அணுசக்தித் துறையில் இந்தியாவின் முக்கிய சாதனை

கடந்த சில ஆண்டுகளில் நிகழ்ந்த பல முன்னேற்றங்களில், இந்தியா இறுதியாகத் தனது அணுசக்தித் துறையை விரைவாக விரிவுபடுத்துவதற்கு தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதை உணர்த்தும் செய்திகளில் கல்பாக்கத்திலிருந்து வரும் செய்தியும் ஒன்றாகும்.


தமிழ்நாட்டின் கல்பாக்கத்தில் உள்ள முன்மாதிரி வேகப் பெருக்க அணு உலையானது (Fast Breeder Reactor), அணுக்கரு இணைதிறனை அடைந்திருப்பது, இந்தியாவின் அணுசக்திப் பயன்பாட்டில் ஒரு தலைமுறை மாற்றத்தைக் குறிக்கும் நீண்டகாலமாக எதிர்பார்க்கப்பட்ட ஒரு மைல்கல்லாகும். இது, எழுபது ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவின் அணுசக்தித் திட்டத்தை நிறுவியவர்களின் தொலைநோக்குப் பார்வையை நிறைவேற்றுவதற்கான தொடக்கத்தையும் குறிக்கிறது. இந்தியாவின் அணுசக்தித் துறையின் முதுகெலும்பாக விளங்கும் அழுத்தப்பட்ட கனநீர் அணு உலைகளுடன் (Pressurised Heavy Water Reactors) ஒப்பிடுகையில், வேகப் பெருக்க அணு உலைகளை (Fast Breeder Reactor) வடிவமைப்பதும், உருவாக்குவதும், இயக்குவதும் நம்பமுடியாத அளவிற்கு மிகவும் சவாலானவையாக உள்ளது. ஆனால், இந்தத் தொழில்நுட்பச் சாதனையைவிட, இந்தியாவின் மூன்று கட்ட அணுசக்தித் திட்டத்தின் இரண்டாம் கட்டத்தின் தொடக்கமானது, வரும் பத்தாண்டுகளில் நாட்டின் எரிசக்தி சுதந்திரத்தையும் இராஜதந்திரத் தன்னாட்சியையும் உறுதிசெய்வதில் ஒரு முக்கியமான முன்னேற்றத்தைக் குறிக்கிறது.


நீண்ட காலமாக சந்தேகத்துடனும், ஒரு பாதுகாப்பு அபாயமாகவும் பார்க்கப்பட்ட அணுசக்தியானது, தற்போது தூய்மையான மற்றும் ஏராளமாகக் கிடைக்கும் எரிசக்தியின் ஒரு முக்கிய ஆதாரமாகக் கருதப்படுகிறது. புதைபடிவ எரிபொருட்களைச் சார்ந்திருப்பதைக் குறைக்கவும், படிப்படியாக அகற்றவும் நிர்பந்திக்கப்படும் உலகில், அதிகரித்து வரும் எரிசக்தி தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு இது இன்றியமையாததாகும். இந்தியாவைப் பொறுத்தவரை, இது இன்னும் மிக முக்கியமானதாகும். ஏனெனில், வெளிப்புறத் தக்கங்களுக்கு நாட்டை எளிதில் பாதிக்கக்கூடியதாக மாற்றும் எரிசக்தி இறக்குமதியைச் சார்ந்திருப்பதை இது விடுவிக்கவோ அல்லது குறைந்தபட்சம் கணிசமாகக் குறைக்கவோ முக்கியத்துவம் பெறுகிறது. இந்தியாவின் அணுசக்தித் துறையும் மற்ற நாடுகளைச் சார்ந்துள்ளது. ஏனெனில், அதன் முக்கிய எரிபொருளான யுரேனியம் நாட்டில் போதுமான அளவில் கிடைப்பதில்லை. ஹோமி பாபா மற்றும் அவரது தலைமுறை இந்திய அணு விஞ்ஞானிகள், மூன்று கட்டப் பாதையை வகுத்தவர்கள் ஆவர். அதன் மூன்றாவது கட்டம், இந்தியாவில் ஏராளமாகக் காணப்படும் தோரியத்தை முக்கிய எரிபொருளாகப் பயன்படுத்துவதாகும்.


இந்த மூன்று கட்டப் பாதையில் பயணிப்பது ஒருபோதும் எளிதாக இருக்கப்போவதில்லை. முதல் சோதனை வேகப் பெருக்க உலை (fast breeder reactor) 2000-களின் முற்பகுதியில்தான் கட்ட முடிந்தது. இந்தப் பயணத்தின்போது பலமுறை, இந்தியா தனது கவனத்தை இழந்துவிட்டது போல் தோன்றியது. கல்பாக்கத்தில் அணு உலையின் நிலைப்புத்தன்மை எட்டப்படுவது, இந்த மாற்றத்தை மீண்டும் வேகப்படுத்தும் என நம்பப்படுகிறது. இந்தியா தனது அணுசக்தித் துறையை விரைவாக விரிவுபடுத்துவதற்காக இறுதியாகத் தீவிர முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது என்பதை கல்பாக்கத்திலிருந்து வரும் செய்திகள் உணர்த்துகின்றன. அணுசக்தி இயக்கத்தை அமைத்தல், சாந்தி (SHANTI) சட்டத்தை இயற்றுதல், சிறிய மட்டு அணு உலைகளின் (Small Modular Reactors (SMR)) வளர்ச்சியை முன்னெடுத்தல் மற்றும் அணுசக்தித் துறையைத் தனியார் பங்கேற்பிற்காகத் திறந்துவிடுதல் ஆகிய பல நடவடிக்கைகள், இந்தப் பாதையில் மேற்கொள்ளப்பட்டுள்ள மிக முக்கியமான நடவடிக்கைகளாகும்.


Original link:

On nuclear energy, an Indian milestone.


Share: