இந்தியாவானது மழைப்பொழிவு பற்றாக்குறையை (rainfall deficit) எதிர்கொள்வதால், மிக மோசமான நிலைமைக்குத் தன்னைத் தயார்படுத்திக் கொள்ள வேண்டும்.
ஒரு உச்சநிலைக்குப் பிறகு, பொதுவாக நிலவும் சரிவுநிலையை தவிர்க்க முடியாது. இரண்டு ஆண்டுகளாகப் பெய்த உபரி மழையைத் தொடர்ந்து, வரவிருக்கும் பருவமழையில் இந்தியா ஒரு குறிப்பிடத்தக்க மழைப்பொழிவு பற்றாக்குறையை எதிர்கொள்ளக்கூடும். இந்திய வானிலை ஆய்வுத் துறை (India Meteorological Department (IMD)), தனது ஏப்ரல் மாத முன்னறிவிப்பில், வரும் ஜூன்-செப்டம்பர் மாதங்களில் 8% மழைப்பொழிவு பற்றாக்குறையை, அதாவது "இயல்பை விடக் குறைவான" மழைப்பொழிவாக இருக்கும் என்று கணித்துள்ளது. இந்தக் கணிப்பில் 5% பிழைகூட ஏற்பட வாய்ப்புள்ளது. ஆனால், இந்திய வானிலை ஆய்வுத் துறையின் (IMD) கடந்தகாலச் செயல்பாடுகள் கவலையை ஏற்படுத்துகின்றன. இதில் பலமுறை, அது "இயல்பான" பருவமழையாகக் கணித்திருந்தும், இந்தியா வறட்சியைச் சந்தித்துள்ளது. உண்மையில், ஏப்ரல் மாதத்தில் மழைப்பொழிவு பற்றாக்குறை குறித்து இந்திய வானிலை ஆய்வுத் துறை (IMD) எச்சரிக்கும் போதெல்லாம், இந்தியா பெரும்பாலும் வறட்சியைச் சந்தித்துள்ளது என்பதை வரலாறு காட்டுகிறது. இந்த அமைப்பு, தனது அதிகாரப்பூர்வமாக, 'வறட்சி' என்ற சொல்லை ஒருபோதும் பயன்படுத்துவதில்லை. அதற்குப் பதிலாக, மழைப்பொழிவானது நீண்டகால சராசரியில் 90 சதவீதத்திற்கும் குறைவாக பெய்யும்போது, 'பற்றாக்குறை' (deficient) என்ற சொல்லைப் பயன்படுத்துகிறது. எடுத்துக்காட்டாக, 2015-ம் ஆண்டு ஏப்ரல் மாதத்தில், இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD), தென்மேற்குப் பருவமழைக் காலத்தில் "இயல்பைவிடக் குறைவான பருவமழை" இருக்கும் என்று கணித்தது. இது, நீண்டகால சராசரியில் 93% மட்டுமே பருவகால மழைப்பொழிவு இருக்கும் எனவும், மீண்டும் இது 'இயல்பை விடக் குறைவான' அளவாகவே இருக்கும் என்றும் கணித்தது. இந்தியா, நீண்டகால சராசரியில் (Long Period Average (LPA)) 86% மட்டுமே மழைப்பொழிவைப் பெற்று, மிகவும் மோசமான நிலையை அடைந்தது. 1950-ம் ஆண்டிலிருந்து 16 நிகழ்வுகளில் 9 முறை, மத்திய பூமத்திய ரேகை பசிபிக் பெருங்கடல் 1 டிகிரி செல்சியஸுக்கு மேல் வெப்பமடைவது பருவமழைக் குறைபாட்டுடன் தொடர்புடைய ஒரு சுழற்சி நிகழ்வான எல் நினோவை (El Niño) வானிலை மாதிரிகள் சுட்டிக்காட்டுவதால், பருவமழையின் இரண்டாவது முக்கியமான பாதியில் (ஆகஸ்ட் மற்றும் செப்டம்பர்) இந்த முறை பருவமழை மந்தமாக இருக்கும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எதிர்பார்க்கிறது.
எல் நினோவின் (El Niño) நேரம் முக்கியமானது. பருவமழை மாதங்களுக்கு வெளியே வெப்பநிலை உயர்வு ஏற்பட்டால், பருவமழையின் மீதான அதன் தாக்கம் அவ்வளவு அச்சுறுத்தலாக இருக்காது. உதாரணமாக, 2019-ல், எல் நினோ போன்ற சூழல்கள் உருவாகும் நிலையில் இருந்ததால், ஏப்ரல் மாதத்தில் இயல்பைவிட குறைவான மழைப்பொழிவையே இந்திய வானிலை ஆய்வு மையம் (IMD) எதிர்பார்த்தது. முரண்பாடாக, அந்த வெப்பம் எதிர்பார்த்த அளவுக்கு வலுவாக இல்லாததால், இந்தியாவில் இயல்பைவிட அதிகமான மழைப்பொழிவு கிடைத்தது. இந்த ஆண்டும், எல் நினோவின் வறட்சித் தாக்கத்தை இந்தியப் பெருங்கடல் இருமுனை அமைப்பு சமன் செய்யும் என்று இந்திய வானிலை ஆய்வு மையம் எதிர்பார்க்கிறது. தற்போது, மேற்கு ஆசியாவின் மீதுள்ள போர் போன்ற சூழல்களே தற்போது மிகவும் கவலைக்குரியதாக இருக்கும் இந்த ஆண்டில், குறைவான மழைப்பொழிவுடன் எரிவாயு மற்றும் உரப் பற்றாக்குறையும் விவசாயிகளின் மனநிலையை மேலும் மோசமாக்கக்கூடும். உர இருப்பை அதிகரிக்கவும், குறிப்பாக நெருக்கடிக்கு உள்ளாக வாய்ப்புள்ள நீர்த்தேக்கங்களில் சமமான நீர் விநியோகத்தை உறுதி செய்யவும், மேலும் உகந்த விதைப்பு முறைகள் (optimal sowing practices) குறித்து விவசாயிகளுக்கு உரிய நேரத்தில் ஆலோசனைகளை வழங்கவும் அரசாங்கம் உடனடியாகத் தயாரிப்புகளைத் தொடங்க வேண்டும்.
Original link: