டெல்லியின் நச்சுக் காற்று -ரோஷினி யாதவ்

என்ன பிரச்சினை?


கடந்த பத்தாண்டுகளில், டெல்லியின் குளிர்காலங்கள் நாட்காட்டி மாறுவது போல கணிக்கக்கூடிய ஒரு வடிவத்தை (பாணியை) உருவாக்கியுள்ளன. காற்று துகள்களால் (நுண்ணிய தூசுகளால்) நிரம்புகிறது, தற்காலிக நடவடிக்கைகள் அமல்படுத்தப்படுகின்றன, பின்னர், பருவம் மாறும்போது, விஷயங்கள் தொடர்ந்து நகர்கின்றன மற்றும் இந்த பிரச்சினை ஒதுக்கி வைக்கப்படுகிறது. இந்தச் சூழலில், இந்தப் பிரச்சினையை ஒரு பரந்த கண்ணோட்டத்தில் புரிந்துகொள்வது அவசியமாகிறது.




கேள்வி 1: காற்று மாசுபாடு என்றால் என்ன, அதன் மூலங்கள் யாவை?


காற்று மாசுபாடு என்பது, இரசாயனம், இயற்பியல் அல்லது உயிரியல் போன்ற ஏதேனும் ஒரு காரணியால் (agent) சுற்றுப்புற சூழல்—வீட்டிற்குள்ளேயோ அல்லது வெளியேயோ—மாசுபடுவதாகும். இது வளிமண்டலத்தின் இயற்கையான பண்புகளை மாற்றுகிறது. உலக சுகாதார அமைப்பின் (WHO) கூற்றுப்படி, உலக மக்கள் தொகையில் கிட்டத்தட்ட அனைவரும் (99%) உலக சுகாதார அமைப்பின் வழிகாட்டுதல் வரம்புகளை மீறி அதிக அளவு மாசுபடுத்திகள் கொண்ட காற்றையே சுவாசிக்கின்றனர்.


வீட்டு உபயோக எரிப்புக் கருவிகள் (Household combustion devices), மோட்டார் வாகனங்கள், தொழிற்சாலைகள் மற்றும் காட்டுத் தீ ஆகியவை காற்று மாசுபாட்டின் பொதுவான மூலங்கள் ஆகும். - WHO


தொடர்ச்சியான வாகனப் புகை வெளியேற்றம் முதல் கட்டுமானம் மற்றும் தொழிற்சாலைகளில் இருந்துவரும் மாசுபடுத்திகள் வரை, பல்வேறு காற்று மாசுபாட்டின் மூலங்கள் நாடு முழுவதும் காற்றின் தரத்தை மிகவும் மோசமாக்கியுள்ளன.


வாகன மாசுபாடுதான் காற்று மாசுபாட்டிற்கு முக்கியப் பங்களிப்பாகும். இந்திய வெப்பமண்டல வானிலை ஆய்வு நிறுவனத்தின் (IITM) முடிவெடுக்கும் ஆதரவு அமைப்பின்படி (Decision Support System), போக்குவரத்துதான் டெல்லியில் PM2.5 துகள்கள் வெளியேற்றத்திற்கு மிகப்பெரிய பங்களிப்பு செய்கிறது; குளிர்காலத்தில் இதன் பங்கு 20% அல்லது அதற்கு மேல் உயர்கிறது.


காற்று தர மேலாண்மை ஆணையத்தின் (CAQM) கூற்றுப்படி, டெல்லி-தேசிய தலைநகர் பிராந்தியத்தில் (Delhi-NCR) சாலையில் உள்ள 2.88 கோடி வாகனங்களில் 93% இலகு ரக மோட்டார் வாகனங்கள் (LMVs; முக்கியமாக கார்கள்) மற்றும் இரு சக்கர வாகனங்கள் ஆகும். இந்த வாகனங்களில் மூன்றில் ஒரு பங்கிற்கும் அதிகமானவை—சுமார் 37%—பாரத் ஸ்டேஜ் (BS) III அல்லது அதற்கும் பழமையான வாகனங்களாகும். இவை கணிசமாக அதிக புகை வெளியேற்றும் திறன் கொண்டவை.


அனல் மின் நிலையங்கள் மற்றும் தொழிற்சாலைகள் தொடர்ந்து மாசுக்களை வெளியிட்டு, பிரச்சனையை மேலும் சிக்கலாக்குகின்றன. அதுமட்டுமின்றி, விவசாயக் கழிவுகளை எரிப்பது (அதாவது, பயிர் அறுவடைக்குப் பின் எஞ்சியிருக்கும் வைக்கோலை எரிப்பது), குறிப்பாக பஞ்சாப் மற்றும் ஹரியானா போன்ற வட இந்திய மாநிலங்களில், காற்று மாசுபாட்டிற்கு ஒரு முக்கிய காரணமாக இருக்கிறது. அறுவடைக்குப் பிந்தைய காலத்தில், இது காற்றின் தரத்தை மிகவும் மோசமாக்கி, பெரும்பாலும் அதை அவசர நிலைக்கு இட்டுச் செல்கிறது. இந்த விவசாயக் கழிவுகளை எரிப்பதால் உருவாகும் புகையானது, அதிக அளவில் துகள் பொருட்கள் (particulate matter), கார்பன்-மோனாக்சைடு, சல்பர்-டை-ஆக்சைடு, மற்றும் நைட்ரஜன்-ஆக்ஸைடுகள் போன்றவற்றை வெளியிடுகிறது.

மாசுபடுத்திகள்

மூலம்

தாக்கம்

நைட்ரஜன்-டை- ஆக்சைடு (NO2)

வாகனங்கள் மற்றும் மின் உற்பத்தி நிலையங்களில் இருந்து வெளியேறும் உமிழ்வுகள் உள்ளிட்ட ஆதாரங்களைக் கொண்ட எரிபொருளை எரித்தல்.

அதிக அளவு நைட்ரஜன்-டை- ஆக்சைடுக்கு குறுகியகால வெளிப்பாடு சுவாச நோய்களை அதிகரிக்கக்கூடும். நீண்டகால வெளிப்பாடு ஆஸ்துமாவின் வளர்ச்சிக்கும் பங்களிக்கக்கூடும் மற்றும் சுவாச நோய்த்தொற்றுகளுக்கு ஆளாகக்கூடிய தன்மையை அதிகரிக்கக்கூடும்.

ஓசோன் (O3)

சூரிய ஒளியின் முன்னிலையில் வளிமண்டல மாசுபடுத்திகளின் எதிர்வினையால் மேற்பரப்பு ஓசோன் மாசுபாடு உருவாகிறது.

நாள்பட்ட நுரையீரல் அடைப்பு நோய்கள் (COPD) மற்றும் இருதய மற்றும் சுவாசக் கோளாறுகளால் ஏற்படும் இறப்புகளின் எண்ணிக்கை ஆகியவற்றால் மருத்துவமனையில் அனுமதிக்கப்படுவதற்கான ஆபத்து அதிகரிப்பு.

சல்பர்-டை-ஆக்சைடு (SO2)

மின் உற்பத்தி நிலையங்கள் மற்றும் பிற தொழில்துறை வசதிகளால் புதைபடிவ எரிபொருட்களை எரித்தல். கூடுதல் ஆதாரங்கள் தொழில்துறை செயல்முறைகள் மற்றும் எரிமலைகள் போன்ற இயற்கை மூலங்கள் ஆகும்.

இருதய அமைப்புக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் சுவாச நோய்களின் வளர்ச்சிக்கு வழிவகுக்கும். சல்பர்-டை-ஆக்சைடு (SO2)

மற்ற சேர்மங்களுடன் வினைபுரிந்து துகள்களை உருவாக்குகிறது.

அம்மோனியா (NH3)

உரப் பயன்பாடு அதிகரிப்பதோடு, கால்நடைக் கழிவுகளின் பெரிய பங்களிப்பும் உலகின் மிக உயர்ந்த வளிமண்டல அம்மோனியா செறிவுகளுக்கு வழிவகுத்துள்ளது.

அதிகப்படியான அம்மோனியா தாவரங்களுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் காற்று மற்றும் நீரின் தரத்தை குறைக்கிறது.

காரீயம் (PPb)

இது பூமியின் மேலோட்டத்தில் காணப்படும் ஒரு நச்சு உலோகமாகும், இது சுரங்கம், உருக்குதல், உற்பத்தி மற்றும் மறுசுழற்சி நடவடிக்கைகள் மூலம் வெளிப்படும்.

கடுமையான ஈய நச்சுத்தன்மையிலிருந்து தப்பிப்பிழைக்கும் குழந்தைகள் நிரந்தர அறிவுசார் குறைபாடு மற்றும் நடத்தை கோளாறுகளுடன் விடப்படலாம்.

கார்பன் மோனாக்சைடு (CO)

மரம், நிலக்கரி மற்றும் பெட்ரோல் போன்ற கார்பன் கொண்ட எரிபொருள் எரிக்கப்படும்போது இது வெளியிடப்படுகிறது.

கார்பன் மோனாக்சைடு அளவுகள் போதுமான அளவு அதிகமாக இருந்தால், ஒருவர் மயக்கமடைந்து இறக்க நேரிடும். நீண்டகால வெளிப்பாடு இதய நோய் அபாயத்தை அதிகரிப்பதோடு தொடர்புடையது.


கேள்வி 2: வட இந்திய நகரங்களில் ஏன் காற்றுத் தரத்தின் அளவு மிக மோசமாக உள்ளது?


சென்னை, சண்டிகர், விசாகப்பட்டினம், மும்பை மற்றும் பெங்களூரு போன்ற மேற்கு மற்றும் தென் இந்திய நகரங்களுடன் ஒப்பிடுகையில், டெல்லி, லக்னோ மற்றும் வாரணாசி போன்ற வட இந்திய நகரங்கள் மோசமான காற்றுத் தரத்தால் பாதிக்கப் படுகின்றன, குறிப்பாக குளிர்காலங்களில். இதற்குக் காரணம் அந்தப் பகுதியின் புவியியல் அமைப்பு ஆகும்.


இந்தப் பிரச்சனைக்கு முக்கியக் காரணம், இந்த வடஇந்திய நகரங்கள்  சுற்றிலும் வெறும் நிலப்பகுதியால் சூழப்பட்டிருப்பதுதான். இந்தோ-கங்கைச் சமவெளிப் பகுதி இமயமலையால் சூழப்பட்டுள்ளது. இதன் காரணமாக, மாசுபடுத்துகின்ற துகள்கள் சிக்கிக்கொண்டு (மாசுக்கள் அகப்பட்டு) காற்றில் பரவ முடிவதில்லை. மேலும், காலநிலை போக்குகள் (Climate Trends) நிறுவனத்தின் 'இந்தியாவின் முக்கிய நகரங்களின் காற்றுத் தர மதிப்பீடு (2015–2025)' என்ற ஆய்வறிக்கை குறிப்பிடுவது: "நகரங்களுக்குள், அடர்த்தியான நகர்ப்புறக் கட்டமைப்புகள் (கட்டிடங்கள்) ஒரு கூடுதல் 'மேற்பரப்பு கரடுமுரடான தன்மையை' (Surface Roughness) உருவாக்குகின்றன. இது ஒரு உராய்வு விளைவை ஏற்படுத்தி, காற்றின் வேகத்தை மேலும் குறைக்கிறது மற்றும் மாசு பரவுவதைக் கட்டுப்படுத்துகிறது."


கோடைக்காலப் பருவமழையின்போது, மழையும் வலுவான மேற்குக் காற்றும் மாசுக்களைப் பரப்ப உதவுகின்றன. ஆனால், குளிர்காலத்தில் நிலைமை மோசமாகிறது. டெல்லி நகரம் இந்தக் காலத்தில் குறிப்பாகப் பாதிக்கப்படுகிறது, ஏனெனில் அது வடக்கில் இமயமலையால் சூழப்பட்ட ஒரு பரந்த, சமமான பேசினின் (Basin) நடுவில் அமைந்துள்ளது.


அந்த ஆய்வறிக்கையின்படி: "குளிர்காலத்தில் (டிசம்பர்-பிப்ரவரி), வளிமண்டல எல்லையிலுள்ள அடுக்கில் உள்ள காற்று (பூமியின் மேற்பரப்பிற்கு மிக அருகில் உள்ள அடுக்கு) அடர்த்தி குறைந்து இருக்கும், ஏனெனில் பூமியின் மேற்பரப்பிற்கு அருகிலுள்ள குளிர்ந்த காற்று அடர்த்தியாக இருக்கும். இந்தக் குளிர்ந்த காற்று, மேலே உள்ள சூடான காற்றின் அடியில் சிக்கி, ஒரு வகையான வளிமண்டல 'மூடியை' (Atmospheric 'Lid') உருவாக்குகிறது. இந்தக் குளிர்ந்த காற்று கீழே சிக்கி இருப்பது 'குளிர்காலத் தலைகீழ் நிலை' (Winter Inversion) என்று அழைக்கப்படுகிறது. இந்த அடுக்கிற்குள் மட்டுமே காற்று செங்குத்தாகக் கலப்பதால், வெளியேறும் மாசுபடுத்தும் துகள்களுக்கு வளிமண்டலத்தில் பரவ போதுமான இடம் கிடைப்பதில்லை."


கேள்வி 3: காற்று மாசுபாட்டின் தாக்கங்கள் என்ன?


ஒவ்வொரு ஆண்டும், உட்புற மற்றும் வெளிப்புற காற்று மாசுபாடு உலகளவில் கிட்டத்தட்ட எழுபது லட்சம் (7 மில்லியன்) இறப்புகளுக்குக் காரணமாகிறது. – உலக சுகாதார நிறுவனம் (WHO)


நகரங்களில் ஏற்படும் புகைமூட்டம் முதல் வீடுகளில் ஏற்படும் புகை வரை, காற்று மாசுபாடு பல்வேறு துறைகளை வெவ்வேறு விதமாகப் பாதிக்கிறது. இது ஆரோக்கியம் மற்றும் சுற்றுச்சூழல் மட்டுமின்றி, பொருளாதாரத்திற்கும் அச்சுறுத்தலாக உள்ளது.


புகைமூட்டம் என்றால் என்ன?


புகைமூட்டம் என்பது ஒரு வகையான காற்று மாசுபாடு ஆகும். இது மங்கலான அல்லது மூடுபனி போன்ற சூழ்நிலையை உருவாக்கி, பார்வைத் திறனைக் குறைத்து, காற்றின் தரத்தைப் பாதிக்கிறது. இது முதன்முதலில் 1900-களின் முற்பகுதியில் புகை (smoke) மற்றும் மூடுபனியின் (fog) கலவையைக் குறிக்கப் பயன்படுத்தப்பட்டது. "smog" என்ற சொல், குறிப்பாகத் தொழில்மயமான பகுதிகளில் பொதுவாக இருந்த நிலக்கரி எரிப்பினால் ஏற்படும் மாசுபாட்டைக் குறிக்க இந்த சொல் பயன்படுத்தப்பட்டது. 


📍நிலத்தடி காற்று மாசுபாடு நிலப்பரப்பு சுற்றுச்சூழல் அமைப்புகளை (terrestrial ecosystems) குறிப்பிடத்தக்க அளவில் பாதிக்கிறது. இதனால் விலங்குகள் மற்றும் மனிதர்கள் இருவருக்கும் பல்வேறு சுவாச மற்றும் நுரையீரல் கோளாறுகள் ஏற்படுகின்றன.


— கடல் சுற்றுச்சூழல் அமைப்புகளில் (marine ecosystems), இதன் விளைவுகளாக ஏரி அமிலமயமாதல் (lake acidification), நீர்ப்பெருக்கு (eutrophication), மற்றும் நீர்வாழ் உணவு மூலங்களில் பாதரசம் குவிதல் (accumulation of mercury) ஆகியவை அடங்கும். இந்தச் செயல்முறைகள் உயிரினங்களின் ஆரோக்கியத்தை மறைமுகமாகப் பாதிக்கலாம்.


— மேலும், வளிமண்டலத்தில் பசுமைக் குடில் வாயுக்களின் (greenhouse gases) செறிவு, புவி வெப்பமடைதல் (global warming) மற்றும் காலநிலை மாற்றம் (climate change) உள்ளிட்ட நீண்டகால சுற்றுச்சூழல் விளைவுகளைக் கொண்டுள்ளது.


📍மனித ஆரோக்கியத்திற்கு அச்சுறுத்தல் ஏற்படுத்தும் முன்னணி சுற்றுச்சூழல் காரணிகளில் காற்று மாசுபாடும் ஒன்றாகும். 2021-ஆம் ஆண்டில் லான்செட் பிளானட்டரி ஹெல்த் (Lancet Planetary Health) இதழில் வெளியிடப்பட்ட ஒரு ஆய்வின்படி, 2019-ஆம் ஆண்டில் ஏற்பட்ட கிட்டத்தட்ட 17.8 சதவீத மொத்த இறப்புகளுக்கு, அதாவது குறைந்தது 1.67 மில்லியன் இறப்புகளுக்குக் காற்று மாசுபாடே காரணமாகக் கூறப்படுகிறது. 


— காற்று மாசுபாடு காரணமாக நுரையீரல் நோய், ஆஸ்துமா, பக்கவாதம் மற்றும் புற்றுநோய் உள்ளிட்ட பல்வேறு உடல்நலப் பிரச்சினைகள் ஏற்படலாம்.


— கடுமையான காற்று மாசுபாடு குழந்தைகளுக்கு, குறிப்பாக ஒன்று முதல் ஐந்து வயது வரையிலான குழந்தைகளுக்கு, குறிப்பிடத்தக்க விளைவுகளை ஏற்படுத்துகிறது. இந்தக் காலகட்டத்தில், அவர்களின் நுரையீரல் மற்றும் நோயெதிர்ப்பு அமைப்புகள் இன்னும் வளர்ந்து வருவதால், வளிமண்டலத்தில் உள்ள துகள் பொருட்கள் (Particulate Matter - PM2.5 மற்றும் PM10), நைட்ரஜன் ஆக்சைடுகள், சல்பர்-டை-ஆக்சைடு மற்றும் ஆவியாகும் கரிம சேர்மங்கள் (Volatile Organic Compounds (VOCs)) போன்ற தீங்கு விளைவிக்கும் மாசுபடுத்திகளால் அவர்கள் குறிப்பாக அதிக அளவில் பாதிக்கப்பட வாய்ப்புள்ளது. 


— மேலும், இது குழந்தைகளின் அறிவாற்றல் வளர்ச்சியைப் பாதிக்கலாம், நீரிழிவு (சர்க்கரை நோய்) போன்ற ஏற்கனவே இருக்கும் உடல்நலப் பிரச்சினைகளை அதிகப்படுத்தலாம் மற்றும் மனநலப் பிரச்சினைகளுக்கும் வழிவகுக்கும்.


— கடுமையான காற்று மாசுபாட்டால் மிகவும் பாதிக்கப்படக்கூடியவர்களில் முதியவர்களும் அடங்குவர் என்று சுகாதார வல்லுநர்கள் கூறுகின்றனர். வயது காரணமாக நுரையீரலின் செயல்பாடு இயற்கையாகவே குறைகிறது, மேலும் அசுத்தமான காற்றின் வெளிப்பாடு முதியவர்களுக்கு அதிக பாதிப்புகளை விளைவிக்கிறது என்று அறிவியல் ஆய்வுகள் தெரிவிக்கின்றன.


📍பொருளாதாரத்தின் மீதான தாக்கம்: காற்று மாசுபாடு நாட்டின் பொருளாதாரத்தையும் பாதிக்கிறது என்று ஆய்வுகள் காட்டுகின்றன. குறைந்த தொழிலாளர் உற்பத்தித்திறன், குறைந்த நுகர்வோர் வருகை, குறைந்த சொத்து உற்பத்தித்திறன், சமூக நல இழப்புகள், அகால இறப்பு, அதிகரித்த சுகாதார செலவுகள் போன்ற பல்வேறு வழிகளில் காற்றின் தரக் குறைவால் ஏற்படும் செலவுகள் ஏற்டுகின்றன.


உலக வங்கியின் அறிக்கை ஒன்று, காற்று மாசுபாட்டினால் ஏற்படும் சுகாதாரச் சேதத்தின் செலவு வருடத்திற்கு 8.1 டிரில்லியன் டாலர் என மதிப்பிட்டுள்ளது. இது உலகளாவிய மொத்த உள்நாட்டு உற்பத்தியில் (Gross Domestic Product (GDP)) 6.1% ஆகும்.


குறைக்கப்பட்ட தொழிலாளர் வெளியீடு, நுகர்வு சார்ந்த சேவைகளில் குறைந்த வாடிக்கையாளர் வருகை, தடுக்கப்பட்ட சொத்து உற்பத்தித்திறன், மற்றும் சுகாதாரச் செலவுகள் மற்றும் சமூகநலத்திட்ட ஒதுக்கீடுகளில் அதிகரிப்பு ஆகியவற்றின் மூலம் காற்று மாசுபாடு மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP) வளர்ச்சி மற்றும் தனிநபர் வருமான நிலைகளில் நேரடி மற்றும் குறிப்பாக பலவீனப்படுத்தும் குறிப்பாக உற்பத்தித் திறன் கொண்ட வயதினரிடையே தாக்கத்தை ஏற்படுத்துகிறது. அழைப்பு மையங்கள் போன்ற உள்ளரங்க வேலைகளில் கூட, காற்று மாசுபாடு உற்பத்தித்திறனை பாதிக்கிறது. மேலும், காற்றின் மோசமான தரம் அதிக உற்பத்தித்திறன் கொண்ட ஊழியர்களின் செயல்திறனை மட்டுமல்லாமல், குறைந்த உற்பத்தித்திறன் கொண்ட தொழிலாளர்களின் செயல்திறனையும் தடுக்கிறது என்று அனில் சசி  குறிப்பிடுகிறார்.

கேள்வி 4: காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த அரசாங்கம் எடுத்துள்ள முயற்சிகள் யாவை?


சட்டங்கள் முதல் கண்காணிப்பு வரை காற்று மாசுபாட்டை நிவர்த்தி செய்ய அரசாங்கத்தால் விரிவான முயற்சிகள் செயல்படுத்தப்பட்டுள்ளன.


📍காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981 (Air (Prevention and Control of Pollution) Act, 1981): இந்தச் சட்டம் காற்று மாசுபாட்டின் பிரச்சினையைத் தீர்ப்பதற்கான வழிமுறைகள் மற்றும் அதிகார அமைப்புகளை கோடிட்டுக் காட்டுகிறது. இதன் பல்வேறு பிரிவுகளின்கீழ் அரசாங்கம் காற்றின் தரத்தைக் கட்டுப்படுத்தவும், மாசுபாட்டைக் குறைக்கவும் நடவடிக்கைகளைச் செயல்படுத்துகிறது.


📍தேசிய காற்று தர கண்காணிப்பு திட்டம்: மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board (CPCB)), சுற்றுப்புற காற்றின் தரத்தை கண்காணிப்பதற்காக தேசிய காற்று தர கண்காணிப்பு திட்டம் (National Air Quality Monitoring Programme (NAMP)) எனப்படும் நாடு தழுவிய திட்டத்தை செயல்படுத்தி வருகிறது.


மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம் (Central Pollution Control Board (CPCB))


                 மத்திய மாசு கட்டுப்பாட்டு வாரியம், நீர் (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1974 மற்றும் காற்று (மாசு தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) சட்டம், 1981-ஆம் ஆண்டில் குறிப்பிடப்பட்டுள்ளபடி செயல்பாடுகளைச் செய்கிறது. சுற்றுச்சூழல் தரத் தரவுகளை உருவாக்குதல், அறிவியல் தகவல்களை வழங்குதல், தேசிய கொள்கைகள் மற்றும் திட்டங்களை உருவாக்குதல் மூலம் நாட்டில் மாசுபாட்டைக் குறைத்தல் மற்றும் கட்டுப்படுத்துவதில் இது ஒரு ஒருங்கிணைந்த பங்கை வகிக்கிறது.


📍தேசிய தூய்மையான காற்று திட்டம் (National Clean Air Programme (NCAP)): தேசிய தூய்மையான காற்றுத் திட்டம் (NCAP): இந்தத் திட்டமானது சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் (Ministry of Environment, Forest and Climate Change (MoEFCC)) ஜனவரி மாதம் 2019-ஆம் ஆண்டில் தொடங்கப்பட்டது. இதன் நோக்கம், 24 மாநிலங்களில் உள்ள 131 நகரங்களில் காற்றின் தரத்தை மேம்படுத்துவதாகும்.


இந்தத் திட்டத்தின் ஆரம்ப நோக்கம், 2017-ஆம் ஆண்டில் பதிவுசெய்யப்பட்ட ஆரம்ப அளவுகளுடன் ஒப்பிடுகையில், 2024-ஆம் ஆண்டுக்குள் PM10 (Particulate Matter) துகள்களின் அடர்த்தியை 20% முதல் 30% வரை குறைப்பதாகும்.


ஆனால், இந்த இலக்கு திருத்தப்பட்டு, 2025-26-ஆம் ஆண்டுக்குள் PM10 அளவுகளில் 40% வரை குறைப்பை அடைவதற்கோ அல்லது ஒரு கனமீட்டருக்கு 60 மைக்ரோகிராம் (60 µg/m³) என்ற தேசிய தரநிலையை எட்டுவதற்கோ குறிக்கோள் நிர்ணயிக்கப்பட்டுள்ளது.


📍காற்று தரக் குறியீடு (Air Quality Index (AQI)): இந்தியாவில் காற்றின் தரக் குறியீடு (AQI) வண்ணக் குறியீட்டுடன் 2014-ல் தொடங்கப்பட்டது. இதன்மூலம், காற்றின்நிலை என்னவென்பதை மக்களும் அரசாங்கமும் புரிந்துகொள்ளவும், அதன் தீவிரத்தைப் பொறுத்து அடுத்தகட்ட நடவடிக்கைகளை எடுக்கவும் இது உதவுகிறது.


—அளவிடப்படும் மாசுபடுத்திகள்: இதில் PM 10, PM 2.5, நைட்ரஜன்-டை-ஆக்சைடு, ஓசோன், கார்பன் போன்ற மாசுபடுத்திகள் அளவிடப்படுகின்றன.


காற்று தரக் குறியீட்டின் (AQI) ஆறு பிரிவுகள்:


(i) ‘நன்று’ (Good) - (0-50)


(ii) ‘திருப்தி’ (Satisfactory) - (51-100)


(iii) ‘மிதமான மாசு’ (Moderately polluted) - (101-200)


(iv) ‘மோசம்’ (Poor) - (201-300)


(v) ‘மிகவும் மோசம்’ (Very Poor) - (301-400)


(vi) ‘தீவிரம்’ (Severe) - (401-500)


📍தரப்படுத்தப்பட்ட பதில் நடவடிக்கை திட்டம் (Graded Response Action Plan (GRAP)): தரப்படுத்தப்பட்ட பதில் நடவடிக்கை திட்டம் (GRAP) முதலில் 2017-ஆம் ஆண்டு ஜனவரி மாதம் மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சகத்தால் (MoEFCC) அறிவிக்கப்பட்டது. இது மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியம் (CPCB) 2016-ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் சமர்ப்பித்த திட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்டது.


— இந்த அறிவிப்பின்படி, தரப்படுத்தப்பட்ட பதில் நடவடிக்கை திட்டத்தைச்  செயல்படுத்தும் பொறுப்பு, தேசிய தலைநகர் மண்டலத்திற்காக (National Capital Region (NCR)) முன்னர் இருந்த, இப்போது கலைக்கப்பட்ட, சுற்றுச்சூழல் மாசு (தடுப்பு மற்றும் கட்டுப்பாடு) ஆணையத்திடம் இருந்தது. 2021-ஆம் ஆண்டு முதல், இந்த தரப்படுத்தப்பட்ட பதில் நடவடிக்கை திட்டத்தை காற்றின் தர மேலாண்மை ஆணையம் (Commission for Air Quality Management (CAQM)) செயல்படுத்தி வருகிறது.


— தரப்படுத்தப்பட்ட பதில் நடவடிக்கை திட்டம் என்பது, பல்வேறு ஆதாரங்களில் இருந்து வரும் துகள் மாசு (PM) வெளியேற்றத்தைக் கையாளத் தேவையான நடவடிக்கைகளை கோடிட்டுக் காட்டுகிறது. மேலும், PM10 மற்றும் PM2.5 அளவுகள் தேசிய காற்று தரக் குறியீட்டின்  ‘மிதமான’ (moderate) பிரிவைத் தாண்டிச் செல்லாமல் தடுப்பதும் இதன் நோக்கமாகக் கூறப்படுகிறது. 


📍பிற நடவடிக்கைகள்: நெல் வைக்கோல் அடிப்படையிலான துகள்களாக்கல் மற்றும் உரமிடுதல் ஆலைகளை நிறுவுவதை ஊக்குவிப்பதற்காக மத்திய மாசுக் கட்டுப்பாட்டு வாரியமானது (CPCB) வழிகாட்டுதல்களை நிறுவியுள்ளது. இது விநியோகச் சங்கிலி சிக்கல்களைத் தீர்க்க உதவும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. 


— 2018-ஆம் ஆண்டில், வேளாண்மை மற்றும் உழவர் நல அமைச்சகம் ஒரு திட்டத்தைத் தொடங்கியது. இதன்மூலம், பயிர் எச்ச மேலாண்மை இயந்திரங்களை வாங்குவதற்கும், டெல்லி தேசிய தலைநகர் பிரதேசம் (NCT), பஞ்சாப், ஹரியானா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய மாநிலங்களில் தற்காலிக வாடகை மையங்கள் (Custom Hiring Centres - CHCs) அமைப்பதற்கும் மானியங்கள் வழங்கப்படுகின்றன.


— அனல்மின் நிலையங்களுக்கான (thermal power plants) சல்ஃபர்-டை-ஆக்சைடு SO2 மற்றும் நைட்ரஜன் ஆக்ஸைடுகள் NOx உமிழ்வு தரநிலைகள் குறித்த அறிவிக்கைகளும் வெளியிடப்பட்டுள்ளன.


கேள்வி 5: காற்று மாசுபாட்டைக் குறைக்க என்னென்ன நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும்?


அரசாங்கம் காற்று மாசுபாட்டைக் கட்டுப்படுத்த பல முயற்சிகளை எடுத்த போதிலும், காற்றின் தரம் மோசமாகவே உள்ளது. இந்தச் சூழலில், நாம் எடுக்கக்கூடிய கூடுதல் நடவடிக்கைகளை நாம் சிந்திக்க வேண்டும்.


1. நகராட்சி திடக் கழிவுகளை (MSW) எரிப்பதைத் நிறுத்துதல்: MSW என்பது நாம் அன்றாடம் பயன்படுத்தி தூக்கி எறியும் பொருட்களான தயாரிப்பு உறைகள், தளபாடங்கள், உடைகள், பாட்டில்கள், உணவுச் சில்லுகள், செய்தித்தாள்கள், உபகரணங்கள் மற்றும் மின்கலங்கள் ஆகியவற்றைக் குறிக்கிறது. அவற்றை எரிப்பதைத் தவிர்க்க வேண்டும்.


2. மின்சார மற்றும் BS-VI வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்தல்: வாகனங்களிலிருந்து வெளியேறும் புகை காற்று மாசுபாட்டிற்கு முக்கிய காரணங்களில் ஒன்றாக இருப்பதால், மின்சார வாகனங்கள் மற்றும் BS-VI தரத்திலான வாகனங்களைப் பயன்படுத்துவதை நாம் ஊக்குவிக்க வேண்டும். பொதுப் போக்குவரத்தையும் மேம்படுத்துவது அவசியமாகும்.


3. மின் நிலையங்களில் De-SOx-ing (சல்பர்-ஆக்சைடு நீக்குதல்) மற்றும் De-NOx-ing (நைட்ரஜன் ஆக்சைடுகள் (NOx) அகற்றும் செயல்) அமைப்புகளை நிறுவுதல்: டெல்லியில் உள்ள பெரிய மின் நிலையங்கள் மற்றும் சுத்திகரிப்பு ஆலைகள் சல்பர்-டை-ஆக்சைடு SO2 மற்றும் நைட்ரஜன் ஆக்சைடுகள் NOx போன்ற மாசுபடுத்திகளை வெளியிடுகின்றன. இவற்றைக் கட்டுப்படுத்த, இந்த ஆலைகள் மற்றும் சுத்திகரிப்பு நிலையங்கள் SO2 மற்றும் NOx முறையே நீக்கும் De-SOx-ing மற்றும் De-NOx-ing அமைப்புகளை நிறுவ வேண்டும்.


4. கட்டுமானம் மற்றும் இடிப்பு நடைபெறும் இடங்களில் கட்டுமானப் பொருட்களை மூடி வைத்தல்: கட்டுமானப் பகுதியை செங்குத்தாக மூடுவது, மூலப்பொருட்களை மூடி வைப்பது, மணல் போன்ற மூலப்பொருட்கள் பறந்து செல்லாமல் இருக்க தண்ணீர் தெளிப்பான்கள் மற்றும் காற்றைத் தடுக்கும் திரைகளைப் பயன்படுத்துதல், கழிவுகளை வளாகத்திற்குள் சேமித்து வைத்தல், மற்றும் சாலைவழியாக கட்டுமானப் பொருட்களைக் கொண்டு செல்லும்போது அவற்றை மூடி எடுத்துச் செல்லுதல் போன்ற நடவடிக்கைகளை எடுத்தால், காற்றின் தரத்தை 50% வரை மேம்படுத்த முடியும் என்று அறிக்கை கூறுகிறது.


5. அனைவருக்கும் சமையல் எரிவாயு (LPG): ஒவ்வொரு குடும்பமும் சமைப்பதற்கு விறகு, பயிர் எச்சங்கள், சாணம், மற்றும் நிலக்கரி ஆகியவற்றைப் பயன்படுத்துவதைத் தவிர்க்க வேண்டும். அனைவரும் திரவமாக்கப்பட்ட பெட்ரோலிய எரிவாயு (LPG) பெறுவதை உறுதி செய்ய வேண்டும். இதனால் PM 2.5$ PM 10, மற்றும் நைட்ரஜன்-ஆக்ஸைடுகள் (NO_x) ஆகியவற்றின் அளவு குறையும்.


6. பெட்ரோல் நிலையங்களில் ஆவி மீட்பு அமைப்புகள் (Vapour Recovery Systems) நிறுவப்பட வேண்டும்: பெட்ரோலில் ஆவியாகும் கரிம சேர்மங்கள் (VOCs - Volatile Organic Compounds) உள்ளன. பெட்ரோலை சேமிப்புக் கிடங்குகளுக்கு இறக்கும்போதோ அல்லது வாகனங்களுக்கு எரிபொருள் நிரப்பப்படும்போதோ இவை வளிமண்டலத்தில் ஆவியாக வெளியேறுகின்றன. இந்த பெட்ரோல் ஆவிகள் புகைமூட்டத்தை (smog) உருவாக்க பங்களிப்பதுடன், பொது மக்களுக்கு ஆரோக்கிய ஆபத்தையும் ஏற்படுத்தக்கூடும். ஆவி மீட்பு அமைப்புகள் (Vapour Recovery Systems) மூலம், பெட்ரோலை இறக்கும்போதும், எரிபொருள் நிரப்பும்போதும் வெளியாகும் ஆவியாகும் கரிம சேர்மங்களை சேகரித்து, இந்த வெளியேற்றத்தைக் கட்டுப்படுத்த முடியும் என்று கூறப்படுகிறது. 

 

Original link:

Delhi’s toxic air 


Share: