மாநிலங்களவைத் தேர்தல்கள் ஏன் முக்கியமானது? -குஷ்பூ குமாரி

 தற்போதைய செய்தி?


இந்திய தேர்தல் ஆணையம் புதன்கிழமை, 37 மாநிலங்களவை இடங்களுக்கான அறிவிப்பை வெளியிட்டது. மார்ச் 16-ஆம் தேதி வாக்குப்பதிவு மற்றும் வாக்கு எண்ணிக்கை திட்டமிடப்பட்டுள்ளது. 37 மாநிலங்களவை உறுப்பினர்களின் பதவிக்காலம் ஏப்ரல் மாதத்தில் முடிவடைகிறது.


பதவிக்காலம் முடிவடையும் நாடாளுமன்ற உறுப்பினர்களில், மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஏழு பேர், தமிழ்நாட்டைச் சேர்ந்த ஆறு பேர், மேற்கு வங்கம் மற்றும் பீகாரைச் சேர்ந்த தலா ஐந்து பேர், ஒடிசாவைச் சேர்ந்த நான்கு பேர், அசாமில் இருந்து மூன்று பேர், சத்தீஸ்கர், ஹரியானா மற்றும் தெலுங்கானாவைச் சேர்ந்த தலா இரண்டு பேர் மற்றும் இமாச்சலப் பிரதேசத்தைச் சேர்ந்த ஒருவர் அடங்குவர்.


முக்கிய அம்சங்கள்:


1. மாநிலங்களவையில் 245 இடங்கள் உள்ளன. இது ஒரு நிரந்தர ஆகும். இந்த அவையை கலைக்க முடியாது. அவை நடவடிக்கைகளை உறுதி செய்வதற்காக, உறுப்பினர்களில் மூன்றில் ஒரு பங்கு உறுப்பினர்கள் ஒவ்வொரு இரண்டு வருடங்களுக்கும் பிறகு, அரசியலமைப்பின் பிரிவு 83(1)-ன் கீழ் ஓய்வு பெறுகிறார்கள். மேலும், இந்த காலியிடங்களை நிரப்ப "இரண்டு ஆண்டுகளுக்கு ஒரு முறை தேர்தல்கள்" (biennial elections) நடத்தப்படுகின்றன. ஒரு உறுப்பினரின் பதவிக்காலம் ஆறு ஆண்டுகள் ஆகும்.


2. 245 உறுப்பினர்களில், 12 உறுப்பினர்கள் குடியரசுத்தலைவரால் பரிந்துரைக்கப்படுகிறார்கள். மீதமுள்ள, 233 உறுப்பினர்கள் டெல்லி மற்றும் புதுச்சேரி மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் பிரதிநிதிகள் ஆவார். ராஜினாமா, மரணம் அல்லது தகுதியிழப்பு காரணமாக ஏற்படும் காலியிடங்கள் இடைத்தேர்தல்கள் மூலம் நிரப்பப்படுகின்றன. இவ்வாறு தேர்ந்தெடுக்கப்பட்டவர்கள், தங்களுக்கு முன்பு அந்தப் பதவியில் இருந்த உறுப்பினரின் மீதமுள்ள பதவிக் காலத்தை நிறைவு செய்வார்கள்.


3. பிரிவு 80(3)-ன் கீழ், பரிந்துரைக்கப்பட்ட 12 உறுப்பினர்கள் இலக்கியம், அறிவியல், கலை போன்ற விவகாரங்களில் நிபுணத்துவம் அல்லது நடைமுறை அனுபவம் பெற்றிருக்க வேண்டும். பரிந்துரைக்கப்பட்ட உறுப்பினர் ஒருவர் பதவியேற்ற ஆறு மாதங்களுக்குள் ஒரு கட்சியில் சேரலாம்.


4. மாநிலங்களவைத் தேர்தலில் போட்டியிடும் எந்த ஒரு நபரும் இந்திய குடிமகனாகவும் 30 வயதுக்குக் குறையாதவராகவும் இருக்க வேண்டும். நாடாளுமன்றத்தால் இயற்றப்பட்ட சட்டத்தால் பரிந்துரைக்கப்படும் பிற தகுதிகளைக் அந்த நபர் பெற்றிருக்க வேண்டும்.


5. இந்தியாவில் எந்த  ஒரு நாடாளுமன்றத் தொகுதியில் உள்ள வாக்காளர்கள் தேர்தலில் போட்டியிடலாம். முன்னதாக, ஒரு மாநிலத்தைச் சேர்ந்த பூர்வீகக் குடிமக்கள் மட்டுமே மாநிலங்களவைத் தேர்தல்களில் போட்டியிட முடியும். குல்தீப் நாயர் vs இந்திய ஒன்றிய (Kuldip Nayar v. Union of India case) வழக்கில் உச்ச நீதிமன்றத்தால் உறுதி செய்யப்பட்ட 1951-ஆம் ஆண்டு மக்கள் பிரதிநிதித்துவச் சட்டத்தில் 2003-ஆம் ஆண்டு திருத்தம் இந்தக் கட்டுப்பாட்டை நீக்கியது.


6. மாநிலங்களவையில் இடம்பெற்றுள்ள நாடாளுமன்ற உறுப்பினர்கள்  மறைமுகத் தேர்தல் மூலம் சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள். பிரிவு 80(4)-ன்படி, மாநிலங்களவை உறுப்பினர்கள் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில சட்டமன்ற உறுப்பினர்களால் விகிதாசார பிரதிநிதித்துவத்தைப் (proportional representation) பயன்படுத்தி ஒற்றை மாற்றத்தக்க வாக்கு (single transferable vote) மூலம் தேர்ந்தெடுக்கப்படுகிறார்கள்.


7. அரசியலமைப்பின் 4-வது அட்டவணை, ஒவ்வொரு மாநிலத்தின் மக்கள்தொகையின் அடிப்படையில் மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்கு மாநிலங்களவை இடங்களை ஒதுக்குவதற்கு வழிவகை செய்கிறது. உதாரணமாக, உத்தரபிரதேசத்தில் 31 மாநிலங்களவை இடங்களும், கோவாவில் 1 இடமும் உள்ளன. காலியிடங்களை விட அதிகமான வேட்பாளர்கள் இருக்கும் இடங்களில் தேர்தல்கள் நடத்தப்படுகின்றன. இல்லையெனில், வேட்பாளர்கள் போட்டியின்றி தேர்ந்தெடுக்கப்படுவார்கள்.


8. ஒரு வேட்பாளருக்குத் தேவையான வாக்குகளின் எண்ணிக்கை காலியிடங்களின் எண்ணிக்கை மற்றும் அவையின் பலத்தைப் பொறுத்து இருக்கும். ஒரே ஒரு காலியிடம் இருந்தால், தேர்தல் ஆணையத்தின் தேர்தல் நடத்தை விதிகள், 1961-ன் கீழ் தேவையான ஒதுக்கீடு, பதிவான வாக்குகளின் எண்ணிக்கையை எடுத்து, அதை 2-ஆல் வகுத்து, 1-ஐக் கூட்டுவதன் மூலம் கணக்கிடப்படுகிறது. உதாரணமாக, ஒரு சட்டமன்றத்தில் 100 வாக்குகள் பதிவானால், மாநிலங்களவை வேட்பாளருக்குத் 

100/2 + 1 = 51 வாக்குகள் தேவைப்படும்.


9. ஒன்றுக்கு மேற்பட்ட காலியிடங்கள் இருந்தால், ஒவ்வொரு முதல் விருப்ப வாக்குக்கும் 100 மதிப்பு வழங்கப்படும். அனைத்து வேட்பாளர்களும் பெற்ற வாக்குகளின் மொத்த மதிப்பு ஒன்றாகக் கூட்டப்பட்டு, பின்னர் காலியிடங்களின் எண்ணிக்கையை விட ஒன்றால் வகுக்கப்பட்டு, இறுதியாக 1 முடிவோடு சேர்க்கப்படும்.


உதாரணமாக, ஒரு சட்டமன்ற உறுப்பினர் 100 பேர் 3 மாநிலங்களவை காலியிடங்களுக்கு வாக்களித்தால், எந்தவொரு வேட்பாளருக்கும் தேவைப்படும் ஒதுக்கீடு (100 × 100)/(3 + 1) + 1 = 2501 ஆகும்.


எந்தவொரு இடத்திற்கும், வேட்பாளர்கள் குறிப்பிட்ட எண்ணிக்கையைப் பெறத் தவறினால், இரண்டாம் முன்னுரிமை வாக்குகள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்படும். ஆனால், அவை குறைந்த மதிப்புடன் இருக்கும். 


10. குறிப்பாக, மக்களவை உறுப்பினராக இருக்கும் ஒரு அமைச்சருக்கு மாநிலங்களவையில் பேசவும் பங்கேற்கவும் உரிமை உண்டு. ஆனால், மாநிலங்களவையில் வாக்களிக்கும் உரிமை இல்லை.


மாநிலங்களவையின் வரலாறு


1. மாநிலங்களவை என்றும் அழைக்கப்படும் 'மாநிலங்களின் அவை' (Council of States), பெயரை முதன்முறையாக ஆகஸ்ட் 23, 1954 அன்று பெற்றது. மாநிலங்களின் அவையின் உருவாக்கம் 1918-ஆம் ஆண்டின் மாண்டேக்-செல்ம்ஸ்ஃபோர்டு அறிக்கையின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.


2. இந்திய அரசு சட்டம், 1919, அப்போதைய சட்டமன்றத்தின் 2-வது சபையாக 'மாநிலங்களின் அவை' ஒன்றை உருவாக்குவதற்கு வழிவகுத்தது. இது உண்மையில் 1921-ல் நடைமுறைக்கு வந்தது.


3. சுதந்திர இந்தியாவில் 2-வது சபையின் பயன்பாடு குறித்து அரசியலமைப்பு சபையில் விரிவான விவாதத்திற்குப் பிறகு, இந்தியா இரண்டு சபைகளைக் கொண்ட சட்டமன்றத்தைக் கொண்டிருக்கும் என்று முடிவு செய்யப்பட்டது.


4. அரசியலமைப்பு சபை விவாதத்தின் போது, அரசியலமைப்பு குழுவின் அறிக்கை மீதான விவாதத்திற்கு பதிலளிக்கும் போது,


இந்த இரண்டாவது சபை இருப்பதன் மூலம் நாம் உண்மையில் பெறுவது, வேகமாகக் கொண்டு வரப்படக்கூடிய நடவடிக்கைகளை தாமதப்படுத்த ஒரு கருவியாகவும், தீவிர அரசியலில் ஈடுபடாத ஆனால் விவாதத்தில் கலந்து கொள்ள தயாராக இருக்கக்கூடிய அனுபவசாலியான நபர்களுக்கு ஒரு வாய்ப்பை வழங்குகிறது. இதுவே இந்த சபையின் ஒரே நோக்கம் என ஸ்ரீ கோபாலசாமி அய்யங்கார் குறிப்பிட்டார்:


5. 1951-ஆம் ஆண்டு முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு, மக்களவைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களும், மாநிலங்களவைக்கான நாடாளுமன்ற உறுப்பினர்களைத் தேர்ந்தெடுப்பதற்கான நடைமுறையும் உருவாக்கபட்டது. தேர்தல் ஆணையம் இந்தத் தேர்தல்களை மார்ச் 1952-ல் நடத்தியது. மேலும், மாநிலங்களவை ஏப்ரல் 3, 1952-ல் அமைக்கப்பட்டது. முதல் முறையாக மாநிலங்களவை 1952 மே 13 அன்று கூடியது.


6. டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் மாநிலங்களவையின் முதல் தலைவராக இருந்தார். 1952 முதல் 1957 வரை மற்றும் 1957 முதல் 1962 வரை இரண்டு முறை எதிர்ப்பு இல்லாமல் தேர்ந்தெடுக்கப்பட்டார். முதல் துணைத் தலைவர் ஸ்ரீ எஸ். வி. கிருஷ்ணமூர்த்தி ராவ் ஆவார். இவரும் 1962 வரை பணியாற்றினார்.


மாநிலங்களவையின் அதிகாரம்


1. நாடாளுமன்றத்தின் அரசியலமைப்பு அதிகாரத்தைப் பொறுத்தவரை, மாநிலங்களவை மக்களவைக்கு சமமான அதிகாரத்தைக் கொண்டுள்ளது. ஒரு அரசியலமைப்பு திருத்த மசோதாவை நாடாளுமன்றத்தின் எந்த அவையிலும் அறிமுகப்படுத்தலாம். மேலும், ஒவ்வொரு அவையும் அதை நிறைவேற்ற வேண்டும். அரசியலமைப்பு திருத்த மசோதாவில் ஏற்படும் தடைகளைத் நீக்க இரு அவைகளின் கூட்டுக் கூட்டம் நடத்தப்படுவதில்லை.


2. மாநிலங்களவை சில சிறப்பு அதிகாரங்களைப் பெற்றுள்ளது. மாநிலப் பட்டியலில் பட்டியலிடப்பட்டுள்ள ஒரு விவகாரத்தில் நாடாளுமன்றம் ஒரு சட்டம் இயற்றுவது "தேசிய நலனுக்காக முக்கியமானது அல்லது பொருத்தமானது" என்று கூறி, குறைந்தபட்சம் மூன்றில் இரண்டு பங்கு உறுப்பினர்களின் பெரும்பான்மையுடன் ஒரு தீர்மானத்தை நிறைவேற்றி வாக்களித்தால், அந்த விவகாரத்தில் நாடாளுமன்றம் சட்டம் இயற்ற அதிகாரம் பெறுகிறது. அத்தகைய தீர்மானம் அதிகபட்சமாக ஒரு வருடம் வரை அமலில் இருக்கும். ஆனால், இதே போன்ற தீர்மானத்தை நிறைவேற்றுவதன் மூலம் இந்தக் காலத்தை ஒரு வருடம் நீட்டிக்க முடியும்.


3. ஒன்றிய அரசு மற்றும் மாநிலங்களுக்கு பொதுவான ஒன்று அல்லது அதற்கு மேற்பட்ட அகில இந்திய சேவைகளை உருவாக்க பரிந்துரைக்க இதேபோன்ற வழியை ஏற்றுக்கொள்ளலாம். அத்தகைய சேவைகளை உருவாக்க நாடாளுமன்றம் அதிகாரம் பெறுகிறது.


4. தேசிய அவசரநிலை, மாநில அரசியலமைப்பு தோல்வி அல்லது நிதி அவசரநிலை ஆகியவற்றிற்கான பிரகடனங்களை குடியரசுத்தலைவர் வெளியிடும்போது மாநிலங்களவை முக்கிய பங்கு வகிக்கிறது. ஒவ்வொரு பிரகடனத்திற்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்குள் நாடாளுமன்றத்தின் இரு அவைகளின் ஒப்புதலைப் பெற வேண்டும்.


5. இருப்பினும், சில சூழ்நிலைகளில், மாநிலங்களவை சிறப்பு அதிகாரங்களைப் (special powers) பெறுகிறது. மக்களவை கலைக்கப்பட்ட நேரத்தில் அல்லது மக்களவை கலைக்கப்பட்ட நேரத்தில் ஒரு பிரகடனம் வெளியிடப்பட்டால், அதை அங்கீகரிக்கும் தீர்மானம் அரசியலமைப்பின் பிரிவுகள் 352, 356 மற்றும் 360-ன் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள காலத்திற்குள் மாநிலங்களவையால் நிறைவேற்றப்பட்டால், அந்த பிரகடனம் (proclamation) அமலில் இருக்கும்.


Original article :Why Rajya Sabha elections matter. -Khushboo Kumari

Share: