ஒன்றிய சுற்றுச்சூழல் அமைச்சக குழுவின் பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் ஏற்றுக்கொண்டது. உள்ளூர் நிலப்பரப்பில் இருந்து 100மீ அல்லது அதற்கு மேற்பட்ட உயரத்தில் உள்ள எந்தவொரு நிலப்பரப்பும் அதன் சரிவுகள் மற்றும் அருகிலுள்ள நிலத்துடன் ஆரவல்லி மலைகளின் ஒரு பகுதியாகக் கருதப்படும்.


முக்கிய அம்சங்கள்:


— இந்த வரையறையின்படி, ஆரவல்லி மலைகளில் 90%-க்கும் அதிகமானவை இனி ஆரவல்லி மலைகளாக கருதப்படாது என்று குழு குறிப்பிடவில்லை. இது சுரங்கம் மற்றும் கட்டுமானத்தை அனுமதிக்கும். தேசிய தலைநகர் பிராந்தியத்தில் மோசமான காற்றின் தரம் உட்பட கடுமையான சுற்றுச்சூழல் பிரச்சினைகளை ஏற்படுத்தும்.


— ஆரவல்லி மலைகள் வடக்கே டெல்லியிலிருந்து தெற்கே குஜராத் வரை நீண்டு, ஹரியானா மற்றும் ராஜஸ்தான் மாநிலம் வரை நீண்டுள்ளன. ராஜஸ்தானில் ஏறக்குறைய மூன்றில் இரண்டு பங்கு மலைத்தொடர் உள்ளது. பல ஆண்டுகளாக, இந்த மலைகள் சட்டப்பூர்வ மற்றும் சட்டவிரோத சுரங்கம் மற்றும் கட்டுமானம் போன்ற பிற நடவடிக்கைகளால் கடுமையான பாதிப்புகளை எதிர்கொண்டுள்ளன.


— கடந்த ஆண்டு, ஆரவல்லி மலைகளுக்கு ஒரே மாதிரியான வரையறையை உருவாக்குமாறு உச்சநீதிமன்றம் அரசாங்கத்திடம் கேட்டுக் கொண்டது. 2010ஆம் ஆண்டு முதல், வன ஆய்வு நிறுவனம் (Forest Research Institute (FSI)) அவற்றை 3 டிகிரி சாய்வு கொண்ட நிலமாக வரையறுத்தது. 2024ஆம் ஆண்டில், ஒரு தொழில்நுட்பக் குழு ஒரு புதிய விதியை முன்மொழிந்தது. அதன்ப்படி, குறைந்தபட்சம் 4.57 டிகிரி சாய்வும் குறைந்தபட்சம் 30 மீட்டர் உயரமும் கொண்ட நிலம் ஆரவல்லி மலையாகக் கருதப்படும். இந்த மாற்றம் 40% மலைகளை மட்டுமே உள்ளடக்கும்.


— இருப்பினும், 100 மீட்டர் விதியைப் பயன்படுத்தி கையொப்பமிடப்படாத அறிக்கையை அமைச்சகம் உச்சநீதிமன்றத்திற்கு வழங்கியது. புதிய வரையறையை ஆதரிக்க இது சாய்வையும் உயரத்தையும் கலந்து, 100 மீட்டர் அல்லது அதற்கு மேல் இருந்தாலும் பல மலைகளை விட்டுவிடக்கூடும் என்று நிபுணர்கள் எச்சரிக்கின்ற தெளிவற்ற விதிகளை பரிந்துரைத்தது.


— (i) ஆரவல்லி மலைகளின் சீரான வரையறை, (ii) முக்கிய பாதுகாக்கப்பட்ட பகுதிகளில் சுரங்கத்தைத் தடை செய்தல் மற்றும் (iii) ஆரவல்லி மலைகளில் சட்டவிரோத சுரங்கத்தைத் தடுத்து நிறுத்தும் அதே வேளையில் நிலையான சுரங்க பணிகளை அனுமதித்தல் போன்ற குழுவின் பரிந்துரைகளை உச்சநீதிமன்றம் அங்கீகரித்துள்ளது.


— 2024ஆம் ஆண்டு மே மாதம், உச்சநீதிமன்றம் சுற்றுச்சூழல் அமைச்சகத்தை, சுரங்கத்தொழிலிலிருந்து ஆரவல்லி மலைகளைப் பாதுகாக்க “ஒரே மாதிரியான வரையறை” உருவாக்க ஒரு குழு அமைக்க உத்தரவிட்டது. இந்தக் குழு ஜூன் 2024-ல் வன ஆய்வு நிறுவனம் தலைமையில், இந்திய புவியியல் ஆய்வு மையம் (Geological Survey of India (GSI)) மற்றும் இந்திய ஆய்வு நிறுவனம் (Survey of India (SOI)) உறுப்பினர்களாகக் கொண்ட தொழில்நுட்பத் துணைக் குழுவை (technical sub-committee (TSC)) அமைத்தது.


- 2010ஆம் ஆண்டில், ஆரவல்லி மாவட்டத்தின் குறைந்தபட்ச உயரத்திற்கு மேல் - ராஜஸ்தானைப் பொறுத்தவரை 115 மீட்டர் - குறைந்தபட்சம் 3 டிகிரி சாய்வு கொண்ட அனைத்து பகுதிகளையும் மலைகளாக வரையறுக்க வேண்டும் என்றும், 100 மீட்டர் அகலமுள்ள ஒரு சீரான கீழ்நோக்கி சரிவு இருக்க வேண்டும் என்றும் வன ஆய்வு நிறுவனம் முன்மொழிந்தது. 500மீ இடைவெளியில் இதுபோன்ற மலைகளின் வரிசை ஒரு மலைத்தொடராகக் கருதப்பட வேண்டும்.


— அக்டோபர் 2024ஆம் ஆண்டில், வன ஆய்வு நிறுவனம் தலைமையிலான துணைக் குழு, ஆரவல்லி மலைகள் மற்றும் மலைத்தொடர்களை புரோடெரோசோயிக் மடிப்புப் பட்டை (Proterozoic fold belt) மாறிமாறி வரும் மலைகள் (மேசைநிலங்கள் உட்பட) மற்றும் பள்ளத்தாக்குகளின் நேர்க்கோட்டுத் தொடராக அமைந்தது” என்று, குறைந்தது 8% சாய்வு (4.57 டிகிரி) மற்றும் குறைந்தது 30 மீட்டர் உயரம் கொண்டதாக வரையறுக்கப்பட்டது.


— 2025 செப்டம்பரில், FSI சுற்றுச்சூழல் செயலாளரிடம் ஒரு அறிக்கையை சமர்ப்பித்தது. இதில் முழு அரவல்லி பகுதியின் மாவட்ட வாரியான மலை வரைபடங்கள் இடம்பெற்றிருந்தன. “10-30 மீட்டர் உயரம்கூட உள்ள சாதாரண மலைகள் கூட வலிமையான இயற்கை காற்றுத் தடைகளாகச் செயல்பட்டு, காற்று வீசும் திசையில் தங்கள் உயரத்தைவிட பல மடங்கு தொலைவுக்கு பாதுகாக்கப்பட்ட பகுதிகளை உருவாக்கி, அதன்மூலம் மேற்பரப்புக்கு அருகிலுள்ள மணல் இடம்பெயர்வைத் திறம்பட தடுத்து நிறுத்துகின்றன” என்று அந்த அறிக்கை தெரிவித்தது.


- இருப்பினும், அக்டோபரில், ஆரவல்லி மாநிலங்கள் "உள்ளூர் நிவாரணம்/தரை மட்டத்திலிருந்து 100 மீ மற்றும் அதற்கு மேற்பட்ட உயரம், துணை சரிவுகள் ஆகியவற்றுக்கான அளவுகோல்களை கொண்டுள்ளதாக ஒப்புக்கொண்டன. தற்போது, ஆரவல்லி மலைகள் மற்றும் தொடர்ச்சிகளில் சுரங்கத்தை ஒழுங்குபடுத்துவதற்காக ராஜஸ்தான் அரசு தொடர்ந்து செயல்பட்டு வருகிறது என்று அமைச்சகம் தனது அறிக்கையை உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பித்தது.


— கடந்த வாரம் 100 மீட்டர் உயர வரையறையை ஏற்றுக்கொண்ட உச்சநீதிமன்றம், புதிய வரையறையின் கீழ் ஆரவல்லி மலைகளுக்கு இந்திய வனவியல் ஆராய்ச்சி மற்றும் கல்வி கவுன்சிலின் (Indian Council of Forestry Research and Education (ICFRE)) உதவியுடன் நிலையான சுரங்கத்திற்கான மேலாண்மைத் திட்டத்தை உருவாக்க அமைச்சகத்தைக் கேட்டுக் கொண்டுள்ளது.


உங்களுக்குத் தெரியுமா?


— ஆரவல்லி மலைத்தொடர் உலகின் மிகப் பழமையான மலைத்தொடர்களில் ஒன்றாகும். இந்த மலைத்தொடர் இந்தியாவின் மேற்கு மற்றும் வடமேற்குப் பகுதிகளை வடிவமைக்கும் முக்கியமான புவியியல் அமைப்பாகும்.


— இது பாலைவனமாக்கலுக்கு எதிரான இயற்கையான தடையாக செயல்படுகிறது. தார் பாலைவனத்தின் விரிவாக்கத்தைத் தடுக்கிறது மற்றும் டெல்லி, ஜெய்ப்பூர் மற்றும் குர்கான் போன்ற நகரங்களை இயற்கை பாதிப்புகளில் இருந்து பாதுகாக்கிறது.


— இந்த மலைத்தொடரானது நீர்மட்டத்தை உயர்த்தும் (water recharge) அமைப்புகளையும் ஆதரிக்கிறது மற்றும் சம்பல், சபர்மதி, லூனி போன்ற முக்கியமான ஆற்களின் மூலமாகவும் உள்ளது. இதன் காடுகள், புல்வெளிகள் மற்றும் சதுப்புநிலங்கள் அழிவு நிலையில் உள்ள தாவரங்கள் மற்றும் விலங்கினங்களுக்கு இருப்பிடமாக உள்ளன; இது உயிர்ப்பல்வகைமையை அதிகரிப்பதோடு, ஆவியாவதல் (evapotranspiration) மூலம் மழைப்பொழிவை ஒழுங்குபடுத்தி வறட்சியைக் கட்டுப்படுத்த உதவுகிறது.


— ஆரவல்லி மலைத்தொடரின் உயரமான சிகரம் ராஜஸ்தானின் மாநிலத்தில் சிரோஹி மாவட்டத்தில் அமைந்துள்ள குரு ஷிகார் ஆகும்.


Original Article: What steps should be taken to protect the Aravalli Hills?

Share: