ஹரப்பாவின் சமூக மற்றும் கலாச்சார வாழ்க்கையைப் புரிந்துகொள்வதற்கு 'நடனமாடும் பெண்' (Dancing Girl) சிலையானது எவ்வாறு உதவுகிறது? - பிரியா குமாரி சுக்லா

 முக்கிய அம்சங்கள்:


• புகழ்பெற்ற வெண்கலச் சிலை தொடர்பான முந்தைய விவாதத்தின்போது, ​​அது நிர்வாணமாகச் சித்தரிக்கப்பட்டிருப்பதாகக் கூறி தேசிய கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றத்தில் இடம்பெற்றிருந்த சில உறுப்பினர்கள் எதிர்ப்புத் தெரிவித்திருந்தனர். ஆனால், அரசில் இடம்பெற்றுள்ள நிபுணர்களில் ஒருவர்  எதிர்ப்பை  ஏற்கவில்லை. இறுதியாக அவரது கருத்தே ஏற்கப்பட்டது. இது போன்ற சூழ்நிலை இருந்தபோதிலும், தற்போது இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.


• தற்போது திருத்தப்பட்ட அந்தப் புகைப்படம், 9-ஆம் வகுப்பிற்கான புதிய கலைக் கல்விப் பாடப்புத்தகமான 'மதுரிமா'வின் (Madhurima) முதல் அத்தியாயமான "கலைகளின் வரலாறு" (History of Arts) என்பதில் இடம்பெற்றுள்ளது. இந்தப் படத்தில், அந்தச் சிலையினுடைய தோள்பட்டையிலிருந்து கீழ்நோக்கிய உடல் பகுதி நிழலால் மறைக்கப்பட்டுள்ளது. இதனால், உண்மையான சிலையின் புகைப்படங்களில் தெளிவாகக் காணப்படும் உடல் அமைப்புகள் மறைக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, அந்தச் சிற்பம் ஆடை அணிந்திருப்பது போன்ற தோற்றத்தை உருவாக்குகிறது.


• இந்தச் சித்தரிப்பு முக்கியத்துவம் வாய்ந்ததாகக் கருதப்படுகிறது. ஏனெனில் “நடனமாடும் பெண்” சிலை, குறைந்தபட்சம் கடந்த 25 ஆண்டுகளாக NCERT பாடப்புத்தகங்களில் இடம்பெற்று வருகிறது. மேலும், தேசிய ஜனநாயகக் கூட்டணி  ஆட்சிக் காலத்தில், மனிதவள மேம்பாட்டு அமைச்சகத்தின் கல்வி அமைச்சராக இருந்த முரளி மனோகர் ஜோஷி பொறுப்பில் இருந்த காலத்திலும் இந்தச் சிலை பாடப்புத்தகங்களில் இடம்பெற்றிருந்தது. இந்தப் பத்திரிகை மேற்கொண்ட முந்தைய பதிப்புகளை ஆய்வு செய்ததில், அந்தச் சிறிய உருவம் நீண்ட காலமாகப் பள்ளிப் பாடப்புத்தகங்களில் இடம்பெற்று வந்தாலும், அதன் உட்புறப்பகுதி இதற்கு முன் ஒருபோதும் மறைக்கப்பட்டிருக்கவில்லை என்பது தெரிய வருகிறது.

• திருத்தப்பட்ட அந்தப் படம், தேசியக் கல்விக் கொள்கை (National Education Policy (NEP)) மற்றும் தேசியப் பாடத்திட்டக் கட்டமைப்பு (National Curriculum Framework (NCF)) ஆகியவற்றின் கீழ், கலைகளை முதன்மைக் கல்வியுடன் ஒருங்கிணைப்பதற்காக 1 முதல் 10-ஆம் வகுப்புகள் வரை அறிமுகப்படுத்தப்பட்ட தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றத்தின் கலைக் கல்வித் தொடரின் ஒரு பாடப்புத்தகத்தில் இடம்பெற்றுள்ளது. இதுவரை 1 முதல் 9-ஆம் வகுப்புகளுக்கான பாடப்புத்தகங்கள் வெளியிடப்பட்டுள்ளன.


• தொல்லியல் ஆய்வாளர்கள் நீண்ட காலமாகவே இந்தச் சிறிய சிலையை, அந்த நாகரிகத்தின் மேம்பட்ட உலோகவியல் அறிவுக்குச் சான்றாகக் கருதி வருகின்றனர். இதன் உண்மையான வடிவம் புது டெல்லியில் உள்ள தேசிய அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது.


• தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றத்தின் புதிய 6-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகங்களுக்கான உருவாக்கக் குழுவிற்குத் தலைமை தாங்கிய வரலாற்றாசிரியர் மைக்கேல் டானினோ, தி இந்தியன் எக்ஸ்பிரஸ் இதழுக்கு அளித்த பேட்டி ஒன்றில் ஒரு தகவலை வெளியிட்டார். அதன்படி, சிந்து சமவெளி நாகரிகம் குறித்த பாடத்தின் முதல் பக்கத்தில் "நடன மங்கை" சிலையை இடம்பெறச் செய்வதற்கு தேசியக் கல்வி ஆராய்ச்சி மற்றும் பயிற்சி மன்றம் எதிர்ப்பு தெரிவித்தது. ஏனெனில், அந்தச் சிலை ஆடையின்றி இருப்பதால் அது "சர்ச்சைக்குரியதாக" மாறக்கூடும் என்று அவர்கள் கருதினர்.


• நடனமாடும் பெண் சிலை அந்த வயது மாணவர்களின் வயதுக்கு ஏற்ற சிலை இல்லை என்றால், அந்தச் சிலையின் உண்மையான வடிவம் அங்கு காட்சிக்கு வைக்கப்பட்டுள்ளதால், அந்த வயதில் இருக்கும் குழந்தைகளை தேசிய அருங்காட்சியகத்திற்கும் அனுமதிக்கக் கூடாது என்று டானினோ கூறியிருந்தார். இந்த ஆலோசனையை அவர் ஆரம்பத்தில் எதிர்த்தாலும், இறுதியாக படத்தின் அளவைக் குறைத்து, அதை அத்தியாயத்தின் தொடக்கப் பக்கத்தில் இருந்து உள்ளே இருக்கும் ஒரு பக்கத்திற்கு மாற்ற அவர் ஒப்புக்கொண்டார். இருப்பினும், அந்தப் படம் பாடப்புத்தகத்தில்  இன்னும் இடம்பெற்றுள்ளது.


• சிலையின் வடிவபகுதிப் மறைக்கப்பட்டதற்கும் நிர்வாணம் குறித்த கவலைகளுக்கும் ஏதேனும் தொடர்பு உள்ளதா என்று கேட்கப்பட்டபோது, ​​NCERT இயக்குநர் தினேஷ் பிரசாத் சக்லானி இல்லை 'தி இந்தியன் எக்ஸ்பிரஸ்' இதழிடம், இதற்குப் பின்னணியில் குறிப்பிட்ட காரணம் ஏதுமில்லை என்று நான் நினைக்கிறேன் என்று கூறினார். 6-ஆம் வகுப்பு சமூக அறிவியல் பாடப்புத்தகத்தில், ஹரப்பா நாகரிகம் தொடர்பான பல கண்டுபிடிப்புகளுடன் 'நடன மங்கை' சிலையும் இடம்பெற்றுள்ளது. ஏனெனில், அதுவும் அத்தகைய கண்டுபிடிப்புகளில் ஒன்றாகும். கலைப் பாடப்புத்தகங்களைப் பொறுத்தவரை, அது தொடர்பான பாடப்புத்தக உருவாக்கக் குழு (Textbook Development Team) (TDT)) உறுப்பினர்களை நீங்கள் தொடர்பு கொள்ளலாம்."


உங்களுக்குத் தெரியுமா?


• சிந்து சமவெளி நாகரிகம் (கி.மு. 3300–1300; அதன் முதிர்ந்த கட்டம் கி.மு. 2600–1900), ஹரப்பா–மொகஞ்சோதாரோ (Harappa-Mohenjodaro Civilisation) நாகரிகம் என்றும் அழைக்கப்படுகிறது. இது 1924-ஆம் ஆண்டு அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் வரை நீண்டகாலம் மறக்கப்பட்டிருந்தது. 19-ஆம் நூற்றாண்டின் தொடக்கத்திலிருந்தே இந்நாகரிகத்தின் தளங்களும் பொருட்களும் அறியப்பட்டிருந்தாலும், 1920-களில்தான் அவை சரியாக கணக்கீடு செய்யப்பட்டு, மெசபடோமியா மற்றும் எகிப்து போன்ற பழமையான நாகரிகங்களுக்கு இணையான முழுமையான நாகரிகமாக அங்கீகரிக்கப்பட்டன.


• இது ஒரு பழமையான நாகரிகம் என்று ஆரம்பத்தில் அங்கீகரிக்கப்பட்ட பிறகு, அதுவரை அறியப்பட்டிருந்த இரண்டு முக்கிய இடங்களான ஹரப்பா மற்றும் மொஹஞ்சதாரோவில் தொடர்ச்சியான அகழ்வாராய்ச்சிகள் மேற்கொள்ளப்பட்டன. அது போன்ற ஒரு அகழ்வாராய்ச்சியின்போது, ​​1926-ஆம் ஆண்டில் பிரிட்டிஷ் தொல்பொருள் ஆராய்ச்சியாளர் ஏர்னஸ்ட் மெக்கே என்பவரால் 'நடனமாடும் மங்கை' சிலை கண்டுபிடிக்கப்பட்டது.


• இந்தியப் பிரிவினைக்குப் பிறகு மொகஞ்சதாரோ மற்றும் ஹரப்பா ஆகியவை பாகிஸ்தான் எல்லைக்குள் அமைந்திருந்தாலும், ஒரு ஒப்பந்தத்தின் அடிப்படையில் 'நடனமாடும் பெண்' (Dancing Girl) சிலை இந்தியாவிலேயே  வைக்கப்பட்டது. இன்று, இந்தச்சிலை இந்தியாவின் தேசிய அருங்காட்சியகத்தில் 'HR-5721/195' என்ற அடையாள எண்ணுடன் காட்சிப்படுத்தப்பட்டுள்ளது. சிந்து சமவெளி நாகரிகக் காட்சிக்கூடத்தில் உள்ள மிக முக்கியமான மற்றும் பார்வையாளர்களை வெகுவாகக் கவரும் ஒரு பொருளாக இது  இருந்து வருகிறது.


• பல ஆண்டுகளாக, தொல்லியல் ஆய்வாளர்களுக்கும் வரலாற்றாசிரியர்களுக்கும் இந்தச்சிலை அதிக ஈர்ப்பை அளித்து வருகிறது. குறிப்பாக, அந்தப் பெண் நிற்கும் தோரணையும் அதன் அர்த்தமும் மிகுந்த ஆர்வத்தை ஏற்படுத்துகின்றன.


வரலாற்றாசிரியர் ரொமிலா தாப்பர் தனது 'The Penguin History of Early India: From Origins to AD 1300' (2002) என்ற நூலில், இந்தச்சிலை "இளம் மற்றும் துடிப்பான பெண்ணின் கவரும் வகையில் தோற்றத்தை" கொண்டிருப்பதாகக் குறிப்பிட்டுள்ளார். அதேபோல், வரலாற்றாசிரியர் ஏ.எல். பாஷம் தனது புகழ்பெற்ற 'The Wonder that was India' (1954) என்ற நூலில், "மற்ற பழமையான நாகரிகங்களின் கலைப்படைப்புகளில் இல்லாத வகையில், இந்தப் பெண் துடிப்பான மற்றும் துணிச்சலான ஒரு தோற்றத்தைக் கொண்டுள்ளார் என்று எழுதியுள்ளார்.


• 1944 முதல் 1948 வரை இந்தியத் தொல்லியல் ஆய்வகத்தின் (Archaeological Survey of India (ASI)) இயக்குநராகப் பணியாற்றிய மோர்டிமர் வீலர், இந்தச் சிறிய சிலையைத் தனக்குப் மிகவும் பிடித்தமானதாகக் குறிப்பிட்டார். அவர், “தன்னைப் பற்றியும் உலகத்தைப் பற்றியும் முழு நம்பிக்கையுடன் நிற்கும் ஒரு பெண். உலகில் அந்த பெண்ணைப் போன்ற வேறு எதுவும் இல்லை என்று நான் நினைக்கிறேன் என்று எழுதியுள்ளார். 1902 முதல் 1928 வரை இந்திய தொல்லியல் ஆய்வு நிறுவனத்தின் தலைமை இயக்குநராக இருந்து, ஹரப்பா மற்றும் மொகஞ்சோதாரோவில் நடைபெற்ற ஆரம்பகால அகழாய்வுகளை மேற்பார்வையிட்ட John Marshall, அந்தச் சிற்பத்தைப் பற்றி இது ஒரு இளம் பெண்ணின் உருவம். அந்தப் பெண் ஒரு கையை இடுப்பில் வைத்துக் கொண்டு, சற்றுத் துணிச்சலான தோரணையில்  நிற்பதாகவும் இசையின் தாளத்துக்கு ஏற்ப தனது கால்கள் மற்றும் பாதங்களால் தாளமிட்டு ஆடுவதைப் போல, அந்தப் பெண்ணினது கால்கள் முன்னோக்கி அமைந்துள்ளதாக  விவரித்தார்.


• இந்த வெண்கலச் சிலையிலிருந்து ஹரப்பா மக்களின் கலைத்திறன் மற்றும் உலோகவியல் தொழில்நுட்பத்தின் மேம்பட்ட நிலையை நாம் அறிந்துகொள்ள முடிகிறது. உலோகக் கலவை மற்றும் 'இழந்த மெழுகு வார்ப்பு முறை' (lost-wax casting) முறை ஆகியவற்றில் அந்த நாகரிகத்திற்கு இருந்த அறிவுக்கு இச்சிலை ஒரு சான்றாகும். "நடனமாடும் பெண்" சிலை, சிந்து சமவெளி நாகரிக மக்களின் உலோகக் கலவை மற்றும் இழந்த மெழுகு வார்ப்பு முறை பற்றிய மேம்பட்ட சான்றாக விளங்குகிறது. இழந்த மெழுகு வார்ப்பு முறை என்பது, முதலில் உருவாக்கப்பட்ட ஒரு சிற்பத்தின் மாதிரியை அடிப்படையாகக் கொண்டு அதே வடிவத்தில் மற்றொரு உலோகச் சிற்பத்தை உருவாக்கும் ஒரு சிக்கலான தொழில்நுட்பமாகும். இந்த முறையின் மூலம் மிக நுணுக்கமான மற்றும் உயர்தர உலோகக் கலைப்பொருட்களை உருவாக்க முடியும்.


• மேலும், 'நடனமாடும் பெண்' போன்ற ஒரு சிலை இருப்பதிலிருந்தே ஹரப்பா சமூகத்தில் உயர்தரக் கலைத்திறன் இருந்ததை அறிய முடிகிறது. கலை மனித இனம் தோன்றிய காலத்திலிருந்தே இருந்திருக்கலாம். ஆனால், அதன் நுட்பமும் மேம்பாடும் ஒரு சமூகத்தின் முன்னேற்ற நிலையை வெளிப்படுத்துகின்றன. மேலோட்டமாகப் பார்க்கையில், அந்த நடனமாடும் சிறுமி ஒரு பயன்பாட்டு நோக்கத்திற்காக உருவாக்கப்பட்ட பொருள் அல்ல. கலைஞர்கள், முற்றிலும் குறியீட்டு மற்றும் அழகியல் மதிப்பு கொண்ட ஒரு கலைப்படைப்பை உருவாக்குவதற்காக அதிக நேரத்தைச் செலவிட்டுள்ளனர்.


original article : How does the Dancing Girl figurine contribute to the understanding of Harappan social and cultural life? -Priya Kumari Shukla

Share: