பாக்ஸ் சிலிக்கா (Pax Silica) என்றால் என்ன? அமெரிக்கத் தலைமையிலான இந்த முன்னெடுப்பில் இந்தியா ஏன் இணைந்துள்ளது? - குஷ்பூ குமாரி

வாஷிங்டனில் நடைபெறும் 2-வது உச்சிமாநாட்டில், அமெரிக்கா தலைமையிலான பாக்ஸ் சிலிக்கா முன்னெடுப்பில் இந்தியா கையெழுத்தியிட்ட நிலையில், பாக்ஸ் சிலிக்கா என்றால் என்ன, அது இந்தியாவிற்கு ஏன் முக்கியமானது என்பதைப் புரிந்துகொள்வோம். கனிமப் பாதுகாப்பு கூட்டாண்மை (MSP) குறித்தும்  தெரிந்து கொள்ளுங்கள்.


தற்போதைய செய்தி :


ஜூன் 25, 2026 அன்று வாஷிங்டனில் நடைபெற்ற 2-வது 'பாக்ஸ் சிலிக்கா' (Pax Silica) உச்சிமாநாட்டில், செயற்கை நுண்ணறிவு (AI) தொழில்நுட்பங்களை வலுப்படுத்துவதற்கான நம்பகமான மற்றும் உறுதியான விநியோகச் சங்கிலிகளை உருவாக்கும் அமெரிக்கத் தலைமையிலான முன்னெடுப்பில் இந்தியா மற்றும் 35 நாடுகள் கையெழுத்திட்டன. இந்த உச்சிமாநாட்டில் இந்தியாவின் சார்பில், மின்னணு மற்றும் தகவல் தொழில்நுட்ப அமைச்சகத்தின் செயலாளர் எஸ். கிருஷ்ணன் மற்றும் இந்தியத் தொழில் துறையின் பிரதிநிதிகள் ஆகியோர் கலந்துகொண்டனர்.


பாக்ஸ் சிலிக்கா பற்றியும், இந்தியாவிற்கு அதன் முக்கியத்துவம் குறித்தும், முக்கிய தனிமங்களுடன் தொடர்புடைய முக்கிய கலைச்சொற்கள் பற்றியும் அறிந்துகொள்வோம்.


முக்கிய  அம்சஙகள்:


1. புது டெல்லியில் நடைபெற்ற செயற்கை நுண்ணறிவின் தாக்கம் குறித்த உச்சி மாநாட்டின் (AI Impact Summit) ஒரு பகுதியாக, இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் இந்தியா இந்த முயற்சியில் இணைந்தது. 2-வது உச்சிமாநாட்டின் போது அர்ஜென்டினா, ஜெர்மனி, நெதர்லாந்து, சிலி, கோஸ்டா ரிக்கா, கிரீஸ், கஜகஸ்தான், பனாமா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை பாக்ஸ் சிலிக்கா முயற்சியில் இணைந்தன.

2. பாக்ஸ் சிலிக்கா என்பது, அமெரிக்கா தலைமையில் உருவாக்கப்பட்ட ஒரு ராஜதந்திர முயற்சி ஆகும். இதன் நோக்கம், பாதுகாப்பான, வளமான மற்றும் புதுமையை மையமாகக் கொண்ட சிலிக்கான் விநியோகச் சங்கிலியை (Supply Chain) உருவாக்குவதாகும். இந்த முயற்சி பின்வரும் துறைகளை கொண்டுள்ளது: முக்கிய கனிம வளங்கள் அவை: ஆற்றல் உள்ளீடுகள், மேம்பட்ட உற்பத்தி, குறைமின்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு (AI) கட்டமைப்பு மற்றும் தளவாட வசதிகள் ஆகும். இந்த முயற்சி டிசம்பர் 2025-ஆம் ஆண்டு டிசம்பர் மாதத்தில் தொடங்கப்பட்டபோது, ​​இந்தியா இதன் நிறுவனக் குழுவில் இடம் வகிக்கவில்லை.


3. அதிகாரப்பூர்வ அறிக்கையின்படி, “பாக்ஸ் சிலிக்கா” (Pax Silica) என்பது, பாக்ஸ் அமெரிக்கானா (Pax Americana) மற்றும் பாக்ஸ் ரோமானா (Pax Romana) போன்ற சொற்களில் காணப்படுவது போல, அமைதி, நிலைத்தன்மை மற்றும் நீண்டகால செழிப்பு என்ற லத்தீன் வார்த்தையான 'பாக்ஸ்' (pax) என்பதிலிருந்து பெறப்பட்டது. சிலிகா என்பது சிலிக்கான் ஆகச் சுத்திகரிக்கப்படும் ஒரு சேர்மமாகும். சிலிக்கான் என்பது, செயற்கை நுண்ணறிவு செயல்படுவதற்குத் தேவையான கணினி சிப்புகள் (Computer Chips) தயாரிப்பில் அடிப்படையாகப் பயன்படும் முக்கிய வேதியியல் தனிமங்களில் ஒன்றாகும்.



4. பாக்ஸ் சிலிக்கா திட்டத்தின்கீழ் மேற்கொள்ளப்படும் முக்கிய நடவடிக்கைகள் பின்வருமாறு: அவை, புதிய கூட்டு முயற்சிகள் மற்றும் மூலோபாய இணை முதலீட்டு வாய்ப்புகளைத் தொடர்வது, சம்பந்தப்பட்ட நாடுகளின் முறையற்ற அணுகல் அல்லது கட்டுப்பாட்டிலிருந்து அதிக திறன் கொண்ட தொழில்நுட்பங்கள் மற்றும் முக்கிய உள்கட்டமைப்புகளைப் பாதுகாப்பது மற்றும் தகவல் தொடர்பு தொழில்நுட்ப அமைப்புகள், ஃபைபர்-ஆப்டிக் கேபிள்கள், தரவு மையங்கள், அடிப்படை மாதிரிகள் மற்றும் பயன்பாடுகள் உள்ளிட்ட நம்பகமான தொழில்நுட்பச் சூழல் அமைப்புகளை உருவாக்குவது போன்றவையாகும்.


5. குறைமின்கடத்திகள், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் உள்கட்டமைப்பு மற்றும் மேம்பட்ட உற்பத்தி போன்றவற்றிற்கு ஆதாரமாக விளங்கும் சிலிக்கான் மற்றும் முக்கியத் தனிமங்களுக்கான நம்பகமான, மீள்திறன் கொண்ட மற்றும் புதுமையான கண்டுபிடிப்புகளால் மேம்படுத்தப்படும் விநியோகச் சங்கிலிகளைக் கட்டமைப்பதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.




6. மக்களவையில் நட்சத்திரக்குறியிடப்படாத கேள்விக்கு எழுத்துப்பூர்வமாக அளித்த பதிலில், வெளியுறவுத்துறை அமைச்சர், இந்த முயற்சியில் இணைவதன் மூலம் முக்கிய தனிமச் சுத்திகரிப்புத் துறையில் முதலீடுகளை எளிதாக்கவும், உள்நாட்டு மதிப்புக் கூட்டலை ஆதரிக்கவும், முக்கியத் துறைகளில் இறக்குமதி சார்புநிலையைக் குறைக்கவும், நம்பகமான நட்பு நாடுககளுடனான ஒத்துழைப்பின் மூலம் பாதுகாப்பான விநியோகச் சங்கிலிகளை மேம்படுத்தவும் முடியும் என்று சுட்டிக்காட்டினார்.


இந்தியாவிற்கு பாக்ஸ் சிலிக்காவின் முக்கியத்துவம் என்ன?


• அத்தியாவசிய கனிமங்கள் மற்றும் எரிசக்தி உள்ளீடுகள் முதல் மேம்பட்ட உற்பத்தி மற்றும் குறைமின்கடத்திகள் வரை பாதுகாப்பான விநியோகச் சங்கிலிகளை (supply chains) உருவாக்குவதை பாக்ஸ் சிலிக்கா நோக்கமாகக் கொண்டுள்ளது. இவை அனைத்தும் இந்தியாவிற்கு அக்கறைக்குரிய துறைகளாகும்.


சீனாவின் பங்களிப்பு உள்ள முக்கியத் துறைகளில் நாடுகள் தங்களை மறுசீரமைத்துக் கொள்ளும்போது, ​​அடுத்த உலகளாவிய தொழில்நுட்ப நடவடிக்கைகள் எவ்வாறு வடிவம் பெறக்கூடும் என்பதை இது உணர்த்துவதால் முக்கியத்துவம் பெறுகிறது. பாக்ஸ் சிலிக்கா போன்ற குழுக்கள், அடுத்ததாக விநியோகச் சங்கிலியில் உள்ள தடைகளைச் சமாளிக்க ஒருங்கிணைந்து செயல்பட உள்ளன.


அமெரிக்க மற்றும் ஐரோப்பிய நிறுவனங்கள் சீனாவிலிருந்து விலகித் தங்கள் வணிகத்தைப் பல்வேறு நாடுகளுக்கு கொண்டுசெல்ல முயற்சித்து வருவதால், இந்தியாவும் உலகளாவிய விநியோகச் சங்கிலி மறுசீரமைப்பில் தனது பங்களிப்பை வழங்க முயற்சி செய்து வருகிறது.


• பாக்ஸ் சிலிக்கா முயற்சியில் இந்தியாவின் பங்கேற்பு, தற்போது புது இந்தியாவிடம் பற்றாக்குறையாக உள்ள மற்றும் இறக்குமதி சார்புநிலையை ஆழப்படுத்தும் தொழில்நுட்பம் சார்ந்த துறைகளில் நாட்டின் வளர்ச்சிக்கு உதவக்கூடும். அமெரிக்கா தலைமையிலான இந்த முயற்சியில் இடம் பெற்றிருக்கும் நாடுகள், செயற்கை நுண்ணறிவு மற்றும் குறைமின்கடத்தி விநியோகச் சங்கிலி போன்றவற்றில் முன்னணி நாடுகளாக இருப்பதாக நிபுணர்கள் தெரிவித்தனர்.

• இந்தியாவில் தற்போது உலகளாவிய செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு இல்லை. எனவே, இந்த முயற்சியின்கீழ் ஏற்படவிருக்கும் முதலீடுகள் மற்றும் கூட்டாண்மைகள் மூலம் இந்தியா பயன்பெறும்.


முக்கிய தனிமங்கள்: முக்கியத் தனிமங்கள் என்பவை, நிறுவனங்கள், தொழிற்சாலைகள், நாடுகள் அல்லது உலகின் உற்பத்தி மற்றும் தொழில்நுட்பத் தேவைகளுக்கு முக்கியமானதாகக் கருதப்படும் தனிமங்களின் ஒரு துணைப்பிரிவாகும். 2023-ஆம் ஆண்டில், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் தேசியப் பாதுகாப்புக்கும் 

முக்கியமானதாக கருதப்படும் லித்தியம், கோபால்ட், நிக்கல், கிராஃபைட், தகரம் மற்றும் தாமிரம் உள்ளிட்ட 30 முக்கிய தனிமங்களை  ஒன்றிய அடையாளம் கண்டது.


அரிய மண் தனிமங்கள் (Rare Earth Elements (REEs)): அரிய மண் தனிமங்கள் என்பவை தனிம வரிசை அட்டவணையில் உள்ள 17 வேதியியல் தனிமங்களின் ஒரு தொகுப்பாகும். இதில் 15 லந்தனைடுகள் மற்றும் ஸ்கேண்டியம், இட்ரியம் ஆகியவை அடங்கும். இவை லந்தனைடுகள் காணப்படும் அதே தாதுப் படிவுகளில் காணப்படுகின்றன. மேலும், ஒரே வேதியியல் பண்புகளையும் கொண்டுள்ளன.


அரிய புவித் தனிமங்கள் என்ற பெயரைக் கொண்டிருந்தாலும், இந்தத் தனிமங்கள் அரிதானவை அல்ல. அவை பூமியின் மேலோட்டில் அதிகமாகக் காணப்படுகின்றன. இருப்பினும், சுரங்கத் தொழிலுக்குப் பொருளாதாரரீதியாக லாபகரமான செறிவுகளில் அவை அரிதாகவே காணப்படுகின்றன. எனவே, அரிய மண் தனிமங்களைப் பிரித்தெடுத்துப் பதப்படுத்துவது சிக்கலானதும்அதிக செலவு கொண்டது ஆகும். அவற்றைத் தனிமைப்படுத்தித் தூய்மைப்படுத்த, உயர்நிலை நுட்பங்ககளை கையாள அதிக திறன் கொண்ட தொழிலார்கள்  தேவைப்படுகின்றன.


அரிய மண் நிரந்தர காந்தங்கள்: இவை நிரந்தர காந்தங்களின் வலிமையான வகைகளில் ஒன்றாகும். மேலும், சிறிய அளவிலான மற்றும் உயர் செயல்திறன் கொண்ட காந்தக் கூறுகள் தேவைப்படும் தொழில்நுட்பங்களில் இவை அதிகளவில் பயன்படுத்தப்படுகின்றன. இத்தகைய உயர் செயல்திறன் கொண்ட நிரந்தர காந்தங்களைத் தயாரிப்பதற்கு அரிய மண் தனிம உலோகங்கள் போன்ற உயர் தொழில்நுட்பத் துறைகளில் பரவலாகப் பயன்படுத்தப்படுகின்றன.


ஆண்டுக்கு 6,000 மெட்ரிக் டன் (metric tonnes per annum (MTPA)) ஒருங்கிணைந்த அரிய மண் நிரந்தர காந்த உற்பத்தித் திறனை ஆதரிக்கும் நோக்கில், 'சின்டர்டு அரிய மண் நிரந்தர காந்தங்களின் உற்பத்தியை ஊக்குவிக்கும் திட்டத்தை' அரசாங்கம் அறிவித்துள்ளது. இந்தத்திட்டம் குறிப்பாக "சின்டர்டு அரிய மண் நிரந்தர காந்தங்கள்" மீது கவனம் செலுத்துகிறது. இவை நியோடைமியம், இரும்பு மற்றும் போரான் (neodymium, iron and boron (NdFeB)) காந்தங்களாகும். மேலும், இவை மிகவும் வலிமையானதாகவும் வணிகரீதியாக அதிக தேவை கொண்டதாக உள்ளன.


தனிமப் பாதுகாப்பு கூட்டமைப்பு (Minerals Security Partnership (MSP))


1. ஜூன் 2023-ல், அமெரிக்கா தலைமையில் செயல்படும் 14 நாடுகள் மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் இணைந்த தனிமப் பாதுகாப்பு கூட்டமைப்பில் இந்தியா உறுப்பினராக சேர்க்கப்பட்டது. இந்தக் கூட்டமைப்பின் நோக்கம், உலகளாவிய முக்கிய தனிமங்களின் விநியோகச் சங்கிலியில் (Supply Chain) பொது மற்றும் தனியார் துறையின் முதலீடுகளை ஊக்குவித்து, பாதுகாப்பான மற்றும் நிலையான விநியோக அமைப்பை உருவாக்குவதாகும்.


2. 2023 ஜூன் 23 அன்று வெளியிடப்பட்ட இந்தியா-அமெரிக்கா கூட்டறிக்கை, “இருநாடுகளின்  சந்தைகளுக்கு தேவையான முக்கியத் தனிமங்கள் நன்கு விநியோகிக்கப்படுவதை உறுதிசெய்ய இணைந்து செயல்படுவோம்” என்ற இரு அரசாங்கங்களின் நோக்கத்தை மீண்டும் வலியுறுத்தியதுடன், “நெகிழ்வான முக்கியத் தனிமங்கள் விநியோகச் சங்கிலிகளைப் பாதுகாப்பதற்காக இருதரப்பு ஒத்துழைப்பை விரைவுபடுத்துவோம்” என்ற இரு தரப்பினரின் உறுதிமொழியையும் மீண்டும் உறுதிப்படுத்தி, இந்தியாவை அமெரிக்கா அந்தக் கூட்டமைப்பிற்குள் வரவேற்றது.


3. தனிமப் பாதுகாப்பு கூட்டமைப்பில் ஆஸ்திரேலியா, கனடா, எஸ்டோனியா, பின்லாந்து, பிரான்ஸ், ஜெர்மனி, இந்தியா, இத்தாலி, ஜப்பான், நார்வே, கொரியக் குடியரசு, சுவீடன், ஐக்கிய இராச்சியம், அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் ஆகியவை அடங்கும்.


4. ஜனவரி 2025-ல், முக்கிய தனிமத் துறையில் தன்னிறைவு அடைய உதவும் வகையில், இந்தியா ஒரு தேசிய முக்கிய தனிம இயக்கத்தைத் தொடங்கியது. 2023-ல், நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் தேசியப் பாதுகாப்புக்கும் தேவையான லித்தியம், கோபால்ட், நிக்கல், கிராஃபைட், தகரம் மற்றும் தாமிரம் உள்ளிட்ட 30 முக்கிய தனிமங்களையும்  அரசு அடையாளம் கண்டது.


5. இந்தியா-அமெரிக்கா முக்கிய தனிமங்கள் கட்டமைப்பு: கடந்த மே மாதம், இந்தியாவும் அமெரிக்காவும் முக்கிய தனிமங்கள் மற்றும் அரிய மண் தனிமங்களின் விநியோகம், சுரங்கத் தொழில் மற்றும் பதப்படுத்துதலைப் பாதுகாப்பதில் கவனம் செலுத்தும் இந்தியா-அமெரிக்கா முக்கிய தனிமங்கள் கட்டமைப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டன.


Original Link: What is Pax Silica and why has India joined the US-led initiative?

Share: