இந்தியாவில் குற்ற ஒப்புதல் பேச்சுவார்த்தை முறை எப்போது அறிமுகப்படுத்தப்பட்டது? -சி. ராஜ் குமார்

முக்கிய அம்சங்கள்:


• இத்தாலியக் குற்றவியல் அறிஞர் சேசரே பெக்காரியா (Cesare Beccaria), தனது புகழ்பெற்ற நூலான ‘On Crimes and Punishments’ என்பதில், ஒரு குற்றத்தைத் தடுப்பதற்குத் கடுமையான தண்டனையைவிட, அந்தத் தண்டனை 'நிச்சயம் கிடைக்கும்' என்ற உறுதியே சிறந்தது என்று வாதிட்டார். தண்டனையிலிருந்து தப்பித்துவிடலாம் என்ற எண்ணத்துடன் விதிக்கப்படும் மிகக் கடுமையான தண்டனையைவிட, சிறியதாக இருந்தாலும் தப்பிக்கவே முடியாது என்ற உறுதியான தண்டனையே அதிகத் தாக்கத்தை ஏற்படுத்தும் என்று குறிப்பிட்டுள்ளார். இவருடைய கருத்துக்கள் இன்றும் பொருத்தமானவையாக உள்ளன. ஒரு வலுவான நீதி அமைப்பு என்பது வெறும் தண்டனையை மட்டும் சார்ந்தது அல்ல; மாறாக, அது தண்டனையின் நிச்சயம், அதன் சீரான தன்மை மற்றும் வழக்குகளை விரைவாக விசாரித்து முடிப்பதைப் பொறுத்தே அமைகிறது.


• பாதிக்கப்பட்டவர்களுக்கு, நீண்டகாலம் நீடிக்கும் சட்டப் போராட்டங்கள் இரண்டாவது மன உளைச்சலாக மாறக்கூடும் என்கின்றனர். விசாரணைக் கைதிகளாக இருப்பவர்களுக்கு, வழக்கு விசாரணையில் ஏற்படும் தாமதத்தால், அவர்கள் குற்றவாளியா அல்லது நிரபராதியா என்று நிரூபிக்கப்படுவதற்கு முன்பே பல ஆண்டுகள் சிறையில் கழிக்க வேண்டிய சூழல் ஏற்படுகிறது. சொத்துத் தகராறு அல்லது விவாகரத்து போன்ற உரிமையியல் வழக்குகளில், இழுபறியான சட்டப் போராட்டங்கள் மிகப்பெரிய நிதி இழப்பை ஏற்படுத்துகின்றன.


• நீதிமன்றத் தாமதங்கள் நாட்டின் பொருளாதாரத்தையும் நேரடியாகப் பாதிக்கின்றன. மந்தமான நீதி வழங்கல் முறை காரணமாக, வணிக ஒப்பந்தங்களைச் செயல்படுத்துவதில் சிக்கல்கள் ஏற்படுகின்றன. இது தொழில்துறைக்கான செலவுகளை அதிகரிப்பதோடு, முதலீட்டாளர்களின் நம்பிக்கையையும் குறைக்கிறது. ஒரு நாட்டின் முதலீட்டுச் சூழல் சாதகமாக இல்லை என்ற எதிர்மறையான செய்தியையும் இது உலகிற்குத் தெரிவிக்கிறது. அதுமட்டுமின்றி, தாமதமான நீதித்துறை செயல்பாடுகள் சாதாரண குடிமக்களுக்குச் சட்டத்தின் மீதுள்ள மரியாதையைக் குறைத்து, நீதி அமைப்பின் மீதான நம்பிக்கையை இழக்கச் செய்கிறது.

உங்களுக்குத் தெரியுமா?


• இந்திய நீதிமன்றங்களில் இன்னும் 5 கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளதாக மத்திய அரசு கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் தெரிவித்தது. இதில் சுமார் 4.76 கோடி வழக்குகள் மாவட்ட மற்றும் கீழ்நிலை நீதிமன்றங்களிலும், 63 லட்சத்திற்கும் அதிகமானவை உயர்நீதிமன்றங்களிலும், 92,000-க்கும் மேற்பட்டவை உச்சநீதிமன்றத்திலும் உள்ளன. நிலுவையில் உள்ள மொத்த வழக்குகளில் 80%-க்கும் அதிகமானவை மாவட்ட நீதிமன்றங்களிலேயே தேங்கியுள்ளன. இங்குதான் பெரும்பாலான மக்கள் நீதித் துறையை நேரடியாக அணுகுகிறார்கள். கொரோனா பெருந்தொற்று காலத்தில் இந்த வழக்குத் தேக்கம் உச்சத்தை எட்டியது. இ-நீதிமன்றத் திட்டம் (e-Courts Project), விரைவு நீதிமன்றங்கள் (Fast-track Courts) மற்றும் லோக் அதாலத் (Lok Adalats) போன்ற சீர்திருத்தங்கள் மேற்கொள்ளப்பட்ட போதிலும், வழக்குகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்து வருவதாகவே தெரிவிக்கின்றனர்.


• இந்தியக் குற்றவியல் நீதி அமைப்பில் குற்ற ஒப்புதல் பேச்சுவார்த்தை (Plea Bargaining) என்பது ஒப்பீட்டளவில் ஒரு புதிய கருத்தாக்கம் ஆகும். முன்னதாக, இத்தகைய பேச்சுவார்த்தை மூலம் எட்டப்படும் சமரசத் தீர்வுகள் நீதி நெறிமுறையற்றவை என்றும் இது மிரட்டிப் பணம் பறித்தல் (Extortion) போன்ற செயல்களுக்கு வழிவகுக்கும் என்றும் மக்கள் நம்பினர்.


• இந்தியக் குற்றவியல் நடைமுறைச் சட்டத்தில் (Code of Criminal Procedure (CrPC)) 2005-ஆம் ஆண்டு மேற்கொள்ளப்பட்ட திருத்தம், 'குற்ற ஒப்புதல் பேச்சுவார்த்தை' (Plea Bargaining) எனும் முறையை அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியது. இம்முறையின்படி, குற்றம் சாட்டப்பட்டவர் தனக்கு எதிரான குற்றத்தை ஒப்புக்கொள்வதற்குப் பதிலாக, தண்டனையைக் குறைத்துக் கொள்ளவோ அல்லது குறைவான குற்றச்சாட்டுகளின்கீழ் விசாரணை மேற்கொள்ளவோ வழிவகை செய்யப்படுகிறது.


• பல நாடுகளில், குற்றத்தை ஒப்புக்கொண்டு தண்டனையைக் குறைக்கும் நடைமுறை நீதித்துறையின் ஒரு முக்கிய அங்கமாக உள்ளது. இது அநீதியான ஒன்றாகக் கருதப்படுவதில்லை. இந்தியா இத்தகைய உலகளாவிய நடைமுறைகளிலிருந்து கற்றுக்கொள்வதோடு, அவற்றை நமது நாட்டின் அரசியலமைப்பு மற்றும் நிறுவனக் கட்டமைப்புக்கு ஏற்ப மாற்றியமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் வலியுறுத்தப்படுகிறது.

Original link:

When was plea bargaining introduced in India?


Share: