மேற்கு வங்க வாக்காளர் பட்டியல் சிறப்புத் தீவிர திருத்தம் (SIR): 2002-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் இணைக்கப்படாத சுமார் 30 லட்சம் வாக்காளர்கள், விசாரணைக்கு அழைக்கப்பட வாய்ப்புள்ளது.

மேற்கு வங்காளத்தில் "சேகரிக்க முடியாத" வாக்காளர் படிவங்களின் எண்ணிக்கை 58 லட்சத்திற்கும் அதிகமாக உயர்ந்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. இதில் டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி நிலவரப்படி இறந்ததாக அடையாளம் காணப்பட்ட சுமார் 24.2 லட்சம் பேர் அடங்குவர்.


மேற்கு வங்காளத்தில் சுமார் 30 லட்சம் வாக்காளர்களை 2002-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலுடன் ஒப்பிட முடியவில்லை. வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, அவர்களுக்கு விசாரணைக்கு அழைப்பு விடுக்கப்பட வாய்ப்புள்ளது என்று தலைமை தேர்தல் அதிகாரி அலுவலகம் தெரிவித்துள்ளது. இந்தத் தகவலானது, சிறப்புத் தீவிர திருத்தப் பணியின் (Special Intensive Revision exercise) கணக்கெடுப்பு கட்டத்தின் இறுதி நாளான டிசம்பர் மாதம் 11-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு வெளியானது.


இது, கடந்த அக்டோபர் மாதம் 27-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு நிலவரப்படி, மாநிலத்தின் வாக்காளர் பட்டியலில் உள்ள 7.6 கோடி வாக்காளர்களில் சுமார் 4 சதவீதம் ஆகும். வரைவுப் பட்டியல் வெளியிடப்பட்ட பிறகு, கூடுதல் காரணிகளைப் பொறுத்து, இந்த எண்ணிக்கை உயர வாய்ப்புள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.


சிறப்புத் தீவிர திருத்தக் கணக்கெடுப்புப் பணியின் கடைசி நாளான டிசம்பர் மாதம்  11-ஆம் தேதி வரை சேகரிக்கப்பட்ட தரவுகளின் அடிப்படையில் இந்த புள்ளிவிவரங்கள் சுட்டிக்காட்டப்பட்டுள்ளன.


மேற்கு வங்கத்தில், தகுதி இல்லாத வாக்காளர்களின் 'சேகரிக்க முடியாத' படிவங்களின் எண்ணிக்கை 57.5 லட்சத்தைத் தாண்டியது, அதில் இறந்த வாக்காளர்களின் எண்ணிக்கை 24 லட்சத்திற்கு மேல் உள்ளது.


இதற்கிடையில், 29.3 லட்சம் வாக்காளர்கள் (38.32%) 2002-ஆம் ஆண்டு வாக்காளர் பட்டியலில் தங்களது பெயர்களை இணைத்துள்ளனர். மேலும், 38.4 லட்சம் வாக்காளர்கள் (50.18%) கணக்கெடுப்பின்போது தங்களது பெற்றோர் அல்லது தாத்தா பாட்டியின் பெயர்களுடன் தங்களை இணைத்துள்ளனர். இருப்பினும், இந்த குடும்ப இணைப்புகள் சரிபார்க்கப்பட்டு, ஏதேனும் பிழைகள் இருந்தால் அகற்றப்படும் என்று தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக அதிகாரிகள் தெரிவித்தனர்.


வியாழக்கிழமை டிசம்பர் மாதம்  11-ஆம் தேதி, 2025 நிலவரப்படி, மேற்கு வங்காளத்தில் 58 லட்சத்திற்கும் அதிகமான வாக்காளர் படிவங்கள், வாக்காளர்கள் இல்லாதவர்கள்,  இடம்பெயர்ந்தவர்கள், அல்லது இறந்த வாக்காளர்கள் போன்ற காரணங்களால் "சேகரிக்க முடியாதவை" என்று வகைப்படுத்தப்பட்டுள்ளன. சுமார் 24.2 லட்சம் வாக்காளர்கள் இறந்தவர்களாகவும், ஏறக்குறைய 2 லட்சம் பேர் இடம் மாறியவர்களாகவும், சுமார் 1.4 லட்சம் பேர் போலி வாக்காளர்களாகவும் அடையாளம் காணப்பட்டுள்ளனர் என்று தரவுகள் தெரிவிக்கின்றன.


மேற்கு வங்காளத்தின் நதியாவில் வாக்காளர் அட்டைகள் குப்பையாகக் கிடந்தது கண்டுபிடிக்கப்பட்டது


தலைமை நிர்வாக அதிகாரியின் (CEO) அலுவலக வட்டாரங்கள், 2002-ஆம் ஆண்டுப் பட்டியலில் வாக்காளர்களின் புகைப்படங்கள் மற்றும் குடும்ப இணைப்புகளில் உள்ள போலி வாக்காளர் பதிவுகளைக் கண்டறியவும் மற்றும் முரண்பாடுகளைச் சரிபார்க்கவும் செயற்கை நுண்ணறிவு (Artificial Intelligence) பயன்படுத்தப்பட்டு வருவதாகத் தெரிவித்தன.


வியாழக்கிழமை (டிசம்பர் 11-ஆம் தேதி, 2025 அன்று, மேற்கு வங்க தலைமை நிர்வாக அதிகாரி (CEO) மனோஜ் குமார் அகர்வால், மாநிலம் முழுவதும் உள்ள மாவட்ட தேர்தல் அதிகாரிகளிடம் இருந்து, 250 வீடுகளுக்கு மேலேயோ அல்லது 500 வாக்காளர்களுக்கு மேலேயோ உள்ள உயரமான கட்டிடங்கள், குழும வீட்டுவசதி சங்கங்கள் மற்றும் குடிசைப் பகுதிகள் குறித்து அறிக்கை கோரப்பட்டுள்ளதாகத் தெரிவித்தார். மேலும், அங்கே புதிய வாக்குச்சாவடிகள் அமைக்க முன்மொழியப்படலாம் என்று தெரிவித்தார்.


குறிப்பிடத்தக்க வகையில், ஒரு நாள் முன்பு, உயரமான கட்டிடங்கள் மற்றும் குடிசைப் பகுதிகளின் கணக்கெடுப்பின் அடிப்படையில் மேற்கு வங்காளத்தில் வாக்குச்சாவடிகளை மறுசீரமைக்கும் முன்மொழிவை சமர்ப்பிக்க தாமதம் ஏற்பட்டதால், தேர்தல் ஆணையம் மாநில தலைமை நிர்வாக அதிகாரிக்கு (CEO) அறிவிப்பு வெளியிட்டது. முன்மொழிவை ஒப்புதலுக்கு அனுப்ப டிசம்பர் மாதம்  31-ஆம் தேதி கடைசித் தேதியாகவும், வாக்குச்சாவடிகளை மறுசீரமைப்புப் பணிகளை முடிக்க 2026-ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7-ஆம் தேதியைக்  கெடுவாகவும் ஆணையம் நிர்ணயித்துள்ளது குறிப்பிடத்தக்கது.


வியாழன் அன்று (டிசம்பர் 11, 2025), மாநில தேர்தல் அதிகாரிகள் 2026-ஆம் ஆண்டு மேற்கு வங்க சட்டமன்றத் தேர்தலுக்கான பாதுகாப்பு குறித்து விவாதிக்க மூத்த சட்ட அமலாக்க அதிகாரிகளைச் சந்தித்தனர். தலைமை தேர்தல் அதிகாரி அலுவலக வட்டாரங்கள், பாதுகாப்பு ஏற்பாடுகள், முகமை ஒருங்கிணைப்பு மற்றும் கடந்த கால தேர்தல் பாதுகாப்பு தரவுகள் குறித்த அறிக்கைகள் கோரப்பட்டதாகத் தெரிவித்தன.

Original link:

West Bengal SIR: Around 30 lakh electors unmapped to 2002 list, likely to be called for hearing


Share: