இந்தியா-ஜப்பான் உறவுகளை வளர்த்தல் -சந்திரஜித் பானர்ஜி

 இருநாடுகளின் ஒத்துழைப்பு பாரம்பரியத் துறைகளைக் கடந்துசெல்ல வேண்டும்.


இந்தியா-ஜப்பான் உறவு குறிப்பிடத்தக்க அளவில் வலுவடைந்துள்ளது. காலப்போக்கில், இது ஒரு வழக்கமான இருதரப்பு கூட்டமைப்பிலிருந்து ஒரு சிறப்பு உத்திசார் மற்றும் உலகளாவிய கூட்டமைப்பாக உருவெடுத்துள்ளது. ஜப்பானியப் பிரதமர் சானே டகாயிச்சி (Sanae Takaichi) இந்தியாவிற்கு வருகை தந்துள்ள நிலையில், இந்த இருதரப்பு கூட்டாண்மையின் நுணுக்கங்களைப் புரிந்துகொள்வது முன்னெப்போதையும் விட மிகவும் முக்கியமானதாகிறது.


இந்தக் கூட்டமைப்பின் ஒரு முக்கிய அம்சம், இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு, குறிப்பாக உள்கட்டமைப்பு நவீனமயமாக்கலில், ஜப்பான் ஆற்றியுள்ள குறிப்பிடத்தக்க பங்களிப்பாகும். இன்றுவரை சுமார் 53 பில்லியன் டாலர் மதிப்பிலான விரிவான அதிகாரப்பூர்வ மேம்பாட்டு உதவி (Official Development Assistance (ODA)) மற்றும் சுமார் 100 திட்டங்கள் செயல்பாட்டில் உள்ளதன் மூலம், எரிசக்தி, போக்குவரத்து மற்றும் சுற்றுச்சூழல் போன்ற இந்தியாவின் முன்னுரிமைத் துறைகளுக்கும், அடிப்படை மனிதத் தேவைகளைப் பூர்த்தி செய்யும் முயற்சிகளுக்கும் ஆதரவளிப்பதில் ஜப்பான் ஒரு முக்கியப் பங்காற்றியுள்ளது. மேலும், இந்தியா-ஜப்பான் கூட்டமைப்பு புத்தாக்கம், தொழில்நுட்பப் பரிமாற்றம் மற்றும் நிலையான வளர்ச்சி ஆகியவற்றையும் வளர்த்து வருகிறது.


மேம்பாட்டிற்கான வாய்ப்பு


2025-26 நிதியாண்டில் நமது இருதரப்பு வர்த்தகம் 27.47 பில்லியன் டாலர்களை எட்டியிருந்தாலும், இந்தியா-ஜப்பான் வர்த்தக உறவை இன்னும் சிறப்பாகப் பயன்படுத்திக்கொள்ள வாய்ப்புள்ளது. இரு நாடுகளுக்கும் புதிய வாய்ப்புகளையும் நன்மைகளையும் உருவாக்கக்கூடிய விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒப்பந்தத்தை (Comprehensive Economic Partnership Agreement (CEPA)) மறுபேச்சுவார்த்தை செய்வது முன்னேற்றத்திற்கான ஒரு முக்கியப் பகுதியாகும்.

இருப்பினும், தற்போதைய புவிசார் அரசியல் நிச்சயமற்றத் தன்மைகளுக்கு மத்தியில், நமது இராஜதந்திரரீதியில் ஒத்துழைப்புக்கான பாரம்பரிய துறைகளைத் கடந்துச் செல்ல வேண்டும்.


முதலாவதாக, எதிர்கால இந்தியா-ஜப்பான் ஒத்துழைப்பிற்கு குறைக்கடத்திகள் (semiconductors) ஒரு முக்கிய பகுதியாக விளங்குகின்றன. மேம்பட்ட தொழில்நுட்பங்கள் உலகப் பொருளாதாரத்தில் மேலும் முக்கியமானதாகி வருவதால், குறைமின்கடத்தி உற்பத்தி மற்றும் விநியோகச் சங்கிலியின் மீள்தன்மை ஆகியவை இராஜதந்திரரீதியில் முக்கியத்துவத்தைப் பெற்றுள்ளன. டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் மின்னணு உற்பத்தியில் இந்தியாவின் பலம், மேம்பட்ட உற்பத்தி மற்றும் புத்தாக்கத்தில் ஜப்பானின் நிபுணத்துவத்தைப் பெறுகிறது.


குறைக்கடத்தி சூழல் அமைப்புகள் (semiconductor ecosystems), ஆராய்ச்சி, முதலீடு மற்றும் திறன் மேம்பாடு ஆகியவற்றில் மேற்கொள்ளப்படும் கூட்டு முயற்சிகள், இரு நாடுகளும் பாதுகாப்பான மற்றும் நம்பகமான உலகளாவிய தொழில்நுட்ப விநியோகச் சங்கிலிகளை உருவாக்க உதவும்.


இரண்டாவதாக, முக்கிய கனிமங்கள் இந்தியா-ஜப்பான் ஒத்துழைப்பின் மற்றொரு வளர்ந்துவரும் மையமாக உள்ளது. முக்கிய கனிமங்களின் ஆய்வு, பதப்படுத்துதல், மறுசுழற்சி மற்றும் நிலையான வள மேலாண்மை ஆகியவற்றில் ஒத்துழைப்பதன் மூலம், இந்தியாவும் ஜப்பானும் பிராந்திய மற்றும் உலக அளவில் பொருளாதாரப் பாதுகாப்பை வலுப்படுத்தவும், தூய்மையான எரிசக்திக்கு மாறுவதற்கு ஆதரவளிக்கவும் முடியும்.


மூன்றாவதாக, தொழில்நுட்பமும் செயற்கை நுண்ணறிவும் மேம்பட்ட ஒத்துழைப்பிற்கான புதிய வாய்ப்புகளை வழங்குகின்றன. இந்தியாவின் விரிவடைந்து வரும் டிஜிட்டல் சூழலமைப்பும் திறமையான பணியாளர்களும், ஜப்பானின் தொழில்நுட்பத் திறன்களையும் ஆராய்ச்சி நிபுணத்துவத்துடன் இணைந்து, செயற்கை நுண்ணறிவு, ரோபோட்டிக்ஸ், இணையப் பாதுகாப்பு மற்றும் மேம்பட்ட டிஜிட்டல் தீர்வுகள் ஆகியவற்றில் ஒத்துழைப்பிற்கான ஒரு வலுவான அடித்தளத்தை உருவாக்க முடியும்.


நான்காவதாக, இணைப்பு என்பது இந்தியா-ஜப்பான் ஒத்துழைப்பின் ஒரு வரையறுக்கும் அம்சமாகும். உயர்தர உள்கட்டமைப்பு, போக்குவரத்து வலைப்பின்னல்கள், டிஜிட்டல் இணைப்புத்திறன் மற்றும் பிராந்திய ஒருங்கிணைப்பு ஆகியவை ஆசியா முழுவதும் பொருளாதார உறவுகளை வலுப்படுத்த உதவுகின்றன.


ஐந்தாவதாக, இளைஞர்களுக்கு அதிகாரம் அளிப்பது இந்தக் கூட்டமைப்பின் எதிர்கால வெற்றிக்கு மிகவும் முக்கியமானது. இந்தியாவிலும் ஜப்பானிலும் உள்ள பல்கலைக்கழகங்கள், தொழில்துறைகள் மற்றும் ஆராய்ச்சி நிறுவனங்களுக்கு இடையேயான அதிகரித்த ஒத்துழைப்பு, இளம் தொழில் வல்லுநர்கள், புதுமைப் படைப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோருக்கு புதிய பாதைகளைத் திறக்க முடியும்.


ஆறாவதாக, இந்தோ-பசிபிக் பிராந்தியம் உலகளாவிய பொருளாதார மற்றும் இராஜதந்திரரீதியில் நடவடிக்கைகளின் மையமாக உருவெடுத்துவரும் நிலையில், மேலும் மீள்திறன் மிக்க, பாதுகாப்பான மற்றும் செழிப்பான ஒரு பிராந்திய ஒழுங்கை வடிவமைப்பதற்கு இந்தியாவும் ஜப்பானும் தனித்துவமான நிலையில் உள்ளன. நமது இரு பொருளாதாரங்களும் சர்வதேச விதிகளால் நிர்வகிக்கப்படும் ஒரு அமைதியான, நிலையான மற்றும் செழிப்பான பிராந்தியத்தை நோக்கமாகக் கொண்டுள்ளன. குவாட் (Quad) போன்ற தளங்கள் மூலமான நமது ஒத்துழைப்பு, பொதுவான சவால்களை எதிர்கொள்வதற்கான நமது உறுதிப்பாட்டை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.


இந்தியா-ஜப்பான் கூட்டாண்மையின் அடுத்த அத்தியாயம், பகிரப்பட்ட இராஜதந்திரரீதியில் பலன்களால் மட்டுமல்லாமல், அந்த ஒருங்கிணைப்பை வலுவான பொருளாதார, தொழில்நுட்ப மற்றும் மக்கள்சார்ந்த ஒத்துழைப்பாக மாற்றும் இருநாடுகளின் திறனாலும் வரையறுக்கப்படும்.


கட்டுரையாளர் இந்தியத் தொழில் கூட்டமைப்பின் தலைமை இயக்குநர் ஆவார்.


Original article : Fostering India-Japan ties. -Chandrajit Banerjee

Share: