தொழிலாளர் பங்கேற்பு விகிதம் என்றால் என்ன? -ரோஷ்னி யாதவ்

 முக்கிய அம்சங்கள் :


— மத்திய சுற்றுச்சூழல், வனம் மற்றும் காலநிலை மாற்ற அமைச்சகம் (MoEFCC) ஜூன் மாதம் 26-ஆம் தேதி ஒரு வரைவு அறிக்கையை வெளியிட்டு, ஜூலை மாதம் 2-ஆம் தேதி அதை பொதுவெளியில் வெளியிட்டது. JSW Steel, Tata, SAIL (Steel Authority of India) மற்றும் ArcelorMittal Nippon Steel போன்ற இத்துறையின் முன்னணி நிறுவனங்கள் உட்பட 255 தொழில் நிறுவனங்களுக்கு இது கார்பன் உமிழ்வு குறைப்பு இலக்குகளை நிர்ணயித்துள்ளது.


— முன்னதாக, இரும்பு மற்றும் எஃகு துறைக்கான உமிழ்வு குறைப்பு இலக்குகளின் வரைவை, இரண்டாம் நிலை அலுமினியம் (secondary aluminium), பெட்ரோலிய சுத்திகரிப்பு நிலையம், பெட்ரோகெமிக்கல் மற்றும் ஜவுளித் துறைகளுக்கும் சேர்த்து ஜூன் மாதம் 23-ஆம் தேதி, 2025-ஆம் ஆண்டு வெளியிடப்பட்டன. மற்ற துறைகளுக்கான இறுதி இலக்குகள் ஜனவரி மாதம் 2026-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட நிலையில், சுற்றுச்சூழல் அமைச்சகம் இரும்பு மற்றும் எஃகு துறைக்கான இலக்குகளில் சிறிய மாற்றங்களுடன் திருத்தப்பட்ட வரைவை வெளியிட்டுள்ளது. ஆனால் இந்தப் புதிய வரைவுக்கான எந்த விளக்கமும் அளிக்கப்படவில்லை.



— இந்த வரைவுக்கான அறிவிப்பு, 2023-24-ஆம் ஆண்டை அடிப்படை உற்பத்தி அளவு மற்றும் அடிப்படை உமிழ்வு தீவிரத்திற்கான (baseline emission intensity) ஆண்டாகவும், 2026-27-ஆம் ஆண்டை தனிப்பட்ட எஃகு ஆலைகள், ஸ்பாஞ்ச் இரும்பு (sponge iron) அலகுகள் மற்றும் ஃபெரோ-அலாய் (ferro-alloy) உற்பத்தியாளர்களுக்கான விதிமுறைக்கு இணங்கும் ஆண்டாகவும் நிர்ணயிக்கிறது. இந்த வரைவு குறித்த ஆட்சேபனைகள் மற்றும் பரிந்துரைகளைச் சமர்ப்பிக்க 60 நாட்கள் அவகாசம் அளிக்கப்பட்டுள்ளது.


— இந்த வரைவு அறிக்கையானது, புவி வெப்பமயமாதலை ஏற்படுத்தும் திறனின் அடிப்படையில், வெறும் கார்பன்-டை-ஆக்சைடு (CO2) மட்டுமன்றி மற்ற அனைத்து பசுமை இல்ல வாயுக்களின் தாக்கத்தையும் அளவிடப் பயன்படும் 'டன் கார்பன் டை ஆக்சைடு நிகர மதிப்பு' (Tonnes of carbon dioxide equivalent (tCO2e))  என்ற அலகின் அடிப்படையில் இலக்குகளை வரையறுத்துள்ளது. மேலும், இந்த வரைவில் 2026-27-ஆம் ஆண்டிற்கான சுமை இல்ல வாயு உமிழ்வு தீவிர (Greenhouse Gas Emission Intensity (GEI)) இலக்குகள் மட்டுமே நிர்ணயிக்கப்பட்டுள்ளன. 2025-26-ஆம் ஆண்டிற்கான பகுதி விடப்பட்டுள்ளது.


— பசுமை இல்ல வாயு உமிழ்வு தீவிரம் (GEI) என்பது உற்பத்தி செய்யப்படும் ஒவ்வொரு அலகு பொருளுக்கும் வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்களின் (GHGs) அளவைக் குறிக்கிறது. உதாரணமாக, ஒரு அலகு சிமெண்ட்டை உற்பத்தி செய்யும்போது வெளியேற்றப்படும் பசுமை இல்ல வாயுக்களின் அளவை இது அளவிடுகிறது. சந்தை சார்ந்த செயல்முறை மூலம் கார்பன் உமிழ்வு குறைப்பை ஊக்குவிப்பதற்கும், இந்தியாவின் காலநிலை நடவடிக்கை இலக்குகளை அடைவதற்கு உதவுவதற்கும் ஒரு கட்டமைப்பை உருவாக்க கார்பன் கடன் வர்த்தகத் திட்டம் (CCTS) 2023-ஆம் ஆண்டு தொடங்கப்பட்டது.


— அலுமினியம், சிமெண்ட், குளோரோ-ஆல்கலி (chlor-alkali), கூழ் மற்றும் காகிதம், இரண்டாம் நிலை அலுமினியம், பெட்ரோலிய சுத்திகரிப்பு, பெட்ரோ கெமிக்கல் மற்றும் ஜவுளி ஆகிய எட்டு துறைகளுக்கான உமிழ்வு குறைப்பு இலக்குகளை ஒன்றிய அரசு ஏற்கனவே இறுதி செய்துள்ளது.



— 2023-ஆம் ஆண்டில் அறிவிக்கப்பட்ட கார்பன் கடன் வர்த்தகத் திட்டம் (CCTS), இந்திய கார்பன் சந்தைக்கான ஒரு விரிவான கட்டமைப்பை உருவாக்கியது. அதிகப்படியான மாசுபடுத்திகளை வெளியிடும் மற்றும் கார்பன் வெளியேற்றத்தைக் குறைப்பது சவாலான செயல்பாடுகளைக் கொண்ட துறைகளிலிருந்து வெளியேறும் பசுமை இல்ல வாயுக்களின் (GHG) அளவைக் கணிசமாகக் குறைப்பதே இந்தத் திட்டத்தின் நோக்கமாகும்.


— ஒவ்வொரு கடமைப்பட்ட தொழிற்சாலைக்கும், அவற்றின் உற்பத்தி அளவிற்கேற்ப வெளியேற்றப்படும் கார்பன் உமிழ்வின் அடிப்படையில் ஒரு 'ஜி.இ.ஐ' பசுமை இல்ல வாயு உமிழ்வு தீவிரம் (GEI) இலக்கு நிர்ணயிக்கப்படுகிறது. தங்களுடைய இலக்கைச் சரியாக எட்டும் அல்லது இலக்கைவிடக் குறைவான உமிழ்வைக் காட்டும் தொழிற்சாலைகளுக்கு 'கார்பன் கிரெடிட் சான்றிதழ்கள்' (Carbon credit certificates) வழங்கப்படும். இந்தச் சான்றிதழ்களை, தங்களது இலக்கை எட்ட முடியாமல் பின்தங்கியுள்ள மற்ற தொழிற்சாலைகளுக்கு அவர்கள் விற்றுக் கொள்ள முடியும். இந்த விதிகளைப் பின்பற்றத் தவறும் தொழிற்சாலைகள் சுற்றுச்சூழல் இழப்பீடு செலுத்த வேண்டும். இந்த அபராதத் தொகையானது, சந்தையில் விற்கப்படும் சராசரி கார்பன் கிரெடிட் விலையைப் போல இரண்டு மடங்கு அதிகமாக இருக்கும்.


உங்களுக்குத் தெரியுமா? :


— மார்ச் மாதம் 25-ஆம் தேதி, இந்தியா 2035-ஆம் ஆண்டிற்கான தனது காலநிலை இலக்குகளை வெளியிட்டது. இதில் பொருளாதாரத்தின் கார்பன் தீவிரத்தைக் குறைத்தல், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி பயன்பாட்டை விரிவுபடுத்துதல் மற்றும் காடுகள் மூலம் கார்பன் உறிஞ்சும் அமைப்புகளை (carbon sinks) உருவாக்குதல் ஆகியவற்றில் கூடுதல் முன்னேற்றத்தை ஏற்படுத்துவதாக இந்தியா உறுதியளித்துள்ளது.


— 2035-ஆம் ஆண்டில் இந்தியாவின் மொத்த மின்சார உற்பத்தித் திறனில் குறைந்தது 60% புதைபடிவமற்ற எரிபொருள் ஆதாரங்களை அடிப்படையாகக் கொண்டிருப்பதை உறுதிசெய்யும் என்று இந்தியா கூறியுள்ளது. இது 2030-ஆம் ஆண்டிற்காக நிர்ணயிக்கப்பட்ட 50% இலக்கைவிட அதிகமாகும்.


— 2005-ஆம் ஆண்டின் அளவோடு ஒப்பிடும்போது, உமிழ்வுத் தீவிர (Emissions intensity) விகிதத்தைக் குறைந்தது 47% குறைக்க இந்தியா உறுதியளித்துள்ளது. இது 2030-ஆம் ஆண்டிற்கான தற்போதைய 45% இலக்கைவிட இரண்டு சதவீதம் அதிகம் ஆகும்.


— 2005-ஆம் ஆண்டில் இருந்ததைவிட, குறைந்தது 3.5 முதல் 4 பில்லியன் டன் கார்பன்-டை-ஆக்சைடுக்கு (CO2) இணையான வாயுக்களை உறிஞ்சக்கூடிய கூடுதல் காடுகள் மற்றும் மரங்களை (Carbon sink) உருவாக்கவும் இந்தியா உறுதியளித்துள்ளது.


— இந்தப் புதிய இலக்குகள் ஒவ்வொன்றும், 2015 பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ் (2015 Paris Agreement) கட்டாயத் தேவையாக உள்ள 2030-ஆம் ஆண்டிற்கான தற்போதைய வாக்குறுதிகளைவிட அடுத்தகட்ட முன்னேற்றத்தைக் குறிக்கின்றன.


— குறிப்பாக, பாரிஸ் ஒப்பந்தத்தின்கீழ், ஒவ்வொரு நாடும் காலநிலை மாற்றத்திற்கு எதிரான உலகளாவிய போராட்டத்திற்கு உதவும் வகையில் சில காலநிலை நடவடிக்கைகளைத் தாங்களாகவே முடிவு செய்து செயல்படுத்தக் கடமைப்பட்டுள்ளன. இவை 'தேசிய அளவில் தீர்மானிக்கப்பட்ட பங்களிப்புகள்' (Nationally-Determined Contributions (NDCs)) என்று அழைக்கப்படுகின்றன.


Original article: What is the labour force participation rate (LFPR)? -Roshni Yadav

Share: