பல பத்தாண்டுகளாக மாநிலங்கள் முழுவதும் வாக்காளர் பங்கேற்பு விகிதம் அதிகரித்து வருகிறது. இது திடீரென நிகழ்ந்த ஒரு நிகழ்வு அல்ல.
மேற்கு வங்கம், தமிழ்நாடு, கேரளா மற்றும் அசாம் ஆகிய மாநிலங்களில் சமீபகாலத்தில் காணப்படும் நிலைமைகளைவிட, இந்தியாவின் தேர்தல் பங்கேற்பு விகிதம் மாநிலங்கள் முழுவதும் அதிகரித்து வருகிறது. இது கடந்த பத்தாண்டுகளில், ஒரு சில விதிவிலக்குகளைத் தவிர, பெரும்பாலான மாநிலங்களில் வாக்காளர்களின் வருகை அதிகரித்துள்ளது என்று தரவுகள் காட்டுகின்றன. இது, தேர்தல் ஈடுபாடு திடீரென அதிகரித்திருப்பதை விடவும், அது காலப்போக்கில் சீராக வலுவடைந்து வருவதையே உணர்த்துகிறது.
இந்தத் தரவுகளிலிருந்து கிடைக்கும் மிகத் தெளிவான செய்தி என்னவென்றால், அதிக அளவிலான வாக்காளர் பங்கேற்பு என்பது ஒரு பிராந்தியத்திற்கோ அல்லது ஒரு குறிப்பிட்ட அரசியல் சூழலுக்கோ மட்டும் உரியதல்ல. குஜராத்தில், வாக்காளர் பங்கேற்பு 2007-ல் 59.77%-லிருந்து 2022-ல் 64.84%-ஆக உயர்ந்தது. அதேகாலகட்டத்தில், உத்தரப் பிரதேசத்தில் இது 45.96%-லிருந்து 61.08%-ஆக அதிகரித்துள்ளது. கோவாவில் வாக்காளர் பங்கேற்பு 70.51 சதவீதத்திலிருந்து 81.89 சதவீதமாக உயர்ந்துள்ளது. அதேவேளையில், மணிப்பூரில் அது 86.73 சதவீதத்திலிருந்து 90.28 சதவீதமாக அதிகரித்தது எனபதை அட்டவணை-1-ல் குறிப்பிட்டுள்ளது. புவியியல் அமைப்பு, அரசியல் போட்டி, சமூகக் கட்டமைப்பு மற்றும் கடந்தகால வாக்களிப்பு முறைகள் ஆகியவற்றின் அடிப்படையில், இம்மாநிலங்கள் ஒன்றுக்கொன்று மிகவும் மாறுபட்டவையாக இருந்தாலும், அவை அனைத்தும் ஒரே பரந்த போக்கையே வெளிப்படுத்துகின்றன. அதாவது, அதிகமான மக்கள் தேர்தல்களில் பங்கேற்று, தங்கள் வாக்குகளைச் செலுத்தி வருகின்றனர்.
கர்நாடகாவின் வாக்குப்பதிவு 64.84%-லிருந்து 73.84% ஆகவும், மத்தியப் பிரதேசத்தின் வாக்குப்பதிவு 69.63%-லிருந்து 77.74% ஆகவும், இராஜஸ்தானின் வாக்குப்பதிவு 66.49%-லிருந்து 75.33% ஆகவும், சத்தீஸ்கரின் வாக்குப்பதிவு 70.66%-லிருந்து 76.75% ஆகவும் அதிகரித்துள்ளது என்று அட்டவணை-2 குறிப்பிட்டுள்ளது.
இந்த உயர்வுக்குரிய விதிவிலக்குகள்
ஒட்டுமொத்தமாக வாக்காளர் பதிவு விகிதம் மேல்நோக்கியதாக இருந்தாலும், அது எல்லா இடங்களிலும் காணப்படவில்லை. பஞ்சாப் 2007-ல் 76.04%-லிருந்து 2022-ல் 72.15%-ஆகக் குறைந்தது. அதேசமயம், மேகாலயா, மிசோரம், நாகாலாந்து மற்றும் திரிபுரா ஆகியவை காலப்போக்கில் சரிவையோ அல்லது ஏறக்குறைய நிலையான தன்மையையோ காட்டுகின்றன. ஹரியானா மற்றொரு முக்கியமான விதிவிலக்காகும். அதன் பதிவு விகிதம் 2009-ல் 72.37%-லிருந்து 2024-ல் 67.89%-ஆக உயர்கிறது என்று அட்டவணை-3 காட்டுகிறது. இந்த எடுத்துக்காட்டுகள் முக்கியமானவை. ஏனெனில், வாக்காளர் பதிவு விகிதம் தானாகவே உயர்ந்துவிடுவதில்லை என்பதையும், அது உள்ளூர் அரசியல் சூழல்கள், அரசியல் போட்டியின் தீவிரம் மற்றும் நிர்வாகரீதியான காரணிகள் ஆகியவை வாக்காளர் பதிவைச் செல்வாக்குக்கு உட்படுத்தக்கூடும்.
அதேநேரத்தில், ஏற்கனவே அதிக அளவிலான வாக்காளர் பதிவு விகிதத்தைக் கொண்டிருந்த பல மாநிலங்கள், தொடர்ந்து வலுவான பங்கேற்பைப் பதிவு செய்துள்ளன. அருணாச்சல பிரதேசத்தின் வாக்காளர் எண்ணிக்கை 2009-ல் 79.45%-லிருந்து 2024-ல் 86.89%-ஆக உயர்ந்துள்ளது என்பதை அட்டவணை-3 காட்டுகிறது. புதுச்சேரியின் பதிவு விகிதம் 2011-ல் 86.19%-லிருந்து 2026-ல் 89.85%-ஆக உயர்ந்துள்ளது என்பதை அட்டவணை-5 காட்டுகிறது. கேரளா, மேற்கு வங்கம் மற்றும் தமிழ்நாடு ஆகிய மாநிலங்களிலும் வாக்காளர் பதிவு விகிதம் அதிகமாகக் காணப்படுகின்றன. கேரளாவின் வாக்காளர்களின் எண்ணிக்கை 75.26%-லிருந்து 78.27%-ஆகவும், தமிழ்நாட்டின் வாக்காளர்களின் எண்ணிக்கை 78.29%-லிருந்து 85.15%-ஆகவும், மேற்கு வங்கத்தின் வாக்காளர்களின் எண்ணிக்கை 84.72%-லிருந்து 92.47%-ஆகவும் அதிகரித்துள்ளது என்று அட்டவணை-5 குறிப்பிட்டுள்ளது. இதில், மேற்கு வங்கம் சிறப்புக் கவனத்திற்குரியது. ஏனெனில் அரசியல்ரீதியாகத் தீவிரமான மற்றும் மிகுந்த போட்டி நிறைந்த ஒரு மாநிலத்தில்கூட வாக்காளர் எண்ணிக்கை அதிகரிக்க முடியும் என்பதை இது காட்டுகிறது. இம்மாநிலம் நீண்டகாலமாகவே, இந்தியாவில் மிக உயர்ந்த வாக்காளர் பங்கேற்பு விகிதங்களில் ஒன்றைக் கொண்டிருந்தாலும், வாக்குப்பதிவு விகிதம் 2011-ல் 84.72%-லிருந்து 2026-ல் 92.47%-ஆக உயர்ந்துள்ளது.
தேர்தல் அணிதிரட்டல் குறித்த விவாதங்களில் மேற்கு வங்கம் பெரும்பாலும் ஒரு விதிவிலக்கான நிகழ்வாகக் கருதப்படுவதால் இது முக்கியத்துவம் பெறுகிறது. இருப்பினும், இந்தப் புள்ளிவிவரங்கள் ஒரு பரந்த கண்ணோட்டத்தைச் சுட்டிக்காட்டுகின்றன. குறைந்த வாக்குப்பதிவு உள்ள மாநிலங்களில் மட்டுமல்லாமல், ஏற்கனவே அதிக வாக்குப்பதிவு இருந்த மாநிலங்களிலும் வாக்காளர்களின் பங்கேற்பு அதிகரித்துள்ளது. எனவே, வாக்காளர் பங்கேற்பில் ஏற்பட்டுள்ள சமீபத்திய உயர்வு ஒரு திடீர் அல்லது தனிப்பட்ட நிகழ்வு அல்ல. இதற்கு மாறாக அது ஒரு பரந்த மற்றும் நீண்டகாலப் போக்கின் ஒரு பகுதி என்ற முக்கிய வாதத்தை மேற்கு வங்கம் வலுப்படுத்துகிறது. ஏற்கனவே ஒப்பீட்டளவில் அதிக வாக்குப்பதிவைக் கொண்டிருந்த மாநிலங்களில்கூட இந்த அதிகரிப்பு தெளிவாகத் தெரிகிறது. இது வாக்காளர் பங்கேற்பு ஆதாயங்கள் குறைந்த வாக்குப்பதிவு உள்ள மாநிலங்களுக்கு மட்டும் கட்டுப்படுத்தப்படவில்லை என்பதைக் காட்டுகிறது.
பல்வேறு தேர்தல் சுழற்சிகளிலிருந்து பெறப்பட்ட தரவுகள், வாக்காளர் பங்கேற்பு விகிதம் காலப்போக்கில் அதிகரித்து வருவதைக் காட்டுகின்றன. ஆந்திரப் பிரதேசம் தனது வாக்காளர் பங்கேற்பை 2009-ல் 72.72%-லிருந்து 2024-ல் 81.79% ஆகவும், ஒடிசா 65.35%-லிருந்து 74.79% ஆகவும், ஜார்க்கண்ட் 57.03%-லிருந்து 67.66% ஆகவும் அதிகரித்துள்ளன என்பதை அட்டவணை-3 காட்டுகிறது. இதேபோல், பீகார் தனது வாக்காளர் பங்கேற்பு விகிதத்தை 2010-ல் 52.73%-லிருந்து 2025-ல் 67.67% ஆக அதிகரித்துள்ளது என்பதை அட்டவணை-4 காட்டுகிறது. பொதுவாகப் பார்க்கும்போது, இந்த எண்ணிக்கைகள் இந்தியாவின் தேர்தல்களத்தில் வாக்காளர் பங்கேற்பு விகிதம் திடீரென அதிகரித்ததைக் காட்டிலும், சீராக விரிவடைந்து வருவதையே சுட்டிக்காட்டுகின்றன.
இது முக்கியமானதாகும். ஏனெனில், இது வாக்காளர் பங்கேற்பில் சமீபத்தில் ஏற்பட்டுள்ள இந் அதிகரிப்பை, ஒரு நீண்ட காலகட்டத்தில் நிலைநிறுத்துகிறது. இந்த பங்கேற்பு உயர்வை, சிறப்புத் தீவிர திருத்தக் காலத்திற்கு (SIR) மட்டும் வரையறுக்கப்பட்ட ஒரு திடீர் நிகழ்வாகக் கருதுவதைவிட, மாநிலங்கள் முழுவதும் சீரற்ற விளைவுகளைக் கொண்ட ஒரு பத்தாண்டு காலப் போக்காகவே சிறப்பாகப் புரிந்துகொள்ள முடியும்.
பெரிய தாக்கம் இல்லை
மாநில அளவிலான வாக்காளர்களின் எண்ணிக்கை சிறிதளவு மட்டுமே மாறினாலும், பகுதிவாரியான எண்ணிக்கைகளை மாற்றுவதன் மூலம் சிறப்பு தீவிர திருத்தம் (SIR) வாக்காளர் வருகையை மேலும் அதிகரித்திருக்கலாம். அதாவது, அதன் விளைவு அடிப்படையானதாகக் கருதப்படாமல், கூடுதல் விளைவாகவே பார்க்கப்பட வேண்டும். இன்னும் அடிப்படையான விஷயம் என்னவென்றால், இதுபோன்ற எந்த நடவடிக்கைகளுக்கும் முன்பே பல மாநிலங்களில் வாக்காளர் வருகை அதிகரித்துச் சென்று கொண்டிருந்தது. இதன் எண்ணிக்கைகளைச் சரியாகப் புரிந்துகொள்வதற்கு இந்த வேறுபாடு முக்கியமானது. தகுதியுள்ள வாக்காளர் தளத்தை மறுசீரமைப்பதன் மூலம், வாக்காளர்களின் வருகை அதிகரித்து, இது இறுதிகட்ட சதவீதத்தை அதிகரிக்கக்கூடும். ஆனால், பரந்த கண்ணோட்டத்தில் பார்த்தால், பல மாநிலங்களில் வாக்காளர் வருகை ஏற்கனவே அதிகரித்துச் சென்று கொண்டிருந்தது. எனவே, சிறப்பு தீவிர திருத்தம் (SIR) ஒரு புதிய போக்கைத் தொடங்குவதைவிட, ஏற்கனவே இருந்த ஒரு போக்கின் மீதுதான் செயல்பட்டிருக்க வாய்ப்புள்ளது.
வாக்காளர் வருகையில் ஏற்பட்டுள்ள பரவலான அதிகரிப்பு, மக்களிடையே வலுவான அரசியல் ஈடுபாட்டையும், அரசியல் கட்சிகள் மற்றும் நிறுவனங்களும் அதிக செயல்திறன் மிக்கவையாக மாறியுள்ளன என்பதையும் இது சுட்டிக்காட்டுகிறது. இது வாக்காளர்களின் மாறிவரும் மனப்பான்மை, மேம்பட்ட விழிப்புணர்வு அல்லது தேர்தல்கள் முக்கியமானவை என்ற பரந்த உணர்வையும் பிரதிபலிக்கக்கூடும். இதற்கான காரணங்களின் ஒருங்கிணைப்பு எதுவாக இருந்தாலும், மாநிலங்கள் முழுவதும் இந்தியாவின் தேர்தல் பங்கேற்பு மேலும் விரிவடைந்துள்ளது என்பதை ஆதாரங்கள் சுட்டிக்காட்டுகின்றன.
அதே நேரத்தில், பங்கேற்பு எல்லா இடங்களிலும் ஒரே மாதிரியாக இல்லை என்பதை இந்த விதிவிலக்குகள் நமக்கு நினைவூட்டுகின்றன. சில மாநிலங்களில் வாக்காளர் வருகையில் சரிவுப் போக்கும் காணப்படுகிறது. மேலும், இந்த வேறுபாடுகளை ஒரே தேசியக் கண்ணோட்டமாகச் சுருக்கிவிடாமல், அவற்றுக்குச் சிறப்பு கவனம் செலுத்தப்பட வேண்டும். இருப்பினும், ஒட்டுமொத்தப் போக்கு தெளிவாக உள்ளது. இந்தியா முழுவதும், வாக்காளர் வருகை பொதுவாக அதிகரித்துள்ளது. மேலும், சிறப்பு தீவிர திருத்தம் (SIR) போன்ற சமீபத்திய காரணிகள், ஏற்கனவே நிகழ்ந்து கொண்டிருந்த இந்த உயர்வுக்குப் பங்களித்திருக்கலாம்.
Original Link: Electoral participation has been on a steady rise in India.