வைரஸ் நோய்களின் பரவல் மற்றும் மாநிலங்களின் செயல்பாடுகள்

 வைரஸ்களின் சோதனை மற்றும் வரிசைப்படுத்தும் திறனை மாநிலங்கள் வளர்த்துக் கொள்ள வேண்டும்.


ஜூன் 20-ல், புனேவில் முதல் நோயாளி அறியப்பட்டதைத் தொடர்ந்து, ஜிகா வைரஸ் பரவல் தொடங்கியது. அதன் பிறகு உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை தொடர்ந்து அதிகரித்துக் கொண்டிருக்கின்றன. ஆகஸ்ட் மாதத்தின் முதல் வாரத்தில், மகாராஷ்டிராவில் 88 உறுதிப்படுத்தப்பட்ட நோயாளிகள்  கண்டறியப்பட்டுள்ளனர். புனே நகரம்,  இந்த நோயின் மையமாக உள்ளது, மேலும் 73 நோயாளிகளை கொண்டுள்ளது. அதே சமயம், புனே கிராமப்புறத்தில் ஆறு  தொற்று பாதித்தவர்கள் உள்ளனர்.  மொத்த தொற்று பாதித்தவர்தவர்களில் 37 பேர் மக்கள் கர்ப்பிணி பெண்கள் ஆவார். இது உறுதிப்படுத்தப்பட்ட தொற்று பாதித்தவர்களில்  பாதி ஆகும்.


ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்படும் மக்கள் மிகவும் அரிதான ஒரு நிலையைச் சந்திக்கக் கூடும். இது குய்லின்-பாரே நோய்க்குறி, (Guillain-Barré syndrome) என்று அழைக்கப்படும் நரம்பியல் கோளாறு ஆகும். இதில் நோயெதிர்ப்பு அமைப்பு தவறுதலாக பெரிபெரல் நரம்பியல் (peripheral nervous system) அமைப்பைப் தாக்குகிறது. இதனால் கர்ப்பிணிப் பெண்கள் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.


லான்செட் ரீஜினல் ஹெல்த் - அமெரிக்கா (The Lancet Regional Health – Americas) இதழில் 2023-ஆம் ஆண்டின் ஜனவரி மாதத்தில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வு 2015-ஆம் ஆண்டு மற்றும் 2017-ஆம் ஆண்டு ஆகிய வருடங்களில் பிரேசிலில் ஜிகா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்ட 1,548 கர்ப்பிணி பெண்களை ஆய்வு செய்தது. அதில், மைக்ரோசெபாலி (microcephaly) என்ற நிலைக்கு 6.6% உறுதியான அபாயம் இருந்தது. குழந்தைகள் செயல்பாட்டு நரம்பியல் அசாதாரணங்களால் பாதிக்கப்படுவதற்கான 18.7% முழுமையான அபாயத்தைக் கொண்டிருந்தனர்.  மேலும்,  நியூரோஇமேஜிங் (neuroimaging), கண் மற்றும் செவிப்புலன் அசாதாரணங்களின் ஒப்பீட்டளவில் சிறிய ஆபத்து. முன்கூட்டிய பிறப்பு (10.5%), குறைந்த எடை மற்றும் கர்ப்பகால வயது (16.2%) ஆகியவற்றில் குறிப்பிடத்தக்க ஆபத்து உள்ளதாக கண்டறியப்பட்டது.


மற்றொரு குறைந்த அளவில் அறியப்பட்ட அபாயம் வைரஸின் பாலியல் பரிமாற்றமாகும். இது ஜிகா வைரஸ் பாதிக்கப்பட்ட ஆண்களால் ஏற்படுகிறது. வைரஸ் குறைந்தது இரண்டு மாதங்களுக்கு வீரியத்தில் தீவிரமாக இருக்க முடியும். அமெரிக்காவின் நோய் கட்டுப்பாடு மற்றும் தடுப்பு மையங்கள் (Centers for Disease Control and Prevention(U.S. CDC)), பெண்களுக்கான  வைரஸின் பரவலைத் தடுக்கும் நடவடிக்கைகளை பரிந்துரைக்கின்றன.


இந்த வைரஸின் தீங்கு விளைவிக்கும் விளைவுகளைக் கருத்தில் கொண்டு, புனேவிலுள்ள இந்திய மருத்துவ ஆராய்ச்சி கவுன்சில் (Indian Council of Medical Research) ஆய்வகத்தினால் பரிசோதனை அதிகரிக்கப்பட்டது என்பது முக்கியமானது. புனே மாநகராட்சி பரிசோதனைகளைத் தாமதப்படுத்தாமல் அரசு மருத்துவக் கல்லூரிக்குத் திருப்ப முயன்றபோது, இவ்வாறான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டன. சமீபத்தில் கேரளா நிபா வைரஸ் பரவல் குறித்த பதில் நடவடிக்கைகள் மற்றும் குஜராத்தில் சந்திபுரா வைரஸ் பரவல் மற்றும் தீவிர நரம்பியல் அறிகுறிகள் நிகழ்வுகள், மாநிலங்கள் அதிக தரமான பரிசோதனை மற்றும் அதன் கட்டுப்படுத்தும் திறன்களை உருவாக்குவது எவ்வளவு முக்கியமானது என்பதை எடுத்துக்காட்டுகின்றன. COVID-19 தொற்றுக்குப் பின்பு பரிசோதனை மற்றும்  அதனை கட்டுப்படுத்தும் நிலைகள் ஆகியவற்றை  காட்டியது. இது அனைத்து விதமான நோய்களுக்கும் பயன்படுத்தப்பட வேண்டும்.



Original article:

Share: