தற்போதைய செய்தி?
தற்போது, ஒன்பது மாநிலங்கள் மற்றும் மூன்று யூனியன் பிரதேசங்களில் (Union Territories (UTs)) வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR)) நடந்து வருகிறது. SIR-க்கு உட்பட்ட மாநிலங்களில் இருந்து பல வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் உயிரிழப்புகள் பதிவாகியுள்ளதால் கவலைகள் எழுந்துள்ளன.
அக்டோபர் 27 அன்று தேர்தல் ஆணையம் அறிவித்த அட்டவணையின்படி, வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம்செயல்முறை நவம்பர் 4ஆம் தேதி தொடங்கியது. மேலும், வாக்காளர் பட்டியல் டிசம்பர் 9 ஆம் தேதி வெளியிடப்பட உள்ளது. வரைவு வாக்காளர் பட்டியலில் இடம் பெற, 12 மாநிலங்கள் / யூனியன் பிரதேசங்களில் உள்ள அனைத்து வாக்காளர்களும் டிசம்பர் 4ஆம் தேதிக்குள் தங்கள் "கணக்கெடுப்புப் படிவங்களைச் (enumeration forms) சமர்ப்பிக்க வேண்டும்.
முக்கிய அம்சங்கள்:
1. வாக்குச்சாவடி நிலை அலுவலர் (Booth Level Officer (BLO)) என்பவர் இந்திய தேர்தல் ஆணையத்தின் (ECI) கடைநிலை ஊழியர் ஆவார். அவர் உள்ளூர் வாக்காளர்களை நன்கு அறிந்த உள்ளூர் அரசு/பகுதியளவு அரசு அதிகாரிகள் மற்றும் அதே வாக்குச் சாவடி பகுதியில் வாக்காளர்களாகப் பதிவு செய்யப்பட்டுள்ளவர். ஆசிரியர்கள், அங்கன்வாடி பணியாளர்கள், பஞ்சாயத்து செயலாளர், கிராம அளவிலான பணியாளர்கள், "மின் கட்டண வாசிப்பாளர்கள் போன்றவர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களாக நியமிக்கப்படுகிறார்கள்.
2. வாக்காளர் பட்டியல் திருத்தச் செயல்முறையிலும், அவர்களுக்கு ஒதுக்கப்பட்ட வாக்குச் சாவடிப் பகுதிக்கு ஏற்ற வாக்காளர் பட்டியல் தொடர்பான உண்மையான களத் தகவல்களைச் சேகரிப்பதிலும் அவர்கள் முக்கியப் பங்கை வகிக்கின்றனர். வாக்குச் சாவடி மட்டத்தில் வாக்காளர் பட்டியலின் துல்லியத்தையும் நம்பகத்தன்மையையும் அவர்கள் பாதுகாக்கின்றனர். வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்தின் முக்கியப் பணி இந்த வாக்குச்சாவடி நிலை அலுவலர்களிடம் வழங்கப்படுகிறது.
3. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் முழுநேர தேர்தல் அதிகாரிகள் அல்ல. 1950-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் பிரிவு 13B (2), "ஒரு தேர்தல் பதிவு அதிகாரி, எந்தவொரு பரிந்துரைக்கப்பட்ட கட்டுப்பாடுகளுக்கும் உட்பட்டு, தொகுதிக்கான வாக்காளர் பட்டியலைத் தயாரித்தல் மற்றும் திருத்தம் செய்வதற்கு அவர் பொருத்தமானவர் என்று கருதும் நபர்களைப் பணியமர்த்தலாம்" என்று கூறுகிறது. இந்த விதி ஆகஸ்ட் 2006-ல் முதல் முறையாக வாக்குச்சாவடி நிலை அலுவலராக ஒருவரை நியமிக்கும் நடைமுறையை அறிமுகப்படுத்த வழி வகுத்தது.
4. தேர்தல் ஆணையம், ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளை (BLO) நியமிப்பதன் மூலம் வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பதற்கான தெளிவான பொறுப்பை உருவாக்கியுள்ளது. முன்னதாக, பல்வேறு அரசியல் கட்சிகளின் போட்டியிடும் வேட்பாளர்களால் வாக்காளர் அடையாளச் சீட்டுகள் (identification slips) விநியோகிக்கப்பட்டன. இது பல்வேறு புகார்களுக்கு வழிவகுத்தது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நியமனம் செய்யப்பட்டதன் மூலம், வாக்காளர் நம்பிக்கையும், தேர்தல் செயல்முறையின் மீதான நம்பகத்தன்மையும் அதிகரித்துள்ளது.
5. அதிகரித்துவரும் பணி அழுத்தம் மற்றும் திருத்தப்பட்ட வாக்காளர் பட்டியல்களைத் தயாரிப்பதற்கான அதிகரித்த பொறுப்புகளுக்கு மத்தியில், தேர்தல் ஆணையம் வாக்குச்சாவடி நிலை அதிகாரிகளுக்கான வருடாந்திர ஊதியத்தை இரண்டுமடங்காக அதிகரிக்க முடிவு செய்துள்ளது. மேலும், வாக்காளர் பட்டியல்களைத் தயாரித்தல் மற்றும் திருத்துவதில் ஈடுபட்டுள்ள வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் மேற்பார்வையாளர்களின் ஊதியத்தையும் உயர்த்தியுள்ளது. கடைசியாக இதுபோன்ற திருத்தம் 2015-ல் செய்யப்பட்டது. வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கான அதிகரித்த ஊதியம் ரூ. 12,000 ஆகும். மேலும், பீகாரில் தொடங்கி சிறப்பு தீவிர திருத்தத்தை மேற்கொள்வதற்காக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் ரூ.6,000 சிறப்பு ஊக்கத்தொகையும் பெறுகிறார்கள்.
வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பங்கு மற்றும் கடமைகள் (Booth Level Officer (BLO))
(i) வாக்காளர் பட்டியல் திருத்தம்: பிழைகள் இல்லாத வாக்காளர் பட்டியலைத் தயாரிப்பது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் முக்கியப் பணிகளில் ஒன்றாகும். சிறப்பு தீவிர திருத்தம் என்று அழைக்கப்படும் வாக்காளர் பட்டியலைத் திருத்துபவர்கள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தான். தேர்தல் ஆணையம் வழங்கிய வழிகாட்டுதல்களைப் பின்பற்றி தகுதியுள்ள அனைத்து வாக்காளர்களையும் பட்டியலில் சேர்ப்பதற்கும், போலியான வாக்காளர்களை நீக்குவதற்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களே பொறுப்பாவார்கள்.
(ii) வாக்கு சீட்டு விநியோகம் (Distribution of Voter Slips): வாக்குப்பதிவு நாளுக்கு முன்பு வாக்காளர்களின் வீடுகளுக்கு வாக்காளர் சீட்டுகளை விநியோகிப்பது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் முக்கியப் பணியாகும். வாக்குச்சாவடியின் பெயர், வாக்குச்சாவடியின் ஒரு பகுதி மற்றும் வாக்குப்பதிவு நாளின் தேதி போன்ற அனைத்து முக்கிய விவரங்களையும் வாக்காளர் அறிந்திருக்கும் வகையில், அவர்களின் பகுதியில் 100% வாக்காளர் சீட்டு விநியோகிக்கப்படுவதை உறுதி செய்வது வாக்குச்சாவடி நிலை அலுவலரின் முக்கிய பணியாகும்.
(iii) தேர்தல் ஆணைய வழிகாட்டுதல்களின் தூதர் மற்றும் ஒருங்கிணைப்பாளர்: வாக்காளர்கள் அதிக எண்ணிக்கையில் வாக்குச் சாவடிக்கு வந்து வாக்களிக்கவும், எந்த சிரமங்களையும் எதிர்கொள்ளவும் நம்பிக்கையுடன் இருக்க ஊக்குவிப்பதற்காக, ஒவ்வொரு வாக்குச் சாவடியிலும் குறைந்தபட்ச வசதிகளை உறுதிப்படுத்தப்பட்டதாக வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் நபிக்கையை அளிக்கின்றனர். அனைத்து மாற்றுத்திறனாளிகள் மற்றும் மூத்த குடிமக்கள் அடையாளம் காணப்பட்டு, அந்தந்த வாக்குச் சாவடிகளில் சேர்க்கப்படுவதை உறுதி செய்வது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பொறுப்பாகும்.
(iv) தபால் வாக்குச்சீட்டிற்கு தகுதியான வாக்காளர்களுக்கு தகவல் அளித்தல்.: கடந்த ஆண்டு, மூத்த குடிமக்கள் தபால் வாக்குகளை தேர்வுசெய்ய குறைந்தபட்ச வயதை 80-லிருந்து 85-ஆக அரசாங்கம் உயர்த்தியது. 85வயதுக்கு மேற்பட்ட மூத்த குடிமக்கள் மற்றும் சான்றிதழ் பெற்ற மாற்றுத்திறனாளிகள் போன்ற தகுதியுள்ள வாக்காளர்களுக்கு, வீட்டில் இருந்து வாக்களிக்கும் வசதி மற்றும் தபால் வாக்குச்சீட்டை எவ்வாறு பயன்படுத்துவது என்பது குறித்து படிவம் 12D-ஐ நிரப்புவதன் மூலம், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும்.
(v) வாக்குச் சாவடிகளில் உதவி: வாக்குப்பதிவு நாளில் உதவி மேசையில் (Help Desk) பி.எல்.ஓ-க்கள் (BLOs) இருப்பார்கள். வாக்காளர்களுக்கு தேவைப்படும் எந்த உதவியையும் அவர்கள் செய்து கொடுப்பார்கள் மற்றும் தங்களுக்குரிய வாக்குச் சாவடியில் வாக்காளர்கள் வரவேற்கப்பட்டு வசதியாக உணரும்படி செய்வார்கள்.
(vi) தேர்தல் ஆணையத்தின் அடையாள அட்டை பயன்பாட்டை ஊக்குவித்தல்: வாக்களிப்பை எளிதாக்குவதற்கும் துல்லியமான வாக்காளர் பட்டியலை உறுதி செய்வதற்கும் தலைமை தேர்தல் ஆணையத்தால் தொடங்கப்பட்ட விண்ணப்பங்களை ஊக்குவிப்பது வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பொறுப்பாகும். வாக்காளர் உதவி மையம், eVIGIL, உங்கள் வேட்பாளரை அறிந்து கொள்ளுங்கள் (Know you candidate app) மற்றும் தேர்தல் ஆணையத்தின் செயலி போன்ற பிரபலமான வாக்காளர் செயலிகள் உள்ளன. இந்த செயலிகள் குறித்து வாக்காளர்களுக்கும், தங்கள் பகுதிகளில் உள்ள பொதுமக்களுக்கும் வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தெரிவிக்க வேண்டும்.
பீகாரின் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தத்திற்குப் (Special Intensive Revision (SIR)) பிறகு நடைமுறை மாற்றம் செய்யப்பட்டது
ஒன்பது மாநிலங்களிலும் மூன்று யூனியன் பிரதேசங்களிலும் நடைபெற்றுக் கொண்டிருக்கும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தம் (Special Intensive Revision (SIR)) பீகாரில் முன்னர் நடத்தப்பட்ட திருத்தத்தைவிட வேறுபட்ட முறையில் நடைபெறுகிறது.
பீகாரில், 2003ஆம் ஆண்டு தீவிர திருத்தப் பட்டியலில் பெயர் இல்லாத எந்த ஒரு நபரும், கணக்கெடுப்பின் போது தேர்தல் ஆணையம் கட்டாயமாக்கிய 11 ஆவணங்களில் ஒன்றைச் சமர்ப்பிக்க வேண்டியிருந்தது. மற்ற மாநிலங்களுக்கு தேர்தல் ஆணையம் இந்த முறையை மாற்றியுள்ளது.
புதிய படிவத்தில், வாக்காளர்கள் தங்கள் மாநிலத்தின் கடைசி தீவிர திருத்தப் பட்டியலில் உள்ள தங்களைப் பற்றியோ அல்லது எந்தவொரு வயதான உறவினரைப் பற்றியோ விவரங்களைத் தர வேண்டும் என்று கேட்கப்படுகிறது. ஆனால், இந்தக் கட்டத்தில் ஆவணங்களைச் சேகரிக்கக் கூடாது என்று வாக்குச்சாவடி நிலை அலுவலர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது. அதற்குப் பதிலாக, வாக்காளர்களையோ அல்லது அவர்களது உறவினர்களையோ கண்டுபிடித்து படிவத்தில் சரியான வரிசை எண்ணை எழுத, எந்தவொரு மாநிலத்திலோ அல்லது யூனியன் பிரதேசத்திலோ உள்ள முந்தைய தீவிர திருத்தப் பட்டியலை அவர்கள் நேரடியாகச் சரிபார்க்க வேண்டும்.
பீகாரில், வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் தற்போதைய வாக்காளர்களைச் சரிபார்க்க 2003 வாக்காளர் பட்டியலைச் சரிபார்த்தனர். SIR கட்டம் 2 வேறுபடுகிறது. ஏனெனில், வாக்குச்சாவடி அதிகாரிகள் அதிகமான மக்களைக் கண்டுபிடிக்க வேண்டும். அனைத்து வாக்காளர்கள், அவர்களின் பெற்றோர், அத்தைகள், மாமாக்கள் அல்லது தாத்தா பாட்டிகளுடன் உள்ள பழைய பட்டியலை சரிபார்க்க வேண்டும். இந்த ஆழமான சரிபார்ப்பு துல்லியத்தன்மையை உறுதி செய்கிறது. ஆனால், முன்பைவிட அதிக முயற்சி தேவைப்படுகிறது.
இது முதல் கட்ட வாக்காளர்களுக்கு எளிதாக்குகிறது. ஆனால் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் பணியை அதிகரிக்கிறது. கடைசி தீவிர வாக்காளர் பட்டியலில் இருந்து வாக்காளர் அல்லது குடும்ப உறுப்பினர்களின் விவரங்களைக் கொண்ட பகுதி காலியாக விடப்பட்டால், டிசம்பர் 9-ஆம் தேதி வரைவு பட்டியல் வெளியிடப்பட்டபிறகு, ஆவணங்களைக் கேட்டு அவர்களுக்கு அறிவிப்புகள் அனுப்பப்படும்.
அழியாத மை (Indelible Ink)
1. ஒரு வாக்காளர் வாக்களித்த பிறகு, வாக்காளர்கள் இருமுறை வாக்களிப்பதைத் தடுக்க, வாக்காளரின் விரலில் சிறப்பு மை வைக்கப்படும். இது 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தின் (Representation of the People Act (RoPA)) ஒரு பகுதியாகும். மையில் silver nitrate உள்ளது. இது முதலில் தெளிவாக இருக்கும். ஆனால், சூரிய ஒளி அல்லது புற ஊதா ஒளியில் ஊதா நிறமாக மாறி வாரக்கணக்கில் நீடிக்கும்.
2. 1961-ஆம் ஆண்டு புது டெல்லியில் உள்ள தேசிய இயற்பியல் ஆய்வகத்தால் (National Physical Laboratory (NPL)) அழியாத மை உருவாக்கப்பட்டது. மேலும், 1962-ஆம் ஆண்டில், கர்நாடகாவில் உள்ள அரசு நிறுவனமான மைசூர் பெயிண்ட்ஸ் அண்ட் வார்னிஷ் லிமிடெட்க்கு (Mysore Paints and Varnish Limited (MPVL)) உரிமம் வழங்கப்பட்டது.
3. 1962-ஆம் ஆண்டு முதல், மைசூர் பெயிண்ட்ஸ் & வார்னிஷ் லிமிடெட் இந்த மையை தயாரித்து வருகிறது. முன்னர், மைசூர் லாக் & பெயிண்ட் ஒர்க்ஸ் லிமிடெட் என்று அழைக்கப்பட்ட இது, 1937-ஆம் ஆண்டு அப்போதைய மைசூர் மகாராஜாவான நல்வாடி கிருஷ்ணராஜ உடையார் (Nalwadi Krishnaraja Wodeyar) அவர்களால் நிறுவப்பட்டது.