முக்கிய அம்சங்கள் :
கோவா ஷிப்யார்டு லிமிடெட் (Goa Shipyard Limited (GSL)) நிறுவனத்தால் கட்டப்பட்ட இரண்டு மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பல்களில் முதலாவதான இந்திய கடலோர காவல்படை கப்பல் (Indian Coast Guard Ship (ICGS)) ‘சமுத்திர பிரதாப்’-ஐ (Samudra Pratap) சிங் திங்களன்று கோவாவில் நாட்டுக்கு அர்ப்பணித்தார். கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் விழாவில் பேசிய சிங், “உலகம் தற்போது உலகளாவிய கடல்சார் நிச்சயமற்ற தன்மையின் ஒரு காலகட்டத்தை கடந்து செல்லும் இந்த நேரத்தில், இந்தியா தனது சொந்த நலன்களைப் பாதுகாப்பது மட்டுமல்லாமல், ஒட்டுமொத்த இந்தோ-பசிபிக் பிராந்தியத்திலும் அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்கிறது என்பதை மீண்டும் நிரூபித்துள்ளது. அனைவரையும் ஒன்றிணைத்துச் செல்ல வேண்டும் என்ற இந்தியாவின் தொலைநோக்குப் பார்வையானது, நம்மை ஒரு பொறுப்புள்ள கடல்சார் சக்தியாக அதன் பங்கை பிரதிபலிக்கிறது” என்று அவர் தெரிவித்தார்.
‘சமுத்திர பிரதாப்’ (Samudra Pratap) போன்ற தளங்கள், இந்தியா தனது கடல்சார் பொறுப்புகளைப் புரிந்துகொண்டு அவற்றை நிறைவேற்ற முழுமையாகத் தயாராக உள்ளது என்ற நம்பிக்கையை அளிக்கின்றன என்று சிங் கூறினார்.
‘சமுத்திர பிரதாப்’ கப்பலை நாட்டுக்கு அர்ப்பணிக்கும் இந்த நிகழ்வில், கடல் வளங்கள் எந்த ஒரு நாட்டிற்கும் சொந்தமானவை அல்ல, மாறாக மனிதகுலத்தின் பகிரப்பட்ட பாரம்பரியம் என்று நம்பும் இந்தியாவின் மகத்தான கடல்சார் தொலைநோக்குப் பார்வையுடன் இணைக்கப்பட்டுள்ளது. இந்தப் பாரம்பரியம் பகிரப்படும்போது, அதைப் பாதுகாக்கும் பொறுப்பும் பகிரப்படுகிறது,” என்று அவர் மேலும் கூறினார்.
கப்பல் கட்டுமானம் மற்றும் கடல்சார் திறன் மேம்பாட்டில் இந்தியாவின் தன்னிறைவுக்கான (Aatmanirbharta) தேடலில் இது ஒரு பெரிய முன்னேற்றம் என்று பாராட்டிய அமைச்சர், 60 சதவீதத்திற்கும் அதிகமான உள்நாட்டு உள்ளடக்கத்துடன், இந்திய கடலோர காவல்படை கப்பல் (ICGS) சமுத்திர பிரதாப் இந்தியாவின் முதல் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மாசுக் கட்டுப்பாட்டுக் கப்பல் என்றும், இன்றுவரை கடலோர காவல்படை கடற்படையில் உள்ள மிகப்பெரிய கப்பல் என்றும் கூறினார்.
இந்தக் கப்பல், சிக்கலான உற்பத்தி சவால்களை திறம்பட கையாளும் திறனைக் கொண்ட இந்தியாவின் அனுபவம் வாய்ந்த பாதுகாப்புத் தொழில்துறை சுற்றுச்சூழல் அமைப்பின் ஒரு உருவமாகத் திகழ்கிறது என்று சிங் கூறினார். மேலும், கப்பல்களில் உள்நாட்டு உள்ளடக்கத்தை 90 சதவீதமாக உயர்த்துவதற்கு தொடர்ச்சியான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் குறிப்பிட்டார்.
சமீபத்திய ஆண்டுகளில், கடல் மாசுபாடு ஒரு தீவிரமான உலகளாவிய சவாலாக உருவெடுத்துள்ளது என்று சிங் கூறினார். காலநிலை மாற்றம் மற்றும் புவி வெப்பமடைதல் போன்ற சவால்களுக்கு மத்தியில், கடல்சார் சுற்றுச்சூழல் பாதுகாப்பு என்பது ஒரு இராஜதந்திர ரீதியில் தேவை மட்டுமல்ல, ஒரு தார்மீகப் பொறுப்பும் கூட என்று அவர் கூறினார்.
அனைவரையும் உள்ளடக்கிய மற்றும் பாலினப் பாகுபாடற்ற பணிச்சூழலை நோக்கிச் செல்வதற்கான கடலோர காவல்படையின் முயற்சிகளைப் பாராட்டிய அவர், பெண் அதிகாரிகள் விமானிகள், பார்வையாளர்கள், விமானப் போக்குவரத்துக் கட்டுப்பாட்டாளர்கள், தளவாட அதிகாரிகள் மற்றும் சட்ட அதிகாரிகளாக நியமிக்கப்படுவதும், ஹோவர்கிராப்ட் செயல்பாடுகளுக்குப் (hovercraft operations) பயிற்சி அளிக்கப்பட்டு, முன்னணி நடவடிக்கைகளில் பணியமர்த்தப்படுவதும் பெருமைக்குரிய விஷயம் என்றார். “இந்திய கடலோர காவல்படை கப்பல் (ICGS) சமுத்திர பிரதாப் கப்பலில் நியமிக்கப்பட்டுள்ள இரண்டு பெண் அதிகாரிகள் எதிர்கால சந்ததியினருக்கு முன்மாதிரியாகத் திகழ்கின்றனர்,” என்று அவர் மேலும் கூறினார்.
உங்களுக்குத் தெரியுமா? :
ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான மாநாடு (United Nations Convention on the Law of the Sea(UNCLOS)) என்பது ஒரு விரிவான சர்வதேசச் சட்டமாகும். இது உலகின் அனைத்துப் பகுதிகளிலும் உள்ள கடல்கள் மற்றும் பெருங்கடல்களில் சட்டப்பூர்வமான நடத்தை மற்றும் அவற்றின் பயன்பாட்டிற்கான பரந்த கட்டமைப்பு விதிகளை வகுக்கிறது. இது பெருங்கடல்களில் மேற்கொள்ளப்படும் நடவடிக்கைகள் தொடர்பான நாடுகளின் உரிமைகள் மற்றும் கடமைகளை இது வரையறுக்கிறது. மேலும் இறையாண்மை, போக்குவரத்து உரிமைகள் மற்றும் பிரத்யேக பொருளாதாரப் பயன்பாட்டு உரிமைகள் போன்ற சிக்கல்களையும் கையாள்கிறது. பிராந்திய நீர்ப்பரப்புகள் மற்றும் பிரத்யேக பொருளாதார மண்டலங்களின் (Exclusive Economic Zones (EEZ)) எல்லை நிர்ணயங்கள் ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான மாநாட்டின் (UNCLOS) விளைவாகும்.
ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான மாநாட்டின்படி (UNCLOS), பிராந்தியக் கடல் (territorial sea (TS)) என்பது ஒரு நாட்டின் கடற்கரையின் அடிப்பகுதியில் இருந்து 12 கடல் மைல்கள் வரை பரவியிருக்கும் ஒரு பகுதியாகும். பிரத்யேக பொருளாதார மண்டலத்திற்கும் (EEZ), பிராந்தியக் கடலுக்கும் (TS) உள்ள வேறுபாடு என்னவென்றால், ஒரு நாடு பிராந்தியக் கடலுக்குள் உள்ள நீர்ப்பரப்பின் மீது முழுமையான இறையாண்மையைக் கொண்டுள்ளது. அதேசமயம், பிரத்யேக பொருளாதார மண்டலத்தைப் பொறுத்தவரை, கடலின் மேற்பரப்பிற்குக் கீழே உள்ள பொருட்களின் மீது மட்டுமே அந்த நாடு பிரத்யேக இறையாண்மைப் பொருளாதார உரிமைகளைக் கொண்டுள்ளது.
ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான மாநாடுகளானது (UNCLOS) கடல் வளங்களை சமமான முறையில் அணுகுவதற்கும் பயன்படுத்துவதற்கும், மற்றும் பல்லுயிர் மற்றும் கடல் சூழலியலைப் பாதுகாப்பதற்கும், பேணுவதற்கும் பொதுவான கொள்கைகளை வகுக்கிறது. ஆனால், இந்த நோக்கங்களை எவ்வாறு அடைய வேண்டும் என்பதை அது குறிப்பிடவில்லை. இங்குதான் உயர் கடல் ஒப்பந்தம் முக்கியத்துவம் பெறுகிறது. பாரிஸ் ஒப்பந்தம் ஐக்கிய நாடுகளின் காலநிலை மாற்றத்திற்கான கட்டமைப்பு மாநாட்டின் (UN Framework Convention on Climate Change (UNFCCC)) கீழ் செயல்படுவதைப் போலவே, உயர் கடல் ஒப்பந்தமும் ஐக்கிய நாடுகளின் கடல் சட்டம் தொடர்பான மாநாட்டின் (UNCLOS) கீழ் ஒரு செயலாக்க ஒப்பந்தமாகச் செயல்படும்.
Original Article : About the Indian Coast Guard Ship (ICGS) ‘Samudra Pratap’.-Khushboo Kumari , Roshni Yadav