முக்கிய அம்சங்கள்:
— இந்த வரலாற்று முக்கியத்துவம் முடிவு முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியால் மேற்கொள்ளப்பட்டது. இவர் நிதியமைச்சராகவும் ஒரே நேரத்தில் பதவி வகித்தபோது, 1969 ஜூலை 19 அன்று நாட்டின் 14 மிகப்பெரிய தனியார் வங்கிகளைத் தேசியமயமாக்கினார்.
இந்த முடிவு, நிதி அமைப்பை பரந்த அளவிலான வளர்ச்சி மற்றும் சமூக இலக்குகளுடன் ஒருங்கிணைப்பதை நோக்கமாகக் கொண்டு, ஒரு சமத்துவக் கட்டமைப்பின் மீதான அரசாங்கத்தின் உறுதிப்பாட்டில் வேரூன்றியிருந்தது. வங்கித்துறையில் அரசின் செயல்முறை, 1955-ஆம் ஆண்டில் பாரத ஸ்டேட் வங்கி நாட்டுடைமையாக்கப்படுவதற்கு முன்னரே தொடங்கியது.
1960-கள் வரை, வங்கிக் கிளைகளின் விரிவாக்கம் பெரும்பாலும் நகர்ப்புறங்களுக்குள்ளேயே இருந்தது என்றும், கிராமப்புற மற்றும் பகுதி நகர்ப்புறப் பகுதிகள் தொடர்ந்து வங்கிச் சேவையின்றித் தவித்தன என்றும் 'இந்திய ரிசர்வ் வங்கியின் வரலாறு' (History of the RBI) எனும் ஆவணம் குறிப்பிடுகிறது. இதன் விளைவாக, வேளாண்மை சார்ந்த பல்வேறு பொருளாதாரச் செயல்பாடுகள், சிறுதொழில் நிறுவனங்கள் மற்றும் சுயதொழில் செய்வோர் ஆகியோர் முறையான வங்கி வசதிகளைப் பெறும் வாய்ப்பின்றி இருந்தனர்.
தனியார் வங்கிகள் லாபத்தால் மட்டுமே அதீக அக்கறை கொண்டவையாகக் கருதப்பட்டன. இதனால், பல்வேறு அளவிலான பொருளாதாரச் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு தங்கள் கடன் வழங்கலை (loan portfolios) வகைப்படுத்த முன்வரவில்லை. ஏனெனில், அவ்வாறு செய்வது பரிவர்த்தனைச் செலவுகளை அதிகரிக்கவும், லாபத்தைக் குறைக்கவும் கூடும் என்று அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.
தனியார் வங்கிகள் லாபத்தில் மட்டுமே அதீத அக்கறை கொண்டவையாகக் கருதப்பட்டன. இதனால், பல்வேறு பொருளாதாரச் செயல்பாடுகளுக்கு ஏற்றவாறு தங்கள் கடன் வழங்கலை (loan portfolios) பல்வகைப்படுத்த வங்கிகள் முன்வரவில்லை. ஏனெனில், அவ்வாறு செய்வது பரிவர்த்தனைச் செலவுகளை அதிகரிக்கவும், லாபத்தைக் குறைக்கவும் கூடும் என்று அந்த ஆவணம் குறிப்பிடுகிறது.
1967-ல் முதன்முதலில் முன்வைக்கப்பட்ட 'வங்கிகள் மீதான சமூகக் கட்டுப்பாடு' (Social Control) எனும் கருத்தானது, அந்தக்காலகட்டத்தில் காங்கிரஸ் கட்சியால் முக்கியமாகப் பிரதிநிதித்துவப்படுத்தப்பட்ட அரசியல் தலைவர்களிடையே நிலவிய, வங்கித் துறை குறித்த இரண்டு மாறுபட்ட தீவிரக் கண்ணோட்டங்களுக்கு இடையிலான ஒரு சமரசத்தின் விளைவாகவே உருவானது.
1967 மே மாதம் நடைபெற்ற காங்கிரஸ் காரியக்கமிட்டிக் கூட்டங்களில், பொருளாதாரக் கொள்கை "ஜனநாயக சமத்துவம்" என்பதன் உண்மையான பொருள் குறித்துத் தீவிரமான விவாதங்கள் நடைபெற்றன. இதன் முக்கிய கருத்தாக 'வங்கிகளின் தேசியமயமாக்கல்' எனும் விவகாரம் உருவெடுத்தது. இறுதியில், வங்கி, காப்பீடு, அயல்நாட்டு வர்த்தகம் மற்றும் உணவு விநியோகம் ஆகிய துறைகளில் அரசின் பங்கேற்பை அதிகரிப்பதை அந்தக்குழு இறுதியில் அங்கீகரித்தது.
ரிசர்வ் வங்கியின் வரலாற்றின்படி, ஜூலை 19 அன்று அறிவிப்பு வெளியாவதற்கு முந்தைய நாளில், பொருளாதார விவகாரச் செயலாளரான ஐ.ஜி. படேலிடம், வங்கிகளைத் தேசியமயமாக்கும் முடிவை தாம் "அரசியல்" சார்ந்த காரணங்களின் அடிப்படையில் எடுத்திருப்பதாகவும், அடுத்த 72 மணி நேரத்திற்குள் அவர் அதற்கான உரையைத் தயார் செய்ய வேண்டும் என்றும் அவர் தெரிவித்தார். படேல் காந்திக்கு இரண்டு ஆலோசனைகளை வழங்கியதாகக் கூறப்படுகிறது: அதன் படி, முதலாவதாக, வெளிநாட்டு வங்கிகளைத் தேசியமயமாக்கக் கூடாது. இரண்டாவதாக, அனைத்து வங்கிகளையும் தேசியமயமாக்க வேண்டிய அவசியமில்லை என்றும், மொத்த வங்கி வர்த்தகத்தில் 85 முதல் 90 சதவீதம் வரையிலான பங்கைக் கொண்ட முக்கிய வங்கிகளை மட்டும் தேசியமயமாக்குவதே சிறந்தது என்றும் அவர் ஆலோசனை வழங்கியதாக ரிசர்வ் வங்கியின் வரலாறு குறிப்பிடுகிறது.
தொடக்கத்தில், ரூ. 100 கோடி வைப்புத்தொகை கொண்ட வங்கிகள் தேசியமயமாக்கலுக்காகப் பட்டியலிடப்பட்டன. ஆனால், ரூ.98 கோடி வைப்புத்தொகை கொண்ட 'தேனா வங்கி' (Dena Bank) போன்ற சில முக்கிய வங்கிகள் இந்தப் பட்டியலிலிருந்து விடுபட்டுவிடும் என்பது தெரியவந்தது. எனவே, அந்த வைப்புத்தொகை வரம்பு ரூ.50 கோடியாகக் குறைக்கப்பட்டது.
1969 ஜூலை 19 அன்று, ரூ. 50 கோடிக்கும் அதிகமான வைப்புத்தொகை கொண்ட 14 முக்கிய வங்கிகளை உடனடியாக அமலுக்கு வரும் வகையில் தேசியமயமாக்குவதற்கான ஒரு அவசரச் சட்டம் பிறப்பிக்கப்பட்டது. சில மாதங்களுக்கு முன்னரே குடியரசுத் தலைவர் ஜாகிர் உசேன் காலமானதால், அப்போதைய துணைக் குடியரசுத் தலைவரும், தற்காலிகக் குடியரசுத் தலைவராகவும் பொறுப்பு வகித்த வி.வி. கிரி அவர்கள் இந்த அவசரச் சட்டத்தில் கையெழுத்திட்டார்.
ஜூலை 27 அன்று, ராஜ்கோட்டில் நடைபெற்ற ஒரு பொதுக்கூட்டத்தில் உரையாற்றிய சர்வோதயத் தலைவர் ஜெயப்பிரகாஷ் நாராயணன், வங்கிகள் கையகப்படுத்தப்பட்ட இந்த நடவடிக்கையை "தவறானது மற்றும் தேவையற்றது" என்று வர்ணித்தார். இந்த நடவடிக்கை நாட்டின் பொருளாதாரப் பிரச்சினைகளுக்குத் தீர்வு காணாது என்றும், மாறாக, அதிகாரத்தில் இருப்பவர்கள் மற்றும் அரசு நிர்வாக அமைப்புகளின் (bureaucracy) அதிகாரத்தை மட்டுமே அதிகரிக்கும் என்று அவர் கூறியதாக அந்த புத்தகம் குறிப்பிடுகிறது.
உங்களுக்குத் தெரியுமா?
1926-ல் அமைக்கப்பட்ட இந்திய நாணயம் மீதான அரச ஆணையத்தின் (Hilton Young Commission)) பரிந்துரைகளின் அடிப்படையில் இந்திய ரிசர்வ் வங்கி நிறுவப்பட்டது. ‘இந்திய ரிசர்வ் வங்கி’ என்று அழைக்கப்படும் ஒரு மத்திய வங்கியை நிறுவ ஆணையம் பரிந்துரைத்தது.
பணத்தாள்கள் வெளியீட்டை ஒழுங்குபடுத்துதல், பண நிலைத்தன்மையைப் பாதுகாக்கும் வகையில் கையிருப்பை பராமரித்தல் மற்றும் நாட்டின் கடன் மற்றும் நாணய முறையை தனக்குச் சாதகமாக பயன்படுத்துதல் ஆகிய பணிகளை ரிசர்வ் வங்கி மேற்கொள்கிறது.
ரிசர்வ் வங்கியின் முதல் ஆளுநர், இம்பீரியல் பேங்க் ஆஃப் இந்தியாவின் இரண்டு நிர்வாக ஆளுநர்களில் ஒருவரான ஆஸ்திரேலியரான சர் ஆஸ்போர்ன் ஆர்கெல் ஸ்மித் ஆவார். சர் சி.டி. தேஷ்முக் ஆளுநரான முதல் இந்தியர் ஆவார்.
இந்திய ரிசர்வ் வங்கியின் மத்திய அலுவலகம் ஆரம்பத்தில் கொல்கத்தாவில் நிறுவப்பட்டது. 1937-ல் நிரந்தரமாக மும்பைக்கு மாற்றப்பட்டது. மத்திய அலுவலகத்தில் தான் ஆளுநர் கொள்கைகள் வகுக்கப்படுகின்றன.
இந்திய ரிசர்வ் வங்கி (பொது உடைமைக்கு மாற்றுதல்) சட்டம், 1948-ன் அடிப்படையில், 1949 ஜனவரி 1 முதல் இந்திய ரிசர்வ் வங்கி தேசியமயமாக்கப்பட்டது. வங்கியின் மூலதனத்தில் உள்ள அனைத்துப் பங்குகளும், தேவையான இழப்பீடு வழங்கப்பட்டதன் மூலம் ஒன்றிய அரசுக்கு மாற்றப்பட்டது.
ரிசர்வ் வங்கியின் விவகாரங்கள், ஆளுநர் மற்றும் 4-க்கும் மேற்பட்ட துணை ஆளுநர்களைக் கொண்ட மத்திய இயக்குநர் குழுவால் நிர்வகிக்கப்படுகின்றன. அரசால் பரிந்துரைக்கப்படும் அதிகாரப்பூர்வமற்ற இயக்குநர்களில், பல்வேறு துறைகளைச் சேர்ந்த 10 இயக்குநர்களும், இரண்டு அரசு அதிகாரிகளும், 4 உள்ளூராட்சி வாரியங்களிலிருந்து தலா ஒரு இயக்குநர் என நான்கு இயக்குநர்களும் அடங்குவர்.
இந்திய ரிசர்வ் வங்கி, விலை நிலைத்தன்மையைப் பராமரிப்பது, அரசு மற்றும் வங்கிகளுக்கு நாணயத்தை வழங்குவது என்று பல்வேறு பணிகளைச் செய்கிறது. தற்போதைய காலகட்டத்தில் முக்கியத்துவம் பெறும் அதன் முக்கியப் பணிகளில் ஒன்று அந்நியச் செலாவணிக் கையிருப்பை நிர்வகிப்பதாகும். இது வெளிநாட்டு வர்த்தகம் மற்றும் பணம் செலுத்துதலை எளிதாக்கவும், இந்தியாவில் அந்நியச் செலாவணிக் சந்தையின் சீரான வளர்ச்சி மற்றும் பராமரிப்பை ஊக்குவிக்கவும் அந்நியச் செலாவணி மேலாண்மைச் சட்டம் (Foreign Exchange Management Act) 1999-ஐ நிர்வகிக்கிறது.
Original Link: What do you understand by nationalisation of banks?