தெரு வியாபாரிகளைச் (hawkers) சரிபார்க்கவும், சட்டவிரோத குடியேறிகள் மீது நடவடிக்கை எடுக்கவும் பிருஹன்மும்பை மாநகராட்சிக்கு (BMC) மும்பை உயர் நீதிமன்றம் ஏன் உத்தரவிட்டது? -ஓம்கார் கோகலே

அனைத்துத் தற்காலிக மற்றும் நிரந்தரக் கடைகளும் பாதசாரிகள் அல்லது வாகனப் போக்குவரத்திற்கு இடையூறு விளைவிக்கின்றனவா என்பதை மதிப்பிடுவதற்காக, அவற்றை 'முழுமையான முறையில் ஆய்வு செய்து சோதனையிட' உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.


நடைபாதை வியாபாரிகளின் அடையாளங்களைச் (identities of hawkers) சரிபார்த்து, சட்டவிரோத குடியேறிகள மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்ற மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவானது, மும்பையில் தெரு வியாபாரத்தை ஒழுங்குபடுத்துவது மற்றும் சட்டவிரோத குடியேறிகள் இருப்பு குறித்த பிரச்சினை ஆகியவற்றின் மீது கவனத்தை ஈர்த்துள்ளது. நீதிமன்றத்தின் இந்தத் தலையீட்டிற்கு என்ன காரணம்?, அது சுட்டிக்காட்டிய கவலைகள் என்ன?, மற்றும் அது உத்தரவிட்ட நடவடிக்கைகள் என்ன? என்பது குறித்த ஒரு விளக்கம் கீழே குறிப்பிட்டுள்ளது. அவை,


மும்பை உயர்நீதிமன்றத்தின் உத்தரவு என்ன?


மும்பை முழுவதும் உள்ள நடைபாதை வியாபாரிகள் மற்றும் அவர்களின் உதவியாளர்களின் அடையாளங்களை உடனடியாகச் சரிபார்த்து, சாலைகள் மற்றும் நடைபாதைகளில் கடைகளை நடத்தும் வங்கதேச நாட்டவர் அல்லது இந்தியர் அல்லாதவர்கள் எனக் கூறப்படும் சட்டவிரோத குடியேறிகள்மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று பிருஹன்மும்பை மாநகராட்சிக்கு (Brihanmumbai Municipal Corporation (BMC)) உயர்நீதிமன்றம் திங்களன்று உத்தரவிட்டது.


பாதசாரிகள் (pedestrian) அல்லது வாகனப் போக்குவரத்திற்கு (vehicular movement) அவை இடையூறு விளைவிக்கின்றனவா என்பதை மதிப்பிடுவதற்காக, அனைத்து தற்காலிக மற்றும் நிரந்தரக் கடைகளையும் "விரிவான ஆய்வு மற்றும் பரிசோதனை" செய்யுமாறு நீதிமன்றம் உத்தரவிட்டது. நடவடிக்கை எடுக்கத் தவறினால், சம்பந்தப்பட்ட அதிகாரிகள் தனிப்பட்ட முறையில் பொறுப்பேற்க நேரிடும் என்றும் நீதிமன்றம் எச்சரித்தது.


நீதிமன்றத்தின் இந்தத் தலையீட்டிற்கு என்ன காரணம்?


நீதிபதிகள் அஜய் எஸ் கட்கரி மற்றும் கமல் ஆர் காதா ஆகியோர் அடங்கிய நீதிமன்ற அமர்வு, தெரு வியாபாரிகள் (வாழ்வாதாரப் பாதுகாப்பு மற்றும் தெரு வியாபார ஒழுங்குமுறை) சட்டம்-2014-ஐ (Street Vendors (Protection of Livelihood and Regulation of Street Vending) Act)  முறையாக அமல்படுத்தக் கோரும் மனுக்களையும், தெரு வியாபாரிகளை ஒழுங்குபடுத்தும் நகர வியாபாரக் குழுவிற்கான (Town Vending Committee (TVC)) ஆகஸ்ட் 2024 தேர்தல்களுக்கு எதிரான சவால்களையும் விசாரித்து வந்தது.


மனுதாரர்களில் ஒருவரான, பாரதிய மஸ்தூர் சங்கத்துடன் (Bharatiya Mazdoor Sangh) இணைந்த மகாராஷ்டிரா ஹாக்கர் சங்கமானது (Maharashtra Hawker Sangh), வங்கதேசத்திலிருந்து வந்த சட்டவிரோதக் குடியேறிகள் நகரம் முழுவதும் தெரு வியாபாரத்தில் ஈடுபட்டு வருவதாகவும், இது குடியிருப்பாளர்களுக்கு கவலையை ஏற்படுத்துவதோடு, உள்ளூர் வியாபாரிகளுடன் மோதலையும் தூண்டுவதாகவும் வாதிட்டது.


பிருஹன்மும்பை மாநகராட்சி (BMC) மற்றும் காவல்துறையிடம் புகார்கள் அளிக்கப்பட்டபோதிலும், எந்தவொரு பயனுள்ள நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் மனுதாரர் தெரிவித்தார். மும்பை மேயர் ரிது தாவ்டே மற்றும் பிற பாஜக தலைவர்கள் சட்டவிரோத வங்கதேச நடைபாதை வியாபாரிகளை ஒரு "முக்கிய கவலைக்குரிய விஷயம்" (key concern) என்று குறிப்பிட்டதால், இந்த விவகாரம் அரசியல்ரீதியாகவும் முக்கியத்துவம் பெற்றுள்ளது.


நீதிமன்றம் என்னென்ன கவலைகளை முன்னிலைப்படுத்தியது?


குற்றச்சாட்டுகள் உண்மையாக நிரூபிக்கப்பட்டால், இப்பிரச்சனை தீவிர கவலைக்குரிய விஷயமாக இருக்கும் என்று நீதிபதி அமர்வு கூறியது. மேலும், இப்பிரச்சனைக்கு உடனடி கவனம் தேவை என்றும் நீதிமன்றம் கூறியது. இந்த பிரச்சினையைப் புறக்கணிப்பது "முற்றிலும் கவனக்குறைவான மற்றும் உணர்ச்சியற்ற செயலாகும்" என்றும், அது கட்டுப்படுத்தப்படாமல் விட்டால், இப்பிரச்சனை மேலும் மோசமடைந்து கடுமையான விளைவுகளுக்கு வழிவகுக்கும் என்றும் நீதிமன்றம் மேலும் குறிப்பிட்டது.


இந்த நிலைமையை “மிகவும் கவலையளிப்பதாக” விவரித்த நீதிமன்றம், சட்டவிரோத நடைபாதை வியாபாரத்தால் பாதசாரிகள் நடைபாதைகளைப் பயன்படுத்த முடியாமல், சாலைகளுக்குத் தள்ளப்பட்டு, ஆபத்திற்கு உள்ளாக்கப்படுவதாகக் குறிப்பிட்டது. மேலும், பெண்களும் குழந்தைகளும்தான் அதிகம் பாதிக்கப்படுகிறார்கள் என்றும், அவர்கள் தொடர்ச்சியான ஆபத்தை எதிர்கொள்கிறார்கள் என்றும் நீதிமன்றம் கூறியது. அதேசமயம், மூத்தகுடிமக்களும் மாற்றுத்திறனாளிகளும் பாதுகாப்பாக நடமாடுவது கிட்டத்தட்ட இயலாத காரியமாக உள்ளது.


மேலும், இதுபோன்ற பகுதிகளில் ஏற்படும் கூட்ட நெரிசல், பெண்களைப் பாதிக்கும் முறையற்ற உடல்ரீதியான தொடர்புகள், மருத்துவ அவசர ஊர்திகள் மற்றும் தீயணைப்புப் படை போன்ற அவசரகால சேவைகளுக்கு ஏற்படும் இடையூறுகள், வாழ்வாதாரங்களைப் பாதிக்கும் வகையில் கடை நுழைவாயில்கள் தடுக்கப்படுதல், மற்றும் ஒரு முதியவர் ஒருவர்மீது நடத்தப்பட்ட கொடூரமான தாக்குதல் உட்பட நடைபாதை வியாபாரிகளின் தாக்குதல்கள் போன்ற நிகழ்வுகளையும் நீதிமன்றம் சுட்டிக்காட்டியது. வாகன நிறுத்துமிடங்கள் பயன்படுத்த முடியாதவையாக ஆக்கப்பட்டுள்ளன என்றும், ரயில் நிலையங்களைச் சுற்றியுள்ள பகுதிகள் பெருமளவில் ஆக்கிரமிக்கப்பட்டு, பயணிகளுக்குக் கடுமையான நெரிசலையும் தாமதங்களையும் ஏற்படுத்துகின்றன என்றும் நீதிமன்றம் மேலும் கூறியது.


நீதிமன்றம் குறிப்பிட்ட பரந்த நிலை மற்றும் தாக்கம் என்ன?


தற்காலிக நடைபாதை வியாபாரம் பெரும்பாலும் அங்கீகரிக்கப்படாத நிரந்தரக் கட்டமைப்புகளாக மாறுவதையும், அதைத் தொடர்ந்து மேம்பாடு அல்லது மறுவாழ்வு என்ற பெயரில் முறைப்படுத்துதல் அல்லது இழப்பீடு கோரப்படுவதையும் நீதிமன்றம் கவனத்தில் கொண்டது.


இந்தப் பிரச்சினைகளின் ஒட்டுமொத்த விளைவு என்பது, குடிமக்களின் சுதந்திரமான நடமாட்டம், பாதுகாப்பு மற்றும் ஒழுங்கான குடிமை வாழ்க்கைக்கான உரிமைகளில் கணிசமான அளவு குறைந்து வருகிறது என்று நீதிமன்றம் கூறியது. நடைபாதை வியாபாரிகள் இல்லாததாக நியமிக்கப்பட்ட 20 மண்டலங்களைப் பராமரிப்பதுகூட அதிகாரிகளுக்கு ஒரு குறிப்பிடத்தக்க சவாலாக உள்ளது என்றும், இது களத்தில் நிலவும் சூழ்நிலையின் தீவிரத்தையும் உணர்திறனையும் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது என்றும் நீதிபதி அமர்வு குறிப்பிட்டது.


மேலும் என்ன உத்தரவுகள் பிறப்பிக்கப்பட்டன?


நகர விற்பனைக் குழுவை (Town Vending Committee(TVC)) உடனடியாக அமைக்க வேண்டியதன் அவசியத்தை நீதிமன்றம் வலியுறுத்தியதுடன், ஆகஸ்ட் 2024 தேர்தல்களின் செல்லுபடியாகும் முடிவுகளை அறிவிக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. நகர விற்பனைக் குழு (TVC) அமைக்கப்பட்ட பிறகு வாக்காளர் பட்டியல்களை மறுபரிசீலனை செய்யலாம் என்றும், தகுதியுள்ள 99,435 நபர்கள் வழிகாட்டுதல்களின்படி கண்டிப்பாக வியாபாரம் செய்ய அனுமதிக்கப்படுவார்கள் என்றும் நீதிமன்றம் கூறியது.


மேலும், நடைபாதை வியாபாரத்தை ஒழுங்குபடுத்துவதற்கும், சட்டத்திற்கு இணங்குவதை உறுதி செய்வதற்கும் மேற்கொள்ளப்படும் ஒரு பரந்த முயற்சியின் ஒரு பகுதியாக, நடைபாதை வியாபாரிகளின் அடையாளங்களை உடனடியாகச் சரிபார்த்து, அதன் மூலம் அடையாளம் காணப்பட்ட சட்டவிரோத குடியேறிகள்மீது நடவடிக்கை எடுக்குமாறு மாநகராட்சி மற்றும் காவல்துறைக்கு நீதிமன்றம் உத்தரவிட்டது.

Original link:

Why Bombay High Court told BMC to verify hawkers, act on illegal migrants?.


Share: