இந்தியா விரைவான விஷம் கண்டறியும் பரிசோதனை முறைகளை (venom detection diagnostics) உருவாக்க வேண்டும்.
பாம்புகள் புறவெப்ப உயிரினங்கள், எனவே அவற்றின் உடல் வெப்பநிலை சுற்றுச்சூழலைப் பொறுத்து அமைகிறது. இதனால், வழக்கத்தைவிட வெப்பமான கோடைக்காலம் கொண்டுள்ளதால், சிகிச்சையில் முடிவெடுப்பதில் உள்ள சிரமங்கள் மற்றும் மருத்துவ உள்கட்டமைப்பில் உள்ள குறைபாடுகள் ஆகியவற்றில், கேரளாவில் பாம்புக்கடியால் ஏற்படும் அனைத்து மரணங்களையும் பாம்பு விஷமுறிவு மருந்து (anti-snake venom (ASV)) கிடைப்பதன் மூலம் தடுக்க முடியாத ஒரு சூழ்நிலைக்கு வழிவகுத்துள்ளது. வெப்பத்தின் காரணமாக பாம்புகள் குளிர்ச்சியான, ஈரமான இடங்களைத் தேடிச் செல்கின்றன. அதாவது, விறகுகள் மற்றும் தேங்காய் மட்டைகள் உள்ள வீடுகள் மற்றும் சேமிப்புக் கிடங்குகள் போன்றவை ஆகும். மேலும், இந்த மாநிலம் அடர்த்தியான தாவரங்கள் நிறைந்ததாகவும், மனித-வனவிலங்கு வாழிடங்கள் கணிசமான அளவில் இடையிடையே ஒரு பெரிய தொடர்பு உள்ளது. பருவமழைக்கு முந்தைய ஏப்ரல்-மே மாதங்கள் பல விஷப் பாம்புகளுக்குப் இனப்பெருக்கக் காலமாகவும் இருப்பதால், அவை அதிகமாக நடமாடுவதோடு தற்காப்பு நடவடிக்கைகளிலும் ஈடுபட முனைகின்றன. இருப்பினும், பாம்புக்கடி நிகழ்வுகளில் சுமார் 70% விஷமற்ற இனப் பாம்புகளால் ஏற்படுகின்றன. மீதமுள்ளவற்றில் ஏறக்குறைய பாதி, விஷம் செலுத்தப்படாத உலர் கடிகளாகும். இதனால், கணிசமான எண்ணிக்கையிலான நோயாளிகளுக்கு பாம்பு விஷமுறிவு மருந்து (anti-snake venom (ASV)) தேவைப்படுவதில்லை. பாம்பு விஷமுறிவு மருந்தை (ASV) கண்மூடித்தனமாக வழங்குவதற்கு எதிராக மிகுந்த கவனம் தேவை. ஏனெனில், இந்த சேர்மங்கள் உயிரிழப்பை ஏற்படுத்தக்கூடிய தீவிர ஒவ்வாமை எதிர்வினைகளையும் (anaphylactic reactions) தூண்டக்கூடும். அதேநேரத்தில், இந்தியாவில் ஒரு நோயாளியின் இரத்தத்தில் உள்ள விஷத்தைக் கண்டறிய வணிகரீதியாகக் கிடைக்கும் கண்டறியும் கருவி எதுவும் இல்லை. மேலும், நோயறிதல் முற்றிலும் அறிகுறிகளை அடிப்படையாகக் கொண்டே செய்யப்படுகிறது. அறிகுறிகள் தோன்றும் நேரத்திற்குள், விஷம் ஏற்கனவே திசுக்களை மீளமுடியாதபடி சேதப்படுத்தியிருக்கக்கூடும் என்பதால், இந்த நோய்க்குறி அடிப்படையிலான அணுகுமுறையை இந்திய மருத்துவ ஆராய்ச்சிக் கழகம் (ICMR) ஒரு அமைப்புரீதியான குறைபாடு என்று குறிப்பிட்டுள்ளது. தீவிர சிகிச்சைப் பிரிவு படுக்கைகளின் பற்றாக்குறை, செயற்கை சுவாசக் கருவிகளின் மாற்று ஏற்பாடுகள் இல்லாமை, தீவிர ஒவ்வாமை எதிர்வினையைக் கையாள்வதில் போதிய பயிற்சி இல்லாமை மற்றும் கண்காணிப்பிற்கான வரையறுக்கப்பட்ட ஆய்வக ஆதரவு ஆகியவற்றுடன் சேர்ந்து, இந்த அணுகுமுறையானது, விஷ எதிர்ப்பு மருந்து கிடைப்பதன் நன்மைகளை ஈடுசெய்துள்ளது.