கடந்த மாதம் அமெரிக்க உச்சநீதிமன்றம், சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டத்தின்கீழ் (International Emergency Economic Powers Act (IEEPA)) விதிக்கப்பட்டிருந்த வரிவிதிப்புகளை ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து, டிரம்ப் நிர்வாகம் பிரிவு 122-ன்கீழ் (Section 122) ஐந்து மாத காலத்திற்கு 10% உலகளாவிய வரிவிதிப்பை அமல்படுத்தியுள்ளது. இதற்கிடையில், மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழலால், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (United States Trade Representative (USTR)), தனது வர்த்தக ஒப்பந்தங்களுக்கு சட்டப்பூர்வமாக ஆதரவளிக்கும் வகையில் ஒரு புதிய வரிவிதிப்பு முறையை உருவாக்கக்கூடும் என்கின்றனர்.
முக்கிய அம்சங்கள்:
— அமெரிக்காவால் கடந்த வாரம் தொடங்கப்பட்ட பிரிவு-301 (Section 301) விசாரணைகளின் அடிப்படையில் இந்த புதிய வரி விதிப்பு முறை அமையக்கூடும் என்கின்றனர். இந்த விசாரணைகளின் மூலம் விதிக்கப்படும் வரிகள், இந்திய-அமெரிக்க வர்த்தக ஒப்பந்தம் உள்ளிட்ட அமெரிக்காவின் பிற வர்த்தக ஒப்பந்தங்களுக்கு அடிப்படையாக அமையும் என்கின்றனர். இந்த இந்திய-அமெரிக்க ஒப்பந்தம் ஏற்கனவே இரு நாடுகளாலும் ஒப்புக்கொள்ளப்பட்டிருந்தாலும், இன்னும் அதிகாரப்பூர்வமாக கையெழுத்திடப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
— சர்வதேச வர்த்தக நிபுணர்களின் கருத்துப்படி, அமெரிக்க சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்ட (IEEPA) தீர்ப்பிற்குப் பிறகு, அமெரிக்காவின் வர்த்தக ஒப்பந்தங்கள் அவற்றின் பொருளாதார மதிப்பை இழந்துவிட்டன. இதற்கு முக்கியக் காரணம், ஜப்பான், தென் கொரியா, வியட்நாம், இந்தோனேசியா, வங்காளதேசம், இந்தியா மற்றும் ஐரோப்பிய ஒன்றியம் உள்ளிட்ட நாடுகள் ஏற்கனவே 15-20% வரையிலான வரிக் கொள்கைகளை ஏற்றுக்கொண்டதோடு, சந்தை அணுகல், கொள்முதல் மற்றும் விதிமுறைகளில் முக்கிய சலுகைகளையும் வழங்கியிருந்தன. இருப்பினும், பரஸ்பர வரிக் கொள்கையை நீதிமன்றம் ரத்துசெய்த பிறகு, வாஷிங்டன் அனைத்து வர்த்தகப் பங்காளிகள் மீதும் ஒரே மாதிரியான 10% வரியை விதித்துள்ளதாகக் கூறப்படுகிறது.
— அமெரிக்கா தனது வரி விதிப்பு முறையை மறுசீரமைப்பு செய்துவரும் வேளையில், இந்தியா அமெரிக்காவுடன் மேற்கொள்ளும் எந்தவொரு வர்த்தக ஒப்பந்தமும், எதிர்கால வரி கட்டமைப்புகள் மற்றும் அமெரிக்க சந்தையில் இந்தியா பெறக்கூடிய நன்மைகள் ஆகியவற்றின் மீதே கவனம் செலுத்தும் என்று வர்த்தக அமைச்சக அதிகாரி ஒருவர் கடந்த திங்கள்கிழமை, மார்ச் மாதம் 16-ஆம் தேதி தெரிவித்துள்ளார்.
— இதற்கு முக்கியக் காரணம், சர்வதேச அவசரகால பொருளாதார அதிகாரச் சட்டம் (IEEPA) வழங்கிய தீர்ப்பைத் தொடர்ந்து, அமெரிக்காவின் பல வர்த்தக பங்குதாரர்கள் தங்களது வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்து சந்தேகங்களை வெளிப்படுத்தத் தொடங்கியுள்ளனர்.
— கடந்த மாதம் அமெரிக்க உச்சநீதிமன்றம் சர்வதேச அவசரக்கால பொருளாதார அதிகாரச் சட்டத்தின்கீழ் (IEEPA) விதிக்கப்பட்டிருந்த வரிவிதிப்புகளை ரத்து செய்தது. இதனைத் தொடர்ந்து, டிரம்ப் தலைமையிலான நிர்வாகம் பிரிவு-122-ன்கீழ் ஐந்து மாத காலத்திற்கு 10% உலகளாவிய இறக்குமதி வரியை விதித்துள்ளது. இதற்கிடையில், மேற்கு ஆசியாவில் நிலவும் பதற்றமான சூழல் காரணமாக, தனது வர்த்தக ஒப்பந்தங்களுக்கு சட்டப்பூர்வமாக ஆதரவளிக்கும் வகையில் புதிய வரிவிதிப்பு முறை ஒன்றை அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) உருவாக்கக்கூடும் என்கின்றனர்.
— இந்திய அரசு அதிகாரிகள் இறுதி வர்த்தக ஒப்பந்தம் பிரிவு-301 வரிகள் தொடர்பான சிக்கல்களைத் தீர்க்கும் என்று கூறியுள்ள நிலையில், அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) தனது விசாரணையில், இந்தியா "கட்டமைப்பு ரீதியான அதிகப்படியான உற்பத்தித் திறன் மற்றும் உற்பத்தியைக்" கொண்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளது.
— அமெரிக்காவின் உயர்மட்ட வர்த்தக அமைப்பான அமெரிக்க வர்த்தகப் பிரதிநிதி அலுவலகம் (USTR) வெளியிட்டுள்ள அறிக்கையின்படி, 2025-ஆம் ஆண்டில் இந்தியா அமெரிக்காவுடன் $58 பில்லியன் மதிப்பிலான இருதரப்பு வர்த்தக உபரியைக் கொண்டிருந்தது. மேலும், உலகளாவிய சரக்கு வர்த்தகத்தில் ஜவுளி, சுகாதாரம், கட்டுமானப் பொருட்கள் மற்றும் வாகன உதிரிபாகங்கள் ஆகிய துறைகளில் இந்தியா உபரி வருமானத்தைப் பெற்றுள்ளதாகவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது.
உங்களுக்குத் தெரியுமா?
— இறக்குமதி செய்யப்படும் பொருட்கள் மற்றும் சேவைகளின்மீது அரசாங்கத்தால் விதிக்கப்படும் வரிகளே சுங்க வரிகள் எனப்படும். இவை வெளிநாட்டுப் பொருட்களை உள்நாட்டுப் பொருட்களைவிட அதிக விலையுள்ளதாக மாற்றுகின்றன, இதன் மூலம் நுகர்வோரை உள்நாட்டுப் பொருட்களை வாங்குவதற்கு ஊக்குவிக்கின்றன. மேலும், சுங்க வரிகள் வெளிநாட்டுப் போட்டியிலிருந்து உள்நாட்டுத் தொழில்களைப் பாதுகாப்பதோடு, அரசாங்கத்திற்குத் தேவையான வருவாயையும் ஈட்டித் தருவதாகத் தெரிவிக்கின்றனர்.
Original Link: What is the International Emergency Economic Powers Act (IEEPA)?