இந்தியாவின் மிகப் பழமையான இரண்டு சட்டமன்றங்களுக்குள், சீர்திருத்தங்களின் மரபு. - சக்ஷு ராய்

 தமிழ்நாடு மற்றும் மேற்குவங்கத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், நாட்டின் மிகவும் பழமையான மாநிலச் சட்டமன்ற வரவு-செலவுத் திட்டக் கூட்டத்தொடர்களில் பங்கேற்கும்போது, ​​"அமைதி மற்றும் சிறந்த நிர்வாகத்திற்கான" சட்டங்களை இயற்றுதல் என்ற அமைப்புகளின் அடிப்படை நோக்கத்தையே தங்கள் மக்கள் பிரதிநிதிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று சம்பந்தப்பட்ட மாநில மக்கள் எதிர்பார்ப்பார்கள்.


ஜூன் மாதத்தின் 3-வது வாரத்தில், மேற்குவங்கம் மற்றும் தமிழ்நாடு சட்டமன்றங்கள் வரவு-செலவுத் திட்டக் கூட்டத்தொடருக்காகக் கூடுகின்றன. புதிய அரசாங்கங்கள், தேர்தலின்போது அளித்த தேர்தல் வாக்குறுதிகளை எவ்வாறு நிறைவேற்றுகின்றன என்பதைப் பார்ப்பதற்காக, பொதுமக்களும் அரசியல் பார்வையாளர்களும் இந்தச் சட்டமன்ற நடவடிக்கைகளை உன்னிப்பாகக் கவனிப்பார்கள்.


இரு மாநிலங்களிலும், சட்டமன்ற உறுப்பினர்களில் ஏறக்குறைய பாதிப் பேர் முதல் முறை சட்டமன்ற உறுப்பினர்களாவர். ஒரு நூற்றாண்டுகால வரலாற்றைக் கொண்ட சட்டமன்ற அமைப்புகளின் புனிதமான அவைகளுக்குள் அவர்கள் அடியெடுத்து வைக்கப் போகிறார்கள்.


இந்தியாவில் உள்ள நவீன சட்டமன்ற அமைப்புகளின் தொடக்கத்தை பம்பாய், கல்கத்தா மற்றும் மெட்ராஸ் ஆகிய மாகாண நகரங்களில் காணலாம். இந்த நகரங்களில்தான் கிழக்கிந்தியக் கம்பெனி (East India Company) தனது வணிகம், நிர்வாகம் மற்றும் சட்ட உருவாக்கப் பணிகளை மேற்கொண்டது. இப்பணிகள், கம்பெனியின் சில அதிகாரிகள் அடங்கிய சிறிய குழுவால் அறைகள் அல்லது   மாளிகைகளில் கூடி நடத்தப்பட்டன. காலப்போக்கில், பிரிட்டிஷ் நாடாளுமன்றம் இந்தியாவில் ஆர்வம் காட்டத் தொடங்கியது.


கல்கத்தா பிரிட்டிஷ் நிர்வாகத்தின் தலைமையிடமாக மாறியது. அதன் தலைமைப் பொறுப்பில் கவர்னர் ஜெனரல் இருந்தார். அவருக்கு நான்கு பேர் கொண்ட குழு ஆலோசனை வழங்கியது. பின்னர், ஒரு சட்ட உறுப்பினர் இந்தக் குழுவில் இணைந்தார். பிரிட்டிஷ் அரசாங்கம் மாகாண சபைகளையும் அமைத்தது. ஆனால், 1919-ஆம் ஆண்டு சீர்திருத்தங்களுக்குப் பின்னரே நவீன தேசிய மற்றும் மாகாண சட்டமன்றங்கள் உருவாக்கப்பட்டன. பின்னர், 1921-ல், கன்னாட் பிரபு (Duke of Connaught) புலிகளை வேட்டையாடுவதற்கும், இந்த சீர்திருத்தங்களின்கீழ் அமைக்கப்பட்ட சட்டமன்றங்களைத் தொடங்கி வைப்பதற்கும் வந்தார். அவர் மெட்ராஸ் மற்றும் கல்கத்தாவில் மாகாண சட்டமன்றங்களையும், இறுதியாக டெல்லியில் தேசிய சட்டமன்றத்தையும் தொடங்கி வைத்தார்.


சட்டமன்றங்கள், சட்டமன்ற உறுப்பினர்கள் நடத்தும் ஆழமான மற்றும் தீவிரமான விவாதங்களால் சிறப்பிக்கப்படுகின்றன. மேலும், அந்த விவாதங்கள் நடைபெறும் கட்டிடங்களின் மூலமும் அடையாளம் காணப்படுகின்றன. தமிழ்நாடு சட்டமன்றம் சென்னையில் உள்ள புனித ஜார்ஜ் கோட்டைக்குள் அமைந்துள்ள ஒரு கட்டிடத்தில் கூடுகிறது. இந்த இடத்தின் தனித்துவம், சட்டமன்றமும் நிர்வாகத் துறையும் ஒரே வளாகத்திற்குள் செயல்பட்டு வருவதாகும்.


கோட்டைக்குள், சட்டமன்றக் கட்டிடத்திற்கு அருகில், நாட்டின் மிகப் பழமையான ஆங்கிலிகன் தேவாலயமான புனித மேரி தேவாலயம் அமைந்துள்ளது. எலிஹு யேல், இவரது புத்தகங்கள் மற்றும் பொருட்களின் நன்கொடையால் யேல் கல்லூரிக்கு இவரது பெயர் சூட்டப்பட்டது மற்றும் கிழக்கிந்திய கம்பெனியை ஒரு வர்த்தக நிறுவனத்திலிருந்து ஒரு ஏகாதிபத்திய சக்தியாக மாற்றிய "நிலைத்தன்மையற்ற சமூக விரோத ஆளுமை கொண்டவர்" (unstable sociopath) என்று அழைக்கப்பட்ட ராபர்ட் கிளைவ் ஆகியோரின் திருமணங்கள் இங்கு நடைபெற்றன.


1921-ல், மேற்குவங்க சட்டசபை முதன்முதலில் கல்கத்தாவில் உள்ள புகழ்பெற்ற டவுன் ஹாலில் கூடியது. 10 ஆண்டுகளுக்குப் பிறகு, அது தற்போது பிதான் பவன் (Bidhan Bhavan) என்று அழைக்கப்படும்,  பிரம்மாண்டமான கட்டிடத்திற்கு மாறியது. சட்டசபை எல்லைக்குள் பல பழ மரங்கள், ஒரு நூலகம், ஒரு அருங்காட்சியகம், நூற்றாண்டு பழமையான தீ எச்சரிக்கை பெட்டி மற்றும் ஒரு கோயில் ஆகியவை அமைந்துள்ளன.


மேற்குவங்க சட்டமன்றத்தில், அவையின் அதிகாரத்தைக் குறிக்கும் பிரிட்டிஷ் அரசாங்கம் போன்ற செங்கோல் ஒன்று உள்ளது. அது இன்றும் பயன்பாட்டில் உள்ளது. சட்டமன்ற கூட்டத்தொடரில் இருக்கும் போது சபாநாயகருக்கு முன்னால் அது வைக்கப்படும். அந்தக் கட்டிடத்தில் உள்ள ஒரு ஓவியம், சுதந்திரத்திற்கு முந்தைய ஒரு காட்சியைச் சித்தரிக்கிறது. அதில், காலணியின்றி  சீருடை அணிந்த இந்தியர்கள், காலணிகள் அணிந்திருந்த பிரிட்டிஷ் அதிகாரிகளுக்கு முன்னால் அதிகாரச் சின்னமான ‘சூலாயுதம்’ (Mace) ஏந்திச் செல்வது காட்டப்பட்டுள்ளது. திரிபுரா சட்டமன்றத்திலும் ஒரு ‘சூலாயுதம்’ உள்ளது. 2019-ஆம் ஆண்டு, ஒரு சட்டமன்ற உறுப்பினர் தனது எதிர்ப்பை வெளிப்படுத்தும் அடையாளமாக அந்த சூலாயுதத்தை எடுத்துக்கொண்டு ஓடிச் சென்றார்.


தொழில்நுட்பப் புதுமைகளைப் உருவாக்குவதில் மேற்குவங்க சட்டமன்றம் எப்போதும் முன்னணியில் இருந்து வந்துள்ளது. சுதந்திரம் அடைந்த பிறகு, மேற்குவங்கச் சட்டமன்றம் தனது விவாதங்களைப் ஒலிப்பதிவு செய்யத் தொடங்கியது. சட்டமன்ற நடவடிக்கைகளில் இயந்திர வாக்குப்பதிவு (Machine Voting) முறையை முதன்முறையாக அறிமுகப்படுத்திய மாநிலம்  மேற்குவங்கம் ஆகும். சில ஆரம்பகால சிக்கல்கள் இருந்தபோதிலும், மேற்குவங்க சட்டமன்றத்தில் இந்த முறை வெற்றிகரமாக செயல்பட்டது. வெற்றியைத் தொடர்ந்து, இந்த தொழில்நுட்பம் இந்திய நாடாளுமன்றத்திலும் ஏற்றுக்கொள்ளப்பட்டது. அரசின் செயல்பாடுகளுக்கு பொறுப்புணர்வையும் கண்காணிப்பையும் உறுதி செய்வதற்காக, பல்வேறு துறைகள் தொடர்பான முழுமையான பொருள்-வாரியான குழுக்கள் (Subject Committees) அமைப்பை முதன்முறையாக நடைமுறைப்படுத்தியதும் மேற்குவங்க சட்டமன்றமே ஆகும். பின்னர், இந்த அமைப்பு இந்திய நாடாளுமன்றத்தாலும் பின்பற்றப்பட்டது.


நாட்டின் சட்டமியற்றும் கட்டமைப்பிற்கான புதுமைகளைப் உருவாக்குவதிலும் தமிழ்நாடு சட்டமன்றம் எந்தவகையிலும் பின்தங்கியிருக்கவில்லை. 1921-ஆம் ஆண்டில், அப்போதைய மதராஸ் சட்டமன்றம் பெண்களுக்கு சிலருக்கு தேர்தலில் வாக்களிக்கும் உரிமையை வழங்கியது நாட்டின் முதல் சட்டமன்றமாக தமிழ்நாடு இருந்தது. மேலும், 1927-ஆம் ஆண்டு தமிழ்நாடு அரசு, டாக்டர் S. முத்துலட்சுமி ரெட்டி அவர்களை சட்டமன்ற மேலவைக்கு நியமித்தது.

1960-களில், பொது வாழ்வில் நேர்மையையும் வெளிப்படைத்தன்மையையும் உறுதிப்படுத்தும் நோக்கில், சட்டமன்ற உறுப்பினர்கள் தங்களின் சொத்துகள் மற்றும் கடன்கள் பற்றிய விவரங்களை அறிவிக்க வேண்டும் என்ற விவாதத்தை தீவிரமாக முன்னெடுத்த முதல் சட்டமன்றமாகவும் தமிழ்நாடு சட்டமன்றம் இருந்தது. சட்டமன்றத்தில் அரசியல் மோதல்கள் காரணமாக அவை நடவடிக்கைகளின் பதிவுகள் மாற்றப்பட்ட சம்பவங்கள் ஏற்பட்டபோது, அவற்றின் துல்லியத்தைப் பாதுகாக்கும் வகையில் ஒரு சிறப்பு விதியை தமிழ்நாடு சட்டமன்றம் ஏற்றுக்கொண்டது. அந்த விதியின்படி, ஒருமுறை வெளியிடப்பட்ட சட்டமன்ற நடவடிக்கைகளின் பதிவுகளை சபாநாயகர் (Speaker) அல்லது சட்டமன்றமேகூட பின்னர் மாற்றவோ நீக்கவோ முடியாது. மேலும், மாநில ஆளுநரின் பங்கு குறித்து விவாதிப்பதற்காக, தனது நடைமுறை விதிகளை இரண்டு வெவ்வேறு சூழல்களில் தற்காலிகமாக நிறுத்தி வைத்து விவாதம் நடத்திய ஒரே சட்டமன்றமாக தமிழ்நாடு சட்டமன்றம் இருந்து வருகிறது.தமிழ்நாடு மற்றும் மேற்கு வங்கத்தில் புதிதாகத் தேர்ந்தெடுக்கப்பட்ட சட்டமன்ற உறுப்பினர்கள், நாட்டின் பழமையான மாநிலச் சட்டமன்றங்களில் ஒன்றான தங்கள் மாநில சட்டமன்றங்களில் வரவு-செலவுத் திட்ட கூட்டத்தொடருக்காகக் கூடும்போது, ​​"அமைதி மற்றும் நல்லாட்சிக்கான” (peace and good government) சட்டங்களை இயற்றுதல் என்ற அமைப்புகளின் அடிப்படை நோக்கத்தையே தங்கள் மக்கள் பிரதிநிதிகள் கடைப்பிடிக்க வேண்டும் என்று மாநில மக்கள் எதிர்பார்ப்பார்கள்.


இந்தக் கட்டுரையின் ஆசிரியர், சட்டமன்ற (Legislative) பார்வையில் பல்வேறு பிரச்சினைகளை ஆய்வு செய்து எழுதுபவர் ஆவார். அவர் தற்போதுPRS சட்டமன்ற ஆராய்ச்சி அமைப்பில் பணியாற்றி வருகிறார்.


original article : Inside two of India’s oldest legislatures, a legacy of reforms. -Chakshu Roy

Share: