ஜெவார் விமான நிலையத்தில் பிரதமர் மோடியின் எத்தனால் ஊக்குவிப்பு. ஏன் இந்த உயிரி எரிபொருள் முக்கியமானது? -குஷ்பூ குமாரி

தற்போதைய செய்தி:


ஜெவாரில் நடைபெற்ற நொய்டா சர்வதேச விமான நிலையத்தின் (Noida International Airport (NIA)) முதல் கட்டத் திறப்பு விழாவில் உரையாற்றியபோது, ​​உலகளாவிய எரிசக்தி நெருக்கடியிலிருந்து நாட்டைப் பாதுகாக்க இந்தியாவின் எத்தனால் ஊக்குவிப்பு முயற்சி உதவுவதாகப் பிரதமர் நரேந்திர மோடி குறிப்பிட்டார்.


எத்தனால் உற்பத்தியும், அதனை பெட்ரோலுடன் கலக்கும் முறையும் அதிகரிக்காமல் இருந்திருந்தால், நமது நாட்டில் ஆண்டுதோறும் 4.5 கோடி பேரல்கள், ஏறக்குறைய 700 கோடி லிட்டர் கச்சா எண்ணெயை இறக்குமதி செய்ய வேண்டிய சூழல் ஏற்பட்டிருக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி கூறியிருந்தார்.


முக்கிய அம்சங்கள்:


1. எத்தனால் அல்லது எத்தில் ஆல்கஹால் என்பது பல பயன்பாடுகளைக் கொண்ட ஒரு திரவமாகும். 95% தூய்மையுடன் இருக்கும்போது, ​​இது 'வடித்த வடிகட்டப்பட்ட மதுபானம்' (rectified spirit) என்று அழைக்கப்படுகிறது மற்றும் மதுபானங்களில் போதை தரும் மூலப்பொருளாகப் பயன்படுத்தப்படுகிறது. 99%-க்கு அதிக தூய்மையுடன் இருக்கும் எத்தனால், பெட்ரோலுடன் கலக்க (blending) பயன்படுத்தப்படுகிறது.


2. எத்தனால் என்பது ஒரு பொதுவான உயிரி எரிபொருள் (biofuel) வகையாகும். இது தாவரங்கள் அல்லது வேளாண்மை, விலங்கு, வீடு மற்றும் தொழில்துறை உயிரி கழிவுகள் போன்ற உயிரிப் பொருள்களிலிருந்து பெறப்படும் ஒரு புதுப்பிக்கத்தக்க எரிபொருளாகும். உயிரி எரிபொருள்கள் வழக்கமான புதைபடிவ எரிபொருள்களைவிட கணிசமாகத் தூய்மையானவை. ஆனால், அவற்றின் முழு   சுழற்சி (lifecycle) மூலப்பொருள் மற்றும் தயாரிப்பு முறைகளைப் பொறுத்து மாறுபடும்.


இந்த மூலங்களிலிருந்து எத்தனால் உற்பத்தி செய்யப்படும்போது, ​​அது பயோஎத்தனால் (எத்தனாலின் ஒரு துணை வகை) என்று அழைக்கப்படுகிறது. கரும்பு, பீட்ரூட் சாறு, மக்காச்சோளம், அரிசி அல்லது பிற தானியங்களிலிருந்து பயோஎத்தனாலை எளிதாக உருவாக்கமுடியும். இந்த எரிபொருட்கள் முதல் தலைமுறை உயிரி எரிபொருட்கள் (first-generation biofuels) என்று அழைக்கப்படுகின்றன.


வெவ்வேறு தலைமுறை உயிரி எரிபொருட்கள்


தேசிய உயிரி எரிபொருள் கொள்கை (National Policy on Biofuels) படி, உயிரிசை எரிபொருட்கள் என பல தலைமுறைகளாக வகைப்படுத்தப்படுகின்றன:


(i) முதல் தலைமுறை (1G)- கரும்புப்பாகுவிலிருந்தும் பயோ-எத்தனாலையும், உண்ணமுடியாத எண்ணெய் வித்துக்களிலிருந்து பயோ-டீசல் (bio-diesel) தயாரிக்கப்படுகிறது.


(ii) நகராட்சி திடக்கழிவுகளிலிருந்து (municipal solid waste) இரண்டாம் தலைமுறை (2G) எத்தனாலை உற்பத்தி செய்யமுடியும்.

(iii) மூன்றாம் தலைமுறை (3G): பயோ-அழுத்தப்பட்ட இயற்கை எரிவாயு (Compressed Natural Gas (CNG)) போன்ற எரிபொருட்கள் இதில் அடங்கும்.


கரும்பிலிருந்து எத்தனால் உற்பத்தி


1. சர்க்கரை உற்பத்தியின் ஒரு துணைப் பொருளாகக் கிடைக்கும் கரும்புப்பாகுவிலிருந்து எத்தனால் தயாரிக்கப்படுகிறது. சர்க்கரை தயாரிப்பதற்காக, ஆலைகள் கரும்பை நசுக்குகின்றன. இதில் பொதுவாக 14% மொத்த நொதிக்கக்கூடிய சர்க்கரை (total fermentable sugar (TFS)) உள்ளடக்கம் உள்ளது. இந்த மொத்த நொதிக்கக்கூடிய சர்க்கரை கூறானது, சுக்ரோஸுடன் குளுக்கோஸ் மற்றும் ஃபிரக்டோஸ் ஆகியவை அடங்கும். இந்த TFS பகுதியின் பெரும்பகுதி சுத்திகரிக்கப்பட்டு சர்க்கரையாக மாறுகிறது; மீதமுள்ள பகுதியே கரும்பு  சர்க்கரைப்பாகு (molasses) என்று அழைக்கப்படுகிறது.


2. இந்த மோலாஸ் மூன்று நிலைகளில் செல்கிறது — A, B, மற்றும் C, இதில் கடைசி நிலையான C இல் மோலாஸ் மிகவும் படிகமாக்கப்படாத (un-crystallised) மற்றும் மீட்டெடுக்க முடியாத (non-recoverable) நிலையில் இருக்கும். ‘C’ மோலாஸ் சுமார் கரும்பின் 4.5% அளவுக்கு இருக்கும், மற்றும் அதில் மீதமுள்ள TFS 40% ஆகும்.


3.  மேற்கூறிய இரண்டு தீவிர நிலைகளுக்கும் இடைப்பட்ட வகையில், சில இடைநிலைத் தேர்வுகளும் உள்ளன. இவற்றில் கரும்புச் சாற்றை, இறுதி நிலையான ‘C’ வகை வெல்லப்பாகு (molasses) நிலை வரை முழுமையாகப் படிகமாக்க வேண்டிய அவசியமில்லை. அதற்குப் பதிலாக, சர்க்கரை வெல்லப்பாகு  உருவாக்கத்தின் ஆரம்ப நிலையான ‘A’ மற்றும் ‘B’ நிலைகளுக்குப் பிறகு வெல்லப்பாகுவை மாற்றி பயன்படுத்தலாம். ஆலைகள் கரும்புச் சாறு முழுவதையும் நொதிக்கச் செய்து எத்தனாலாக மாற்றுவதற்கு மாறாக, சிறிதளவு சர்க்கரையை உற்பத்தி செய்யும்.


‘‘B’ வகை கனக் கரும்புச் சாற்றைப் (கரும்பின் எடையில் 7.25% மற்றும் 50% TFS கொண்டது) பயன்படுத்தி எத்தனால் உற்பத்தி செய்யப்பட்டால், ஒவ்வொரு 1 டன் கரும்பிலிருந்து 21.75 லிட்டர் எத்தனால் மற்றும் 95 கிலோ சர்க்கரை உற்பத்தி செய்யப்படும்.


4. 2017-18-ஆம் ஆண்டு வரை, ஆலைகள் கரும்பு பதப்படுத்துதலின் இறுதி துணை விளைபொருளான, சுக்ரோஸைக் (sucrose) கொண்ட 'C-heavy molasses’ எனப்படும் திரவத்திலிருந்து மட்டுமே எத்தனாலை உற்பத்தி செய்தன. இந்த சுக்ரோஸை பொருளாதாரரீதியாக மீட்டெடுத்து சர்க்கரையாகப் படிகமாக்க முடியாது.


5. 2018-19 விநியோக ஆண்டிலிருந்து, ஆலைகள் எத்தனாலை, ‘B-heavy’ நிலையிலுள்ள கரும்புக் கழிவிலிருந்து (இதில் நொதித்தலுக்கு ஏற்ற அதிக அளவு சுக்ரோஸ் உள்ளடக்கம் இருக்கும்), அத்துடன் நேரடியாக முழு கரும்புச் சாறு அல்லது பாகிலிருந்தும் உற்பத்தி செய்யத் தொடங்கின.


6. இதன் விளைவாக: 2013-14 மற்றும் 2018-19-க்கு இடையில், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு (oil marketing companies (OMC)) வழங்கப்படும் எத்தனாலின் மொத்த அளவு  38 கோடி லிட்டரிலிருந்து 189 கோடி லிட்டராக அதிகரித்தது. பெட்ரோலில் எத்தனால் கலக்கும் அகில இந்திய சராசரி அளவும் 1.6%-லிருந்து 4.9%- ஆக அதிகரித்தது.


மற்ற தானியங்களிலிருந்து எத்தனால் உற்பத்தி


7. 2018–19 ஆம் ஆண்டிலிருந்து, அரிசி, மக்காச்சோளம் மற்றும் சேதமடைந்த உணவுத்தானியங்களிலிருந்து தயாரிக்கப்படும் எத்தனாலுக்காக அரசு தனித்தனி ஆலை  விலைகளை (ex-distillery prices) நிர்ணயித்துள்ளது.


8. கரும்புப்பாகு அல்லது கரும்புச் சாற்றில், சர்க்கரையானது சுக்ரோஸ் வடிவில் உள்ளது. மாவுச்சத்து காணப்படுகிறது; இது ஒரு சிக்கலான கார்போஹைட்ரேட் ஆகும். தானியங்களிலிருந்து பெறப்படும் ஸ்டார்ச் முதலில் பிரித்தெடுக்கப்பட்டு, எளிய சர்க்கரைகளாக மாற்றப்படுகிறது. அதன் பின்னர், நொதித்தல் (fermentation), ஆவியாக்கம் (distillation) மற்றும் நீரிழப்பு (dehydration) செயல்முறைகள் மூலம் 99.99% தூய்மையுள்ள எத்தனால் தயாரிக்கப்படுகிறது.


9. ஈரான் - இஸ்ரேல்-அமெரிக்கப் போருக்கு இடையில், ஹார்முஸ் ஜலசந்தியிலிருந்து எண்ணெய் இறக்குமதி தடைபட்டுள்ளதால், இந்தியாவின் கச்சா எண்ணெய் இறக்குமதியைக் குறைக்கும் ஒரு நடவடிக்கையாக எத்தனால் கலப்பு கருதப்படுகிறது.


நிபுணர்கள், கரும்பு பயிர் இடுவதனால் அதிக நீர் பயன்பாடு, மானியங்களின் (subsidies) நிதிச்சுமை மற்றும் உணவுப் பயிர்களை எரிபொருளாக மாற்றுவதில் உள்ள பிரச்சினைகளை சுட்டிக்காட்டுகின்றனர். ஆற்றல் ஆய்வாளர்கள் மற்றும் துறைசார் அறிக்கை, எத்தனால்  முக்கியமானது என்றாலும், அது ஒரு தனித்த தீர்வாகக் கருதப்படாமல், பரந்த அளவிலான ஆற்றல் மாற்ற உத்தியின் ஒரு பகுதியாகவே பார்க்கப்பட வேண்டும் என்று கூறுகிறது.


அரசாங்க முயற்சிகள்


2018-ஆம் ஆண்டு உயிரி எரிபொருள் மீதான தேசியக் கொள்கை (National Policy on Biofuel)


எத்தனால் கலந்த பெட்ரோல் (Ethanol Blended Petrol (EBP)) திட்டத்தின்கீழ், 2030-ஆம் ஆண்டிற்குள் 20% எத்தனால் கலப்பு என்ற ஒரு வழிகாட்டும் இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது. பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் அமைச்சர், டிசம்பர் 202ஆம் ஆண்டு மாநிலங்களவையில், பொதுத் துறை எண்ணெய் மார்க்கெட்டிங் நிறுவனங்கள் (Public Sector Oil Marketing Companies – (OMCs)), நிர்ணயிக்கப்பட்ட காலக்கெடுவுக்கு முன்பாகவே, ஜூன் 2022-ல் பெட்ரோலில் 10% எத்தனால் கலப்பு என்ற இலக்கை (Ethanol Blending Target) அடைந்துள்ளதாக  தெரிவித்துள்ளார்.


பிரதமர் ஜீ-வான் (இயற்கை எரிபொருள் - சுற்றுச்சூழலுக்கு ஏற்ற பயிர்க் கழிவு மேலாண்மை) திட்டம்


இந்தத் திட்டம் 2019-ஆம் ஆண்டு  தொடங்கப்பட்டது. இந்தத் திட்டமானது, லிக்னோசெல்லுலோசிக் உயிரிப்பொருள் (lignocellulosic biomass) மற்றும் பிற புதுப்பிக்கத்தக்க மூலப்பொருட்களைப் பயன்படுத்தி நாட்டில் மேம்பட்ட உயிரி எரிபொருள் திட்டங்களை உருவாக்குவதற்கும், எத்தனாலை  பல்வேறு இடங்களுக்கு போக்குவரத்து மூலம் கொண்டு செல்வதற்கும், எத்தனால் சேமிப்புத் திறனை அதிகரிப்பதற்கும், அதனுடன் சேர்த்து அதிக அளவு எத்தனால் கலவைகளைக் கையாள்வதற்கான பிற தொடர்புடைய உள்கட்டமைப்புகளுக்கும் நிதியுதவி வழங்குகிறது.


 உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டணி (Global Biofuel Alliance)


சர்வதேச ஒத்துழைப்பை எளிதாக்குவதற்கும், நிலையான உயிரி எரிபொருட்களின் பயன்பாட்டைத் தீவிரப்படுத்துவதற்கும், அதனுடன் உலகளாவிய உயிரி எரிபொருள் வர்த்தகத்தை எளிதாக்குவதற்கும் மற்றும் தேசிய உயிரி எரிபொருள் திட்டங்களுக்குத் தொழில்நுட்ப ஆதரவை வழங்குவதற்கு இந்தத் திட்டம் 2023-ல் தொடங்கப்பட்டது.


செய்திகளில் இடம்பெற்றுள்ள பிற நிலையான எரிபொருட்கள்


1. நிலையான விமான எரிபொருள் (Sustainable Aviation Fuel (SAF)): கடந்த ஆண்டு, ஹரியானாவில் உள்ள தனது பானிபட் சுத்திகரிப்பு நிலையத்தில் நீடித்த விமான எரிபொருள்  உற்பத்திக்காக ISCC CORSIA சான்றிதழைப் பெற்ற இந்தியாவின் முதல் நிறுவனம் இந்தியன் ஆயில் கார்ப்பரேஷன் (Indian Oil Corporation (IOC)) ஆனது.


நிலையான விமான எரிபொருள் (SAF) என்பது நிலைத்தன்மை வாய்ந்த மூலப்பொருட்களிலிருந்து உற்பத்தி செய்யப்படும் ஒரு உயிரி எரிபொருள் ஆகும். இது, கச்சா எண்ணெயிலிருந்து பெறப்படும் வழக்கமான விமான டர்பைன் எரிபொருள் (aviation turbine fuel (ATF)) அல்லது ஜெட் எரிபொருளைப் போன்ற வேதியியல் பண்புகளைக் கொண்டுள்ளது. இது ஒரு நேரடியாக பயன்படுத்தக்கூடிய (drop-in) எரிபொருள் ஆகும். விமானத்தின் தற்போதைய இயந்திரங்களில் எந்த மாற்றமும் செய்யமல், இதை விமான டர்பைன் எரிபொருள் உடன் கலக்க முடியும்.


2. மேம்பட்ட நிலையான எரிபொருள் (Advanced Sustainable Fuel (ASF)): 2026-ஆம் ஆண்டின் ஃபார்முலா 1 போட்டி விதிகளில் மாற்றம் செய்து, F1 கார்கள் உள் எரிவாயு இயந்திரங்களில் (internal combustion engine) மேம்பட்ட நிலையான எரிபொருள் பயன்படுத்த வேண்டும். இந்த எரிபொருள், உணவுப் பயிர்களுடன் போட்டித் தன்மை இல்லாத  நிலையான மூலப்பொருட்களிலிருந்து பெறப்படுகிறது.


இந்த மூலப்பொருட்களில் நகராட்சிக் கழிவுகள் மற்றும் உணவு அல்லாத உயிரிப் பொருட்கள் இடம் பெற்றிருக்கும். காற்றில் இருந்தும் தொழிற்சாலைக் கழிவுகளில் இருந்தும் கார்பன் பிடிப்பு (carbon capture) போன்ற தொழில்நுட்பங்களைப் பயன்படுத்தியும் இந்த எரிபொருளை உற்பத்தி செய்ய முடியும். இந்த மேம்பட்ட நிலையான எரிபொருளானது, இயந்திரத்தில் எந்தவிதமான மாற்றங்களையும் மேற்கொள்ளாமல், புதைபடிவ எரிபொருள்களுக்குப் பதிலாகப் பயன்படுத்தும் வகையில் வடிவமைக்கப்பட வேண்டும்.

Original article:  PM Modi’s Ethanol push at Jewar airport. Why this biofuel is important -Khushboo Kumari

Share: